என் மலர்
நீங்கள் தேடியது "Shaheen Afridi"
- பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் ரிஸ்வான் நீக்கப்பட்டு உள்ளார்.
- ஒரு நாள் தொடர் நவம்பர் 4-ந்தேதி தொடங்குகிறது.
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரை நீக்கிவிட்டு அப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டனாக நியமித்து உள்ளது.
கேப்டன் பதவியில் இருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் ரிஸ்வான் நீக்கப்பட்டு உள்ளார். அப்ரிடியும் இந்த டெஸ்டில் ஆடி வருகிறார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பிறகு மூன்று 20 ஓவர் ஆட்டத்திலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.
ஒரு நாள் தொடர் நவம்பர் 4-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 25 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி கேப்டனாக செயல்படுவார்.
இதற்கு முன்பு கடந்த 2024-ல் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பாகிஸ்தானை அவர் வழிநடத்தி உள்ளார். மொத்தம் 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளை அப்ரிடி கைப்பற்றி உள்ளார்.
- நாங்கள் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, ஆசிய கோப்பையை வெல்வதற்காக இங்கே வந்துள்ளோம்.
- எந்த அணி வந்தாலும், நாங்கள் அவர்களை வீழ்த்த தயார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. குரூப் பிரிவு லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது.
இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இந்தியா இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக விளையாட வேண்டியுள்ளது. இரண்டில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் வாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைவோம் என்ற நம்பிக்கை பாகிஸ்தானுக்கு உள்ளது.
இந்த நிலையில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அவர்களை வீழ்த்துவோம் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷாஹீன் அப்ரிடி கூறியதாவது:-
இந்தியா இதுவரை இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்போது பாரப்போம். நாங்கள் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, ஆசிய கோப்பையை வெல்வதற்காக இங்கே வந்துள்ளோம். எந்த அணி வந்தாலும், நாங்கள் அவர்களை வீழ்த்த தயார். அவர்களை நாங்கள் வீழ்த்துவோம்.
இவ்வாறு ஷாஹீன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
- 46 டெஸ்ட் போட்டிகளில் 210 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
- 89 ஒருநாள் போட்டியில் 149 விக்கெட்டுகள் வீ்ழ்த்தியுள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, தற்போதைய காலத்தில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவருக்கு 10க்கு 10 மதிப்பெண் வழங்கலாம் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஷாஹீன் அப்ரிடி கூறுகையில் "தற்போதைய காலக்கட்டத்தில் பும்ராதான் சிறந்த பந்து வீச்சாளர். ஸ்விங், துல்லியம், அனுபவம். சமீபத்தில் உலகின் சிறந்த பந்து வீச்சாளர் என்று நினைக்கிறேன்" என்றார்.
பும்ரா கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 210 விக்கெட்டுகள் விழ்த்தியுள்ளார். 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும். சராசரி 19.60 ஆகும்.
89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 70 டி20 போட்டிகளில் 89 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தால் நம்மால் சேஸிங் செய்ய முடியவில்லையே என நிருபர் கேள்வி.
- பாபர் அசாம், ரிஸ்வான் பதில் கூறாமல் அமைதியாக இருந்த நிலையில், ஷாஹீன் அப்ரிடி பதில் அளித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சொந்த நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோசமாக விளையாடியது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்து சென்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-4 என இழந்தது. ஒருநாள் தொடரை 0-3 என இழந்தது.
இந்த நிலையில் ஆறு அணிகள் விளையாடும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நேற்று தொடங்கியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஆறு அணி கேப்டன்களும் ஒன்றாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது டி20 கிரக்கெட்டில் பாகிஸ்தான் தேசிய அணிக்கு 200 ரன்களை சேஸிங் செய்யக்கூடிய திறன் இல்லையே?. ஒட்டுமொத்த நாட்டின் மனஉறுதியை சீர்குலைத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 200 ரன்களுக்கு மேலான இலக்கை நோக்கி செல்லும்போது நமக்கு எங்கே குறைபாடு உள்ளது. மனநிலை அல்லது நோக்கத்தில் குறைபாடு உள்ளதா? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பாபர் அசாம் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார். ரிஸ்வானை பார்த்து நீங்கள் பதில் சொல்லுங்கள் என சைகை காட்டினார். அவரும் மவுனம் காத்தார். இதனால் இக்கட்டான நிலை ஏற்பட்டது.
உடனே, வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி "இது நம்முடைய அணி, இது பாகிஸ்தான் அணி. நீங்கள் 200 ரன் சேஸிங் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையிலேயே, இது பேட்ஸ்மேன்களை மட்டும் பற்றியது கிடையாது. பந்து வீச்சாளர்களின் பொறுப்பும் உள்ளது. அவர்கள் 200 ரன்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது.
ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு நன்றாகத்தான் இருக்கிறது. 200 அல்லது அதற்கு மேல் விட்டுக்கொடுத்தாலும், அதை சேஸிங் செய்ய நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். நாங்க ஒரு அணி. நாங்க ஒரு குடும்பம். சமீப காலமாக நம்மோட ஆட்டம் நன்றாக இல்லை என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட்டை மீண்டும் உச்சத்துக்கு கொண்டு வருவது நம்ம வேலை" என்றார்.
- ஹரிஸ் ராஃப் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
- ஷாஹீன் ஷா அப்ரிடி ஆறு இடங்கள் சரிந்து தரவரிசையில் 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தானுக்காக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஹரிஸ் ராஃப் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மறுபுறம், தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஷாஹீன் ஷா அப்ரிடி ஆறு இடங்கள் சரிந்து தரவரிசையில் 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நியூசிலாந்தின் ஜேக்கப் டபி டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் 23 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்தார்.
பேட்டர் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் சீபர்ட் 20 இடங்கள் முன்னேறி 13-வது இடத்திற்கும் மற்றொரு நியூசிலாந்து வீரர் ஆலன் 8 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் பின்தங்கி 8-வது இடத்தில் உள்ளார்.
நமீபியாவின் கெர்ஹார்ட் எராஸ்மஸ் ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டி20 பேட்டர் தரவரிசையில் முதல் இடத்தில் டிராவிஸ் ஹெட் உள்ளார். டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2-வது இடத்தில் அபிஷேக் சர்மாவும் 4,5-வது இடங்கள் முறையே திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் தொடர்கின்றனர்.
டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் அகேல் ஹோசின் உள்ளார். 2-வது இடத்தில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தியும் 6-வது மற்றும் 9-வது இடங்கள் முறையே ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.
- பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது
- அப்ரிடி முதல் ஓவரை டிம் சீஃபர்ட் வைத்து மெய்டனாக வீசினார்.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இரு அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி தனது 2-வது ஓவரையும் அணியின் 3-வது ஓவரையும் வீசினார். அந்த ஓவரில் நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட் 4 சிக்சர்களை பறக்க விட்டார். மொத்தமாக அந்த ஓவரில் 26 ரன்கள் எடுக்கப்பட்டது.
முதல் ஓவரை டிம் சீஃபர்ட்டை வைத்து தான் அப்ரிடி மெய்டன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஷஹீன் தனது வருங்கால மாமனாரான பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
- சாஹீன் ஷாவுக்கும் ஷாஹித் அப்ரிடியின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விரைவில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி 1.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கும்.
இந்நிலையில் சிட்னியில் ரசிகர்களுடன் உரையாடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி, இந்திய ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய கொடியில் ஆட்டகிராப் போட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஷாஹீன் ஷா அப்ரிடி இந்தியக் கொடியில் இந்திய ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டார். இதற்கு, ஷஹீன் தனது வருங்கால மாமனாரான பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

சாஹீன் ஷாவுக்கும் ஷாஹித் அப்ரிடியின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விரைவில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டது
- ஏற்கனவே காலேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது இவருக்கு காயம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி. இவர் காலேயில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட போட்டியில் விளையாடும்போது, வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் ஆசிய கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்களில் விளையாடவில்லை. நேரடியாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றார். தொடக்கத்தில் அவருக்கு ரிதம் சரியான அளவில் கிடைக்கவில்லை. அதன்பின் சிறப்பாக பந்து வீச தொடங்கினார்.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியபோது, கேட்ச் பிடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக மீண்டும் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு பந்து வீச வந்தார். ஆனால் அவரால் பந்து வீச முடியவில்லை. ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் ஜனவரி வரை இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. சொந்த மண்ணில் தலைசிறந்த அணிகளுக்கு எதிராக விளையாட முடியாத நிலை ஷாகீன் அப்ரிடிக்கு ஏற்பட்டுள்ளது.
காயம் குறித்து முழுமையாக மதிப்பிட்டு அணியில் சேர்ப்பதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஒருவேளை ஷாகீன் அப்ரிடி அணியில் இடம் பிடிக்கவில்லை என்றால், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அப்படி இடம்பிடித்தால், ராஃப் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆவார்.
- பாகிஸ்தான் இந்த ஆண்டு சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது,
- பாபர் அசாம் 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 3 அரை சதம் உட்பட 348 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. ஆட்டங்களில் ஆரம்பம் முதல் இறுதி வரை இங்கிலாந்து முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. ராவல்பிண்டி மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முல்தானில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்திலும், கராச்சியில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் இந்த ஆண்டு சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இது அவர்களின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை பாதித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 3 அரை சதம் உட்பட 348 ரன்கள் எடுத்தார். ஆனால் ஏமாற்றமளிக்கும் முடிவுக்குப் பிறகு, அவரது கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.
பாபரின் கேப்டன்சிக்காக பலர் அவரை விமர்சித்து வரும் நிலையில், அவரது அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, அவரது கேப்டனுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்.
கொஞ்சம் மரியாதை காட்டுங்கள் என்று ரசிகர்களை வலியுறுத்திய ஷஹீன் டுவிட்டரில் ஒரு பெரிய பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், பாபர் அசாம் எனது பெருமை, பாகிஸ்தானின் பெருமை என்று பாராட்டிய அவர், ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தொடருமாறு கேட்டுக் கொண்டதுடன், கதை இன்னும் முடிவடையவில்லை என்றும் குறிப்பட்டிருந்தார்.
பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் தோல்வியைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தற்போது முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்று வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சாஹீன் ஷா அஃப்ரிடி, பண்ட் உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன், விரைவில் மீண்டு வா எனக்குறிப்பிட்டுள்ளார்.
- முகமது ஹஃபீஸும் பண்ட்-க்காக பிரார்த்தனை செய்கிறேன் எனக்கூறினார்.
ரூர்கி:
உத்தர்காண்ட் சென்றிருந்த ரிஷப் பண்ட் சாலை மார்க்கமாக டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளார். அவர் சென்ற கார் ரூர்கி என்ற பகுதியை அடைந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. சாலையின் தடுப்பில் மோதிய அந்த கார், சுழன்றுக்கொண்டே சென்று இறுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் சிக்கிய ரிஷப் பண்ட் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட்-க்கு கார் விபத்து என அறிந்தவுடன் பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் அவர் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். பண்ட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் ஷா அஃப்ரிடி, பண்ட் உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன், விரைவில் மீண்டு வா எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதே ஆல்ரவுண்டர் சதாப் கானும், ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிஃப் மாலிக், " பண்ட்-ன் விபத்து குறித்து தற்போது தான் தெரியவந்தது. சீக்கிரமாக எழுந்து வாருங்கள் சகோதரரே, உங்களுக்காக நிறைய பிரார்த்தனைகளை செய்யப்போகிறேன் எனக்கூறியுள்ளார்.
முகமது ஹஃபீஸும் பண்ட்-க்காக பிரார்த்தனை செய்கிறேன் எனக்கூறினார்.
இதே போல முன்னாள் வீரர் ஹசன் அலி, " ரிஷப் பண்ட்-க்கு எந்தவித பெரிய பாதிப்புகள் இருக்காது என நம்புகிறேன். நீங்கள் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன். உங்களுடன் கடவுள் துணையாக நின்று சீக்கிரமாக குணப்படுத்துவார். களத்தில் மீண்டும் வாருங்கள், உங்களின் அதிரடியை காண வேண்டும் எனக்குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய வீரருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரார்த்தனை செய்வது கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- திருமணம் தொடர்பான வீடியோக்கள், புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
- பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சர்பிராஸ் அகமது, நசீம் ஷா, சதாப்கான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.
கராச்சி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஷாகீன் ஷா அப்ரிடி.
இவருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சகீத் அப்ரிடியின் மகள் அன்ஷாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
ஷாகீன்ஷா-அன்ஷா திருமணம் கராச்சியில் நேற்று நடந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சர்பிராஸ் அகமது, நசீம் ஷா, சதாப்கான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், பிரபல ஸ்குவாஸ் வீரர் ஜஹாங்கீர்கான் உள்பட பலர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

திருமணம் தொடர்பான வீடியோக்கள், புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பாகிஸ்தான் வீரர்களான ஹாரிஸ் ரவூப், ஷதாப் கான் ஆகியோர் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் தற்போது ஷாகீன்ஷா அப்ரிடியும் இணைந்து கொண்டனர்.
ஷாகீன்ஷா அப்ரிடி 25 டெஸ்டில் விளையாடி 99 விக்கெட்டும், 32 ஒருநாள் போட்டியில் 62 விக்கெட்டும், 47 இருபது ஓவர் ஆட்டத்தில் 58 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 3 வடிவிலான போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
- பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி.
- இவர் முதல் ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்தில் விடாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடர் நடைபெறுகிறது. 18 அணிகள் இரண்டு குழுக்களாக (சவுத் மற்றும் நார்த்) பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நார்த் குரூப் பிரிவில் உள்ள நாட்டிங்ஹாம்ஷயர், வார்விக்ஷையர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. டாஸ் வென்ற வார்விக்ஷயர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நாட்டிங்ஹாம்ஷயர் அணி 20 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் மூர்ஸ் 73 ரன்கள் எடுத்தார்.
வார்விக்ஷயர் அணி சார்பில் ஹசன் அலி, லிண்டொட் தலா 3 விக்கெட்களும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 169 ரன்கள் இலக்குடன் வார்விக்ஷயர் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அலெக்ஸ் டேவிஸ், ராபர்ட் யேட்ஸ் ஆடினர்.
நாட்டிங்ஹாம்ஷயர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி முதல் ஓவரை வீசினார்.
முதல் பந்தில் அலெக்ஸ் டேவிஸ் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.
2-வது பந்தில் கிறிஸ் பெஞ்சமின் கிளின் போல்டுஆனார்.
3-வது பந்தில் டான் மவுஸ்ஸி ஒரு ரன் எடுத்தார்.
4-வது பந்தில் யேட்ஸ் ஒரு ரன் எடுத்தார்.
5-வது பந்தில் டான் மவுஸ்ஸி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
6-வது பந்தில் எட் பர்னார்ட் போல்டானார்.
இதன்மூலம் ஷாஹின் அப்ரிடி முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், ஷாஷின் அப்ரிடி 4 ஓவர்களில் 29 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு மெய்டன் ஓவரையும் வீசி அசத்தி இருந்தார். ஆட்ட நாயகன் விருது ஷாஹின் அப்ரிடிக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய வார்விக் ஷையர் 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.






