search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fan"

    • ஐபிஎல் தொடரில் எந்த அணியில் விளையாட உள்ளீர்கள் என ரசிகர் ஒருவர் ரோகித்திடம் கேள்வி எழுப்பினார்.
    • நான் எந்த அணியில் விளையாட வேண்டும் நீயே சொல் என ரோகித் கூறினார்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. 2-வது நாளில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 462 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது ரோகித் சர்மா ஓய்வு அறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஐபிஎல் தொடரில் எந்த அணியில் விளையாட உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். உடனே நான் எந்த அணிக்கு விளையாட வேண்டும் என்று நீ ஆசைபடுகிறாய் என கேட்டார். இதற்கு அந்த ரசிகர் ஆர்சிபி அணிக்கு வாங்க என கூறி, ஐ லவ் யூ என கூறினார். இதற்கு ரோகித் எந்த பதிலும் சொல்லாமல் அறைக்கு சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • அவரது வீட்டு வாசல் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கினார்.
    • முன்னதாக டோனியை சந்திக்க டெல்லியில் இருந்து சென்னை பயணம் செய்தார்.

    இந்திய அணியின் வெற்றிகர கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ். டோனி. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட எம்.எஸ். டோனி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். உலகளவில் எம்.எஸ். டோனிக்கு ரசிகர்கள் அதிகம்.

    இந்த நிலையில், எம்.எஸ். டோனியை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர் ஒருவர் டெல்லியில் இருந்து 1200 கிலோமீட்டர்கள் சைக்கிளில் பயணம் செய்து ராஞ்சி வந்தடைந்தார். ராஞ்சியில் உள்ள எம்.எஸ். டோனியின் வீட்டு வாசலில் கூடாரம் அமைத்து தங்கிய ரசிகர், டோனினை சந்திக்காமல் வீடு திரும்புவதில்லை என்ற கணக்கில் அங்கேயே தங்க ஆரம்பித்தார்.

    டெல்லியை சேர்ந்த கௌரவ் குமார், தனது சைக்கிள் பயணம் மற்றும் எம்.எஸ். டோனியை பார்க்கும் ஆசை மற்றும் அதற்கான முயற்சி உள்ளிட்ட தகதவல்களை தனது சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். அதன் மூலம் டோனிக்கு எப்படியும் தகவல் கிடைத்து, அவரை பார்க்க முடியும் என்று அவர் கணக்கிட்டு இருந்தார்.

    கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் வரை எம்.எஸ். டோனியை சந்திக்க அவரது வீட்டு வாசல் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கிய நிலையில் கௌரவ் குமார் ஒருவழியாக எம்.எஸ். டோனியை சந்தித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

     


    இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், "நான் டெல்லியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்து டோனியை சந்திக்க திட்டமிட்டேன், ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. இதனால் சென்னையில் இருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லி வந்துவிட்டேன்."

    "தற்போது டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு பயணம் செய்தேன். அங்கு 5-6 நாட்கள் காத்திருந்த பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்ககு. தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையின் அடுத்த பயணத்தை துவங்க தயாராகி இருக்கிறேன்," என பேசியுள்ளார்.

    • தன்னை இந்திய ரசிகர்கள் தாக்கியதாக தெரிவித்து பரபரப்பை கிளம்பினார்
    • டைகர் ராபி வங்கதேசத்துக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று தொடங்கியது. இந்த போட்டியில் பார்வையாளராக கலந்துகொண்ட டைகர் ராபி என்ற வங்கதேசத்தை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் தன்னை இந்திய ரசிகர்கள் தாக்கியதாக தெரிவித்து பரபரப்பை கிளம்பினார். மைதானத்தில் இருந்து டைகர் ராபி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    ஆனால் டைகர் ராபி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்பது பின்னர் தெரியவந்தது. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள டைகர் ராபி 12 நாள் மெடிக்கல் விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளார். ஆனால் எந்த சிகிச்சையும் எடுக்காமல் இந்தியா- வங்கதேசம் விளையாடிய கிரிக்கெட் போட்டிகளுக்கு புலி வேடம் போட்டு சென்று வந்துள்ளார். சென்னையில் நடந்த போட்டிக்கும் அவர் வந்ததாக கூறப்படுகிறது.

     

    எனவே தற்போது டைகர் ராபி வங்கதேசத்துக்கே  திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் நாடுகடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், டைகர் ராபியின் 12 நாள் மெடிக்கல் வீசா இன்றுடன் [செப்டம்பர் 29] முடியவடைவதால் அவர் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார் என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

    • என்னோடு அரை நிர்வாணமாக நடித்த ரன்பீர் கபூர் கதாபாத்திரம் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்.
    • ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நடிக்கலாம். அதே கதாபாத்திரத்தில் பெண்கள் நடித்தால் மட்டும் பாவமா?

    பிரபல இந்தி நடிகையான திரிப்தி டிம்ரி 'அனிமல்' படத்தில் நடித்து மேலும் புகழ் பெற்றார். அனிமல் படம் ஆணாதிக்க சிந்தனையுள்ள படம் என்றும், பெண் வெறுப்பை ஊக்குவிக்கிறது என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த படத்தில் திரிப்தி டிம்ரி நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினர்.

    இந்த நிலையில் ரசிகர் ஒருவர் 'அனிமல், பேட் நியூஸ்' போன்ற படங்களில் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் நடித்துள்ள உங்களை யாராவது திருமணம் செய்து கொள்வார்களா? என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பினார்.

    இதனால் காட்டமான திரிப்தி டிம்ரி ரசிகருக்கு பதில் அளித்து கூறும்போது, ''நான் இதுமாதிரி நடித்தேன் என்பது சரி. ஆனால் என்னோடு அரை நிர்வாணமாக உதட்டோடு உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடித்த ரன்பீர் கபூர் கதாபாத்திரம் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள். அவர் ஆண் என்பதாலா? ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நடிக்கலாம். அதே கதாபாத்திரத்தில் பெண்கள் நடித்தால் மட்டும் பாவமா?

    ஆபாச காட்சிகளில் நடித்தால் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நீங்கள் எப்படி எடை போடுவீர்கள். ஒருவரை அவமதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆண்களை ஒரு மாதிரியும், பெண்களை ஒரு மாதிரியும் பார்ப்பதை விட்டுவிடுங்கள்'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதை சமூக ஊடகங்களில் கொண்டு வர வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன்.
    • பொதுமக்களிடமிருந்து அனைத்து வகையான கருத்துக்களையும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ரசிகர் ஒருவருடன் பாகிஸ்தான் வீரரான ஹரிஸ் ரவுப் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், ரசிகரை தாக்க முயல்வது போன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இந்நிலையில் எங்களை ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், எனது பெற்றோர் மற்றும் எனது குடும்பத்தினர் என்று வரும்போது, அதற்கேற்ப பதிலளிக்க நான் தயங்க மாட்டேன் என ஹரிஸ் ராஃப் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இதை சமூக ஊடகங்களில் கொண்டு வர வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன். ஆனால் இப்போது வீடியோ வெளியானதால், நிலைமையை நிவர்த்தி செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். பொது நபர்களாக, பொதுமக்களிடமிருந்து அனைத்து வகையான கருத்துக்களையும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    எங்களை ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், எனது பெற்றோர் மற்றும் எனது குடும்பத்தினர் என்று வரும்போது, அதற்கேற்ப பதிலளிக்க நான் தயங்க மாட்டேன். மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் தொழில்களைப் பொருட்படுத்தாமல் மரியாதை காட்டுவது முக்கியம்.

    • "கல்நாயக்" படத்தில் தத் நடித்த 'பல்லு பல்ராம்' கேரக்டரின் ரசிகன் என்றும் கூறியுள்ளார்.
    • 10 அல்லது அதற்கும் மேல் கொலை செய்தால் தான் என்கவுன்டர் செய்வார்கள்.

    உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள கல்லறையில் ஒரு நபர் கத்தியால் பெண்ணின் தலையை துண்டித்து, வீடியோவில் குற்றத்தை வெட்கமின்றி ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை புலந்த்ஷாஹரில் உள்ள குர்ஜா நகர் கோட்வாலி பகுதியின் மொஹல்லா கிர்கானியில் உள்ள கல்லறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அந்த பெண்ணை கொலை செய்ததாக அந்த இளைஞர் வீடியோவில் தற்பெருமை பேசுகிறார்.

    அந்த கொடூரமான குற்றத்திற்கு எந்த வருத்தமும் காட்டாத அந்த நபர், தனது நண்பர்கள் காட்டிக் கொடுத்தால் அவர்களையும் கொன்றுவிடுவேன் என்று கூறினார். மேலும் அந்த வீடியோவில் தான் செய்த குற்றத்தை பேசி சிரித்துவிட்டு, தான் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் ரசிகன் என்றும், "கல்நாயக்" படத்தில் தத் நடித்த 'பல்லு பல்ராம்' கேரக்டரின் ரசிகன் என்றும் கூறியுள்ளார்.

    காதலில் துரோகத்தை எதிர்கொண்டதாகவும், துரோகத்திற்கு "மரணம்" தான் தண்டனை என்றும் அந்த மனிதன் கூறுவதுடன் சிலிர்க்க வைக்கும் வீடியோ தொடங்குகிறது. "நான் அவளது கழுத்தை அறுத்தேன் என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார். குற்றத்தை செய்ய ஏன் படம் பார்த்தீர்கள் என்று கேட்டதற்கு, "பல்லு. நான் சஞ்சய் தத்தின் ரசிகன்" என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். வீடியோவில், அவர் தன்னை "பல்லு" என்று அடையாளம் காட்டுகிறார். இருப்பினும், அவரது பெயர் அட்னான் என்று கூறப்படுகிறது.

    மேலும் தான் செய்த குற்றத்தை தற்பெருமை கூறியதோடு அதிகாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அதில் "எனது குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது தொட்டால், அனைவரையும் கொன்றுவிடுவேன், என் குடும்ப உறுப்பினர்களைத் தொடத் துணிந்தவர்களின் வீடுகளில் குண்டு வீசுவேன்" என்றும் கூறியுள்ளார்.

    மேலும் அந்த வீடியோவில் ஒரே ஒரு கொலை செய்ததால் என்னை என்கவுன்டர் செய்யமாட்டார்கள், 10 அல்லது அதற்கும் மேல் கொலை செய்தால் தான் என்கவுன்டர் செய்வார்கள் என்றும் திமிராக பதில் பேசியுள்ளார்.

    இந்நிலையில் பலியான பெண் ஆஸ்மா என அடையாளம் காணப்பட்டு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


    • இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் இன்று தொடங்குகிறது.
    • இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரிகளில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    இதனால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்திய அணியின் பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பந்து தாக்கி பெருவிரலில் காயம் ஏற்பட்டது. ஆனால் களம் இறங்குவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.

    இந்நிலையில் வீரர்களின் பயிற்சியை பார்க்க வந்த ரசிகர்கள் கம்பி வேலி போட்டிருந்ததற்கு வெளியே நின்று பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரோகித், ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களை பக்கத்தில் சென்று சந்தித்தார். அப்போது ஒரு ரசிகர் ரோகித் சர்மாவை கட்டியணைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    உடனே ரோகித், கம்பி வேலி மத்தியில் இருக்கும் போது எப்படி கட்டியணைப்பது என யோசித்தாவறு நிற்க, உடனே பரவாயில்லை என்பது போல கம்பி வேலியுடன் சேர்ந்து அந்த ரசிகரை கட்டியணைத்தார். உடனே ரசிகர் மற்றும் ரோகித் சிரித்தவாறு அந்த இடத்தில் இருந்து விலகி சென்றனர்.

    இந்த வீடியோ Cute-ஆ இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது.
    • இதில் கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடியும் தறுவாயில் உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுவரை கொல்கத்தா அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளன.

    இதற்கிடையே, ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழையால் போட்டி 16 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், மைதானத்தில் விழுந்த பந்தை ரசிகர் ஒருவர் மறைத்து எடுத்துச் செல்வதையும், அதை கவனித்த போலீசார் அவரிடம் இருந்து பந்தை பறிமுதல் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த ரசிகருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்துகள் பதிவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • செல்பி எடுக்க வந்த ரசிகரை சகிப் அல் ஹசன் தாக்க முயன்றுள்ளார்.
    • சகிப்பின் இந்த செயல் மிகவும் மோசமானதாக இருந்தாக ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    வங்காளதேச அணியின் ஆல் ரவுண்டரான சகிப் அல் ஹசன். இவர் தொடர்பான செய்திகள் அடிக்கடி வந்து சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் அவர் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    தாகா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது செல்பி எடுக்க வந்த ரசிகரை சகிப் அல் ஹசன் தாக்க முயன்றுள்ளார். அது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் சகிப் அல் ஹசன் சக வீரர்களுடன் பேசி கொண்டிருப்பார். அந்த நேரத்தில் அவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு ரசிகர் செல்பி எடுக்க அனுமதி கேட்பார். இதனை ஏற்றுக் கொள்ளாத சகிப் அவரது செல்போனை தடுத்து விடுவார். மேலும் ரசிகரின் கழுத்தை பிடித்து அவரை தாக்க முயற்சி செய்வார். இதனால் மனமுடைந்த ரசிகர் அங்கிருந்து சென்று நாற்காலியில் சோகத்துடன் அமர்ந்து இருப்பார்.

    இந்த வீடியோவில் சகிப்பின் செயல் மிகவும் மோசமானதாக இருந்தாக ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் கூட இவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

    • விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படமான கில்லி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீ்ணடும் நேற்று திரைக்கு வந்துள்ளது.
    • தமிழகமெங்கும் கில்லி படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

    தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கோட்'படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படமான கில்லி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீ்ணடும் நேற்று திரைக்கு வந்துள்ளது.

    தமிழகமெங்கும் கில்லி படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். திருப்பத்தூரை அடுத்த ஜடையனூரை சேர்ந்த விஜய் ரசிகரான கதிர்வேல் என்பவர் கில்லி படம் மீண்டும் திரைக்கு வந்த மகிழ்ச்சியில் விஜய்யை பற்றி 10 ஆயிரம் வரிகள் கொண்ட ஒரு முழு கவிதையை 36 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    விஜய் ரசிகரின் இந்த சாதனையை கேரள மாநிலத்தை சேர்ந்த யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர்கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அங்கீகரித்து விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி இருக்கிறது.

    • குட்டி ரசிகர் ஒருவர் கையில் பாதகையை ஏந்தியபடி ரோகித் சர்மாவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
    • இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    முல்லாப்பூர்:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்தித்தது. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி முதலில் தடுமாறினாலும் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை போராடியது.

    இறுதியில் பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 183 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை சுவைத்தது.

    இந்நிலையில் நேற்றைய போட்டியில் குட்டி ரசிகர் ஒருவர் கையில் பாதகையை ஏந்தியபடி ரோகித் சர்மாவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த பாதகையில் ரோகித் ஓவியம் வரையப்பட்டு இருந்தது. மேலும் அதில் எங்களுக்கு ஐபிஎல் கோப்பை வேண்டாம் டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்தால் போதும் என கூறப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கடைசி ஓவரில் களமிறங்கிய டோனி 4 பந்தில் 20 ரன்கள் விளாசினார்.
    • இதில் ஹாட்ரிக் சிக்சர் அடங்கும்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்றுவரும் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் களமிறங்கிய டோனி 4 பந்தில் 20 ரன்கள் விளாசினார்.

    20 ஓவர் முடிந்த நிலையில் ஓய்வு அறையை நோக்கி டோனி சென்று கொண்டிருந்த போது படியில் அவர் சிக்சர் அடித்த பந்து கிடந்தது. அதனை எடுத்து குட்டி ரசிகைக்கு பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×