என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Operation Sindoor"

    • ஜம்மு- காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற ட்ரோன்கள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ட்ரோன்கள் ஊடுருவ முயன்ற நிலையில் ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் குறித்து இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் (DGMO) இடையேயான பேச்சுவார்த்தை இன்று மாலை நடந்தது.

    அதில், இரு தரப்பிலும் இருந்து ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை தொடர்வது குறித்து பேசப்பட்டு, இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

    எல்லைகளில் படை வீரர்களைக் குறைப்பதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை பரிசீலிப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் ஜம்மு- காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற ட்ரோன்கள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ட்ரோன்கள் ஊடுருவ முயன்ற நிலையில் ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் வெடிச் சத்தம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நிலையில் ட்ரோன்கள் ஊடுவருவல் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது.
    • இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர்கள் (DGMO) மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒப்புதல்.

    இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.

    ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கி, மீண்டும் டிரோன்களை ஏவி வாலாட்டியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் பின் எல்லையில் வெடிகுண்டு சத்தங்கள் ஓய்ந்தன.

    4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது. மின்வினியோகமும் வழங்கப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் நடைபெற்றது.

    தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது,

    இந்நிலையில், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை தொடங்கியது.

    இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே 2வது முறையாக ராணுவ இயக்குனர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அப்போது, இந்திய - பாக். எல்லையில் வீரர்களைக் குறைப்பதை உறுதி செய்ய, உடனடி நடவடிக்கைகளை பரிசீலிக்க இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர்கள் (DGMO) மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இரு தரப்பிலும், ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை தொடர்வது குறித்தும் இன்றைய பேச்சுவார்த்தையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம் என டிரம்ப் கூறினார்.
    • பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.

    இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய பல கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரதமர் மோடி தனது இன்றைய உரையில் அது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.

    இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

    இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    மேலும் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு, காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என ட்ரம்ப் கூறியது தொடர்பாக பிரதமர் தனது உரையில் எதுவும் பேசவில்லை.

    மூன்றாம் தரப்பின் தலையீடு கூடாது என்ற இந்தியாவின் நீண்ட கால நிலைப்பாட்டை மோடி வெளிப்படையாக தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக மூச்சு கூட காட்டவில்லை. 

    • அணு ஆயுதங்களை வைத்து இந்தியாவை மிரட்ட முடியாது என்றார் பிரதமர் மோடி.
    • எதிர்காலத்தில் பாகிஸ்தான் வாலாட்டினால் இந்தியாவின் பதிலடி இன்னும் பயங்கரமாக இருக்கும் என்றார் பிரதமர் மோடி.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ஆபரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கை.

    இந்தியாவின் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க வழிபார்த்த பாகிஸ்தான் தோற்றுவிட்டது.

    பயங்கரவாதிகளும், பயங்கரவாதிகளுக்கும் உதவி செய்பவர்களும் எங்களைப் பொறுத்தவரை ஒன்றுதான்.

    தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் நடவடிக்கையை பொறுத்து அடுத்த கட்ட முடிவு.

    எதிர்காலத்தில் பாகிஸ்தான் வாலாட்டினால் இந்தியாவின் பதிலடி இன்னும் பயங்கரமாக இருக்கும்.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எதிரிக்கு பதிலடி கொடுப்பதில் முக்கிய பங்காற்றின. இந்தியாவின் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க வழிபார்த்த பாகிஸ்தான் தோற்றுவிட்டது.

    போர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்ந்தால் பதிலடி தொடரும்.

    நம்மைப் பொறுத்தவரை ஒற்றுமையே பலம், ஒற்றுமையே முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் உலகின் முன் அம்பலப்பட்டுள்ளது என்றார். பிரதமர் மோடி.
    • பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்றார் பிரதமர் மோடி.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் ஏவுகணைகள் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கு தகர்த்தன. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தலைமையங்கள் தகர்க்கப்பட்டுள்ளது.

    தாக்குதல் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்று அழித்துள்ளோம். ஒரே தாக்குதலில் பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். கோவில்கள், குருத்வாராக்கள், பள்ளிகளை குறிவைத்து கோழைத்தனமாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

    பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை ஆதரிக்காமல், இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியுள்ளது.

    10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்புகொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்.

    ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் உலகின் முன் அம்பலப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது.

    பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் விதத்தை பார்க்கும்போது, ஒருநாள் அந்த நாட்டையே அது அழித்துவிடும். பாகிஸ்தான் இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.

    பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பயங்கரவாதமும் வணிகமும் கூட ஒரே நேரத்தில் இருக்க முடியாது.

    பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டும் பயங்கரவாத இயக்க தலைவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வந்தனர். ஒரே தாக்குதலில் அவர்களை இந்தியா அகற்றியுள்ளது. இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிருப்தி, விரக்தி அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவின் முப்டைகளுக்கும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் சல்யூட் என்றார் பிரதமர் மோடி.
    • ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது வீரர்கள் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தினர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

    அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் முப்டைகளுக்கும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் சல்யூட். ஆபரேஷன் சிந்தூரை நமது வீரர்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

    பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்தது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றி பெறச் செய்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.

    ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

    ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது வீரர்கள் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தினர்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.

    இந்தியாவின் நடவடிக்கையை பயங்கரவாதிகள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும்.

    இந்தியாவின் ஏவுகணைகள் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி தகர்த்தன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம்.
    • இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம்.

    இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்த் அவர் கூறியதாவது:-

    இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்த போரை நிறுத்த உதவிய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோவுக்கு நன்றி.

    இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம். வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை.

    இந்தியாவுடன் தற்போது வர்த்தகப் பேச்சு நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். அது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைகள் அசைக்க முடியாதவை மற்றும் சக்தி வாய்ந்தவை. உண்மையில் இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை முழுமையாக அறிந்து புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்டவர்கள்.

    • 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை.

    இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

    இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.

    ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கி, மீண்டும் டிரோன்களை ஏவி வாலாட்டியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் பின் எல்லையில் வெடிகுண்டு சத்தங்கள் ஓய்ந்தன.

    4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது. மின்வினியோகமும் வழங்கப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் நடைபெற்றது.

    தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை தொடங்கியது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே 2வது முறையாக ராணுவ இயக்குனர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3-வது கட்ட பேச்சுவார்த்தை அடுத்த 3 நாட்களில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை.

    காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

    தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார். அதன்படி, இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    • பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை தளம் தாக்கி அழிக்கப்பட்ட காட்சி வெளியிட்டு இயக்குனர் ஜெனரல் ராஜீவ் காய் விளக்கம்.
    • பாகிஸ்தான் ஏவிய சீனாவின் பிஎல் 15 ரக ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்துள்ளோம்.

    இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், முப்பபை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, ஏர் மார்ஷல் பார்தி, வைஸ் அட்மிரல் பிரமோத், லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் விளக்கம் அளித்தனர்.

    பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை தளம் தாக்கி அழிக்கப்பட்ட காட்சி வெளியிட்டு இயக்குனர் ஜெனரல் ராஜீவ் காய் விளக்கம் அளித்துள்ளார்.

    இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு மூலமாக பாகிஸ்தானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ராஜீவ் காய் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர்,"பயங்கரவாதிகள் பிரச்சனையை பாகிஸ்தான் ராணுவம் தனது பிரச்சனையாக கருதுகிறது" என்றார்.

    பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை, பயங்கரவாதிகளை தான் குறிவைத்தது என்று ஏ.கே. பார்தி கூறியுள்ளார்.

    மேலும் அவர்," நமது சண்டை பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரானதல்ல, பயங்கரவாதிகளுக்கு எதிரானது.

    பாகிஸ்தான் ஏவிய சீனாவின் பிஎல் 15 ரக ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்துள்ளோம்" என்றார்.

    3 மணி நேரத்தில் பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்கள் மீது அதிரடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

    பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்களையும் மே 9ம் தேதி இரவு தாக்குதல் நடத்தி தகர்த்ததாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

    பாகிஸ்தானின் நூர்கான், ரபீக்கி, முரிட்கே, சக்கர், சியால்கோட், பஸ்ரூட், சர்கோடா உள்ளிட்ட தளங்கள் தகர்க்கப்பட்டன.

    பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் தகர்க்கப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் வெளியிட்டு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

    பயங்கரவாதிகளின் நிலைகள்தான் நமது இலக்கு. ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் நம் மீது தாக்குதல் நடத்தியது.

    பாகிஸ்தான் ராணுவம் ஏவிய டிரோன்கள் அனைத்தையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்தொழித்தது.

    இந்திய ராணுவத்தின் ஆகாஷ் வான் பாதுகாப்பு தளவாடம் பாகிஸ்தான் டிரோன்கள் அழிப்பில் முக்கிய பங்காற்றியதாக ஏ.கே.பாரதி தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானில் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு பாகிஸ்தான் மட்டுமே பொறுப்பு. எல்லையை பாதுகாக்கும் பணியில் இந்திய ராணுவம் அனைத்து வகையிலும் உறுதி பூண்டிருந்தது" என்றார்.

    • ஆகாஷ் திட்​டத்​தில் மிக குறைந்த வயதுள்ள இயக்​குந​ராக பிரகலாத் பணி​யாற்​றி​னார்.
    • ஆகாஷ் ஏவுகணைகளை டிஆர்​டிஓ மற்​றும் பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனங்​கள் இணைந்து தயாரித்​தன.

    இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து கடந்த 8 மற்றும் 9-ம் தேதிகளில் டிரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசிய போது அவை அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் வானத்திலேயே தவிடு பொடியாக்கின.

    இந்த ஆகாஷ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டி.ஆர்.டி.ஒ.) விஞ்ஞானி டாக்டர் பிரகலாத் ராமாராவ்தான் உருவாக்கி உள்ளார்.

    இந்தியாவின் ஏவுகணை விஞ்ஞானி என்று புகழப்படும் டாக்டர் அப்துல் கலாம்தான், ஆகாஷ் ஏவுகணை திட்டத்தின் இயக்குநராக டாக்டர் பிரகலாத் ராமாராவை தேர்ந்தெடுத்துள்ளார்.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஆகாஷ் திட்டத்தில் மிக குறைந்த வயதுள்ள இயக்குநராக பிரகலாத் பணியாற்றினார்.

    இதுகுறித்து விஞ்ஞானி பிரகலாத் கூறுகையில்,"வான் வழியாக எதிரிகள் நடத்தும் தாக்குதலை எதிர்கொள்ள ஆகாஷ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. அதை உருவாக்குவதில் நானும் உதவியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது பெருமிதமாக உள்ளது.

    பாகிஸ்தான் டிரோன்கள், ஏவுகணைகளை ஆகாஷ் தாக்கி அழித்த அந்த நாள்தான் எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாள். ஆகாஷ் ஏவுகணை மிகவும் வேகமானது, ஆபத்தானது. பாகிஸ்தானுடனான மோதலின் போது நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அற்புதமாக ஆகாஷ் ஏவுகணை செயலாற்றி உள்ளது" என்றார்.

    மிக வேகமாக வரும் எதிரிகளின் டிரோன்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், இன்னும் சொல்லப் போனால் எப்16 போன்ற போர் விமானங்களையும் கூட வானிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கும் வகையில் ஆகாஷ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாஷ் ஏவுகணைகளை டிஆர்டிஓ மற்றும் பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.

    இதுதான் இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது. இந்த ஏவுகணையை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும். மிக வேகமானது, பயங்கரமானது. 80 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது. ஆகாஷ் ஏவுகணை இந்தியாவின் முப்படைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஏவுகணைகளை வாங்க அர்மீனியா ஆர்டர் வழங்கி உள்ளது. இதன் விலை மிகவும் குறைவு. பயன்படுத்துவது எளிமையானது, சிறந்த செயல்பாடு கொண்டது. இதனால் இந்த ஏவுகணைகளை வாங்க உலகளவில் பல நாடுகள் முயற்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது.
    • இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

    இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.

    ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கி, மீண்டும் டிரோன்களை ஏவி வாலாட்டியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் பின் எல்லையில் வெடிகுண்டு சத்தங்கள் ஓய்ந்தன.

    4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது. மின்வினியோகமும் வழங்கப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் நடைபெற்றது.

    தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    3-வது கட்ட பேச்சுவார்த்தை அடுத்த 3 நாட்களில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×