search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fan"

    • விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படமான கில்லி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீ்ணடும் நேற்று திரைக்கு வந்துள்ளது.
    • தமிழகமெங்கும் கில்லி படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

    தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கோட்'படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படமான கில்லி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீ்ணடும் நேற்று திரைக்கு வந்துள்ளது.

    தமிழகமெங்கும் கில்லி படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். திருப்பத்தூரை அடுத்த ஜடையனூரை சேர்ந்த விஜய் ரசிகரான கதிர்வேல் என்பவர் கில்லி படம் மீண்டும் திரைக்கு வந்த மகிழ்ச்சியில் விஜய்யை பற்றி 10 ஆயிரம் வரிகள் கொண்ட ஒரு முழு கவிதையை 36 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    விஜய் ரசிகரின் இந்த சாதனையை கேரள மாநிலத்தை சேர்ந்த யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர்கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அங்கீகரித்து விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி இருக்கிறது.

    • குட்டி ரசிகர் ஒருவர் கையில் பாதகையை ஏந்தியபடி ரோகித் சர்மாவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
    • இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    முல்லாப்பூர்:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்தித்தது. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி முதலில் தடுமாறினாலும் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை போராடியது.

    இறுதியில் பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 183 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை சுவைத்தது.

    இந்நிலையில் நேற்றைய போட்டியில் குட்டி ரசிகர் ஒருவர் கையில் பாதகையை ஏந்தியபடி ரோகித் சர்மாவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த பாதகையில் ரோகித் ஓவியம் வரையப்பட்டு இருந்தது. மேலும் அதில் எங்களுக்கு ஐபிஎல் கோப்பை வேண்டாம் டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்தால் போதும் என கூறப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கடைசி ஓவரில் களமிறங்கிய டோனி 4 பந்தில் 20 ரன்கள் விளாசினார்.
    • இதில் ஹாட்ரிக் சிக்சர் அடங்கும்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்றுவரும் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் களமிறங்கிய டோனி 4 பந்தில் 20 ரன்கள் விளாசினார்.

    20 ஓவர் முடிந்த நிலையில் ஓய்வு அறையை நோக்கி டோனி சென்று கொண்டிருந்த போது படியில் அவர் சிக்சர் அடித்த பந்து கிடந்தது. அதனை எடுத்து குட்டி ரசிகைக்கு பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.

    வெல்லிங்டன்:

    ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வெல்லிங்டனில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. 72 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு மிட்செல் மார்ஷ் அனைவராலும் பாராட்ட கூடிய ஒரு செயலை செய்துள்ளார். அது என்னவென்றால் ஆட்ட நாயகன் விருதை போட்டியை காண வந்த ஆஸ்திரேலிய ரசிகருக்கு மிட்செல் மார்ஷ் வழங்கி உள்ளார். இதை சற்றும் எதிர்பாராத ரசிகர் மகிழ்ச்சியில் திகைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதற்கு முன்னர் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாங்கிய ஆட்ட நாயகன் விருதை சிறுவனுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாகிப்பை நிறைய பெண் ரசிகர்கள் செஃல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர்.
    • வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் சமீபத்தில் போட்டியிட்ட சாகிப் அல் ஹசன் அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

    வங்கதேசத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சாகிப் அல் ஹசன் கிரிக்கெட்டைப் பொறுத்த வரை மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக போற்றப்படுகிறார். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் மிகவும் மோசமான ஒரு நபராக இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற சாதாரண உள்ளூர் தொடரில் தமக்கு சாதகமான தீர்ப்பு வழங்கவில்லை என்பதற்காக நடுவர் முன்பிருந்த ஸ்டம்பை எட்டி உதைத்து பிடுங்கி எறிந்த ஷாகிப் அவரை மோசமான வார்த்தைகளால் திட்டியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

    அந்த நிலைமையில் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மேத்யூஸ் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக நடுவர்களிடம் கூறிய ஷாகிப் அல் ஹசன் அவருக்கு அவுட் கொடுக்குமாறு கேட்டு வாங்கியது மற்றுமொரு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

    இந்நிலையில் வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் சமீபத்தில் போட்டியிட்ட சாகிப் அல் ஹசன் அதில் வெற்றியும் கண்டுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்டவரை விட 1.50 லட்சம் வாக்குகள் பெற்று சாகிப் எம்.பி. ஆனார். இந்நிலையில் ரசிகர் ஒருவரை சாகிப் கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது வழக்கம் போல நிறைய ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செஃல்பி எடுக்க முயற்சித்தார்கள். அப்போது ஒரு ரசிகர் அவரை மிகவும் நெருங்கி புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்தார். ஆனால் அதற்காக கோபப்பட்ட சாகிப் அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என வேகமாக அறைந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    இது மட்டுமல்லாமல் மற்றுமொரு தேர்தல் விழா மேடையில் அமர்ந்திருந்த சாகிப்பை நிறைய பெண் ரசிகர்கள் செஃல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். அப்போது வேண்டா வெறுப்பாக சாகிப் அமர்ந்திருந்தார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்றதுமே எங்களை மறந்து திமிராக நடந்து கொள்கிறீர்களா நீங்கள் எல்லாம் மனிதரா என்று ரசிகர்கள் தற்போது அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    • திருக்கோவிலூர் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • முருகன் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் தராமல் வெட்டியாக செலவு செய்து வந்துள்ளார்

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் மனம்பூண்டியைச் சேர்ந்தவர் முருகன்( வயது 55) தொழிலாளி. இவருக்கு 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி அனுராதா என்கிற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இரண்டு பெண் குழந்தை களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் முருகன் வேலைக்கு எதுவும் போகாமலும் அப்படியே வேலைக்கு போனாலும் சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் தராமல் வெட்டியாக செலவு செய்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி அனுராதா தட்டிக் கேட்டுள்ளார்.

    இதனால் விரத்தி அடைந்த முருகன் சம்பவத்தன்று தனது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் கேபிள் டி.வி. ஒயரில் தூக்கு போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தூக்கில் தொங்கிய முருகனைக் காப்பாற்றி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சை க்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த அரகண்ட நல்லூர் போலீசார் விரைந்து சென்று முருகன் உடலை கைப்பற்றி தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யுவராஜ் (வயது 18).இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்திருந்தார்.
    • நள்ளிரவு யுவராஜ், தனது பெரியப்பா வீட்டில் படுத்து தூங்–கிக்– கொண்–டி–ருந்–தார். அப்–போது அரு–கில் இருந்த டேபிள் மின்விசிறி, யுவராஜ் மீது விழுந்தது.

    கடலூர்:

    கட–லூர் மாவட்–டம் தூக்–க–ணாம்–பாக்–கம் மாதா கோவில் தெருவை சேர்ந்–த–வர் நாகப்–பன் மகன் யுவ–ராஜ் (வயது 18).

    இவர் அதே கிரா–மத்–தில் உள்ள அரசு மேல்–நி–லைப்–பள்–ளி–யில் பிளஸ்-2 படித்து முடித்–தி–ருந்–தார். இவர் கடந்த ஒரு வார–மாக தனது பெரி–யப்பா வீடான விழுப்–பு–ரம் பானாம்–பட்–டில் தங்–கி–யி–ருந்–தார்.

    சம்பவத்தன்று நள்–ளிரவு யுவ–ராஜ், தனது பெரியப்பா வீட்–டில் படுத்து தூங்–கிக்– கொண்–டி–ருந்–தார். அப்–போது அரு–கில் இருந்த டேபிள் மின்–வி–சிறி, யுவ–ராஜ் மீது விழுந்–தது.

    மாணவனின் அலரல் சத்–தம் கேட்டு வீட்–டில் இருந்–த–வர்–கள் எழுந்து பார்த்–த–போது யுவ–ராஜ் மயங்–கிக் –கி–டந்–தார். உடனே அவரை மீட்டு சிகிச்–சைக்காக விழுப்–பு–ரம் அரசு மருத்–து–வ–ம–னையில் அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரி–சோதித்த டாக்–டர், மாணவன் யுவராஜ் ஏற்–க–னவே இறந்து விட்–ட–தாக கூறி–னார். அவர் எப்–படி இறந்–தார்? என்–பது குறித்து விழுப்புரம் தாலுகா போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர்.

    • மதுரை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாட்டு, குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.
    • எல்கை பரிசு மற்றும் கொடிப்பரிசாக சைக்கிள், ஏர் கூலர், மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஸ்ரீ செல்வ விநாயகர் குரூப்ஸ் நண்பர்கள் சார்பில், மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

    போட்டியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, கரிச்சான் குதிரை, பெரிய குதிரை என 5 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.

    போட்டியில் வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு–மொத்த பரிசாக ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டது.

    எல்கைப் பரிசு மற்றும் கொடிப்பரிசாக சைக்கிள், ஏர் கூலர், மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டது.

    பந்தயங்களை செல்வவிநாயகபுரம், ஆண்டவன்கோவில், ஆத்தாளூர், தென்னங்குடி, கொன்றைக்காடு, காலகம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று பந்தய நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை பேராவூரணி போலீசார் செய்திருந்தனர்.

    • அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சுந்தர்டாக்டரி–டம் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
    • மனவேதனை அடைந்த சுந்தர் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே சோழன் மாளிகை மெயின் சாலையை சேர்ந்தவர் வீரையன். இவரது மகன் சுந்தர் (வயது 27) கூலி தொழிலாளி. திருமணமாகவில்லை.

    இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

    இதனால் சுந்தர்டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த சுந்தர் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்தபட்டீஸ்வரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குழந்தைவேலு மற்றும் போலீசார் சென்று சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ–தனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி ஓடிப்பிடித்து விளையாடினார். பின்னர் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். #CSK #MSDhoni
    சென்னை:

    ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். இதில், கேப்டன் டோனி மற்றும் வீரர்கள் பங்கேற்றனர். அப்போது ஒரு ரசிகர், திடீரென தடுப்புச் சுவரைத் தாண்டி  மைதானத்திற்குள் நுழைந்து, கேப்டன் டோனியை நோக்கி ஓடி வந்தார். டோனியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவோ அல்லது அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து பெறவோ அவர் வந்திருக்கலாம்.



    ஆனால், டோனி அவரிடம் பிடிபடாமல், ‘முடிந்தால் பிடித்துப் பார்’ என போக்கு காட்டி ஓடினார். சிறிது நேரம் அந்த ரசிகரிடம் பிடிபடாமல் சென்றார் டோனி. அதற்குள் பாதுகாவலர் ஓடி வந்து, அந்த ரசிகரைப் பிடித்துக்கொண்டார். பின்னர் அந்த ரசிகருக்கு  டோனி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ பதிவை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. இந்தவீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

    மைதானத்தில் ரசிகருக்கு பிடி கொடுக்காமல் டோனி ஓடிப்பிடித்து விளையாடுவது இது முதல் முறையல்ல. சமீபத்தில் நாக்பூரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போதும், மைதானத்திற்குள் நுழைந்த ரசிகரிடம் சிக்காமல் டோனி ஓடிப்பிடித்து விளையாடினார். சிறிது தூரம் ரசிகரை துரத்தவிட்டு ஓடிய டோனி, ஸ்டம்ப் அருகே நின்றார். டோனி நின்றதும் அவரை கட்டி அணைத்த ரசிகர், டோனியின் காலில் விழுந்துவிட்டு, கை குலுக்கி திரும்பினார். #CSK #MSDhoni


    ரெயில் விபத்தில் சிக்கி 2 கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினிகாந்த் நிதி உதவி அளித்துள்ளார்.
    மதுரை:

    மதுரை விளாச்சேரியைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (வயது 35). கூலித் தொழிலாளி. ரஜினியின் தீவிர ரசிகரான இவர் கடந்த 9-ந் தேதி சென்னையில் நடந்த காலா திரைப்பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவிற்கு சென்றார்.

    பின்னர் சென்னையில் இருந்து மதுரைக்கு ரெயிலில் திரும்பிய போது விபத்தில் 2 கால்களும் நசுங்கியது.

    இதில் பலத்த காயம் அடைந்த காசி விஸ்வநாதன் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 கால்களும் பலத்த சேதம் அடைந்து இருந்ததால் அகற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி தகவல் அறிந்த ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற மாநில நிர்வாகி வி.எம். சுதாகரை அனுப்பி வைத்து நலம் விசாரித்தார். நிதி உதவியும் வழங்கினார்.

    குணமடைந்து வீடு திரும்பும் போதும் ரஜினி நிதி உதவி வழங்குவார் என சிகிச்சை பெற்று வரும் காசி விஸ்வநாதனிடம், சுதாகர் தெரிவித்தார்.

    விபத்தில் சிக்கி கால்களை இழந்த ரஜினி ரசிகருக்கு ரஜினிகாந்த் நிதி உதவி வழங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×