என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Haris Rauf"

    • ஆசிய கோப்பை தொடரின்போது இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர்.
    • இந்திய விமானங்களை சுட்டது போன்று ஹாரிஸ் ராஃப் சைகை காட்டியிருப்பார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் வீரர்கள் மிகவும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள். இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்தனர்.

    பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் விமானம் விழுந்து நொறுங்குவது போன்று சைகை காட்டினார். ஆபரேஷசன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை தெரிவிக்கும் வகையில் அவ்வாறு சைகை காட்டினார் என இந்தியா குற்றம்சாட்டியது.

    போட்டி முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்தியா- பாகிஸ்தான் மோதலின்போது, உயிரிழந்தவர்களுக்கு வெற்றியை அர்ப்பணிப்பதாகவும், அவர்களுடன் நிற்பதாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

    இருநாட்டின் கிரிக்கெட் சங்கங்களும் ஐசிசி-யில் புகார் அளித்தது. இதனடிப்படையில் ஐசிசி ஹாரிஸ் ராஃப்-க்கு 2 போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு போட்டியின் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.

    ஏ.கே.47 துப்பாக்கியால் சுடுவது போன்று சைகை காட்டிய பாகிஸ்தான் தொடக்க வீரர் பர்ஹானுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை.

    • இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் 3.4 ஓவரில் 50 ரன்கள் வாரி வழங்கினார்.
    • கடைசி ஓவர்களை அவரிடம் வழங்கக் கூடாது என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்.

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 146 ரன்கள் சேர்த்தது. பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    ஒரு கட்டத்தில் இந்தியா 20 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் திலக் வர்மா (53 பந்தில் 69 ரன் நாட்அவுட்), சஞ்சு சாம்சன் (24), ஷிவம் துபே (22 பந்தில் 33 ரன்) ஆகியோர் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசிய நிலையில், ஹரிஸ் ராஃப் 3.4 ஓவரில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹாரிஸ் ராஃப்-ஐ கடுமையான விமர்சித்துள்ளனர்.

    முகமது யூசுப் கூறுகையில் "எத்தனை போட்டிகளில் கடைசி நேரத்தில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் இறுதி ஓவர்களை வீசக்கூடாது. கடந்த உலகக் கோப்பை ஞாபகம் இருக்கிறதா?. அவருடைய பந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவர் சிறப்பாக பந்து வீசியிருந்தால், சூழ்நிலை வேறுமாதிரியாக இருந்திருக்கும்" என்றார்.

    முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் "ஹரிஸ் ராஃப் பெரிய போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை. நாம் எல்லோருக்கும் மெல்போர்ன் போட்டி ஞாபகம் இருக்கிறது (விராட் கோலி ஹரிஸ் ராஃப் பந்தில் 2 சிக்ஸ் விளாசினார்). இது போன்ற சூழ்நிலையில் எந்த பந்து வீச்சாளரை பயன்படுத்த வேண்டும் என கேப்டன் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து தவறுகளை செய்கிறோம்" என்றார்.

    முகமது ஆமிர் "ஹரிஸ் ராஃப்-க்கு ஓவர் கொடுத்தது மிகப்பெரிய தவறு. சுழற்பந்து வீச்சாளர்கள் அணிக்கு உத்வேகத்தை ஏற்படுத்தினர். ஆனால், சுழற்பந்து வீச்சாளரை நீக்கிவிட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப்-ஐ கொண்டு வந்து, உத்வேகத்தை அப்படியே மாற்றிவிட்டனர். அவர் உங்களுடைய விக்கெட் டேக்கிங் பந்து வீச்சாளர் என்பதை சந்தேகம் இல்லை. அந்த சூழ்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் தேவையிருந்தது. அப்படி செய்திருந்தால் போட்டியை இழந்திருக்க மாட்டீர்கள். பவர்பிளேயிலா் ஷாஹீன், பஹீம் சிறப்பாக ப்து வீசினார்கள்" என்றார்.

    பாகிஸ்தான் அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தவுசீஃப் அகமது கூறுகையில் "கிரிக்கெட்டில் என்ன வேண்டுமென்றாலும் நடகலாம் என நாம் சொல்கிறோம். ஆனால், இது போன்ற விசயம் ஹார்ஸ் ராஃப்-க்கு மட்டும் கிரிக்கெட்டில் நடக்கிறது?. எங்களுக்கு வெளியே வேறு சில பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். பிரான்சைஸ் கிரிக்கெட்டின் (T20 League) கதைகளை நிறுத்துங்கள். பிரான்சைஸின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். ஹாரிஸ் ராஃப் மட்டுமே இதைச் செய்திருக்க முடியும். ஹசன் அலி அல்லது வேறு ஒரு இளம் வீரர் அல்ல. எங்கள் காலத்திலும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம், ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு முறையும் இல்லை" என்றார்.

    • இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது விமானம் வீழ்வது போல் சைகை காட்டினார்.
    • பிசிசிஐ புகார் அளிக்க ஹரிஸ் ராஃப்-க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின்போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை குறிக்கும் வகையில், 6 கைவிரல்களை காட்டினார். மேலும், விமானம் விழுவது போன்று சைகை காட்டினார்.

    இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஹரிஸ் ராப்-க்கு எதிராக ஐசிசி-யில் புகார் அளித்தது. புகார் விசாரணையில் ஹரிஸ் ராஃப்-க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் ஹரிஸ் ராஃப்க்கான அபராத தொகையை மொஹ்சின் நக்வி செலுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஸ் ராஃப்-க்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சைகை காண்பித்த சஹிப்சதா பர்ஹானை எச்சரித்த ஐசிசி, அபராதம் ஏதும் விதிக்கவில்லை.

    போட்டி பரிசளிப்பு விழாவில் பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
    • ஹாரிஸ் ராஃப் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ராஃப்பின் செயல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

    அந்த போட்டியின் போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் 'தகாத வார்த்தைகளை' பயன்படுத்தியதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அதே வேளையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் துப்பாக்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

    முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த பிறகு ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இரண்டாவது இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரில் ராஃப், அபிஷேக் சர்மா மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ஹாரிஸ் ராஃப் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது செய்கைக்காக அல்ல. சாஹிப்சாதா ஐசிசியிடம் இருந்து எச்சரிக்கை பெற்றுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் ஹாரிஸ் ராஃப் தனது விரல்களை உயர்த்தி 0 6 என்று காட்டினார். இது, இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, எல்லையில் நடந்த நான்கு நாள் மோதலின் போது ஆறு இந்தியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற கூற்றுகளைக் குறிப்பதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர் 6 என சைகை காட்டினார்.
    • ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் இந்திய விமானங்களை வீழ்த்தியதை அவர் அவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. பிரிவு லீக் ஆட்டம் முடிந்த பின்னர், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்துவிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகள் மீண்டும் மோதின.

    இந்த போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர். அதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

    பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் கைவிரல்களை உயர்த்தி 6 போன்று சைகை காட்டினார். மேலும், பறக்கும் விமானம் கீழே விழுவதுபோல் சைகை காட்டினார்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் நாட்டில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்குதல் நடத்தி அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்த சண்டையின்போது இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது. ஆனால் இந்தியா இதை மறுத்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வீரரின் சைகைக்கு, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் "ஹரிஷ் ராஃப் இந்தியாவை சரியான முறையில் நடத்தியுள்ளார். தொடருங்கள். கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன. நீதிக்கான நாள் வரை 6-0 என்பதை இந்தியா மறக்காது. உலகமும் அதை மனதில் வைத்திருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

    • சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • அந்த போட்டியில் ஹாரிஸ் ராஃப் விமானம் விழுந்து நொறுங்குவது போன்ற சைகையை செய்தார்.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் துபாயில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லிடம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் வம்பிழுத்தார். அதற்கு இருவரும் தக்க பதிலடி கொடுத்தனர். அத்துடன் இதனை பார்த்த இந்திய ரசிகர்களும் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த ஹாரிஸ் ராஃப்புக்கு எதிராக கோலி.. கோலி.. என கூச்சலிட்டு கலாய்த்தனர்.

    அதற்கு ஹாரிஸ் ரவூப் 6 விரல்களைக் காட்டி 'விமானம் விழுந்து நொறுங்குவது' போன்ற சைகையை செய்தார். அதாவது காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக, "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே நாள் இரவில் மொத்தம் 9 தீவிரவாத முகாம்கள் இதில் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது ஆறு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பலமுறை கூறியது.

    அந்த போலியான செய்தியை வைத்துக்கொண்டு '6 விமானங்கள் வீழ்த்தப்பட்டது மறந்து விட்டதா?' என்ற வகையில் ஹாரிஸ் ராஃப் சைகை செய்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கோலி.. கோலி.. என்று கூச்சலிட்டு அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் ஹாரிஸ் ராஃப் சைகைக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவரது சைகை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லிடம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் வம்பிழுத்தார். அதற்கு இருவரும் தக்க பதிலடி கொடுத்தனர். அத்துடன் இதனை பார்த்த இந்திய ரசிகர்களும் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த ஹாரிஸ் ராஃப்புக்கு எதிராக கோலி.. கோலி.. என கூச்சலிட்டு கலாய்த்தனர்.

    அதாவது 2022-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அப்போட்டியில் ஹாரிஸ் ராஃப் பந்தில் நேராக விராட் கோலி அடித்த சிக்சர் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த ஷாட் என்று ஐ.சி.சி. பாராட்டியது. அதனை சுட்டிக்காட்டி ரசிகர்கள் கலாய்த்தனர்.

    அதற்கு ஹாரிஸ் ரவூப் 6 விரல்களைக் காட்டி 'விமானம் விழுந்து நொறுங்குவது' போன்ற சைகையை செய்தார். அதாவது காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக, "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே நாள் இரவில் மொத்தம் 9 தீவிரவாத முகாம்கள் இதில் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது ஆறு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பலமுறை கூறியது.

    அந்த போலியான செய்தியை வைத்துக்கொண்டு '6 விமானங்கள் வீழ்த்தப்பட்டது மறந்து விட்டதா?' என்ற வகையில் ஹாரிஸ் ராஃப் சைகை செய்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கோலி.. கோலி.. என்று கூச்சலிட்டு அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
    • அபிஷேக் சர்மா 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய அபிஷேக் சர்மா 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது ஆட்டத்தில் 5 ஆவது ஓவரை ஹரிஸ் ராஃப் வீசினார். அந்த ஓவரில் கில் பவுண்டரி விளாசினார்.

    அப்போது முதல் ஹாரிஸ் ராஃப் அபிஷேக் சர்மாவை பார்த்து ஏதோ கூற, அதற்கு அபிஷேக் சர்மா பதிலடி கொடுத்தார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நடுவர் ராஃபை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • ஹரிஸ் ராஃப் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
    • ஷாஹீன் ஷா அப்ரிடி ஆறு இடங்கள் சரிந்து தரவரிசையில் 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தானுக்காக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஹரிஸ் ராஃப் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    மறுபுறம், தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஷாஹீன் ஷா அப்ரிடி ஆறு இடங்கள் சரிந்து தரவரிசையில் 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    நியூசிலாந்தின் ஜேக்கப் டபி டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் 23 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்தார்.

    பேட்டர் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் சீபர்ட் 20 இடங்கள் முன்னேறி 13-வது இடத்திற்கும் மற்றொரு நியூசிலாந்து வீரர் ஆலன் 8 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் பின்தங்கி 8-வது இடத்தில் உள்ளார்.

    நமீபியாவின் கெர்ஹார்ட் எராஸ்மஸ் ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    டி20 பேட்டர் தரவரிசையில் முதல் இடத்தில் டிராவிஸ் ஹெட் உள்ளார். டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2-வது இடத்தில் அபிஷேக் சர்மாவும் 4,5-வது இடங்கள் முறையே திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் தொடர்கின்றனர்.

    டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் அகேல் ஹோசின் உள்ளார். 2-வது இடத்தில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தியும் 6-வது மற்றும் 9-வது இடங்கள் முறையே ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.

    • அவர் அடித்த விதத்தைப் போல் உலகில் வேறு யாரும் என்னுடைய பவுலிங்கில் அப்படி ஒரு ஷாட் அடித்திருக்க முடியாது.
    • அந்த சிக்ஸர்களை ஹர்திக் பாண்டியா அல்லது தினேஷ் கார்த்திக் அடித்திருந்தால் தமது மனம் வலித்திருக்கும் என்று ஹாரீஸ் ரவூப் தெரிவித்தார்.

    ஆஸ்திரேலியாவில் 8-வது முறையாக நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பை நடைபெற்றது. அதில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது.

    இருப்பினும் இந்த தொடரில் முதல் போட்டியிலேயே பரம எதிரியான பாகிஸ்தானை காலத்திற்கும் மறக்க முடியாத அசாத்தியமான வெற்றியை பதிவு செய்து இந்தியா தோற்கடித்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

    அன்றைய நாளில் விராட் கோலி விளையாடிய இன்னிங்ஸ் டி20 வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று கிட்டத்தட்ட உலகின் அனைவருமே வியந்து பாராட்டினார்கள். அதை விட 145 -150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய ஹாரிஸ் ரவூப் வீசிய 19-வது ஓவரில் பின்னங்காலில் நின்று நேராக அடித்த சிக்சரை பார்த்து வியந்த அத்தனை பேரும் அதை எப்படி அடித்தார் என்று இப்போதும் பேசி வருகிறார்கள். அத்துடன் டி20 உலக கோப்பை வரலாற்றில் அது மிகச்சிறந்த சிங்கிள் ஷாட் என்று ஐசிசியே மனமுருகி வர்ணித்தது.

    இந்நிலையில் அந்த சிக்சர்களை ஹர்திக் பாண்டியா அல்லது தினேஷ் கார்த்திக் அடித்திருந்தால் தமது மனம் வலித்திருக்கும் என்று தெரிவிக்கும் ஹாரீஸ் ரவூப் மிகச் சிறந்த வீரரான விராட் கோலி அடித்தது தமக்கு மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    உலகக்கோப்பையில் விளையாடிய விதமே அவருடைய கிளாஸ் ஆகும். அவர் எந்த மாதிரியான ஷாட்களை அடிப்பார் என்று நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக அந்த சிக்சர்களை அவர் அடித்த விதத்தைப் போல் உலகில் வேறு யாரும் என்னுடைய பவுலிங்கில் அப்படி ஒரு ஷாட் அடித்திருக்க முடியாது.

    ஒருவேளை தினேஷ் கார்த்திக் அல்லது ஹர்திக் பாண்டியா அந்த சிக்ஸர்களை அடித்திருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன். ஆனால் அது விராட் கோலியின் பேட்டில் இருந்து வந்தது. அவரிடம் வித்தியாசமான கிளாஸ் உள்ளது.

    அந்த நேரத்தில் கடைசி 12 பந்துகளில் இந்தியாவுக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நான் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தேன். மேலும் கடைசி ஓவரை வீசப்போகும் நவாஸ் ஸ்பின்னர் என்பதால் அவர் குறைந்தது 4 பவுண்டரிகளை கொடுப்பார் என்பதால் 20 ரன்களையாவது விட்டுவைக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அந்த நிலையில் கடைசி 8 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது.

    அப்போது நான் ஸ்லோ பந்துகளை வீசினேன். ஆனால் விராட் கோலி அதை கச்சிதமாக கணித்து விட்டார். அந்த 4 பந்துகளில் நான் ஒரு பந்தை மட்டுமே வேகமாக வீசினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 7, 8 ஓவரில் உம்ரான் மாலிக் வேகம் 138 என்றளவுக்கு குறைந்து விடுகிறது.
    • 160 கி.மீ வேகத்தில் யார் வேண்டுமானாலும் வீசலாம் ஆனால் அதை போட்டி முழுவதும் கடைப்பிடிப்பதே மிகவும் முக்கியமாகும்.

    ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகினார். அவர் ஆரம்பத்திலேயே 145 கி.மீ வேகத்தில் எதிரணி வீரர்களை திணறடித்து அப்போதைய கேப்டன் விராட் கோலியின் பாராட்டுகளை பெற்றார்.

    அதனால் இந்தியாவுக்காகவும் தேர்வு செய்யப்பட்ட அவர் அதி வேகத்தில் பந்து வீசினாலும் ரன்களை வாரி வழங்கியதால் 2 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்டார். அதைத்தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்ற உம்ரான் மாலிக் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    இந்நிலையில் பாகிஸ்தானின் அதிவேக பந்து வீச்சாளராக கருதப்படும் ஹரிஸ் ரவூப் அருகே கூட உம்ரான் மாலிக் வர முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-


                                                                                                        ஆகிப் ஜாவேத்                                                                                             

    ஹரிஸ் ரவூப் போல் உம்ரான் மாலிக் நல்ல பயிற்சியும் ஃபிட்டாகவும் இல்லாதவராக இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவரை நீங்கள் பார்க்கும் போது அவருடைய முதல் ஸ்பெல் 150 கி.மீ வேகத்தில் இருக்கிறது. ஆனால் 7, 8 ஓவரில் அவரது வேகம் 138 என்றளவுக்கு குறைந்து விடுகிறது. இது இந்திய பேட்டிங் துறையில் விராட் கோலிக்கும் இதர வீரர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றதாகும்.

    மறுபுறம் ஹரிஸ் ரவூப் அதிவேகமாக வீசுவதற்காக தனது உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பயிற்சி என அனைத்தையும் மாற்றிக் கொண்டுள்ளார். குறிப்பாக வேகமாக செயல்படுவதற்காக உணவு கட்டுப்பாட்டை வைத்திருக்கும் அவரைப் போன்ற வேறு பாகிஸ்தான் பவுலரை நான் பார்த்ததில்லை. அவரைப் போன்ற வாழ்க்கை முறையும் யாரும் பின்பற்றுவதில்லை.

        160 கி.மீ வேகத்தில் யார் வேண்டுமானாலும் வீசலாம் ஆனால் அதை போட்டி முழுவதும் கடைப்பிடிப்பதே மிகவும் முக்கியமாகும்.

    என்று ஆகிப் ஜாவேத் கூறினார்.

    • பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
    • காயம் சரியாக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் கனடா இணைந்து நடத்துகின்றன. 2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரஃப் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

    காயம் சரியாக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்எல் சீசனின் எஞ்சிய ஆட்டத்தையும் ஜூன் 2-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பையையும் அவர் இழக்க நேரிடும்.

    ×