என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிட்செல் மார்ஷ்"

    • பேட் கம்மின்ஸ் உடற்குதியுடன் இருந்தால் அவர் கேப்டனாக இருக்கப்போகிறாரா அல்லது நீங்கள் தொடர்ந்து நீடிப்பீர்களா?.
    • பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்பினால், அவர்கள் உங்கள் கேப்டன் பதவியின் கீழ் விளையாடப் போகிறார்?.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது. 4.5 ஓவரில் மழை குறுக்கீடு செய்ததால், அத்துடன் போட்டி கைவிடப்பட்டது. இதனால் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

    மழையால் போட்டி கைவிடப்பட்ட நிலையில், கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் ஆடம் கில்கிறிஸ்ட், ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்செல் மார்ஷிடம் கேள்வி கேட்டார். அப்போது 2026 டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை வழி நடத்திச் செல்லப் போவது யார்? நீங்களா அல்லது பேட் கம்மின்ஸா? என கேள்வி எழுப்பினார். இதற்கு என்ன பதில் சொல்ல என்று மிட்செல் மார்ஷ் வார்த்தை இல்லாமல் நின்றார். பின்னர் சமாளித்துக் கொண்டு பேசினார்.

    ஆடம் கில்கிறிஸ்ட்: யார் கேப்டன்? நீங்களா அல்லது பேட் கம்மின்ஸா?. பேட் கம்மின்ஸ் உடற்குதியுடன் இருந்தால் அவர் கேப்டனாக இருக்கப்போகிறாரா அல்லது நீங்கள் தொடர்ந்து நீடிப்பீர்களா?

    மிட்செல் மார்ஷ்: நல்ல கேள்வி. நான் அங்கே இருப்பேன் (கேப்டன் பொறுப்பில்) என நினைக்கிறேன்.

    கில்கிறிஸ்ட்: ஆகவே, நீங்கள் அதிகாரப்பூர்வ கேப்டன்?. பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்பினால், அவர்கள் உங்கள் கேப்டன் பதவியின் கீழ் விளையாடப் போகிறார்?

    மிட்செல் மார்ஷ்: நான் அப்படித்தான் நினைக்கிறேன். ஆமாம்.

    கில்கிறிஸ்ட்: விளக்கம் அளித்ததற்கு நன்றி. இது பற்றி கேள்விகள் எழுந்துள்ளன.

    டி20 உலக கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எந்தபொரு டி20 அட்டவணையும் இல்லை. அணித் தேர்வுக்கு பிக் பாஷ் டி20 லீக் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.

    மிட்செல் மார்ஷ் 2024 டி20 உலக கோப்பையில் இருந்து ஆஸ்திரேலிய அணி கேப்டனாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கில்கிறிஸ்ட் இதுபோன்ற கேள்வியை எழுப்பியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

    • ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்தனர்.
    • இந்த நிகழ்வை கிண்டல் செய்யும் வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள் சைகை செய்து காட்டினர்.

    ஆசிய கோப்பை கிரிக் கெட் போட்டி சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. இதில் சூர்ய குமார் யாதவ் தலைமை யிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி 3 முறையும் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது.

    ஆசிய கோப்பை கிரிக் கெட்டில் பாகிஸ்தான் வீரர் களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்ட னர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரொலி யாக இந்திய வீரர்கள் இந்த முடிவை எடுத்தனர். போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக் குவது வாடிக்கையானது. ஆனால் கைகுலுக்கும் நிகழ்வை இந்தியா புறக் கணித்து விட்டது. இது மிகுந்த சர்ச்சையை ஏற் படுத்தியது.

    மேலும் ஆசிய கோப் பையை பாகிஸ்தான் கிரிக் கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோஷின் நக்வியிடம் இருந்து வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்து விட்டார்.

    இதற்கிடையே பாகிஸ் தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் கைகுலுக்காததை வைத்து ஆஸ்திரேலிய வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற கேலி வீடியோ ஒன்று வெளியானது. இந்தியா-ஆஸ்தி ரேலியா ஒருநாள் தொடரை யொட்டி இந்த விளம்பர வீடியோவை கயோ ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது.

    அந்த வீடியோவில், வர்ணனையாளர் இயன் ஹிக்கின்ஸ், இந்திய வீரர்களின் "மிகப்பெரிய பலவீனம்" என்று கூறி, கை குலுக்காத விஷயத்தைக் குறிப்பிடுகிறார். அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர்களான ஜோஷ் ஹேசில்வுட், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், அலிசா ஹீலி, அலானா கிங் மற்றும் சோஃபி மோலினக்ஸ் ஆகியோர், கை குலுக்கலுக்குப் பதிலாக என்னென்ன 'வாழ்த்துக்களை' தெரிவிக்கலாம் என்று தங்களது பாணியில் செய்து காட்டுகின்றனர்.

    அப்போது ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனை சோஃபி மோலினக்ஸ், தனது இரண்டு நடுவிரல்களையும் கேமராவை நோக்கிக் காட்டி, 'bras d'honneur' எனப்படும் இத்தாலிய சைகையையும் செய்தார். இது மிக மோசமான சைகையாகும்.

    மற்றொரு வீரரான ஜோஷ் ஹேசில்வுட், துப்பாக்கியால் சுடுவது போன்ற சைகையைச் செய்தது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிளென் மேக்ஸ்வெல், ஆலிசா ஹீலி. மிட்செல் மார்ஷ் போன்ற மற்ற வீரர்கள் தங்கள் பங்குக்கு கேலி செய்யும் வகையில் சில சைகைகளை செய்து இப்படிதான் இந்திய அணிக்கு கைகுலுக்காமல் வித்தியாசமான வரவேற்பை அளிக்கலாம் என கூறினர்.

    இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே, இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி எழுந்தனர். இந்திய ரசிகர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, 'காயோ ஸ்போர்ட்ஸ்' தளம், அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை சமூக வலைதளப் பக்கங்களிலிருந்தும் உடனடியாக நீக்கியது.

    இந்நிலையில் இந்த கேலி வீடியோ குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மிச் சேல் மார்ஷ் மவுனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து பேசிய மார்ஷ், "நான் உண்மையில் அந்த விளம்பரத்தை பார்க்க வில்லை. அதில் பிரச்சினை உள்ளதா? என்று எனக்கு தெரியவில்லை. அதைப்பற்றி நான் கருத்து தெரிவிக்க வேண்டியது இல்லை.

    இந்தியா-ஆஸ்திரேலியா வீரர்கள், ரசிகர்கள் இடை யே ஒரு சிறப்பு பெற்றதாக இந்த தொடர் இருக்கும். இந்த தொடரின் 3 ஆட்டத்துக்கு 1.75 லட்சம் டிக்கெட்டுகள் விற்று விட்டதாக கூறப்படுகிறது. வீராட் கோலி, ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் விளையாடும் கடைசி போட்டி என்பதால் ரசிகர் களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    • ஒருநாள் போட்டியில் ரோகித், விராட் பெரிய ஜாம்பவான்கள்.
    • விராட் கோலியை போன்ற சிறந்த சேஸிங் வீரர் இல்லை.

    இந்தியா 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பெர்த்தில் நாளை தொடங்குகிறது.

    இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி, ரோகித் சர்மா மற்றும் விராட் கொலி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியதாவது:-

    கிரிக்கெட் பயணத்தின்போது ரோகித் சர்மா, விராட் கோலிக்கு எதிராக அதிக அளவில் விளையாடும் பாக்கியம் கிடைத்தது. ஒருநாள் போட்டியில் இரண்டு பேரும் ஜாம்பவான்கள். விராட் கோலியை போன்ற சிறந்த சேஸிங் வீரர் இல்லை. நீங்கள் டிக்கெட் விற்பனையை பார்த்திருப்பீர்கள். ஏராளமான மக்கள் மைதானத்திற்கு வருகை தந்து, அவர்களை பார்க்க விரும்புகிறார்கள்.

    இந்தியாவுக்கு எதிரான போட்டிகளுக்கான மைதானங்கள் நிரம்பியுள்ளதை பார்க்கும்போது, இது எங்களுடைய குரூப்பிற்கு சிறந்த அனுபவமாக இருக்கப் போகிறது.

    இந்த தொடர் அதிக ஸ்கோர் கொண்டதாக இருக்கப் போகிறது என்று நம்புகிறென். ஆனால், இரண்டு அணிகளுக்கும் முதல் 10 ஓவர் சவாலானதாக இருக்கும். வெற்றியும், தோல்வியும் அதை பொறுத்து அமையலாம்.

    • ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை எல்லோரும் விரும்புகிறார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாட உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியியும் தேர்வு பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார்கள்.

    இதனால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை எல்லோரும் விரும்புகிறார்கள் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை எல்லோரும் விரும்புகிறார்கள். ஒரு அணியாக நாங்கள் அவர்களுக்கு மிகுந்த போட்டித்தன்மையையும் மிகுந்த மரியாதையையும் கொண்டுள்ளோம். ஆஷஸ் தொடருக்கு முன்னதாக இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது உண்மையில் சரியான நேரம். இது மிகப்பெரியதாக இருக்கும்.

    என மார்ஷ் கூறினார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.
    • ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டிலும் மிட்சேல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆசிய கோப்பை டி20 தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 டி20 தொடரில் விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அரவிக்கப்ட்டு விட்டது. ஒருநாள் தொடரில் சுப்மன் கில் கேப்டனாகவும் டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டிலும் மிட்சேல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:-

    மிட்ச் மார்ஷ் (C), சேவியர் பார்ட்லெட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஓவன், கூப்பர் கோனொலி, மேத்யூ ரென்ஷா, பென் டுவார்ஷுயிஸ், மேட் ஷார்ட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், கேமரான் கிரீன், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசல்வுட்,

    டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:-

    மிட்ச் மார்ஷ் (C) சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குஹ்னெமன், மிட்செல் ஓவன், மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா,

    • மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 72 ரன்கள் விளாசினார்.
    • நிகோலஸ் பூரன் 30 பந்தில் 75 ரன்கள் விளாசினார்.

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 2025-ன் 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முதலில் பேட்டிங் செய்தது. மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    மார்கிராம் நிதானமாக விளையாட மிட்செல் மார்ஷ் பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. லக்னோவின் ஸ்கோர் 4.4 ஓவரில் 46 ரன்னாக இருக்கும்போது மார்கிராம் ஆட்டமிழந்தார்.

    அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 64 ரன்கள் குவித்தது.

    மிட்செல் மார்ஷ் 21 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 8.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இதனால் லக்னோ அணியின் ஸ்கோர் 250 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 11.4 ஒவரில் 133 ரன்கள் குவித்திருந்தது. அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் 24 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். நிக்கோலஸ் பூரன் அதிரடியால் லக்னோ 12.4 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    ரிஷப் பண்ட் 6 பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அப்போது லக்னோவின் ஸ்கோர் 13.4 ஓவரில் 161 ரன்னாக இருந்தது. பண்ட் ஆட்மிழந்த சிறிது நேரத்தில் பூரன் 30 பந்தில் 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 14.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் லக்னோவின் ஸ்கோர் அதிரடியாக உயரவில்லை. இதனால் 200 ரன்னைத் தாண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. குல்தீப் யாதவ் வீசிய 17-வது ஓவரில் லக்னோவின் இரண்டு பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். இந்த ஓவரில் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    மோகித் சர்மா வீசிய 18-வது ஓவரில் லக்னோ 10 ரன்கள் சேர்த்தது. ஸ்டார்க் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட் இழந்து 6 ரன்கள் எடுத்தது. லக்னோ 19 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.

    20வது ஓவரை மோகித் சர்மா வீசினார். இந்த ஓவரின் கடைசி 2 பந்துகளையும் மில்லர் சிக்சருக்கு தூக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் 209 ரன்கள் குவித்தது. மில்லர் 27 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார்.

    டெல்லி அணி சார்பில் ஸ்டார்க் 42 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

    • காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகினார்.
    • பேட்டிங் செய்யலாம், பந்து வீசக் கூடாது என அறிவுறுத்தல்.

    ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 10 அணிகளிலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி மற்றும் அதற்கு முன்னதாக நடைபெற்ற இலங்கை தொடரில் இருந்து விலகினார்.

    இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்து, பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக மருத்துவ அனுமதியை பெற்றுள்ளார்.

    ஆனால் பேட்டிங் மட்டும்தான் செய்ய வேண்டும். பந்து வீசக்கூடாது, முதுகுப் பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் பீல்டிங் செய்யக் கூடாது என அறிவிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் இம்பேக்ட் பிளேயராக மிட்செல் மார்ஷ் விளையாட முடியும். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், பூரண் ஆகிய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    பந்து வீசவில்லை என்றாலும் லக்னோ அணிக்கு மிடில் ஆர்டர் வரிசையில் மிட்செல் மார்ஷல் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

    மிட்செல் மார்ஷ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பியதால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பிக்பாஷ் லீக்கில் ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடினார். பின்னர் காயத்தின் தன்மை தீவிரமானதால் இலங்கை மற்றும் சாம்பியன்ஸ் டிராபில் இருந்து விலகினார்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் வருகிற 18-ந்தேதி மிட்செல் மார்ஷ் இணைய உள்ளார்.

    • கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி மிட்செல் மார்ஷ் மற்றும் கிரேட்டா மேக் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
    • முதல் 2 போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் வீரர், 3-வது போட்டியில் விளையாடவில்லை.

    ஐபிஎல் தொடரின் 16-வது சீசனுக்கான போட்டியில் ஒவ்வொரு அணியும் தீவிரமாக விளையாடி வருகிறது. டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 3 போட்டியில் விளையாடி மூன்று போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.

    முதல் 2 போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் வீரர், 3-வது போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ரோவ்மன் பவல் அணியில் இடம் பெற்றார்.

    கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி மிட்செல் மார்ஷ் மற்றும் கிரேட்டா மேக் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில், மிட்செல் மார்ஷ் தனது நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை நேற்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

    இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இந்த புகைப்படங்களை மிட்செல் மார்ஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு என் வாழ்வின் சிறந்த நாள் என தலைபிட்டிருந்தார்.

    • ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்களை குவிக்கும்.
    • இந்தியா 65 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகும் என மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

    டெல்லி:

    இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தீவிரமாக விளையாடி வருகின்றன. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்திலும், இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் இந்தியாவிலும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா ஆல்-அவுட் செய்து வீழ்த்தும் என ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா தோல்வி அடையாத அணியாக இருக்கும். இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தும். ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்களை குவிக்கும். இந்தியா 65 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். தற்போதைய ஐபிஎல் தொடரில் மிட்செல் மார்ஷ் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசியிருந்தார்
    • உலகக் கோப்பையில் 225 அடித்ததுடன், இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்

    உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் இடம் பிடித்துள்ளார். இவர் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடினார். 6 போட்டிகளில் 225 ரன்கள் அடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 121 ரன்கள் அடித்தார். இலங்கைக்கு எதிராக அரைசதம் விளாசினார்.

    டிராவிஸ் ஹெட் அணிக்கு திரும்பியதும் மிடில் ஆர்டர் வரிசையில் பேட்டிங் செய்தார். இந்த நிலையில் அவசரமாக சொந்த நாடு திரும்ப இருக்கிறார். இதனால் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

    இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய இழப்பாகும். ஆஸ்திரேலியா வருகிற 4-ந்தேதி இங்கிலாந்தையும், 11-ந்தேதி வங்காளதேசத்தையும் எதிர்கொள்கிறது.

    மிட்செல் மார்ஷ் சொந்த காரணத்திற்கான அணியிலிருந்து விலகியுள்ளார். அவர் மீண்டும் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்.
    • மிட்செல் மார்ஷ் அளித்த பதில் வைரல் ஆகி வருகிறது.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் கடந்த மே மாதம் வெளியான பாட்காஸ்ட் ஒன்றுக்கு அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில், தனது அணி தான் கோப்பையை வெல்லும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

    இதுதவிர, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் எவ்வளவு ரன்களை அடிக்கும் என்பதையும் அவர் கணித்திருக்கிறார். அதன்படி, ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 450 ரன்களை குவிக்கும் என்றும் அடுத்து களமிறங்கும் இந்திய அணி வெறும் 65 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடையும் என்று தெரிவித்தார். இவரின் இந்த பதில் தொடர்பான மீம்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    • முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.
    • ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது.

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறின.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இந்த ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

    இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது.

    இந்நிலையில் உலகக் கோப்பையை அனைத்து வீரர்களும் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடி பார்த்திருப்போம். முத்தமிடுவதையும் கட்டி அணைப்பதையும் கோப்பை முன் நின்று புகைப்படம் எடுப்பதையும் பார்த்திருப்போம். ஆனால் இந்த முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்த வீரர் மிட்செல் மார்ஷ், தனது காலை கோப்பைக்கு மேல் வைத்து புகைப்படம் எடுத்து கொண்டது கவலையாக இருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த உலகக் கோப்பை இந்திய அணி வென்றிருந்தால் கொண்டாடிருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய கோப்பை ஆஸ்திரேலிய அணி வீரர் காலில் இருப்பதை பார்ப்பதற்கு வேதனையாக இருப்பதாக ரசிகர்கள் கண்ணீருடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    ×