என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asia Cup"

    • பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்து விட்டனர்.
    • மோசின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ளார்.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் நடந்த ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இறுதிப்போட்டி உள்பட 3 முறை இந்திய அணி பாகிஸ்தானை இந்த தொடரில் வீழ்த்தியது.

    இந்த போட்டியின் போது பஹல்காம் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்து விட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோசின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ளார். மேலும் பாகிஸ்தான் மந்திரியாக இருக்கும் அவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க இந்தியா மறுத்துவிட்டது. இதனால் நக்வி ஆசிய கோப்பையை தன் கையோடு எடுத்து சென்று விட்டார். இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு ஆசிய கோப்பையை வழங்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிசிசிஐ-க்கும், அவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    • இந்தியா ஏ அணி நவம்பர் 16-ம் தேதி பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்கிறது.
    • ஐ.பி.எல். நட்சத்திரம் பிரியன்ஷ் ஆர்யாவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    கத்தாரில் நடைபெற உள்ள ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025-க்கான இந்தியா ஏ அணிக்கு ஜிதேஷ் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இளம் வீரர்கள் பலரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். பஞ்சாப் ஆல்ரவுண்டர் நமன் தீர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய டி20 விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 15 பேர் கொண்ட அணியை தலைமையேற்று வழிநடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அதிரடி பேட்ஸ்மேன் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வைபவ் சூரியவன்ஷி 14 வயதில் இந்திய ஏ அணியில் ஆசிய கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஐ.பி.எல். நட்சத்திரம் பிரியன்ஷ் ஆர்யாவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

    ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை இம்மாதம் 14 முதல் 23-ம் தேதி வரை கத்தாரில் நடைபெறுகிறது. ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் ஏ அணிகளுடன் குரூப் பி பிரிவில் இந்திய ஏ அணி இடம்பெற்றுள்ளது.

    ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்தியா ஏ அணியின் விவரம் வருமாறு:

    பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, நேஹல் வதேரா, நமன் தீர் (துணை கேப்டன்), சூர்யன்ஷ் ஷெட்கே, ஜிதேஷ் சர்மா (கேப்டன் - விக்கெட் கீப்பர்) , ரமன்தீப் சிங், ஹர்ஷ் துபே, அசுதோஷ் சர்மா, யாஷ் தாக்கூர், குர்ஜப்னீத் சிங், விஜய் குமார் வைஷாக், யுத்வீர் சிங் சரக், அபிஸ்.

    ஸ்டாண்ட் பை வீரர்கள்: குர்னூர் சிங் ப்ரார், குமார் குஷாக்ரா, தனுஷ் கோட்டியன், சமீர் ரிஸ்வி, ஷேக் ரஷீத்.

    இந்தியா ஏ அணி நவம்பர் 16-ம் தேதி பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்கிறது.

    ஐபிஎல் 2025 சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறை வென்றதில் ஜிதேஷ் சர்மா அபரிமித பங்களிப்புகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அபுதாபியில் எந்த இடத்தில் அவர் ஆசிய கோப்பையை மறைத்து வைத்துள்ளார் என்று தெரியவில்லை.
    • இந்த செயலால் மோஷின் நக்வி மலிவான அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் நடந்த ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இறுதிப்போட்டி உள்பட 3 முறை இந்திய அணி பாகிஸ்தானை இந்த தொடரில் வீழ்த்தியது.

    இந்த போட்டியின் போது பஹல்காம் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்து விட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோஷின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ளார். மேலும் பாகிஸ்தான் மந்திரியாக இருக்கும் அவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க இந்தியா மறுத்துவிட்டது. இதனால் நக்வி ஆசிய கோப்பையை தன் கையோடு எடுத்து சென்று விட்டார். இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    ஆசிய கோப்பையை முறைப்படி ஒப்படைக்க ஒரு தனி விழாவை நடத்த வேண்டும் என்றும், அதில் இந்திய வீரர் யாராவது நேரில் வந்து கோப்பையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நக்வி பிடிவாதமாக இருந்தார்.

    இந்த நிலையில் ஆசிய கோப்பையை மோஷின் நக்வி அபுதாபியில் ரகசிய இடத்தில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை அலுவலகத்தில் இருந்து அவர் கோப்பையை எடுத்து சென்றுள்ளார். அபுதாபியில் எந்த இடத்தில் அவர் ஆசிய கோப்பையை மறைத்து வைத்துள்ளார் என்று தெரியவில்லை.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) அதிகாரி ஒருவர் துபாயில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றார். அங்கு ஆசிய கோப்பை இல்லாதது குறித்து விசாரித்துள்ளார். அங்குள்ள ஊழியர் ஆசிய கோப்பை இங்கிருந்து அகற்றப்பட்டு விட்டது என்றும், தற்போது அது அபுதாபியில் நக்வியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த செயலால் மோஷின் நக்வி மலிவான அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி கடந்த மாதம் 28-ந்தேதி ஆசிய கோப்பையை வென்றது. ஆனால் கிட்டதட்ட 1 மாதமாகியும் ஆசிய கோப்பை இன்னும் வழங்கப்படவில்லை. 

    • ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்தனர்.
    • இந்த நிகழ்வை கிண்டல் செய்யும் வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள் சைகை செய்து காட்டினர்.

    ஆசிய கோப்பை கிரிக் கெட் போட்டி சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. இதில் சூர்ய குமார் யாதவ் தலைமை யிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி 3 முறையும் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது.

    ஆசிய கோப்பை கிரிக் கெட்டில் பாகிஸ்தான் வீரர் களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்ட னர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரொலி யாக இந்திய வீரர்கள் இந்த முடிவை எடுத்தனர். போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக் குவது வாடிக்கையானது. ஆனால் கைகுலுக்கும் நிகழ்வை இந்தியா புறக் கணித்து விட்டது. இது மிகுந்த சர்ச்சையை ஏற் படுத்தியது.

    மேலும் ஆசிய கோப் பையை பாகிஸ்தான் கிரிக் கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோஷின் நக்வியிடம் இருந்து வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்து விட்டார்.

    இதற்கிடையே பாகிஸ் தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் கைகுலுக்காததை வைத்து ஆஸ்திரேலிய வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற கேலி வீடியோ ஒன்று வெளியானது. இந்தியா-ஆஸ்தி ரேலியா ஒருநாள் தொடரை யொட்டி இந்த விளம்பர வீடியோவை கயோ ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது.

    அந்த வீடியோவில், வர்ணனையாளர் இயன் ஹிக்கின்ஸ், இந்திய வீரர்களின் "மிகப்பெரிய பலவீனம்" என்று கூறி, கை குலுக்காத விஷயத்தைக் குறிப்பிடுகிறார். அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர்களான ஜோஷ் ஹேசில்வுட், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், அலிசா ஹீலி, அலானா கிங் மற்றும் சோஃபி மோலினக்ஸ் ஆகியோர், கை குலுக்கலுக்குப் பதிலாக என்னென்ன 'வாழ்த்துக்களை' தெரிவிக்கலாம் என்று தங்களது பாணியில் செய்து காட்டுகின்றனர்.

    அப்போது ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனை சோஃபி மோலினக்ஸ், தனது இரண்டு நடுவிரல்களையும் கேமராவை நோக்கிக் காட்டி, 'bras d'honneur' எனப்படும் இத்தாலிய சைகையையும் செய்தார். இது மிக மோசமான சைகையாகும்.

    மற்றொரு வீரரான ஜோஷ் ஹேசில்வுட், துப்பாக்கியால் சுடுவது போன்ற சைகையைச் செய்தது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிளென் மேக்ஸ்வெல், ஆலிசா ஹீலி. மிட்செல் மார்ஷ் போன்ற மற்ற வீரர்கள் தங்கள் பங்குக்கு கேலி செய்யும் வகையில் சில சைகைகளை செய்து இப்படிதான் இந்திய அணிக்கு கைகுலுக்காமல் வித்தியாசமான வரவேற்பை அளிக்கலாம் என கூறினர்.

    இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே, இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி எழுந்தனர். இந்திய ரசிகர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, 'காயோ ஸ்போர்ட்ஸ்' தளம், அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை சமூக வலைதளப் பக்கங்களிலிருந்தும் உடனடியாக நீக்கியது.

    இந்நிலையில் இந்த கேலி வீடியோ குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மிச் சேல் மார்ஷ் மவுனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து பேசிய மார்ஷ், "நான் உண்மையில் அந்த விளம்பரத்தை பார்க்க வில்லை. அதில் பிரச்சினை உள்ளதா? என்று எனக்கு தெரியவில்லை. அதைப்பற்றி நான் கருத்து தெரிவிக்க வேண்டியது இல்லை.

    இந்தியா-ஆஸ்திரேலியா வீரர்கள், ரசிகர்கள் இடை யே ஒரு சிறப்பு பெற்றதாக இந்த தொடர் இருக்கும். இந்த தொடரின் 3 ஆட்டத்துக்கு 1.75 லட்சம் டிக்கெட்டுகள் விற்று விட்டதாக கூறப்படுகிறது. வீராட் கோலி, ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் விளையாடும் கடைசி போட்டி என்பதால் ரசிகர் களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    • அவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.
    • இந்தியாவுக்கு கொண்டு வர பிசிசிஐ முயன்று வருகிறது.

    கடந்த செப்டம்பர் 28 அன்று துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஹ்சின் நக்வி கோப்பையை வழங்க முன்வந்தார். ஆனால் அவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.

    மற்றொரு நிகழ்ச்சி வைத்து அதில் தனது கைகளால்தான் கோப்பையை வழங்குவேன் என்றுகூறிய நக்வி, கோப்பையை தன்னுடன் எடுத்துச் சென்றார்.

    கோப்பை தற்போது ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் வசம் உள்ளது. அதை இந்தியாவுக்கு கொண்டு வர பிசிசிஐ முயன்று வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு கோப்பையை வழங்க மறுத்ததற்காக மோஹ்சின் நக்விக்கு பாகிஸ்தான் அரசு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிந்து மற்றும் கராச்சி கூடைப்பந்து தலைவர் குலாம் அப்பாஸ் ஜமால், கராச்சியில் நடக்க உள்ள ஒரு விருந்து விழாவில் நக்விக்கு பதக்கம் வழங்கப்படும் என்று கூறியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

    • சூப்பர்-4 சுற்று போட்டி யின்போது பாகிஸ்தான் வீரர்கள் பர்ஹான், ஹாரிஸ் ரவூப் ஆகியோர் ஆத்திர மூட்டும் சைகைகளை காண் பித்தனர்.
    • சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ரவூப் ஆகியோருக்கு அபராதம் விதித்தது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் தொடங்கும் இறுதிப்போட்டி யில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இத்தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் மற்றும் சூப்பர்-4 சுற்றில் மோதி இருந்தன. இந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

    இத்தொடரில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டங்க ளில் சர்ச்கைகள் எழுந்தது. லீக் போட்டியின்போது ஆட்டம் முடிந்தபிறகு பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் புகார் செய்தது.

    மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக் கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி) புகார் செய்தது.

    சூப்பர்-4 சுற்று போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் பர்ஹான், ஹாரிஸ் ரவூப் ஆகியோர் ஆத்திர மூட்டும் சைகைகளை காண்பித்தனர்.

    இதுதொடர்பாக சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார் செய்தது. இப்புகார் களை விசாரித்த ஐ.சி.சி, சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ரவூப் ஆகியோருக்கு அபராதம் விதித்தது. பர்ஹானுக்கு எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டது. இந்த சர்ச்கைகளுக்கு மத்தியில் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டனுடன் கோப்பை புகைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா மறுத்துவிட்டது.

    இறுதிப் போட்டிக்கு முன் அதில் மோதும் அணிகளின் கேப்டன்கள் கோப்பையுடன் புகைப்ப டத்துக்கு போஸ் கொடுப் பார்கள். இது பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெறவிருந்தது. ஆனால் அதில் பங்கேற்க இந்தியா மறுத்து விட்டதாக கூறப்படு கிறது.

    இதனால் கோப்பை புகைப்பட நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்திய அணி நேற்று ஒரு நாள் விடுமுறை எடுத்து எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

    • அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் தொடர்ந்து 3 முறை அரை சதம் அடித்தார்.
    • ஆட்டநாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.

    துபாய்:

    ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ரன் விளாசினார்.

    அடுத்து ஆடிய இலங்கை அணி பதும் நிசங்கா அதிரடி சதத்தால் 202 ரன்கள் எடுத்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 3 முறை அரைசதம் அடித்த 6வது இந்திய வீரரானார் அபிஷேக் சர்மா.

    இதற்கு முன்னதாக, விராட் கோலி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் ஹாட்ரிக் அரை சதமடித்து அசத்தி உள்ளனர்.

    • ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற சாதனை படைத்தார்.
    • குல்தீப் யாதவ் நடப்பு தொடரில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன்மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

    ஆசிய கோப்பையில் சிறப்பாக பந்துவீசி வரும் குல்தீப் யாதவ் நடப்பு தொடரில் மட்டும் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

    இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரனைப் பின்னுக்கு தள்ளி குல்தீப் யாதவ் 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

    மேலும், ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    இதுவரை குல்தீப் யாதவ் மொத்தம் 31 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்தப் பட்டியலில் 33 விக்கெட்களுடன் மலிங்கா முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சச்சரவுகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன.
    • பாகிஸ்தான் வீரர்கள் மீது இ-மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    துபாயில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

    இதனிடையே, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சச்சரவுகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

    இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஹாரிஸ் ரவூப், சாஹிப்தாவுக்கு எதிராக ஐ.சி.சி.யிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புகார் அளித்துள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியின் போது இந்திய வீரர்களுக்கு கோபம் ஏற்படும் வகையில் சைகைகளை செய்ததாக பாகிஸ்தான் வீரர்கள் மீது இ-மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    • வங்காளதேச அணி லீக் சுற்றில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான் அணிகளை வென்றது.
    • இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் 'சூப்பர்4' சுற்றுக்கு வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

    இந்த நிலையில் துபாயில் இன்று நடக்கும் 'சூப்பர்4' சுற்றின் 4-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

    நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக வலம் வரும் இந்தியா, லீக் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஓமனை அடுத்தடுத்து பந்தாடியது. தொடர்ந்து சூப்பர்4 சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை மீண்டும் தோற்கடித்தது.

    இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் வர்மா (74 ரன்), சுப்மன் கில் (47 ரன்) அதிரடியால் பாகிஸ்தான் நிர்ணயித்த 172 ரன் இலக்கை 7 பந்துகள் மீதம் வைத்து இந்தியா எளிதாக எட்டியது. மேலும் பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சனும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்ரவர்த்தியும், ஆல்-ரவுண்டராக ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேலும் வலுசேர்க்கின்றனர். ஆனால் பீல்டிங் தான் சற்று கவலைக்குரியதாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் 4 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்ட இந்திய வீரர்கள் பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

    2024-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து 35 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் இந்தியா 32-ல் வெற்றி பெற்றுள்ளது. 3-ல் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி, இறுதிப்போட்டியை உறுதி செய்யும் வேட்கையுடன் காத்திருக்கிறது.

    வங்காளதேச அணி லீக் சுற்றில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான் அணிகளை வென்றது. இலங்கையிடம் தோல்வி கண்டது. சூப்பர் 4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி பழிதீர்த்தது. அந்த நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் களம் காணும். அந்த அணியில் பேட்டிங்கில் தவ்ஹித் ஹிரிடாய், கேப்டன் லிட்டான் தாஸ், சைப் ஹசன், தன்சித் ஹசனும், பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரகுமான், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசனும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்திய அணியோடு ஒப்பிடுகையில் வங்காளதேச அணியின் வலிமை குறைவானது என்றாலும், சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான மைதானத்தில் அந்த அணி எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வல்லமை கொண்டதாகும். இந்தியாவுக்கு எதிராக ஆடும் போது வங்காளதேச அணியினர் ஆக்ரோஷத்துடனும், போர்க்குணத்துடனும் போராடுவார்கள். இருப்பினும் கடந்த கால வரலாற்றையும், தற்போதைய இந்திய அணியின் வளமான செயல்பாட்டையும் பார்க்கையில் வங்காளதேசம் சரிசமமான சவால் அளிப்பது கடினம் தான்.

    இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் இந்தியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

    மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டி குறித்து வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் நேற்று கூறுகையில், 'இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி கிடையாது. ஒவ்வொரு அணிக்கும் இந்தியாவை வீழ்த்தும் திறன் உள்ளது. ஆட்டத்தின் முடிவு அன்றைய நாளில் 3½ மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்தே அமையும். இதற்கு முன்பு இந்திய அணி என்ன செய்தது என்பது விஷயமல்ல. எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இந்திய அணி தவறிழைக்கும் வகையில் நெருக்கடி கொடுத்து, அதன் மூலம் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறோம்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் 'நம்பர் ஒன்' அணியாக விளங்கும் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு எப்போதும் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். அதற்குள் நாங்களும் பயணித்து, அந்த தருணத்தை அனுபவித்து எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்' என்றார்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

    வங்காளதேசம்: சைப் ஹசன், தன்சித் ஹசன், லிட்டான் தாஸ் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடாய், ஷமிம் ஹூசைன், ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன், முஸ்தாபிஜூர் ரகுமான்.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இன்றைய ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் வாழ்வா-சாவா மோதலாகும்.
    • கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் இலங்கையே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேச அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

    இந்த நிலையில் அபுதாபியில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடமும், பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும் தோற்றது.

    அதனால் இன்றைய ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் வாழ்வா-சாவா மோதலாகும். இதில் தோற்கும் அணி ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான்.

    பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் சகிப்சதா பர்ஹான், பஹர் ஜமான் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் சைம் அயூப், கேப்டன் சல்மான் ஆஹாவின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. மிடில் வரிசை தான் அவர்களின் பலவீனமாக உள்ளது. அதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் வலு சேர்க்கிறார்கள்.

    சாரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியில் பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, ஷனகா, கமிந்து மென்டிஸ் என பேட்டிங் பட்டாளத்துக்கு குறைவில்லை. பந்து வீச்சில் நுவான் துஷாரா, துஷ்மந்தா சமீரா, ஹசரங்கா நம்பிக்கை அளிக்கிறார்கள். வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் வெற்றியை கோட்டை விட்ட இலங்கை அணி தவறுகளை திருத்திக் கொண்டு சாதிக்க முயற்சிக்கும்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் பாகிஸ்தானும், 10-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் இலங்கையே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இலங்கை அணி குறைந்தது 3 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    • துனித் வெல்லாலகே 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற லீக் சுற்றில் இலங்கை- ஆப்கானிஸ்தான அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தானை வெளியேற்றி இலங்கை அணி சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றது. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி இலங்கை அணி தகுதி பெற்றதை தொடர்ந்து வீரர்கள் உற்சாக மிகுதியில் இருந்தனர்.

    அந்நேரத்தில், இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லலகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த தகவல் அறிந்து அனைவரும் சோகத்தில் மூழ்கினர். தந்தை இறந்த துக்கச் செய்தி தெரியவர துனித் கண்கலங்கியபடி Dressing Room-க்கு சென்றார். அவரை சகவீரர்கள் ஆறுதல்படுத்தினர்.

    இதையடுத்து துனித் வெல்லாலகே வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இதனால் அவர் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இன்னும் இலங்கை அணி குறைந்தது 3 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    துனித் வெல்லாலகே 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆகஸ்ட் 2024 இல் கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அவரது சிறந்த சாதனையாகும். 2023 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 40 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.



    ×