என் மலர்
நீங்கள் தேடியது "England Lions"
- இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 348 ரன்களில் ஆல் அவுட்டானது.
- இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
நார்த்தம்டான்:
இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நார்த்தம்டானில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 89.3 ஓவரில் 348 ரன்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 116 ரன்கள் அடித்தார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங், ஜார்ஜ் ஹில் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக எமிலோ ஹே 71 ரன் எடுத்தார்.
இந்தியா ஏ சார்பில் கலீல் அகமது 4 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே, கம்போஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 21 ரன் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சை ஆடியது. கே.எல்.ராகுல் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் பொறுப்புடன் ஆடி 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மூன்றாம் நாள் முடிவில் இந்திய ஏ அணி 4 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய ஏ அணி 184 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி சதம் விளாசி 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
நார்த்தம்ப்டன்:
இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதும் 2-வது பயிற்சி ஆட்டம் நார்த்தம்ப்டனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய ஏ அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 17 ரன்னும், கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 11 ரன்னும் எடுத்தனர். கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி சதம் விளாசி 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 15 பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடங்கும்.
கருண் நாயர் 40 ரன்னில் அவுட்டானார். நடுவரிசையில் சிறப்பாக ஆடி அதிரடி காட்டிய துருவ் ஜூரல் 52 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 81 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்துள்ளது.
- இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அந்த அணியின் ராக்கி பிளின்டாப் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
லண்டன்:
இங்கிலாந்தின் உள்ளூர் போட்டி ஒன்றில் இங்கிலாந்து லயன்ஸ் அணியும், ஆஸ்திரேலியா லெவன் அணியும் மோதின. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய லெவன் அணி முதல் இன்னிங்சில் 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ராக்கி பிளின்டாப்
பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
ராக்கி பிளின்டாப் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஆன்ட்ரூ பிளின்டாப்பின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராக்கி பிளின்டாப் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக முதல் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஆன்ட்ரூ பிளின்டாப் 20 வயது மற்றும் 28 நாளில் சதமடித்திருந்தார். அதை 16 வயது 291 நாளில் கடந்து சாதனை படைத்துள்ளார் ராக்கி பிளின்டாப்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் 423 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 197 ரன்கள் சேர்த்தது. 226 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனால் இந்தியா ‘ஏ’ அணியின் வெற்றிக்கு 421 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடினமான இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

ரகானே (48), ரிஷப் பந்த் (61) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா ‘ஏ’ அணி 167 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ‘ஏ’ அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
முதல் இன்னிங்சில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், நதீம் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 2-வது இன்னிங்சில் முகது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரகானே மற்றும் முரளி விஜய் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் இரண்டு பேரும் தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறாததால் அவர்கள் இங்கிலாந்து செல்லவில்லை. அதேவேளையில் இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றி வாகை சூடியது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒன்றில் டிரா, ஒன்றில் வெற்றி கண்டுள்ளது. நாளை இங்கிலாந்து லயன்ஸ் அணியை எதிர்தது விளையாடுகிறது.
இந்தியா ‘ஏ’ அணியில் உள்ள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் முன் தேர்வாளர்கள் டிராவிட்டிடம் ஆலோசனை கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் ரகானே மற்றும் முரளி விஜய் ஆகியோர் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாட முடிவு செய்துள்ளனர். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியில் இடம்பிடிக்க எளிதாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளனர்.
இந்திய அணி கடந்த முறை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது முரளி விஜய், ரகானே ஆகியோர் சதம் அடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் பிரித்வி ஷா, ரஷப் பந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரிஷப் பந்த் 5 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டக்அவுட்டிலும் வெளியேறினார்கள்.

147 ரன்கள் குவித்த விஹாரி
அதன்பின் பிரி்த்வி ஷா உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரித்வி ஷா 60 பந்தில் 16 பவுண்டரியுடன் 102 ரன்கள் சேர்த்தார். விஹாரி 131 பந்தில் 13 பவுண்டரி, 5 சிக்சருடன் 147 ரன்கள் விளாசினார். இருவரின் அபார சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.

102 ரன்கள் அடித்த பிரித்வி ஷா
பின்னர் 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஏ பேட்டிங் செய்து வருகிறது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் மயாங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக கடந்த போட்டியில் சதம் அடித்த மயாங்க் அகர்வால் இந்த போட்டியிலும் சதம் அடித்தார். அவர் 104 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 112 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விளையாடிய ஷுப்மான் கில் 72 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 28.2 ஓவரில் 165 ரன்கள் சேர்த்தது.

ஹனுமா விஹாரி
அடுத்து களம் இறங்கிய ஹனுமா விஹாரி 69 ரன்களும், தீபக் ஹூடா 33 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்தது.
பின்னர் 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து லயன்ஸ் அணி களம் இறங்கிறது. சர்துல் தாகூர் (3), கலீல் அஹமது (2) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து லயன்ஸ் 207 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ஏ அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக இந்தியா ஏ அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 10 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ 49.1 ஓவரில் 221 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

பின்னர் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 112 ரன்களும், அடுத்து வந்த ஷுப்மான் கில் அவுட்டாகாமல் 58 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ அணி 38.1 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்பிற்க 222 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.







