என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இன்று வழக்கமாக பயணிகள் வந்து சென்றுகொண்டிருந்தனர்.
- இந்த சம்பவத்தால் விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ் அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று வழக்கமாக பயணிகள் வந்து சென்றுகொண்டிருந்த நிலையில் டிராலியல் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் நீண்டநேரமாக கேட்பாரற்று இருந்துள்ளது.
இதனால் சந்தேகமெழுந்த நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதனை மோப்ப நாய் உதவியுடன் பரிசோதனை செய்தனர். ஆனால் அதில் ஆபத்தான பொருள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த சம்பவத்தால் விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சூட்கேஸ் அங்கு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- கூடுதல் பெட்டிகள் ஸ்லீப்பர், ஏசி, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என வழித்தடத்தை பொறுத்து மாறுபடும்
- 26 லட்சம் பயணிகள் பயனடைவார்கள்
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் 37 ரயில்களில் கூடுதலாக 116 பெட்டிகளை இணைத்துள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. கூடுதல் பெட்டிகள் ஸ்லீப்பர், ஏசி, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என வழித்தடத்தை பொறுத்து மாறுபடும் எனவும் தெரிவித்துள்ளது.
வடக்கு ரயில்வே மண்டலம் 5 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. மேலும் ஒரு பயணத்திற்கு 30,780 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 18 பெட்டிகள் கொண்ட 30 புதிய சிறப்பு ரயில்களை இயக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. கூடுதல் பெட்டிகள், சிறப்பு ரயில்கள் மூலம் 26 லட்சம் பயணிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து கோவை, சேலம், கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
- இந்த ஆண்டு கூகுள் தேடலில் பஞ்சாப் கிங்ஸ் அணி உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்தது.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்த இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டது.
இந்த ஆண்டு கூகுள் தேடலில் பஞ்சாப் கிங்ஸ் அணி உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதேபோல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்த இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல். போட்டியில் இதுவரை கோப்பை வெல்லாத அணிகளாக உள்ள இந்த இரண்டு அணிகளை கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.
இந்த இரு அணிகளும் கோப்பைக்காக கடுமையாகப் போட்டியிட்டதால் அவற்றின் மீது அதிக ஆர்வம் எழுந்திருக்கலாம்.
விராட் கோலி, எம்.எஸ்.தோனி போன்ற ஜாம்பவான்கள் இருந்தபோதிலும் அவர்கள் இடம்பெற்றுள்ள அணி கூகுள் தேடலில் முதலிடத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை (பிரிதிநிதிகளை) சந்திக்க எதிர்க்கட்சிகளை அழைக்கும் மரபை பாஜக பின்பற்றுவதில்லை
- சமீப நாட்களாகவே சசி தரூர் பாஜக தலைவர்களை புகழ்ந்து பேசிவருகிறார்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருநாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தநிலையில், இன்று 9 மணிக்கு டெல்லியில் இருந்து மாஸ்கோ திரும்பினார். இதனிடையே இன்றிரவு 7 மணிக்கு புதினுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பில் சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் பங்கேற்க எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் மல்லிகார்ஜுனே கார்கே, ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படாதநிலையில், எம்பி சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை காங்கிரஸ் வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. சொந்தக் கட்சியின் தலைவர்களே அழைக்கப்படாதபோது, தனக்கு வந்த அழைப்பை சசி தரூர் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "அழைப்பு அனுப்பப்பட்டு, அழைப்பிதழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அனைவரின் மனசாட்சிக்கும் ஒரு குரல் உண்டு. நமது தலைவர்கள் அழைக்கப்படாதபோது, நாம் அழைக்கப்பட்டிருந்தால், விளையாட்டு ஏன் விளையாடப்படுகிறது, யார் விளையாடுகிறார்கள், நாம் ஏன் அதில் பங்கேற்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்." என தெரிவித்தார்.
நேற்று, "இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை (பிரிதிநிதிகளை) சந்திக்க எதிர்க்கட்சிகளை அழைக்கும் மரபை பாஜக பின்பற்றுவதில்லை" என ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்த நிலையில் இன்று சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீப நாட்களாகவே சசி தரூர் பாஜக தலைவர்களை புகழ்ந்து பேசிவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
- விபத்து எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 2.31 சதவீதம் அதிகம்
- விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேசம் முதலிடம்
2024-ல் இந்தியாவில் சாலைவிபத்தில் 1.77 லட்சம் பேர் இறந்ததாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று மக்களவையில் தெரிவித்தார். அதாவது ஒரு நாளைகு 485 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 2.31 சதவீதம் அதிகமாகும்.
2024-ல் நாட்டில் பதிவான மொத்த சாலை விபத்து இறப்புகளின் எண்ணிக்கை 1,77,177 ஆகும். இதில் eDAR போர்ட்டலில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கு வங்கம் தொடர்பான தரவுகளும் அடங்கும். 2023 ஆம் ஆண்டு மொத்தம் 4,80,583 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,72,890 பேர் உயிரிழந்துள்ளனர். 4,62,825 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் இங்கு 23,652 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24,118 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டில் 18,347 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18,449 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இறப்பு எண்ணிக்கை 15,366 லிருந்து 15,715 ஆக அதிகரித்துள்ளது. இவற்றிற்கு மாறாக கேரளா குறைந்த அளவு விபத்து சதவிகித்தை பதிவு செய்துள்ளது.
- புதுடெல்லியில் பிரதமர் மோடி, அதிபர் புதின் ஆகியோர் கூட்டாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
- அப்போது பேசிய பிரதமர் மோடி ரஷியர்களுக்கு விரைவில் இ டூரிஸ்ட் விசா வசதியை வழங்கவுள்ளோம் என்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், இந்தியா–ரஷியா நாடுகளுக்கு இடையிலான மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ரஷிய சுற்றுலாப் பயணிகளுக்கான 30 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் இலவச இ-விசா வசதியை இந்தியா அறிவித்துள்ளது. இந்த முடிவு இரு நாடுகளின் நெருங்கிய உறவை பிரதிபலிக்கிறது.
புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி கூறுகையில், ரஷிய குடிமக்களுக்கு விரைவில் இ டூரிஸ்ட் விசா மற்றும் குரூப் டூரிஸ்ட் விசா வசதிகளை இலவசமாக வழங்க உள்ளோம். விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
- 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எவரும் இந்தியச் சட்டத்தின் கீழ் வயது வந்தவர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
- இந்திய சட்டத்தின்கீழ் லிவ்-இன் உறவுகள் சட்டவிரோதமோ, குற்றமோ அல்ல
சட்டப்பூர்வ திருமண வயதை எட்டவில்லை என்றாலும், வயதுவந்த இருவருக்கும் முழு சம்மதம் எனில், அவர்கள் லிவ்-இன் உறவில் நுழையலாம் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த 18 வயது பெண் மற்றும் அவரது 19 வயது ஆண் நண்பர் தாக்கல் செய்த ரிட்மனுமீதான விசாரணையின் போது இந்த கருத்தை தனி நீதிபதி தெரிவித்துள்ளார். இருவரும் விருப்பத்தோடு உடலுறவு வைத்துக்கொண்ட நிலையில், குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் குடும்பத்தினரிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு கோரி ஊள்ளூர் காவல்துறையை அணுகியபோது, அவர்கள் இளைஞர் இன்னும் 21 வயதை எட்டவில்லை எனக்கூறி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இருவரும் காவல்துறை தங்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தை நாடினர். அப்போது இளைஞர் சட்டப்பூர்வ திருமண வயதை எட்டாததால் இருவரும் லிவ்-இன் உறவில் ஒன்றாக வாழ அனுமதிக்கக்கூடாது என்று அரசு வாதிட்டது. அரசின் நிலைப்பாட்டை நிராகரித்த நீதிபதி,
"18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எவரும் இந்தியச் சட்டத்தின் கீழ் வயது வந்தவர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். வயதுவந்தோர் என்பது, இணைந்து வாழும் முடிவு உட்பட தனிப்பட்ட தேர்வுகளைச் செய்யும் உரிமையைக் கொண்டுள்ளது. பிரிவு 21 இன் கீழ் சட்டத்தால் சட்ட நடைமுறைகளை தவிர ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் வாழ்க்கையில் தலையிடுதல் கூடாது. மனுதாரர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள முடியாததால் மட்டுமே, அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க முடியாது. மேலும் இந்திய சட்டத்தின்கீழ் லிவ்-இன் உறவுகள் சட்டவிரோதமோ, குற்றமோ அல்ல." என தெரிவித்தார்.
தொடர்ந்து மனுவில் இருவரும் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விசாரித்து, சட்டப்படி அவர்களின் கோரிக்கையை மதிப்பிட்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார்.
- இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. அமைதியின் பக்கம் உள்ளது.
- உக்ரைன் போர் தொடர்பான தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து வருகிறோம்.
ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று புதின் வந்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்திய பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்தினார். மேலும் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார். அதில், உலக அமைதி, மனிதநேயத்திற்கான காந்தியின் பங்களிப்பு அளவிட முடியாதது. ஒத்துழைப்பு, அமைதி கொள்கைகளை உறுதியாக நிலைநாட்டியவர். பூமிக்கு மிகுந்த செல்வாக்கை சேர்த்த மகத்தான தத்துவ ஞானிகளில் ஒருவர் காந்தி. நவீன இந்தியாவின் முக்கிய வடிவமைப்பாளர்களில் ஒருவர் ஆவார் என்று எழுதி கையெழுத்திட்டார்.
பின்னர் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். இதில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் பேசிய பிரதமர் மோடி,
உங்களின் (புதின்) இந்திய வருகை மிகவும் வரலாற்று சிறப்புமிக்கது. தனிப்பட்ட முறையில் உங்களுடனான எனது உறவுகள் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள், ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். இந்தியா-ரஷியா உறவுகள் வளர்ந்து புதிய உயரங்களை தொட வேண்டும். உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதியை விரும்புகிறோம். நாங்கள் எப்போதும் அமைதியை ஆதரிக்கிறோம். இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. மாறாக இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது. இது போருக்கான காலம் அல்ல. அனைவரும் அமைதி பாதையில் செல்ல வேண்டும். அமைதி பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயன் அடையும்.

இந்தியாவில் அதிபர் புதின்
அமைதிக்கான அனைத்து முயற்சிகளிலும் நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம். சில நாட்களாக நடந்து வரும் அமைதிக்கான முயற்சிகள் மூலம் உலகம் அமைதிக்கு திரும்பும் என்று நான் நம்புகிறேன். பேச்சுவார்த்தை மூலம் மோதலுக்கு தீர்வு காண வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய புதின், "இந்தியா-ரஷியாவின் உறவு நம்பிக்கை மூலம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. உக்ரைன் போர் தொடர்பான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண நாங்கள் பணியாற்றி வருகிறோம். போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா அளிக்கும் பங்களிப்பை பாராட்டுகிறோம். நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ரஷியாவும் இந்தியாவும் ராணுவத் துறையிலும், விண்வெளி மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற துறைகளிலும் ஒத்துழைப்புகளை கொண்டு உள்ளன. இரு நாடுகளும் அனைத்து துறைகளிலும் முன்னேற திட்டமிட்டுள்ளோம்." எனக் கூறினார்.
மாநாட்டில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். இதில் இருநாடுகளின் உயர்மட்ட குழுவினரும் உடன் இருந்தனர். இரு தலைவர்களும் பல்வேறு துறைகள், வர்த்தக பற்றாக்குறை மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, அணு சக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம், விண்வெளி உள்ளிட்ட துறைகள் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனைத்தொடர்ந்து இன்று இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சார்பில் புதினுக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கப்படுகிறது. பின்னர் இன்று இரவு 9 மணிக்கு புதின் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் புறப்படுகிறார். ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணைய் வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இவ்விவகாரத்தில் இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
பின்னர் இதுதொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் புதின் இந்தியா வந்து பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது முக்கியத்த வம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தீபத்தூண் என்பது கோவில் சொத்து என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
- இதுதொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மத மோதலில் ஏற்படுத்தும் முயற்சியில் தி.மு.க. அரசு இறங்கியுள்ளது.
ஐகோர்ட் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு குறித்து தமிழக அமைச்சர் ரகுபதி வேண்டும் என்றே பொய் சொல்லியுள்ளார். நீதிபதி தவறான தீர்ப்பு கொடுத்துள்ளார் என ரகுபதி தவறான வாதத்தைவைக்கிறார்.
தீபத்தூண் என்பது கோவில் சொத்து என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. இதனை எதிர்த்து செயல் அலுவலர் ஏன் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதுவும் சரியாக செய்யவில்லை. செயல் அலுவலரை திமுக அரசு தூண்டிவிட்டு மேல்முறையீடு செய்ய வைத்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மோசடி என நீதிபதிகள் அமர்வு கண்டுபிடித்தனர். திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை.
நீதிபதி தீர்ப்புக்கு எதிராக சட்டவிரோதமாக மோதல் போக்கை தி.மு.க. அரசு கடைபிடித்துள்ளது. ஒரு தலைபட்சமாக இந்து மதத்தை நம்பும் பக்தர்களுக்கு எதிராக உச்சபட்சமாக திருப்திப்படுத்தும் அரசியலை தி.மு.க. செய்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய சட்டத்துறை அமைச்சர் பழைய தீர்ப்புகளை திரித்து பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.
- அசிம் முனீரை நியமித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்தார்.
- இதுவரை முப்படைகளுக்கான அதிகாரம், அதிபர் மற்றும் அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்தது.
பாகிஸ்தானில் பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. இதற்காக அரசியல் சாசனத்தின் 243-வது பிரிவில் 27-வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் கடும் பின்னடைவை சந்தித்ததால் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்தது. மேலும் ராணுவ தளபதியான பீல்டு மார்ஷல் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வகையிலும் இந்த புதிய பதவி உருவாக்கப்பட்டது.
இந்தநிலையில் பாகிஸ்தானின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைவராக அசிம் முனீரை நியமித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்தார்.
இதுதொடர்பாக அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 5 ஆண்டு காலத்திற்கு பாதுகாப்புப் படைகளின் தலைவராக, ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீரை நியமனம் செய்ய பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரையை அதிபர் ஆசிப் அலி சர்தாரி அங்கீகரித்துள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு படை அலுவலகத்திற்குப் பொறுப்பேற்கும் முனீர் ராணுவத் தளபதியாகவும் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு படைகளின் தலைவர் பதவி என்பது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்றையும் கட்டுப் படுத்த வழிவகுக்கும்.
இதுவரை முப்படைகளுக்கான அதிகாரம், அதிபர் மற்றும் அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்தது. இனி அந்த அதிகாரம் ஒரு நபரின் கீழ் வரும்.
நமக்கு விருப்பமான கடவுள்கள் ஏராளமாக இருந்தாலும், நாம் முதற் கடவுளாக வணங்க வேண்டியது விநாயகரையும், குலதெய்வத்தையும் தான்.. இவர்களை வணங்கிய பிறகே பிற கடவுள்களை வணங்குவது தான் சரியான முறையாகும்..
ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறையாவது குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது நன்மை தரும்..
குலதெய்வத்தை வீட்டிலேயே வணங்கலாமா? என்று பலருக்கும் சந்தேகங்கள் உண்டு.
ஆம்.. குலதெய்வத்தை வீட்டிலேயே வணங்கலாம் அதற்கு தேவையானது ஒரு மண் குடுவை, மற்றும் தீபம் ஏற்றும் விளக்கு.
முதலில் மண் குடுவையையும் விளக்கையும் நீரில் நன்கு சுத்தம் செய்து, துடைத்துவிட்டு பின்னர் குடுவையின் மஞ்சள் பூசி, அவரவர் குடும்ப வழக்கப்படி பட்டை அல்லது நாமமிட்டு அதனுள் பாதி குடுவை நிறையும் வரை தவிடு சேர்க்கவும்..
பிறகு, ஒரு வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் 27 அல்லது 29 ஏதேனும் ஒரு எண்ணிக்கையில் ஒரே மாதிரியான ஒரு ரூபாய் நாணயங்களை சேர்த்து அதனை கட்டி முடித்துவிட்டு அதன் மீது ஒரு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து அதன் மீது ஒரு வாசனை பூவை வைத்து அந்த மண் பானைக்குள் வைத்து விடுங்கள்..
பிறகு இந்த மண் குடுவையை பித்தளை தட்டில் வைத்து அதனை சுற்றி வாசனை மலர்களை வையுங்கள்..
குடுவையின் மேல் தட்டை வைத்து மூடி, அதன் மீது விளக்கில் நெய் ஊற்றி தாமரை தண்டு திரி அல்லது பஞ்சு திரி போட்டு தீபமேற்றி வீட்டின் பூஜை அறையில் குபேர மூலையில் வைத்து வழிபட வேண்டும்.
வாரம் ஒரு முறை இந்த விளக்கை ஏற்றி வர வேண்டும். இந்த மண் குடுவையும் அதன் மீது நாம் வைக்கும் விளக்கையும் குடுவைக்குள் போடும் தவிட்டையும் வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
மாற்றும்போது பழைய குடுவை மற்றும் விளக்கை ஆற்றில் விட்டுவிட வேண்டும். ரூபாய் நாணயங்களை குலதெய்வ உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.
ஏதேனும் நமக்கு வேண்டுதல் இருப்பின் அதனை மனதில் நினைத்துக்கொண்டு 5 வாரங்கள் சனிக்கிழமை காலை வேளையில் தீபம் ஏற்றி வந்தால் நாம் நினைத்த காரியம் நிச்சயம் கைக்கூடும்..
நாம் தினந்தோறும் அன்றாட வேலைகளை செய்ய நம்மை சுறுசுறுப்பாகவும், புத்துணர்வோடும் வைப்பதற்கு நம் உடலில் உள்ள சத்துகளின் நிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில், நம் உடலில் சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்க நாம் உண்ணும் உணவில் தினமும் காய்கறிகளுடன் கீரை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
ஆம்.. அப்படி கீரைகளில் அதிக சத்து உள்ள பருப்பு கீரை பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம்..!
கிராமங்களில் சாதாரணமாக வீட்டைச்சுற்றி பருப்பு கீரை வளர்ந்து கிடப்பதை பார்க்கலாம். இதற்கு கங்கா வள்ளி என்ற பெயரும் உண்டு. ஏராளமான சத்துக்கள் இந்த கீரையில் உள்ளன.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒமேகா-3 சத்தானது பருப்பு கீரையில் ஏராளம். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஒமேகா-3 தேவை. இது, ஆட்டிசம் போன்ற வளர்ச்சி குறைபாடுகளை தடுக்க உதவுகிறது. இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைப்பதுடன், இதயத்தை சுற்றி படியும் கொழுப்பையும் தடுக்கிறது.
வைட்டமின்-ஏ சத்தும் இருப்பதால் தோல் எப்போதும் பொலிவுடன் இருக்கவும், சருமம் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்தவும், கண் பார்வை தெளிவாக இருக்கவும் இந்த கீரை உதவுகிறது.
வைட்டமின்-சி, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் தீரும். உடல் எடையை குறைக்கும் மற்றும் குடல் நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது.
ஆஸ்டியோபோரோசிஸ், சொரியாசிஸ் போன்ற நோய்களுக்கு பருப்பு கீரை அருமருந்தாக உள்ளது, என்று நாட்டு மருத்துவ நூல்கள் கூறுகின்றன. எலும்புகள் மற்றும் தசைகளுக்கு வலிமை தரும் கால்சியமும் இந்த கீரையில் ஏராளம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், நீண்ட நேரம் பசி உணர்வு இல்லாமல் தவிர்க்க இந்த கீரை உதவுகிறது. தமிழ்நாட்டில் சாதாரணமாக எங்கும் முளைத்து கிடக்கும் இந்த கீரை இந்த மண்ணின் பொக்கிஷம் என்றே உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்..!






