என் மலர்
தலைப்புச்செய்திகள்
- புத்தகம் படிக்கிற பழக்கம் நமக்கு இல்லை.
- 2 புத்தகத்தையும் வாங்கி விட்டேன்.
கத்துக்குட்டி, நந்தன் மற்றும் பல படங்களை இயக்கிய இரா.சரவணன் எழுதிய சங்காரம் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர்கள் சசிகுமார், சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சூரி பேசியதாவது:-
சினிமாவிற்காக ஸ்கிரிப்டை படித்து விடுவேன். அது தொழிலுக்காக படிக்கிறது. புத்தகம் படிக்கிற பழக்கம் நமக்கு இல்லை. கடன் கொடுத்தவர் எதிரில் கூட தைரியமாக சென்று விடுவேன். புத்தகத்தை கொடுத்துவிட்டு தலைவா படித்து விட்டு சொல்லுங்க என்று சொல்வார்கள். எனக்கு பெரிய பதட்டமாகி விடும். அப்படிதான் சமுத்திரகனி ஒரு புத்தகத்தை கொடுத்தார்.
அப்புறம் இன்னொரு புத்தகம் கொடுத்தார். 2 புத்தகத்தையும் வாங்கி விட்டேன். அப்புறம் அவரை பார்க்கும் போதெல்லாம் புத்தகத்தை படித்தியா என்று கேட்பாரே என சுற்றிக்கொண்டு போய் விடுவேன். அப்படியே திடீரென என சந்தித்து விட்டால். அய்யோ அண்ணே சூப்பர் அண்ணன் என்று கூறி விடுவேன். புத்தகம் என்பது சாதாரண விஷயம் இல்லை. நானும் இப்போது புத்தகம் படிப்பது மட்டுமின்றி அப்பாவின் வாழ்க்கை வரலாறை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
- சம்பவத்துக்கு முழு காரணமும் த.வெ.க.தான் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- த.வெ.க. மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நேற்றைய விசாரணையில் விஜய் மறுத்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இதேபோல் த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்து உள்ளனர். மேலும் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு 12-ந்தேதி ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியதையடுத்து அவர் நேற்று சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மதிய உணவு இடைவேளைக்கு அவர் வெளியே விடப்படவில்லை. அவருக்காக வெளியில் இருந்து உணவு கொண்டு செல்லப்பட்டது.
பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே மாலை 6.30 மணிக்கு விசாரணை முடிந்து விஜய் வெளியே வந்தார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே நடத்திய விசாரணையின் அடிப்படையில் விஜய்யிடம் கேட்பதற்கு கேள்விகள் தயாரித்து வைக்கப்பட்டு இருந்தன. கிட்டத்தட்ட 100 கேள்விகள் தயாரிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
விஜய் விசாரணைக்கு சென்ற நேரத்தை ஒட்டியே கரூர் சம்பவம் நடந்தபோது சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தவரும், தற்போது ஆயுதப்படை டி.ஜி.பி.யாக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம், மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்த (தற்போது தலைமையக கூடுதல் கமிஷனர்) ஜோஷி நிர்மல்குமார் ஆகியோரும் ஆஜர் ஆகினர். விஜய்யிடம் கேட்கப்பட்ட கேள்விகளை ஒப்பிட்டே அவர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் என தெரிகிறது.
சம்பவத்துக்கு முழு காரணமும் த.வெ.க.தான் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் த.வெ.க. இதனை மறுத்து போலீஸ் தரப்பை குற்றம் சாட்டியுள்ளது.
எனவே, சி.பி.ஐ. விசாரணை இருபக்கமும் கூர்மையாக செல்கிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணையை கொண்டு செல்கிறார்கள். ஒன்று, கட்சியிடம் நடத்தப்படுகிறது. மற்றொன்று காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் நடத்தப்படுகிறது. இன்னொன்று சி.பி.ஐ. அதிகாரிகளின் கள ஆய்வு மூலம் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.
இந்த 3 கோண விசாரணையையும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒப்பீடு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு செல்வார்கள் என கூறப்படுகிறது.
த.வெ.க. மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நேற்றைய விசாரணையில் விஜய் மறுத்துள்ளார். சம்பவத்துக்கு த.வெ.க. பொறுப்பல்ல என அவர் உறுதிபட கூறியுள்ளார்.
அவரை 2-வது நாளாக இன்று விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி, பொங்கலுக்கு பிறகு விசாரணையை தொடருமாறு விஜய் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மதித்து உள்ளனர்.
இந்நிலையில சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை முடிந்து டெல்லியில் இருந்து சென்னைக்கு விஜய் புறப்பட்டார்.
ஜன. 19-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.
- பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
இது 1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானால் சட்டவிரோதமாக சீனாவிற்கு வழங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்காத இந்தியா, இது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி வருகிறது.
சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.
இது காரகோரம் மலைத்தொடருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே இந்திய வெளியுறவு அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கட்டுமானத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம். ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒரு பகுதி. அங்கு சீனா மேற்கொண்டு வரும் மாற்றங்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது" என்று தெரிவித்தது.
இது தொடர்பாகச் சீனாவிடம் தூதரக ரீதியாக இந்தியா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு தங்களுக்கே சொந்தம் என சீனா அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் வாங் யீ, "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.
1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது. எனவே அது அது சட்டப்பூர்வமானது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி" என்று தெரிவித்தார்.
ஏற்கனவே லடாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாங்காங் ஏறி அருகில் கடந்த சில ஆண்டுகளாக சீனா கட்டுமானங்களை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனாவின் கட்டுமானம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
- அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டப்பட்டு சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
- மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக, போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என 4 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்த இனிய பொங்கல் திருநாளில், மக்கள் தங்களது மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, வீட்டினுள்ளும், வாசலிலும் வண்ணக் கோலங்களினால் அலங்கரித்து, கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட விளை பொருட்களை வைத்து, புதுப்பானையில் அரிசியிட்டு, அது பொங்கும் போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாகக் குரலெழுப்பி இறைவனுக்குப் படைத்து வழிபடுவதோடு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளை அலங்கரித்து, பொங்கல் மற்றும் வாழைப் பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்கி, தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
உழவர்கள், தங்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டப்பட்டு சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது.
- அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்காத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை கடந்த 8-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 பரிசுத்தொகை வழங்கும் பணி இன்றுடன் நிறைவடையும் நிலையில் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு நியாய விலைக்கடைகளில் நாளையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு, பரிசுத்தொகை வழங்கும் பணி முழுமையாக முடிவடையாத நிலையில் நாளையும் வழங்கப்படுகிறது.
இதுவரை 2 கோடியே 4 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.3,000 மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
- அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.
அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி னால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ராணுவ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது. மேலும் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது என்று தெரிவித்து உள்ளார்.
ஈரானுடன் சீனா மிக அதிகளவில் வர்த்தகம் செய்து வருகிறது. இதனால் இந்த வரி அமலுக்கு வரும்போது சீனா அதிகம் பாதிக்கப்படும்.
அதேபோல் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி போன்ற நாடுகளும் ஈரானுடன் கணிசமான அளவுக்கு வர்த்தகம் செய்கின்றன. இதனால் டிரம்ப்பின் இந்த உத்தரவால் இந்தியா உள்பட இந்த நாடுகளும் பாதிக்கப்படக் கூடும்.
ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும்போது, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டோம். எங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் தயாராக இருக்கிறோம்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அதேவேளையில் தேவை ஏற்பட்டால் போரிடவும் தயாராக இருக்கிறோம் என்றார்.
ஏற்க்கனவே ஈரான் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விதித்த பொருளாதார தடைகளே, ஈரானின் தற்போது நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
- விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
- வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான ‘மாநாடு’ படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'பராசக்தி'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 10-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
இந்த நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'மாநாடு' படத்தை போல ஒரு வித்தியாசமான கான்செப்டில் உருவாக இருப்பதாகவும் அப்படத்தை விட 10 மடங்கு அதிக திகில் மற்றும் த்ரில்லுடன் இப்படம் இருக்கும் என்று படக்குழுவில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான 'மாநாடு' படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- ராணுவ ஆக்கிரமிப்பைப் பற்றிச் சிந்திப்பதை அமெரிக்க அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
- அது அவர்களுக்கு ஒரு வரலாற்றுப் பாடமாக அமையும்.
ஈரானில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இதில் வன்முறை ஏற்பட்டு இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே ஈரானில் போராடுபவர்களுக்கு அமெரிக்க ஆதரவு அளிப்பதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் ஈரானில் அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிட முயன்றால், டிரம்பிற்கு மறக்க முடியாத பாடம் புகட்டப்படும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய காலிபப், "எங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராகத் தவறான முடிவுகளை எடுப்பதையோ அல்லது ராணுவ ஆக்கிரமிப்பைப் பற்றிச் சிந்திப்பதையோ அமெரிக்க அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்த டிரம்ப் நிர்வாகம் துணிந்தால், அவர்கள் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய பதிலடியைச் சந்திக்க நேரிடும். அது அவர்களுக்கு ஒரு வரலாற்றுப் பாடமாக அமையும்.
ஈரானில் உள்நாட்டு அரசியல் குழப்பங்களை அமெரிக்கா தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதாகக் குற்றம் சாட்டிய அவர், ஈரானிய மக்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் வல்லமை படைத்தவர்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ராணுவ நடமாட்டத்தை ஈரான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், எந்தவொரு சிறிய அச்சுறுத்தலுக்கும் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா அத்துமீறினால் ஈரான் அருகில் உள்ள நாடுகளில் நிலைகொண்டுள்ள உள்ள அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்தார்.
- சில கட்சிகள் தேர்தலுக்காக இலவசங்களை வாரி வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
- மின்சாரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகிவிடும்.
தற்காலிக இலவசங்களை வழங்குவதை விட மக்களைச் சுயமாக முன்னேற்றுவதற்கே பிரதமர் மோடி முன்னுரிமை அளிப்பதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அண்மையில் குஜராத்தில் நடந்த பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், சில கட்சிகள் தேர்தலுக்காக இலவசங்களை வாரி வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், அத்தகைய அரசியல் நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.
பிரதமர் மோடி ஒருபோதும் தேர்தலுக்காகவோ அல்லது வாக்குகளுக்காகவோ தற்காலிகமான இலவச வாக்குறுதிகளை அளிப்பதில்லை.
அதற்குப் பதிலாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதையே அவர் இலக்காகக் கொண்டுள்ளார்.
உதாரணமாக சூர்யாகர் திட்டத்தின் கீழ், சூரிய சக்தி பேனல்களை நிறுவுவதற்கு நுகர்வோர் சில செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
அத்தகைய திட்டங்களில் மக்களின் தனிப்பட்ட பங்களிப்பு இருக்க வேண்டும். அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும் என்று மக்கள் எதிர்பார்க்கக்கூடாது, அரசாங்கத்தை முழுமையாக நம்பியிருக்கக்கூடாது.
ஒரு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட, அரசாங்க ஆதரவுடன், குடிமக்களின் பங்களிப்பும் அவசியம். மின்சாரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகிவிடும் " என்று தெரிவித்தார்.
- குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
- உணவுப் பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
தனுசு ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நல்ல செய்திகள் நாளும் வந்த வண்ணமாகவே இருக்கும். 2-ம் இடத்தில் சூரியன், சுக்ரன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் இணைந்து கூட்டுக்கிரக யோகத்தை உருவாக்குகிறது. எனவே பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். பிள்ளைகளால் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கும். மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பார்க்கும் குருவைப் பலப்படுத்த வியாழன் தோறும் விரதமும், வழிபாடுகளும் தேவை.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு. அவர் வக்ரம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகம் பலம் இழக்கும் பொழுது நன்மைகளையே செய்யும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, இடம், பூமி வாங்குவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் உங்கள் கவனம் செல்லும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும்.
குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். மருத்துவச் செலவு குறையும். மனக்கவலை மாறும். இதுவரை தடையாக இருந்த காரியங்கள் இனித் தானாக நடைபெறும். மேலும் குரு பார்வை 3, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வழக்குகள் சாதகமாக அமையும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைப்பதோடு மேலிடத்து ஆதரவும் உண்டு.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 29.1.2026 அன்று சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடன்பிறப்புகளுக்கு கல்யாண முயற்சி கைகூடும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் பெருகும். கடல் கடந்து வணிகம் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும், புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். நல்ல மாற்றங்களும், பொருளாதாரத்தில் ஏற்றமும் வரும் நேரம் இது. அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடுவதற்கான சூழல் உருவாகும்.
கும்ப - சுக்ரன்
உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 7.2.2026 அன்று 3-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். தனாதிபதி சனியோடு சேருவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். அயல்நாட்டு முயற்சிகளில் இருந்த தடை அகலும். அங்கிருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல வழிபிறக்கும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடை பெறும் சுபநிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் வளர்ச்சியும், பிற்பகுதியில் தளர்ச்சியும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். பெண்களுக்கு செலவுகள் கூடும். இருப்பினும் வருமானம் போதுமானதாக இருக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 20, 21, 24, 25, பிப்ரவரி: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
மகர ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். மனக்கலக்கம் தீரும். மேலும் உங்கள் ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்ரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். விரோதங்கள் விலகும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். சொத்துக்களால் ஆதாயமும், நன்மையும் ஏற்படும் நேரம் இது. கொடுக்கல் - வாங்கல் திருப்தி தரும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால், அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும். தக்க தருணத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவார்கள். சென்ற மாதத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் இப்பொழுது விலகும். சிறுசிறு தொல்லைகள் உடல்நிலையைத் தாக்கினாலும் மருத்துவ சிகிச்சைகள் மூலம் அவற்றை சரிசெய்துகொள்வீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ, வாசல் தேடி வரவு வந்து சேரும். குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அவற்றிற்குரிய ஆதிபத்யங்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். 'குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் பணிபுரிய நினைத்தவர்களுக்கு அது கைகூடும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுயதொழில் ஏதேனும் செய்யலாமா? என்று சிந்திக்கும் நேரம் இது.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். உடன்பணிபுரிபவர்களுக்கு கிடைக்காத யோகம் உங்களுக்கு வரப்போகிறது. இலாகா மாற்றங்களோ, இடமாற்றங்களோ முன்னேற்றம் தரும் விதம் அமையும். பெற்றோர் வழியில் இருந்த கருத்து வேறுபாடு மாறும். பிள்ளைகளை நெறிப்படுத்திக் கொண்டு வருவீர்கள். பூர்வீக சொத்துக்களை பங்கு பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சனைகள் அகலும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். இக்காலத்தில் இனிய பலன்கள் வந்துசேரும். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும்பொழுது பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். புகழ் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்வீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு முயற்சிகளில் இருந்து விலகித் தனித்து இயங்க முற்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சனை அகலும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு பற்றாக்குறை அகன்று பணவரவு கூடும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 16, 22, 23, 26, 27, பிப்ரவரி: 5, 6, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
கும்ப ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். மிதுனத்தில் இருக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் இருப்பதால் இந்த மாதம் இனிய மாதமாகவே அமையும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். திடீர் முன்னேற்றம் வந்துசேரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உற்சாகத்தோடு செயல்பட்டு எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். ஜென்மச் சனி நடைபெறுவதால் சிறுசிறு தொல்லைகள் உடல்நலத்தில் ஏற்படலாம்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன - லாபாதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெற்றிருப்பதால் வருமானப் பற்றாக்குறை ஏற்படும். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முயற்சி தாமதப்பட்டாலும் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் உருவாகலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அமைதி கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் ராசியில் மட்டுமல்லாமல் 9, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறும். எந்தவழியிலும் உங்களுக்கு வரவேண்டிய தொகை வந்துசேரும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பழைய கூட்டாளிகள் மீண்டும் வந்து இணைந்து உங்கள் புதிய முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். இந்நேரங்களில் குரு கவசம் பாடி குருவை வழிபடுவதன் மூலம் மேலும் நற்பலன்களைப் பெறலாம்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். பொதுவாக பஞ்சம ஸ்தானாதிபதி என்பதால் பிள்ளைகள் வழியில் மேன்மை உண்டு. அவர்களின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஒருசிலர் பழைய சொத்துக்களை விற்றுவிட்டு, புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டு. சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இம்மாதம் நடைபெறும்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு சுக்ரன் 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் ஜென்மத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தாய்வழி ஆதரவு கிடைக்கும். படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வாழ்க்கைத் தேவை படிப்படியாகப் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வீடு வாங்கிக் குடியேறும் யோகம் உண்டு. தொழிலில் சேர்ந்த பணியாளர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவர். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமைப் பதவிகள் தேடி வரலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் எளிதில் கிடைக்கும். கலைஞர்களுக்கு, சென்ற மாதத்தில் கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 23, 25, 28, 29, பிப்ரவரி: 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
மீன ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். மேலும் அர்த்தாஷ்டம குருவாகவும் இருக்கிறார். எனவே அடிக்கடி இடமாற்றம், ஆரோக்கியப் பாதிப்பும், அதிக விரயமும் ஏற்படலாம். பொதுவாக இதுபோன்ற நேரங்களில் வீண் விரயங்களில் இருந்து விடுபட வேண்டுமானால் சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதோ, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதிலோ கவனம் செலுத்தலாம். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். ஆதாயத்தைக் காட்டிலும் விரயங்கள் கூடும்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர் குரு. அவரது வக்ர இயக்கம் நன்மைதான் என்றாலும், அர்த்தாஷ்டம குருவாக இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். குடும்பத்தில் பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. இடம், பூமி வாங்குவதில் இருந்த பிரச்சனைகள் மேலும் நீடிக்கலாம். இடமாற்றம், வீடு மாற்றம் தானாகவே வந்து மனக்கலக்கத்தை உருவாக்கும்.
குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரலாம். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட பிரச்சனை ஒரு வழியாகத் தீரும். ஆயினும் புதிய முயற்சிகளில் தடை வந்துகொண்டே இருக்கும். தன்னம்பிக்கையைத் தளரவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நீண்டதூரப் பயணம் பலன்தரும் விதம் அமையும். சொந்த ஊரில் இருப்பவர்கள் வெளிநாடு செல்லவும், வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்பவும் எடுத்த முயற்சிகள் பலன்தரும். வாகன மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் குருவிற்குரிய சிறப்பு ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதோடு, இல்லத்திலும் குருகவசம் பாடி குருபகவானை வணங்குவது நல்லது.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியானவர் புதன். அவர் 29.1.2026 அன்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே பெற்றோர் வழியிலும், களத்திர வழியிலும் செலவு ஏற்படலாம். இடம், பூமி வாங்கும் சுபச்செலவுகளும் உண்டு. பிள்ளைகளின் திருமணத்தைப் பேசி முடித்து அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைத்துக்கொடுப்பீர்கள். நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட வகையில் ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். உணவுப் பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. வியாபாரத்தில் உள்ள நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொண்டு வாழ்க்கை பாதையை சீராக்கிக்கொள்வீர்கள்.
கும்ப - சுக்ரன்
மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், 7.2.2026 அன்று கும்ப ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 12-ல் மறைவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப பொருளாதார நிலையில் திடீர் முன்னேற்றமும், புது முயற்சியில் வெற்றியும் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும். பயணங்களால் பலன் கிடைக்கும். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். இக்காலத்தில் சுக்ர வழிபாடு சுகத்தை வழங்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூட்டு முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் புதிய இலக்கை நோக்கி பயணிப்பீர்கள். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விரயத்தை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 20, 21, 26, 27, 30, 31, பிப்ரவரி: 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.
- அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் பணம் தட்டுப்பாடு ஏற்படாமல் தினமும் நிரப்புவதற்கு வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மின்னணு பணபரிவர்த்தனை இருந்தாலும் ரொக்கமாக செலவிட கையில் பணம் தேவைப்படுகிறது.
சென்னை:
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. மறுநாள் 16-ந்தேதி மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
பொங்கலையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
வங்கிகள் 4 நாட்கள் செயல்படாது என்று அறிவித்துள்ளது. 15-ந்தேதி பொங்கல் முதல் 18-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் தனியார் வங்கிகளும் செயல்படாது.
வங்கிகள் 4 நாட்கள் மூடப்படுவதால் சேவைகள் கடுமையாக பாதிக்கக்கூடும். பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை பல ஆயிரம் கோடி நடைபெறாமல் முடங்கும். நாளை (புதன்கிழமை) மட்டுமே வங்கி செயல்படும் என்பதால் வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள் தங்களுடைய வங்கி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றனர்.
பண்டிகை கால பணத் தேவையை சமாளிக்க ஏ.டி.எம். மையங்களில் முழு கொள்ளளவில் பணம் இருப்பு வைக்கப்பட்டாலும் அது விரைவாக காலியாகி விடுகிறது. எனவே அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் பணம் தட்டுப்பாடு ஏற்படாமல் தினமும் நிரப்புவதற்கு வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்னணு பணபரிவர்த்தனை இருந்தாலும் ரொக்கமாக செலவிட கையில் பணம் தேவைப்படுகிறது. எனவே அனைத்து ஏடிஎம்-களும் பணம் இல்லாமல் காலியாக கிடக்காமல் அவற்றை கண்காணித்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணத்தை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வங்கிகளும் தொடர்ந்து மூடப்படுவதால் பொதுமக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படும். அவற்றை சமாளிக்க ஏ.டி.எம்.கள் மூலம் உதவி செய்ய வேண்டும். பணத்தை நிரப்பக்கூடிய தனியார் நிறுவனங்கள் இந்த பணியை முறையாக செய்ய வங்கி மேலாளர்கள் நாளை முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
- டி20 உலக கோப்பையில் தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
- இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது.
புதுடெல்லி:
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் எதிரொலியாக ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக டி20 உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து ஐ.சி.சி. இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இதற்கிடையே வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு ஏற்றவாறு சென்னை, திருவனந்தபுரம் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த அணி கொல்கத்தாவில் 3 போட்டியிலும், மும்பையில் ஒரு ஆட்டத்திலும் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) செயலாளர் சைகியா கூறியதாவது:-
வங்கதேசப் போட்டிகளை சென்னைக்கோ அல்லது வேறு இடத்துக்கோ மாற்றுவது குறித்த எந்த தகவலும் பி.சி.சி.ஐ.க்கு வரவில்லை. இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இது ஐ.சி.சி. மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு இடையேயான தகவல் பரிமாற்ற விஷயமாகும்.
ஏனெனில் ஐ.சி.சி.தான் ஆளும் அமைப்பு. இடமாற்றம் குறித்த முடிவை ஐ.சி.சி. எங்களுக்குத் தெரிவித்தால், பி.சி.சி.ஐ., தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். தற்போது எங்களுக்கு அத்தகைய தகவல் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






