என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இலங்கை அணியை 145 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • ஆனால் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 207 ரன்கள் எடுத்தது.

    பல்லேகலே:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 50-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். பகர் சமான் 84 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து ஆடிய இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் தசுன் ஷனகா கடைசி கட்டத்தில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 31 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 76 ரன்கள் குவித்து போராடினார். பவன் ரத்நாயகே அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார். போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

    இந்நிலையில், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

    குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும், குரூப் 1 பிரிவில் தென் ஆப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பல்லேகலெ:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 50-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். பகர் சமான் 84 ரன்னில் அவுட்டானார்.

    இலங்கை சார்பில் மதுஷனகா 3 விக்கெட்டும், தசுன் ஷனகா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. பவன் ரத்நாயகே அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    கேப்டன் தசுன் ஷனகா கடைசி கட்டத்தில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 31 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 76 ரன்கள் குவித்து அசத்தினார்.

    இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

    • மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல்.
    • ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார் நாடுகள் மீதும் தாக்குதல்.

    அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

    மேலும், அந்த நாடுகளின் முக்கிய இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 14 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என ஈரான் தெரிவித்துள்ளது.

    ஈரான் தாக்குதலால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. புர்ஜ் கலிபாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார் நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது.
    • பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.

    பல்லேகலெ:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 50-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். பகர் சமான் 84 ரன்னில் அவுட்டானார்.

    இலங்கை சார்பில் மதுஷனகா 3 விக்கெட்டும், தசுன் ஷனகா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இலங்கை அணியை 142 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் பாகிஸ்தான் அரையிறுதி செல்ல முடியும் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி 145 ரன்களைக் கடந்ததால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது.

    • ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு படை தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது.

    அணுசக்தி போட்டியின் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இன்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

    தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 57 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

    வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் புரட்சிகர பாதுகாப்புப் படையின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தெஹ்ரானில் ஈரான் உச்சந்தலைவர் அயத்துல்லா காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தை குறிவைத்தும் தாக்குதல் நடந்துள்ளது. அவர் ஏற்கனவே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    இந்நிலையில் கமேனியின் நிலை குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் பேசியுள்ளார்.

    NBC நியூஸுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அளித்த பேட்டியில் "எனக்குத் தெரிந்தவரை கமேனி இன்னும் உயிருடன் இருக்கிறார்" கூறினார். அப்பாஸ் அரக்சியின் நிச்சயமற்ற பதிலால் கமேனியின் நிலை குறித்த சந்தேகங்கள் வலுத்துள்ளன.  

    அதேநேரம், தனது சமூக வலைதள பக்கத்தில், "தெற்கு ஈரானில் உள்ள பள்ளி பட்டப்பகலில் தாக்கப்பட்டது. அப்பாவி குழந்தைகள் இறந்தனர். இதற்கு பதில் கிடைக்காமல் போகாது" என்று சேதமடைந்த பள்ளியின் படத்தை பகிர்ந்து அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படம், தெஹ்ரானில் உள்ள கமேனியின் அலுவலகம், இல்லம் அமைந்துள்ள வளாகத்திற்கு சேதம் ஏற்பட்டதைக் காட்டுகிறது. 

    • அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பதற்றத்தை தணிக்க வேண்டும்.
    • மக்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    அமெரிக்கா இன்று காலை இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளான குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், கத்தார் போன்ற நாடுகள் மீது அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

    இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நடைபெற்றும் வரும் சமீபத்திய நிகழ்வால் இந்தியா மிகுந்த கவலை கொண்டுள்ளது. அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பதற்றத்தை தணிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

    பதற்றங்களை தணிக்கவும், அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்கவும் உரையாடல் மற்றும் ராஜதந்திரம் தொடரப்பட வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

    • யஷ் - கியாரா அத்வானி ரொமான்ஸில் இப்பாடல் உருவாகியுள்ளது.
    • தமிழில் இப்பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

    கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்சிக். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

    இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    டாக்சிக் படத்தின் தபாஹி பாடல் மார்ச் 2 அம தேதி வெளியாகவுள்ளது. யஷ் - கியாரா அத்வானி ரொமான்ஸில் உருவாகியுள்ள இப்பாடலின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழில் இப்பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

    • மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

    அணுசக்தி போட்டியின் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இன்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

    தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 51 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

    தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து இப்பகுதிக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியாவின் சில பகுதிகள், ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இப்பகுதிக்கான அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ அறிவித்துள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளுக்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியாவும் அறிவித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

    மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளியில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதால், விமான நிறுவனங்கள் தேவையான இடங்களில் விமானங்களைத் திருப்பிவிடவும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    பயணிகள் அறிக்கையை சரிபார்த்து விமான நிலையத்தை அடைய வேண்டும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    • தி.மு.க.வில் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உள்ளது.
    • கடந்த முறையும் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    தமிழக சட்டசபை தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர மேலும் சில சிறிய கட்சிகளும் கூட்டணியில் பங்கு பெற உள்ளது.

    இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை கொடுப்பது என்பது பற்றி பேசுவதற்கு தி.மு.க.வில் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த முறையும் மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

    • நமீபியாவிற்கு எதிராக ஃபர்கான் சதம் விளாசியிருந்தார்.
    • இன்றைய இலங்கைக்கு எதிரான போட்டியிலும் சதம் அடித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பையில் கண்டியில் நடைபெற்று வரும் சூப்பர் 8 போட்டியில் குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சஹிப்சதா பர்கான், ஃபகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஃபகர் ஜமான் 27 பந்திலும், ஹகிப்சதா பர்ஹான் 32 பந்திலும் அரைசதம் விளாசினர்.

    இருவரும் சதம் நோக்கி சென்றனர். இறுதியாக ஃபகர் ஜமான் 42 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15.5 ஓவரில் 176 ரன்கள் குவித்தது.

    ஆனால், சஹிப்சதா பர்கான் அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 59 பந்தில் சதம் விளாசினார். அவரது சதத்தில் 9 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். தொடர்ந்து விளையாடிய அவர் 60 பந்தில் 100 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்த டி20 உலகக் கோப்பையில் இது அவருடைய 2-வது சதமாகும். இதற்கு முன்னதாக நமீபியாவுக்கு எதிராக சதம் அடித்திருந்தார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பையில் 2 சதம் விளாசிய முதல் வீரர்கள் சாதனையை ஃபர்கான் படைத்துள்ளார்.

    • 'மறுஆய்வு' பட்டியலில் உள்ள 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை நீதிபதிகள் சரிபார்க்க உள்ளனர்.
    • 7.66 கோடியாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.04 கோடியாக குறைந்துள்ளது.

    மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

    மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் பட்டியலை வெளியிட்டார். இறுதி பட்டியலில் 63.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    இறப்பு, இடமாற்றம், இரட்டைப் பதிவு போன்ற காரணங்களால் அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மாநிலத்தில் 7.66 கோடியாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, SIR நடைமுறைக்குப் பிறகு இறுதிப் பட்டியலில் 7.04 கோடியாகக் குறைந்துள்ளது.

    கடந்த ஆண்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது 58 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில், இந்த முறை கூடுதலாக 5 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

    1.82 லட்சம் புதிய வாக்காளர்கள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அதேபோல், 'மறுஆய்வு' பட்டியலில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வாக்காளர்களின் விவரங்கள் உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவுப்படி, மாவட்ட நீதிபதிகளால் சரிபார்க்கப்படும்.

    இந்த சரிபார்ப்புக்கு பின்னர் கூடுதலாக 8 லட்சம் வாக்குகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தெற்கு கொல்கத்தாவில் உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பவானிபூர் தொகுதியில் 47,111 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    கொல்கத்தா வடக்கு மற்றும் கொல்கத்தா தெற்கு மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து ஆறு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    அதிகபட்சமாக கொல்கத்தா வடக்கு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில், 4 லட்சத்திற்கும் அதிகமானோரின் வாக்குகளும், கொல்கத்தா தெற்கில், 2 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகள் வரையும் நீக்கப்பட்டுள்ளன.

    மறுபுறம், கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் சுமார் 11,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், நந்திகிராமில் சுவேந்து 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

    • ஹிப்சதா பர்கான்- ஃபகர் ஜமான் ஜோடி 176 ரன்கள் குவித்தது.
    • சஹிப்சதா பர்கான் 60 பந்தில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பையில் கண்டியில் நடைபெற்று வரும் சூப்பர் 8 போட்டியில் குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்த போட்டியில் பாகிஸ்தான் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது.

    சஹிப்சதா பர்கான், ஃபகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர்பிளேயில் இந்த ஜோடி 64 ரன்கள் குவித்தது. 9.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    ஃபகர் ஜமான் 27 பந்திலும், ஹகிப்சதா பர்ஹான் 32 பந்திலும் அரைசதம் விளாசினார். பாகிஸ்தான் 14 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    இருவரும் சதம் நோக்கி சென்றனர். இறுதியாக ஃபகர் ஜமான் 42 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15.5 ஓவரில் 176 ரன்கள் குவித்தது.

    2-வது விக்கெட்டுக்கு பர்கான் உடன் கவாஜா நஃபே ஜோடி சேர்ந்தார். நஃபே 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    சஹிப்சதா பர்கான் அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 59 பந்தில் சதம் விளாசினார். அவரது சதத்தில் 9 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். தொடர்ந்து விளையாடிய அவர் 60 பந்தில் 100 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்துள்ளது. இலங்கையை 147 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும்.

    ×