என் மலர்
நீங்கள் தேடியது "Sahibzada Farhan"
- ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
- ஹாரிஸ் ராஃப் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ராஃப்பின் செயல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
அந்த போட்டியின் போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் 'தகாத வார்த்தைகளை' பயன்படுத்தியதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் துப்பாக்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த பிறகு ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இரண்டாவது இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரில் ராஃப், அபிஷேக் சர்மா மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஹாரிஸ் ராஃப் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது செய்கைக்காக அல்ல. சாஹிப்சாதா ஐசிசியிடம் இருந்து எச்சரிக்கை பெற்றுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ஹாரிஸ் ராஃப் தனது விரல்களை உயர்த்தி 0 6 என்று காட்டினார். இது, இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, எல்லையில் நடந்த நான்கு நாள் மோதலின் போது ஆறு இந்தியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற கூற்றுகளைக் குறிப்பதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க வீரர்களாக பகர் சமான் மற்றும் சஹிப்சதா பர்ஹான் ஆகியோர் களம் இறங்கினார்கள். பர்ஹானுக்கு இது அறிமுக போட்டியாகும். இறுதிப் போட்டியில் அறிமுகமானதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்த பர்ஹானுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
முதல் ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பகர் சமான் ஒரு ரன் அடித்தார். 2-வது பந்தை பர்ஹான் சந்தித்தார். லெக் சைடு வைடாக வீசிய பந்தில் பர்ஹான் ஸ்டம்பிங் ஆகி டக்அவுட் ஆனார். வைடு பந்து என்பது லீகல் பந்தாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பதால் பந்தை சந்தக்காமலேயே அவுட்டானதாக கருதப்பட்டது.

இதன்மூலம் பந்தை சந்திக்காமலேயே அறிமுக போட்டியில் அவுட்டான 3-வது வீரர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்லே நோஃப்கே (2007) நியூசிலாந்திற்கு எதிராக ரன்அவுட் ஆகியுள்ளார். 2015-ல் வங்காள தேச வீரர் சவுமியா சர்கார் பாகிஸ்தானுக்கு எதிராக ரன்அவுட் ஆகியுள்ளார். தற்போது பர்ஹான் ஸ்டம்பிங் ஆகியுள்ளார்.






