search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Haris Rauf"

    • டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது.
    • இதனால் பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    புளோரிடாவில் உள்ள ஒரு நகரத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப் தனது மனைவியுடன் பேசியவாறு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஒருவர் ஹரிஸ் ராஃப்பை பார்த்து ஏதோ சொல்ல உடனே கோபமடைந்த ராஃப், அந்த நபரை தாக்குவதற்காக செருப்பை கூட கழற்றி விட்டு ஓடினார்.

    இதனை பார்த்த அவரது மனைவி ஹரிசை சமாதானம் படுத்த முயற்சித்தார். ஆனால் ஹரிஸ் அந்த நபரிடம் சென்று வார்த்தை போரில் ஈடுப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் ஹரிஸ், டிரோல் செய்தவர் ஒரு இந்தியராக இருக்க வேண்டும். என்றும் குறிப்பிட்டு இருந்தார். உடனே அந்த நபர் நான் பாகிஸ்தானை சேர்ந்தவர் என பதிலளித்தார்.

    வாக்குவாதம் தொடர்ந்ததால் ரஃப்பின் மனைவி அவரை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் ஹரிஸ் அந்த நபருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறிய பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    • இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதிய 2 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
    • 4 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ஓவல்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியும், 3-வது டி20 போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஓவலில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷீத், லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில் 4-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரான அசாம் கான் மீது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஸ் ராஃப் கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த போட்டியில் 9-வது ஓவரை ஹரிஸ் ராஃப் வீசினார். இதனை இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் வில் ஜக்ஸ் எதிர் கொண்டு ஆடினார். முதல் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் திணறினார். 3-வது பந்தை அதிரடியாக விளையாடினார். ஆனால் பந்து பேட்டில் பட்டு கீப்பரிடம் சென்றது. இதனால் ஹரிஸ் ராஃப் விக்கெட் என கொண்டாடினார். ஆனால் விக்கெட் கீப்பராக நின்ற அசாம் கான் அந்த எளிதான கேட்ச்சை தவற விட்டார். இதனை சற்று எதிர்பார்காத ஹரிஸ் கோபத்தில் கத்தினார்.

    இதற்கு ரசிகர்கள் அசாம் கானை ஏன் அணியில் வைத்துள்ளீர்கள் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி 2 போட்டியிலும் அசாம் கான் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
    • காயம் சரியாக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் கனடா இணைந்து நடத்துகின்றன. 2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரஃப் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

    காயம் சரியாக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்எல் சீசனின் எஞ்சிய ஆட்டத்தையும் ஜூன் 2-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பையையும் அவர் இழக்க நேரிடும்.

    • 7, 8 ஓவரில் உம்ரான் மாலிக் வேகம் 138 என்றளவுக்கு குறைந்து விடுகிறது.
    • 160 கி.மீ வேகத்தில் யார் வேண்டுமானாலும் வீசலாம் ஆனால் அதை போட்டி முழுவதும் கடைப்பிடிப்பதே மிகவும் முக்கியமாகும்.

    ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகினார். அவர் ஆரம்பத்திலேயே 145 கி.மீ வேகத்தில் எதிரணி வீரர்களை திணறடித்து அப்போதைய கேப்டன் விராட் கோலியின் பாராட்டுகளை பெற்றார்.

    அதனால் இந்தியாவுக்காகவும் தேர்வு செய்யப்பட்ட அவர் அதி வேகத்தில் பந்து வீசினாலும் ரன்களை வாரி வழங்கியதால் 2 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்டார். அதைத்தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்ற உம்ரான் மாலிக் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    இந்நிலையில் பாகிஸ்தானின் அதிவேக பந்து வீச்சாளராக கருதப்படும் ஹரிஸ் ரவூப் அருகே கூட உம்ரான் மாலிக் வர முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-


                                                                                                        ஆகிப் ஜாவேத்                                                                                             

    ஹரிஸ் ரவூப் போல் உம்ரான் மாலிக் நல்ல பயிற்சியும் ஃபிட்டாகவும் இல்லாதவராக இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவரை நீங்கள் பார்க்கும் போது அவருடைய முதல் ஸ்பெல் 150 கி.மீ வேகத்தில் இருக்கிறது. ஆனால் 7, 8 ஓவரில் அவரது வேகம் 138 என்றளவுக்கு குறைந்து விடுகிறது. இது இந்திய பேட்டிங் துறையில் விராட் கோலிக்கும் இதர வீரர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றதாகும்.

    மறுபுறம் ஹரிஸ் ரவூப் அதிவேகமாக வீசுவதற்காக தனது உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பயிற்சி என அனைத்தையும் மாற்றிக் கொண்டுள்ளார். குறிப்பாக வேகமாக செயல்படுவதற்காக உணவு கட்டுப்பாட்டை வைத்திருக்கும் அவரைப் போன்ற வேறு பாகிஸ்தான் பவுலரை நான் பார்த்ததில்லை. அவரைப் போன்ற வாழ்க்கை முறையும் யாரும் பின்பற்றுவதில்லை.

        160 கி.மீ வேகத்தில் யார் வேண்டுமானாலும் வீசலாம் ஆனால் அதை போட்டி முழுவதும் கடைப்பிடிப்பதே மிகவும் முக்கியமாகும்.

    என்று ஆகிப் ஜாவேத் கூறினார்.

    • அவர் அடித்த விதத்தைப் போல் உலகில் வேறு யாரும் என்னுடைய பவுலிங்கில் அப்படி ஒரு ஷாட் அடித்திருக்க முடியாது.
    • அந்த சிக்ஸர்களை ஹர்திக் பாண்டியா அல்லது தினேஷ் கார்த்திக் அடித்திருந்தால் தமது மனம் வலித்திருக்கும் என்று ஹாரீஸ் ரவூப் தெரிவித்தார்.

    ஆஸ்திரேலியாவில் 8-வது முறையாக நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பை நடைபெற்றது. அதில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது.

    இருப்பினும் இந்த தொடரில் முதல் போட்டியிலேயே பரம எதிரியான பாகிஸ்தானை காலத்திற்கும் மறக்க முடியாத அசாத்தியமான வெற்றியை பதிவு செய்து இந்தியா தோற்கடித்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

    அன்றைய நாளில் விராட் கோலி விளையாடிய இன்னிங்ஸ் டி20 வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று கிட்டத்தட்ட உலகின் அனைவருமே வியந்து பாராட்டினார்கள். அதை விட 145 -150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய ஹாரிஸ் ரவூப் வீசிய 19-வது ஓவரில் பின்னங்காலில் நின்று நேராக அடித்த சிக்சரை பார்த்து வியந்த அத்தனை பேரும் அதை எப்படி அடித்தார் என்று இப்போதும் பேசி வருகிறார்கள். அத்துடன் டி20 உலக கோப்பை வரலாற்றில் அது மிகச்சிறந்த சிங்கிள் ஷாட் என்று ஐசிசியே மனமுருகி வர்ணித்தது.

    இந்நிலையில் அந்த சிக்சர்களை ஹர்திக் பாண்டியா அல்லது தினேஷ் கார்த்திக் அடித்திருந்தால் தமது மனம் வலித்திருக்கும் என்று தெரிவிக்கும் ஹாரீஸ் ரவூப் மிகச் சிறந்த வீரரான விராட் கோலி அடித்தது தமக்கு மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    உலகக்கோப்பையில் விளையாடிய விதமே அவருடைய கிளாஸ் ஆகும். அவர் எந்த மாதிரியான ஷாட்களை அடிப்பார் என்று நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக அந்த சிக்சர்களை அவர் அடித்த விதத்தைப் போல் உலகில் வேறு யாரும் என்னுடைய பவுலிங்கில் அப்படி ஒரு ஷாட் அடித்திருக்க முடியாது.

    ஒருவேளை தினேஷ் கார்த்திக் அல்லது ஹர்திக் பாண்டியா அந்த சிக்ஸர்களை அடித்திருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன். ஆனால் அது விராட் கோலியின் பேட்டில் இருந்து வந்தது. அவரிடம் வித்தியாசமான கிளாஸ் உள்ளது.

    அந்த நேரத்தில் கடைசி 12 பந்துகளில் இந்தியாவுக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நான் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தேன். மேலும் கடைசி ஓவரை வீசப்போகும் நவாஸ் ஸ்பின்னர் என்பதால் அவர் குறைந்தது 4 பவுண்டரிகளை கொடுப்பார் என்பதால் 20 ரன்களையாவது விட்டுவைக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அந்த நிலையில் கடைசி 8 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது.

    அப்போது நான் ஸ்லோ பந்துகளை வீசினேன். ஆனால் விராட் கோலி அதை கச்சிதமாக கணித்து விட்டார். அந்த 4 பந்துகளில் நான் ஒரு பந்தை மட்டுமே வேகமாக வீசினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×