என் மலர்
நீங்கள் தேடியது "ஹரிஸ் ராஃப்"
- இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் 3.4 ஓவரில் 50 ரன்கள் வாரி வழங்கினார்.
- கடைசி ஓவர்களை அவரிடம் வழங்கக் கூடாது என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 146 ரன்கள் சேர்த்தது. பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
ஒரு கட்டத்தில் இந்தியா 20 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் திலக் வர்மா (53 பந்தில் 69 ரன் நாட்அவுட்), சஞ்சு சாம்சன் (24), ஷிவம் துபே (22 பந்தில் 33 ரன்) ஆகியோர் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசிய நிலையில், ஹரிஸ் ராஃப் 3.4 ஓவரில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹாரிஸ் ராஃப்-ஐ கடுமையான விமர்சித்துள்ளனர்.
முகமது யூசுப் கூறுகையில் "எத்தனை போட்டிகளில் கடைசி நேரத்தில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் இறுதி ஓவர்களை வீசக்கூடாது. கடந்த உலகக் கோப்பை ஞாபகம் இருக்கிறதா?. அவருடைய பந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவர் சிறப்பாக பந்து வீசியிருந்தால், சூழ்நிலை வேறுமாதிரியாக இருந்திருக்கும்" என்றார்.
முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் "ஹரிஸ் ராஃப் பெரிய போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை. நாம் எல்லோருக்கும் மெல்போர்ன் போட்டி ஞாபகம் இருக்கிறது (விராட் கோலி ஹரிஸ் ராஃப் பந்தில் 2 சிக்ஸ் விளாசினார்). இது போன்ற சூழ்நிலையில் எந்த பந்து வீச்சாளரை பயன்படுத்த வேண்டும் என கேப்டன் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து தவறுகளை செய்கிறோம்" என்றார்.
முகமது ஆமிர் "ஹரிஸ் ராஃப்-க்கு ஓவர் கொடுத்தது மிகப்பெரிய தவறு. சுழற்பந்து வீச்சாளர்கள் அணிக்கு உத்வேகத்தை ஏற்படுத்தினர். ஆனால், சுழற்பந்து வீச்சாளரை நீக்கிவிட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப்-ஐ கொண்டு வந்து, உத்வேகத்தை அப்படியே மாற்றிவிட்டனர். அவர் உங்களுடைய விக்கெட் டேக்கிங் பந்து வீச்சாளர் என்பதை சந்தேகம் இல்லை. அந்த சூழ்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் தேவையிருந்தது. அப்படி செய்திருந்தால் போட்டியை இழந்திருக்க மாட்டீர்கள். பவர்பிளேயிலா் ஷாஹீன், பஹீம் சிறப்பாக ப்து வீசினார்கள்" என்றார்.
பாகிஸ்தான் அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தவுசீஃப் அகமது கூறுகையில் "கிரிக்கெட்டில் என்ன வேண்டுமென்றாலும் நடகலாம் என நாம் சொல்கிறோம். ஆனால், இது போன்ற விசயம் ஹார்ஸ் ராஃப்-க்கு மட்டும் கிரிக்கெட்டில் நடக்கிறது?. எங்களுக்கு வெளியே வேறு சில பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். பிரான்சைஸ் கிரிக்கெட்டின் (T20 League) கதைகளை நிறுத்துங்கள். பிரான்சைஸின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். ஹாரிஸ் ராஃப் மட்டுமே இதைச் செய்திருக்க முடியும். ஹசன் அலி அல்லது வேறு ஒரு இளம் வீரர் அல்ல. எங்கள் காலத்திலும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம், ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு முறையும் இல்லை" என்றார்.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர் 6 என சைகை காட்டினார்.
- ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் இந்திய விமானங்களை வீழ்த்தியதை அவர் அவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. பிரிவு லீக் ஆட்டம் முடிந்த பின்னர், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்துவிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகள் மீண்டும் மோதின.
இந்த போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர். அதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் கைவிரல்களை உயர்த்தி 6 போன்று சைகை காட்டினார். மேலும், பறக்கும் விமானம் கீழே விழுவதுபோல் சைகை காட்டினார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் நாட்டில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்குதல் நடத்தி அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சண்டையின்போது இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது. ஆனால் இந்தியா இதை மறுத்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வீரரின் சைகைக்கு, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் "ஹரிஷ் ராஃப் இந்தியாவை சரியான முறையில் நடத்தியுள்ளார். தொடருங்கள். கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன. நீதிக்கான நாள் வரை 6-0 என்பதை இந்தியா மறக்காது. உலகமும் அதை மனதில் வைத்திருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
- ஹரிஸ் ராஃப் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
- ஷாஹீன் ஷா அப்ரிடி ஆறு இடங்கள் சரிந்து தரவரிசையில் 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தானுக்காக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஹரிஸ் ராஃப் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மறுபுறம், தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஷாஹீன் ஷா அப்ரிடி ஆறு இடங்கள் சரிந்து தரவரிசையில் 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நியூசிலாந்தின் ஜேக்கப் டபி டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் 23 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்தார்.
பேட்டர் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் சீபர்ட் 20 இடங்கள் முன்னேறி 13-வது இடத்திற்கும் மற்றொரு நியூசிலாந்து வீரர் ஆலன் 8 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் பின்தங்கி 8-வது இடத்தில் உள்ளார்.
நமீபியாவின் கெர்ஹார்ட் எராஸ்மஸ் ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டி20 பேட்டர் தரவரிசையில் முதல் இடத்தில் டிராவிஸ் ஹெட் உள்ளார். டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2-வது இடத்தில் அபிஷேக் சர்மாவும் 4,5-வது இடங்கள் முறையே திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் தொடர்கின்றனர்.
டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் அகேல் ஹோசின் உள்ளார். 2-வது இடத்தில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தியும் 6-வது மற்றும் 9-வது இடங்கள் முறையே ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.
- இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதிய 2 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
- 4 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஓவல்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியும், 3-வது டி20 போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஓவலில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷீத், லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் 4-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரான அசாம் கான் மீது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஸ் ராஃப் கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த போட்டியில் 9-வது ஓவரை ஹரிஸ் ராஃப் வீசினார். இதனை இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் வில் ஜக்ஸ் எதிர் கொண்டு ஆடினார். முதல் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் திணறினார். 3-வது பந்தை அதிரடியாக விளையாடினார். ஆனால் பந்து பேட்டில் பட்டு கீப்பரிடம் சென்றது. இதனால் ஹரிஸ் ராஃப் விக்கெட் என கொண்டாடினார். ஆனால் விக்கெட் கீப்பராக நின்ற அசாம் கான் அந்த எளிதான கேட்ச்சை தவற விட்டார். இதனை சற்று எதிர்பார்காத ஹரிஸ் கோபத்தில் கத்தினார்.
இதற்கு ரசிகர்கள் அசாம் கானை ஏன் அணியில் வைத்துள்ளீர்கள் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி 2 போட்டியிலும் அசாம் கான் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது.
- இதனால் பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
புளோரிடாவில் உள்ள ஒரு நகரத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப் தனது மனைவியுடன் பேசியவாறு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஒருவர் ஹரிஸ் ராஃப்பை பார்த்து ஏதோ சொல்ல உடனே கோபமடைந்த ராஃப், அந்த நபரை தாக்குவதற்காக செருப்பை கூட கழற்றி விட்டு ஓடினார்.
இதனை பார்த்த அவரது மனைவி ஹரிசை சமாதானம் படுத்த முயற்சித்தார். ஆனால் ஹரிஸ் அந்த நபரிடம் சென்று வார்த்தை போரில் ஈடுப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஹரிஸ், டிரோல் செய்தவர் ஒரு இந்தியராக இருக்க வேண்டும். என்றும் குறிப்பிட்டு இருந்தார். உடனே அந்த நபர் நான் பாகிஸ்தானை சேர்ந்தவர் என பதிலளித்தார்.
வாக்குவாதம் தொடர்ந்ததால் ரஃப்பின் மனைவி அவரை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் ஹரிஸ் அந்த நபருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறிய பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
- இதை சமூக ஊடகங்களில் கொண்டு வர வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன்.
- பொதுமக்களிடமிருந்து அனைத்து வகையான கருத்துக்களையும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ரசிகர் ஒருவருடன் பாகிஸ்தான் வீரரான ஹரிஸ் ரவுப் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், ரசிகரை தாக்க முயல்வது போன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் எங்களை ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், எனது பெற்றோர் மற்றும் எனது குடும்பத்தினர் என்று வரும்போது, அதற்கேற்ப பதிலளிக்க நான் தயங்க மாட்டேன் என ஹரிஸ் ராஃப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இதை சமூக ஊடகங்களில் கொண்டு வர வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன். ஆனால் இப்போது வீடியோ வெளியானதால், நிலைமையை நிவர்த்தி செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். பொது நபர்களாக, பொதுமக்களிடமிருந்து அனைத்து வகையான கருத்துக்களையும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எங்களை ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், எனது பெற்றோர் மற்றும் எனது குடும்பத்தினர் என்று வரும்போது, அதற்கேற்ப பதிலளிக்க நான் தயங்க மாட்டேன். மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் தொழில்களைப் பொருட்படுத்தாமல் மரியாதை காட்டுவது முக்கியம்.






