search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India A"

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 205 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • இந்திய அணியின் துவக்க வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 104 ரன்கள் விளாசினார்.

    கொழும்பு:

    வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா ஏ- பாகிஸ்தான் ஏ அணிகளுக்கிடையிலான போட்டி இன்று கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணி 48 ஓவர்களில் 205 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக காசிம் அக்ரம் 48 ரன்கள் சேர்த்தார். சாகிப்சதா பர்கான் 35 ரன்கள், முபாசிர் கான் 28 ரன்கள், ஹசீபுல்லா கான் 27 ரன்கள் எடுத்தனர்.

    இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணி அதிரடியாக ஆடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தது. துவக்க வீரர் சாய் சுதர்சன் பந்துகளை பவுண்டரிகளாக விளாசி சதம் கடந்தார். அபிஷேக் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகின் ஜோஸ் 53 ரன்கள் சேர்த்தார். 

    இதனால் இந்தியா 36.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 210 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 104 ரன்களுடனும், கேப்டன் யஷ் துல் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி, குரூப்- பி பிரிவில் தான் மோதிய 3 போட்டிகளிலும் வென்றுள்ளது. புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டி, மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. #WIAvsINDA
    இந்திய கிரிக்கெட் ‘ஏ’ அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 நாட்கள் கொண்ட மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    முதல் ஒருநாள் போட்டி ஜூலை 11-ந் தேதி நடக்கிறது. ஆகஸ்டு 9-ந் தேதி வரை இந்திய ‘ஏ’ அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒரு நாள் போட்டி தொடருக்கு மனிஷ் பாண்டே கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.



    அணியில் பிரித்விஷா, மயங்க் அகர்வால், உஸ்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், அனுமன் விகாரி, ரி‌ஷப் பந்த், ராகுல் சாகர், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், குருணால் பாண்டியா, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, கலீல் அகமது, அவஷ்கான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

    டெஸ்ட் தொடருக்கு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் ஈஸ்வரன், சகா, ஷிவம் துபே, உஸ்மான் கில், பிரியங் பஞ்சால், கவுதம், பரத், நதீம், மயங்க் மார்கண்டே, சைனி, முகமது சிராஜ், ‌ஷர்துல் தாகூர், அவெஷ்கான் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
    இளையோர் உலகக்கோப்பையில் அசத்திய ஷுப்மான் கில் சதம் அடிக்க இந்தியா ‘ஏ’ அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா ‘சி’.
    தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘சி’ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஈஸ்வரன், அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஈஸ்வர்ன் 69 ரன்களும், அன்மோல்ப்ரீத் சிங் 59 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த நிதிஷ் ராணா 68 ரன்களும், தினேஷ் கார்த்திக் 32 ரன்களும், கேதர் ஜாதவ் 41 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் குவித்தது.

    பின்னர் 294 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘சி’ அணியின் ரகானே, அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 14 ரன்னிலும், முகுந்த் 37 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 2 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    இதனால் இந்தியா ‘சி’ அணி 85 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இஷான் கிஷான் 60 பந்தில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. 5-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ஷுப்மான் கில் சதம் அடித்தார்.


    இஷான் கிஷான்

    ஷுப்மான் கில் சதத்தாலும், சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தாலும் இந்தியா ‘பி’ 47 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷுப்மான் கில் 111 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 106 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா ‘சி’ இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 27-ந்தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா ‘பி’ - இந்தியா ‘சி’ பலப்பரீட்சை நடத்துகின்றன.
    ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக 105 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் மிதலி ராஜ். #MithaliRaj
    இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது போட்டி நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய இந்தியா ‘ஏ’ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீராங்கனையும், இந்திய பெண்கள் அணியின் அனுபவம் வாயந்தவரும் ஆன மிதலி ராஜ் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 பந்தில் அரைசதம் அடித்த, மிதலி ராஜ், 59 பந்தில் சதம் அடித்தார். அவர் 61 பந்தில் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் டி20 போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஸ்மிரிதி 102 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது. அதை தற்போது மிதலி ராஜ் முறியடித்துள்ளார்.
    மும்பையில் நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா ‘ஏ’ அணியை 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா ‘ஏ’. #INDAW #AUSAW
    இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதன்பின் வந்த மெக்ராத் (58), கிரஹாம் (48), ஸ்டேலன்பெர்க் (47) சிறப்பாக விளையாடி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா ‘ஏ’.

    பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ வீராங்கனைகள் களம் இறங்கினார்கள்.

    தொடக்க வீராங்கனை புனியா 4 ரன்னில் வெளியேற, அதன்பின் வந்த வைத்தியா, மற்றொரு தொடக்க வீராங்கனை ரவுத் ஆகியோர் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர். எஸ் பாண்டே 42 ரன்களும், ப்ரீத்தி போஸ் ஆட்டமிழக்காமல் 62 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 46.2 ஓவரில் 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா ஏ 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது போட்டி 17-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 19-ந்தேதி மும்பையில் நடக்கிறது.
    இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட ஆட்டங்கள் பெங்களூருவிற்கு மாற்றப்பட்டுள்ளது. #INDA
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த உடன் இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி செப்டம்பர் 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரையும், 2-வது போட்டி செப்டம்பர் 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையும் நடக்கிறது.

    இந்த ஆட்டங்கள் விசாகப்பட்டனத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் போட்டி நடைபெறும் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிமை மையம் தெரிவித்துள்ளதால் இரண்டு ஆட்டங்களும் பெங்களூருவிற்கு மாற்றப்பட்டுள்ளது.



    முதல் ஆட்டம் பெங்களூரு எம் சின்னசாமி மைதானத்திலும், 2-வது ஆட்டம் ஆளுரிலும் நடைபெறும் என பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
    மணிஷ் பாண்டே சதம் அடித்தும் இந்தியா ‘பி’ அணி ஆஸ்திரேலியா ‘ஏ’விடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. #INDA
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா பி - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘பி’ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மயாங்க் அகர்வால், இஷான் கிஷான் ஆகியோர் களம் இறங்கினார்கள். மயாங்க் அகர்வால் 36 ரன்களும், இஷான் கிஷான் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ஷுப்மான் கில் 4 ரன்னில் வெளியேறினார். ஆனால் கேப்டன் மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 109 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 117 ரன்கள் குவிக்க இந்தியா ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் குவித்தது.



    பின்னர் 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 24.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் நீண்ட நேர ஆட்டம் தடைபட்டது.

    பின்னர் ஆட்டம் தொடங்கியது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 40 ஓவரில் 247 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 93 பந்தில் 101 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா ஏ 40 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    முதுகு வலியால் பாதிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் உடற்தகுதி பெற்று விட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. #Bhuvi #BCCI
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார். இவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் முதல் மூன்று டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இயலவில்லை.

    கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெறவில்லை. காயம் அடைந்த புவனேஸ்வர் குமார் இந்தியா திரும்பி, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் குணமடைவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் புவனேஸ்வர் குமார் உடற்தகுதி அடைந்து விட்டார் என்று பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்து விளையாடுவார் என்று அறிவித்துள்ளார். இந்தியா ‘ஏ’ அணியில் சிறப்பாக பந்து வீசினால், ஐந்தாவது டெஸ்டில் விளையாட வாய்ப்புள்ளது.



    இந்தியா ‘ஏ’ அணி அடுத்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியை 29-ந்தேதி எதிர்கொள்கிறது. இதனால் புவனேஸ்வர் 30-ந்தேதி தொடங்கும் 4-வது டெஸ்டில் பங்கேற்க முடியாது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் செப்டம்பர் 7-ந்தேதி லண்டன் கியா ஓவலில் நடக்கிறது.
    இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி அபார பந்து வீச்சால் நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDA
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் சூர்ய குமார் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    சூர்யகுமார் யாதவ் 5 ரன்னிலும், ஈஸ்வரன் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். தொடக்க ஜோடி சொதப்பியதால், அதன்பின் வந்த முன்னணி வீரர்களால் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. ஷ்ரேயாஸ் அய்யர் (7), அம்பதி ராயுடு (19), நிதிஷ் ராணா (19), குருணால் பாண்டியா (5) அடுத்தடுத்து வெளியேறினார்கள்.


    கலீல் அஹமது

    அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 36 ரன்களும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 38 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 37.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 157 ரன்களில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியின் டேன் பேட்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் குளேயெட் (24), பீட்டர் மலன் (47), சரேல் எர்வீ (20) சிறப்பான தொடக்கம் கொடுக்க 37.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் கலீல் அஹமது 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ஏ அணிகள் வெற்றி பெற்றன.
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன, ஒரு ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘பி’ அணிகள் மோதின.

    டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா ‘பி’ அணியின் பிரசித் கிருஷ்ணாவின் சிறப்பான பந்து வீச்சால் இந்தியா ‘ஏ’ ரன் குவிக்க திணறியது. அம்பதி ராயுடு 48 ரன்னும், சஞ்சு சாம்சன் 32 ரன்னும், கிருஷ்ணப்பா கவுதம் 35 ரன்களும் அடிக்க 49 ஓவரில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்தியா ‘பி’ அணியின் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும், ஷ்ரேயாஸ் கோபால் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘பி’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 114 பந்தில் 124 ரன்கள் குவித்தார். இளம் வீரர் ஷுப்மான் கில் 42 ரன்கள் அடிக்க இந்தியா ‘பி’ 41.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


    டிராவிஸ் ஹெட்

    மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ‘ஏ’ டிராவிஸ் ஹெட் (110), மார்கஸ் லபுஸ்சேக்னே (65), ஆர்கி ஷார்ட் (49), ரென்ஷா (42) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது.

    பின்னர் 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் கிஹான் (50), கயா சோண்டா (117) ஆகியோர் சிறப்பான ஆடினாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ 48.4 ஓவரில் 290 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா ‘ஏ’ 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்தியா ‘ஏ’ மற்றும் ‘பி’ அணியில் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவிற்கு இடம் கிடைத்துள்ளது.
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான இந்தியா ‘ஏ’ மற்றும் இந்தியா ‘பி’ அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    ‘ஏ’ அணியில் சித்தேஷ் லாட், ‘பி’ அணியில் ரிக்கி புய் ஆகியோர் இடம்பிடித்திருந்தார்கள். தற்போது துலீப் டிராபி அணிக்கு செல்ல இருப்பதால், இவர்கள் இருவருக்கும் பதில் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    அம்பதி ராயுடு ஏற்கனவே இங்கிலாந்து சென்று விளையாடிய இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் அணியில் சேர்க்கப்படவில்லை. அதன்பின் தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார்.

    கேதர் ஜாதவ் ஐபிஎல் தொடரின்போது காயம் அடைந்தார். அந்த காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார்.
    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான டெஸ்டில் இந்தியா ‘ஏ’ 253 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. #INDA #Rahane #Pant #mohammedSiraj
    இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி கடந்த 16-ந்தேதி வொர்செஸ்டரில் தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் 423 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 197 ரன்கள் சேர்த்தது. 226 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதனால் இந்தியா ‘ஏ’ அணியின் வெற்றிக்கு 421 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடினமான இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.



    ரகானே (48), ரிஷப் பந்த் (61) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா ‘ஏ’ அணி 167 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ‘ஏ’ அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    முதல் இன்னிங்சில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், நதீம் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 2-வது இன்னிங்சில் முகது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    ×