என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஈரானில் உருவாகி வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
- குடிமக்களை பாதுகாக்க மாகாண மற்றும் மத்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க இராணுவம், ஈரானில் உள்ள இஸ்ஃபஹான், ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகியவற்றில் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கை நிலையில் உள்ளன.
இந்த நகரங்களில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளன.
நியூயார்க் நகர காவல்துறை (NYPD) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகரின் மத, கலாச்சார மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உருவாகி வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள மத்திய படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் NYPD கூறியுள்ளது.
வாஷிங்டன் டிசியின் பெருநகர காவல்துறை (Metropolitan Police Department) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணித்து வருவதாகவும், குடிமக்களை பாதுகாக்க மாகாண மற்றும் மத்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றாலும், மத தளங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை (LAPD) - யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை அதிகரித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது நம்பகமான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும், ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சேலத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
- முருகன் மாநாடு அன்னைக்கே வேல் வந்துடுச்சி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமிக்கு 'வேல்' பரிசளிக்கப்பட்டது.
இதனையடுத்து, பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "முருகன் மாநாடு அன்னைக்கே வேல் வந்துடுச்சி..." என்று தெரிவித்தார்.
- நிலைமை மேலும் மோசமடைந்தால் பேரழிவுகரமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
- ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஈரான் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது ஒரு ஆபத்தான திருப்புமுனை என்றும், மத்திய கிழக்கில் இராணுவத் தலையீடுகள் நீண்டகால மோதல்களுக்கும் பிராந்திய ஸ்திரமின்மைக்கும் வழிவகுக்கும் என்றும் சீனா அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்கும் இராஜதந்திர அணுகுமுறையே ஸ்திரத்தன்மைக்கு சிறந்த வழி என்று கூறியுள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், அமெரிக்காவின் தாக்குதல் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்தார். நிலைமை மேலும் மோசமடைந்தால் பேரழிவுகரமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு இல்லை. ஒரே வழி இராஜதந்திரமே என்று கூறி, பதற்றத்தைத் தணிக்க அனைத்து உறுப்பு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் அதிபர் டிரம்பின் நடவடிக்கையை அரசியலமைப்புக்கு எதிரானது என்று கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கை என்று கூறியதுடன், மத்திய கிழக்கில் ஒரு பேரழிவு தரும் போரில் அமெரிக்கா சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதாக எச்சரித்தனர். எந்தவொரு எதிர்மறையான விளைவுகளுக்கும் டிரம்ப் தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்று தெரிவித்தனர்.
சவுதி அரேபியா, அமெரிக்கா ஈரானிய அணுசக்தி வசதிகளைத் தாக்குவதைக் பெரும் கவலையுடன் கவனிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும், அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும், அமெரிக்கா அந்த அச்சுறுத்தலைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். பதற்றத்தைத் தணித்து இராஜதந்திர தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆஸ்திரேலியா,ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், பதற்றத்தைத் தணித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று வடக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை மத்திய வங்கக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான மனநிலையில் உள்ள அனைத்து கட்சிகளையும் அ.தி.மு.க. அணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
- அ.தி.மு.க. கூட்டணியை விரைவாக வலுப்படுத்திவிட வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறார்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க. வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து உள்ள அ.தி.மு.க., இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகளை சேர்த்து பலமான கூட்டணியாக உருவாவதற்கு வியூகம் வகுத்து உள்ளது.
இதைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்காக ரகசிய பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஜய், திருமாவளவன் இருவரும் கூட்டணிக்கு வந்து விட்டால் அ.தி.மு.க. அணி வலுவானதாக மாறி விடும் என்கிற எண்ணத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்து உள்ளனர்.
இதற்காக விஜய், திருமாவளவன் இருவருக்கும் கூட்டணியில் உரிய முக்கியத்துவத்தை கொடுப்பதற்கு அ.தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 துணை முதலமைச்சர் பதவியை உருவாக்கி இருவருக்கும் பிரித்து கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரட்டை இலக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி கொடுப்பதற்கு அ.தி.மு.க. தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருப்பதால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு திருமாவளவன் தயக்கம் காட்டி வருகிறார். இருப்பினும் அவரை சமாதானப்படுத்தி கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் சத்தமில்லாமல் நடைபெற்று வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.
அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் விடுதலை சிறுத்தைகளை எப்படியாவது கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் உள்ளார்.
முக்கிய பிரமுகர்கள், அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகள் ஆகியோர் மூலமாக விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான மனநிலையில் உள்ள அனைத்து கட்சிகளையும் அ.தி.மு.க. அணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அ.தி.மு.க. கூட்டணியை விரைவாக வலுப்படுத்திவிட வேண்டும் என்பதே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக உள்ளது. வருகிற தேர்தலில் அது நிச்சயம் நிறைவேறி அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- இந்தியா கூட்டணி வலிமையாக, வலுவாக இருக்கிறது.
- மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் பா.ஜ.கவினர் கூறுவது போன்று எங்கள் கூட்டணியில் எந்தவித ஓட்டையும் இல்லை.
கோவை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா கூட்டணி வலிமையாக, வலுவாக இருக்கிறது. மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் பா.ஜ.கவினர் கூறுவது போன்று எங்கள் கூட்டணியில் எந்தவித ஓட்டையும் இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது.
எங்கள் கூட்டணியில் ஏதாவது குழப்பம் ஏற்படும், சிதறும், அதனால் தங்களுக்கு ஆதாயம் ஏற்படும் என அ.தி.மு.க.வும், பா.ஜ.கவும் பகல் கனவு காண்கிறார்கள். ஆனால் எங்கள் கூட்டணியில் எந்தவித குழப்பமும் ஏற்படாது.
எங்கள் கூட்டணி ஒன்றும் சிதறுவதற்கு நெல்லிக்காய் மூட்டை கிடையாது. இந்த கூட்டணியானது எக்கு கோட்டையாகும். எங்கள் கூட்டணிக்குள் சிறு, சிறு பிரச்சினைகள் இருக்கலாம். அதனை எல்லாம் நாங்களே பேசி தீர்த்து கொள்வோம்.
தமிழகத்தில் யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ, அவர்களை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள். தமிழ் கடவுள் முருகன் புறக்கணிப்பார்.
தமிழகத்தில் முருகன் மாநாடு நடத்த வேண்டியதற்கான அவசியம் என்ன. எதற்காக நடத்துகிறார்கள். அயோத்தியில் ராமரை நாடினார்கள். ஆனால் அங்கு பா.ஜ.க.வை ராமர் கைவிட்டு விட்டார். பா.ஜ.க கட்சி மக்களை நம்பி இருப்பது இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்வது தான் பா.ஜ.கவின் வேலையாக உள்ளது.
பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவே இல்லை. மணிப்பூருக்கு செல்லாமல் இங்கே இவர்கள் முருகன் மாநாடு நடத்தி விட்டால், அவர்களை முருகன் மன்னித்து விடுவாரா?. மேலும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியையும் மத்திய அரசு தர மறுக்கிறது.
மத்தியில் காங்கிரஸ் இருந்தவரை தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் இருந்தது. பா.ஜ.க வந்த பிறகு தான் தமிழகத்தில் 3-வது மொழியை திணிக்கிறார்கள்.
தமிழ் மொழியை நீங்கள் சிதைக்கிறீர்கள். தமிழகத்திற்கு துரோகம் செய்கிறீர்கள். மேலும் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றால் தமிழ் கூடாது சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என கூறுகிறீர்கள்.
அப்படி இருக்கையில் தமிழ்க்கடவுள் முருகன் உங்களை எப்படி ஏற்றுக்கொள்வார். தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றால் வருகிற 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் உங்களை அவர் சூரசம்ஹாரம் செய்வார். பா.ஜ.க.வினரின் வேஷம் சில மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் முருக கடவுளை ஏமாற்ற முடியாது.
ஆங்கிலத்திற்கு எதிராக பேசும் அமித்ஷாவின் மகனே, ஆங்கிலேயர் உருவாக்கிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார். ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்கள் தற்போது ஆங்கிலம் பேசி வருகிறார்கள். இவர்கள் ஆங்கிலம் பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் அப்படி பேசுகின்றனர். எடப்பாடி பழனிசாமியை பார்த்து அமித்ஷா, இ.பி.எஸ். என்கிறார். அவ்வாறென்றால் அவர் இ.பி.எஸ்.சை அவமானப்படுத்துகிறாரா?.
விபூதி வைத்ததற்கு எரிச்சல் இருந்திருக்கலாம். அல்லது உபாதை இருக்கலாம். அதனால் அழித்து இருப்பார்கள். அதனை அரசியல் படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மாநாடு வளாகத்திற்கு பொதுமக்கள் செல்ல இரு நுழைவு வாயில்களும், வி.ஐ.பி., வாகனங்கள் செல்ல ஒரு நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.
- பாதயாத்திரை பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் பஜனை பாடியவாறும், சஷ்டி கவசம் கோஷமாக படித்தும் மாநாட்டு திடலில் திரண்டனர்.
மதுரை:
உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வேல் யாத்திரை, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் மலை மீதான சர்ச்சைக்கு பிறகு தமிழ்க்கடவுள் முருகனுக்கு முக்கியத்துவம் அளித்தும், இந்துக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் இன்று முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டாக நடைபெறுகிறது. குன்றம் காக்க, கோவிலை காக்க என்ற தலைப்பில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு கடந்த மாதம் 28-ந்தேதி கால்கோள் விழாவுடன் மாநாட்டு பணிகள் தொடங்கின.
இதையடுத்து கடந்த 8-ந்தேதி மதுரை வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மாநாட்டிற்காக மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில் 8 லட்சம் சதுரஅடி பரப்பளவுள்ள இடத்தில் பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடந்தது. அதில் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள் கண்காட்சி கடந்த 16-ந்தேதி தொடங்கியது.
ஒரே இடத்தில் பக்தர்கள் அறுபடை வீடுகளையும் காணும் வகையில் முகப்பு தோற்றம், கோபுரங்கள், பிரகாரங்கள் மற்றும் மூலவர் சன்னதியில் கோவிலில் இருப்பதை போன்று முருகன் சிலை வேலுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதனை காண மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் பூஜை பொருட்களுடன் கோவிலுக்கு வருவதை போன்று வந்து அறுபடை முருகனை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களுக்கு முந்திரி, வேர்க்கடலை உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

மாநாட்டை பிரபலப்படுத்தும் வகையில் புதுச்சேரி மந்திரி நமச்சிவாயம், கவர்னர்கள் ஆர்.என்.ரவி (தமிழ்நாடு), கைலாஷ்நாதன் (புதுச்சேரி), சி.பி.ராதாகிருஷ்ணன் (மகாராஷ்டிரா), த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி உள்ளிட்டோர் வந்து தரிசனம் செய்தனர். அதன் மூலம் அறுபடை வீடுகள் கண்காட்சியை கடந்த 6 நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. மாநாடு நடைபெறும் பாண்டி கோவில் அம்மா திடலில் முருகனின் பிரமாண்ட தோற்றத்துடன் நுழைவு வாயில், திருப்பரங்குன்றம் மலையையும், வேல் ஏந்தியவாறு முருகப்பெருமான் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது போலவும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் சதுர அடி பரப்பில் 5 லட்சம் பக்தர்கள் அமரும் வகையில் தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளன. மேலும் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் அமர 1 லட்சம் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 2 நாட்களாகவே வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்காணக்கானோர் மதுரை வந்து சேர்ந்தனர். அவர்கள் மதுரையில் பல்வேறு விடுதிகளில் தங்கி மதுரையை சுற்றியுள்ள கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர். இன்று காலை மாநாட்டு திடலில் பக்தர்கள் குவிந்தனர். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்ததின் பேரில் முருக பக்தர்கள் மட்டுமின்றி சாய் பாபா பக்தர்கள், ஓம்சக்தி வழிபாட்டு குழுவினர், ஐயப்ப பக்தர்கள் உள்ளிட் டோர் தங்கள் குடும்பத்துடன் மாநாட்டுக்கு வருகை தந்தனர். இதன் மூலம் 5 பக்தர்கள் மாநாட்டுக்கு வருகை தந்தனர்.
குறிப்பாக முருக பக்தர்கள் ஏராளமானோர் மாநாட்டு கால்கோள் விழா நடந்த நாளில் இருந்து விரதம் மேற்கொண்டு இதில் கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், மஞ்சள் ஆடை, மாலை அணிந்து ஆண், பெண் பக்தர்கள் கையில் வேல் ஏந்தியும், பால் குடங்களை தலையில் சுமந்தும் மாநாட்டுக்கு ஊர்வலமாக வந்தனர். அதேபோல் பாதயாத்திரை பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் பஜனை பாடியவாறும், சஷ்டி கவசம் கோஷமாக படித்தும் மாநாட்டு திடலில் திரண்டனர்.

அனைத்து பக்தர்களும் பிற்பகல் 3 மணிக்குள் மாநாட்டு திடலுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பக்தி கோஷங்கள் முழங்கவும், முருகன் திருப்புகழ் பாடியும் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு தமிழர்களின் பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்கான சிறிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிறப்புரையாற்றுகிறார்கள்.
மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் 5 லட்சம் பக்தர்கள் ஒன்றாக இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக மாநாட்டு வளாகம் முழுவதும் 18 பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த திரையில் கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் வரும் வகையிலும், அதனை பார்த்தும், பக்தர்களுக்கு வழங்கப்படும் கையடக்க சஷ்டி கவசம் புத்தகம் வாயிலாகவும் படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது உலகளவில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக பதிவு செய்யப்படுகிறது. இதில் நேரில் கலந்துகொள்ள இயலாதவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாலை 7 மணிக்கு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், தீவிர முருக பக்தருமான பவன்கல்யாண் சிறப்புரையாற்றுகிறார். இதற்காக அவர் ஆந்திராவில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
மாநாட்டில் இரவு 7.30 மணிக்கு தமிழகத்தில் உள்ள அறுபடை முருகன் உள்ளிட்ட கோவில்களை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்துவது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முருகன் மாநாடுகளை நடத்துவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெறுகிறது.
முன்னதாக மாநாட்டுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், பாஸ் பெற அவசியம் இல்லை என்று கோர்ட்டு உத்தரவிட்டதால் வெளியூர்களில் இருந்து மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப வாகனங்களை பார்க்கிங் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வண்டியூர் டோல்கேட் அருகே பிரதான சாலையில் மாநாடு வளாகம் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநாட்டிற்கு வரும் முக்கிய விருந்தினர்களுக்கு சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாநாடு வளாகத்திற்கு பொதுமக்கள் செல்ல இரு நுழைவு வாயில்களும், வி.ஐ.பி., வாகனங்கள் செல்ல ஒரு நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை ஒருங்கிணைக்கவும், பக்தர்களை வழிநடத்தவும் மாநாடு நடைபெறும் பகுதியில் மட்டும் 300 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு கூட்டத்திற்கு ஏற்ப பக்தர்கள் பிரித்து விடப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகள் மாநாட்டு திடலுக்குள் சிரமமின்றி செல்ல சக்கர நாற்காலிகளும், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுாட்ட தனி அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில், 1,000 லிட்டர் தண்ணீர் டேங்குகள், தற்காலிக தண்ணீர் பந்தல்கள், 200 கழிப்பறைகள் அமைக்கட்டுள்ளன.
மாநாட்டையொட்டி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் ஐந்து துணை கமிஷனர்கள், 15 உதவி கமிஷனர்கள், 54 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா "பங்கர்-பஸ்டர்" குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தது.
- மூன்று அணுசக்தி தளங்களிலும் கதிர்வீச்சு மாசுபாட்டின் அறிகுறிகள் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் டெல் அவிவ், ஹைஃபா உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தது 11 பேர் காயமடைந்தனர்.
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி 30 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா "பங்கர்-பஸ்டர்" குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தது.
மேலும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் சுமார் 30 டோமஹாக் ஏவுகணைகளை ஏவியுள்ளன.
தாக்குதல்களுக்குப் பிறகு கதிர்வீச்சு குறித்த அச்சங்கள் எழுந்தாலும், மூன்று அணுசக்தி தளங்களிலும் கதிர்வீச்சு மாசுபாட்டின் அறிகுறிகள் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஈரானின் தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் ராணுவமும் ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
- முருக பக்தர்கள் மாநாட்டில் அதிகமான மத நல்லிணக்கத்தை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.
- மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மதுரை:
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த நடிகை கஸ்தூரி மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-
விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு இடத்தில் தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. எங்களுடைய ஒவ்வொருவர் மனதிலும் நடக்கிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், மார்தட்டி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மதுரையில் இன்று நடைபெறுவது அரசியல் விழா அல்ல. தமிழ்க்கடவுள் முருகனை போற்றும் மாநாடு.
கும்பாபிஷேகம், முருகன் மாநாடு நடத்துவது அரசியல் இல்லை. மக்கள் ஒன்றுகூடி மாநாடு நடத்தினால் அரசியல் ஆதாயம் தேடுவது என்று அர்த்தமா? மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தல் பொன் சட்டியா? தி.மு.க. நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக நடந்தது. ஆனால் மக்களின் பேரெழுச்சியுடன் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
பவன் கல்யாண் கட்சித் தலைவராக இந்த மாநாட்டிற்கு வரவில்லை. முருக பக்தராக வரவுள்ளது மிகப்பெரிய பெருமை. அதை தி.மு.க. அரசு ஆதரிக்க வேண்டும். சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வது தான் அக்மார்க் மதவாதம். முருகனை போற்றுவோம் என்று சொல்வது ஆன்மிகம். முருக பக்தர்கள் மாநாட்டில் அதிகமான மத நல்லிணக்கத்தை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.
முருக பக்தர்கள் மாநாடு குறித்து அமீர் கருத்து தெரிவித்துள்ளார். மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முருகன் தமிழ்க்கடவுள் தானே. அவருடைய மூதாதையர்கள் தமிழர்கள் தானே? அவர் தமிழனாக நினைக்கவில்லையா என தெரியவில்லை.
மதுரையம் பதியில் மாற்று மதத்தினர் அரணாக நிற்க வேண்டும். சுல்தான் கூட கோவிலுக்கு நற்பணி செய்ததாக தான் வரலாற்றில் உள்ளது. விஜய் சரியான பாதையை பயணித்து வருகிறார். வெற்றி என்பது கட்சியின் பெயரில் உள்ளது. அதை வாழ்த்தாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜோ ரூட் 28 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
- ஜோ ரூட்டை அதிகமுறை அவுட் செய்த வீரர்கள் பட்டியலில், ஹசில்வுட் சாதனையை (2வது இடம்) பும்ரா சமன் செய்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.
முன்னதாக ஜோ ரூட் 28 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட்டை அதிகமுறை அவுட் செய்த வீரர்கள் பட்டியலில், ஹசில்வுட் சாதனையை (2வது இடம்) சமன் செய்த பும்ரா சமன் செய்தார். ரூட்டை அதிகமுறை விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கம்மின்ஸ் (11 முறை) வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
- ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- வழக்கு தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி. இவர் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தனது தாயுடன் வசித்து வந்த மாணவியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதை தொடர்ந்து அவருடைய நண்பர்களும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக 14 பேர் மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவி கர்ப்பமானார். பயந்து போய் மாணவி இந்த விவகாரத்தை வெளியே கூறவில்லை. தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவருடைய தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் மாணவியை 14 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
- அணுசக்தி மேம்பாட்டை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அமெரிக்க ராணுவம் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை), ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் தரப்பில் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை.
அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை. செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அணுசக்தி மேம்பாட்டை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.