search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayank Agarwal"

    • அகர்வால் விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் பிளையிங் கிஸ் கொடுத்து கேலி செய்வார்.
    • மயங்க அகர்வாலுக்கு ரோகித் சர்மா பிளையிங் கிஸ் கொடுத்து கலாய்த்த புகைப்படம் வைராலாகி வருகிறது.

    ஐபிஎல் 2024 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுப்பட்ட போது மும்பை அணி வீரர் ரோகித் சர்மாவும் ஐதராபாத் அணி வீரர் மயங்க் அகர்வாலும் சந்தித்து கொண்டனர். அப்போது மயங்க அகர்வாலுக்கு ரோகித் சர்மா பிளையிங் கிஸ் கொடுத்து கலாய்த்தார்.

    எதற்காக ரோகித் அப்படி செய்தார் என்றால், ஐபிஎல் தொடரின் 3-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது ஐதராபாத் அணி வீரர் அகர்வால் விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் பிளையிங் கிஸ் கொடுத்து கேலி செய்வார். அதனை வைத்து ரோகித் மயங்க் அகர்வாலை கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

    மயங்க் அகர்வாலை கிண்டல் செய்த ராணாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்த சம்பவம் குறித்து மயங்கின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • மயங்கின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் தற்போது ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். கர்நாடக அணி கேப்டனான மயங்க் அகர்வால் தனது அணியினருடன் டெல்லி புறப்பட விமான நிலையம் சென்றார். அணியினருடன் விமானத்தில் ஏறிய மயங்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    விமானத்தில் இருந்த படி சில முறை அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறிய மயங்க் அகர்வால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவரு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் மயங்க் அகர்வாலின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மயங்க் அகர்வால் குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி என எக்ஸ் தளத்தில் தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    அதில், நான் இப்போது நன்றாக உணர்கிறேன். மீண்டு வர தயாராகி வருகிறேன். குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி. பிரார்த்தனைக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, அனைவருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.

    இருப்பினும், இந்த சம்பவம் குறித்து மயங்கின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். விமானத்தில் அமர்ந்திருக்கும் போது தண்ணீர் என்று தவறாக நினைத்து மயங்க் அந்த திரவத்தை தனக்கு முன்னால் குடித்ததாக மேலாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து மேற்கு திரிபுரா எஸ்பி கிரண் குமார் கூறுகையில், மயங்கின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    • தனது அணியினருடன் விமானத்தில் ஏறினார் மயான்க் அகர்வால்.
    • மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்திய கிரிக்கெட் வீரர் மயான்க் அகர்வால் தற்போது ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். கர்நாடக அணி கேப்டனான மயான்க் அகர்வால் தனது அணியினருடன் டெல்லி புறப்பட விமான நிலையம் சென்றார். அணியினருடன் விமானத்தில் ஏறிய மயான்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    விமானத்தில் இருந்த படி சில முறை அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறிய மயான்க் அகர்வால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    மேலும், எதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உடல்நலக்குறைவு காரணமாக மயான்க் அகர்வால் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    விரைவில் தனது 33-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் மயான்க் அகர்வால் இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். நேற்று திரிபுரா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் கர்நாடகா அணி வெற்றி பெறவும் மயான்க் அகர்வால் முக்கிய பங்காற்றியுள்ளார். 

    • மயங்க் அகர்வால் அண்மையில் முடிந்த ரஞ்சி தொடரில் அதிக ரன் (9 ஆட்டத்தில் 990 ரன்) குவித்தவர் ஆவார்.
    • மத்தியபிரதேசம்- ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடக்கிறது.

    கொல்கத்தா:

    இரானி கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு ரஞ்சி சாம்பியன் அணி, இதர இந்தியா அணியுடன் (ரெஸ்ட் ஆப் இந்தியா) மோதுவது வழக்கம். 2021-22-ம் ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற மத்தியபிரதேச அணிக்கு அப்போது இரானி கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிட்டவில்லை.

    ஏனெனில் அந்த சமயம் கொரோனா தாக்கத்தால் முந்தைய சீசனில் ஆட வேண்டிய சவுராஷ்டிராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனால் இந்த முறை மத்திய பிரதேச அணிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதன்படி மத்தியபிரதேசம்- ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை குவாலியரில் நடக்கிறது. இதற்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் அணியை வழிநடத்த உள்ளார்.

    இவர் தான் அண்மையில் முடிந்த ரஞ்சி தொடரில் அதிக ரன் (9 ஆட்டத்தில் 990 ரன்) குவித்தவர் ஆவார். அதே சமயம் மும்பை வீரர் சர்ப்ராஸ் கானுக்கு உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆடிய போது கை நடுவிரலில் ஏற்பட்ட காயத்துக்கு 10 நாட்கள் வரை ஓய்வில் இருக்கும்படி டாக்டர் அறிவுறுத்தி இருப்பதால் இரானி கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் பாபா இந்திரஜித் இடம் பெற்றுள்ளார்.

     

    ரெஸ்ட் ஆப் இந்தியா அணி வருமாறு:- மயங்க் அகர்வால் (கேப்டன்), சுதிப்குமார் காரமி, ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஹர்விக் தேசாய், முகேஷ் குமார், அதித் சேத், சேத்தன் சகாரியா, நவ்தீப் சைனி, உபேந்திர யாதவ், மயங்க் மார்கண்டே, சவுரப் குமார், ஆகாஷ் தீப், பாபா இந்திரஜித், புல்கித் நரங், யாஷ் துல். மத்திய பிரதேச அணி விக்கெட் கீப்பர் ஹிமன்ஷூ மந்திரி தலைமையில் களம் காணுகிறது. ரஜத் படிதார், வெங்கடேஷ் அய்யர், அவேஷ்கான் உள்ளிட்டோரும் அந்த அணியில் அங்கம் வகிக்கிறார்கள்.

    • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது.
    • அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம்.

    16-வது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோலாலமாக நடைபெற உள்ளது. இம்முறை 10 அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானத்தில் ஒரு போட்டியையும், வெளியில் சென்று ஒரு போட்டியையும் விளையாட இருப்பதினால் மிகச் சிறந்த தொடராக இத்தொடர் அமைய வாய்ப்புள்ளது. அதோடு இம்முறை குறிப்பிட்ட சில புதிய விதிமுறைகளும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தொடரானது சுவாரசியமாக நடைபெறும் என்று தெரிகிறது.

    இவ்வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து கழட்டி விட்ட வீரர்களையும், தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. அதனை தொடர்ந்து எதிர்வரும் 16-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது வரும் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட கேன் வில்லியம்சன் இம்முறை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே சன்ரைசர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனை இந்த ஏலத்தில் தேர்வு செய்து வாங்க இருக்கிறது.

    அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணி எந்த ஒரு வீரரை கேப்டனாக தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது. ஏனெனில் அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம். அதோடு மட்டுமின்றி கடந்த ஆண்டு அவர் பஞ்சாப் அணியை வழிநடத்திய விதமும், அவர் எடுத்த சில அதிரடியான முடிவுகளும் அவர் ஒரு பயமற்ற, சுயநலமற்ற வீரர் என்பதை வெளிக்காட்டுகிறது.

    எனவே நிச்சயம் அவரால் சன் ரைசர்ஸ் அணிக்கு ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட முடியும். அதோடு வில்லியம்சனை ஏலத்தில் எடுக்க பெரியளவு யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அந்த வகையில் தங்களது மிடில் ஆர்டரை பலப்படுத்த அவரை நீங்கள் குறைந்த தொகைக்கு கூட ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

    என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

    அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில அணிகளுக்கு இடையேயான டி20 தொடரிலும் அவரது தலைமையிலான அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மயங்க் அகர்வால் இன்று இங்கிலாந்துக்கு புறப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    • தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளதால் அகர்வால் நேரடியாக அணி வீரர்களுடன் இணைவார்.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. அதற்கு முன் இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் டெஸ்ட் அணியில் காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படிருந்தார். அவர் தற்போது இந்திய அணியில் இணையவுள்ளார். கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் உடல் நலம் பாதிப்படைந்துள்ள நிலையில் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மயங்க் அகர்வால் இன்று இங்கிலாந்துக்கு புறப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளதால் மயங்க அகர்வால் நேரடியாக அணி வீரர்களுடன் இணைவார்.

    அகர்வால் ரஞ்சி டிராபியில் 21 டெஸ்ட் போட்டிகளில் 41.33 சராசரியுடன் 1,488 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நான்கு சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் அடங்கும்.

    • கேஎல் ராகுல் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை.
    • ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார்

    இந்திய அணி கடந்த வருடம் (2021) ஆகஸ்டு மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து உள்ளது.

    முதல் பயணமாக கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா, சமி, அஸ்வின், ஜடேஜா, முகமது சிராஜ், சர்துல் தாகூர், பிரிதிஷ் கிருஷ்ணா, புஜாரா, ஹனுமன் விஹாரி, விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகியோர் லண்டன் சென்றடைந்தனர்.

    ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த பிறகு இரண்டாவது பயணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோர் லண்டன் செல்ல உள்ளனர்.

    இந்நிலையில் கேஎல் ராகுல் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. அதனால் அவருக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நாளைக்குள் அவர் அணியில் இடம் பெறுவாரா? இல்லையா என்பது குறித்து தகவல் தெரியும். ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 2-வது ஒரு நாள் போட்டி இந்தூரில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #BCCI #IndiavsWestIndies #Visakhapatnam
    விசாகப்பட்டினம்:

    இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் 2-வது ஒரு நாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வருகிற 24-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இலவச டிக்கெட்டுகள் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.



     கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி மைதானத்தின் ஒவ்வொரு பிரிவிலும் 10 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு வழங்க முடியும். ஆனால் இது போதாது என்று வாதிட்ட மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், கூடுதலாக டிக்கெட்டுகள் தராவிட்டால் போட்டியை நடத்தமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியது.

    இந்த நிலையில் இந்தூரில் நடக்க இருந்த 2-வது ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BCCI #IndiavsWestIndies #Visakhapatnam 
    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை தொடங்குகிறது. #INDvWI #RajkotTest
    ராஜ்கோட்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (4-ந் தேதி) தொடங்குகிறது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து பயணத்தில் 1-4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தும் வேட்கையில் இருக்கிறது.

    இந்திய அணி 2013-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் கைப்பற்றி சாதனை படைத்தது. 2012-ம் ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்கல் இங்கிலாந்திடம் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

    அதன் பிறகு சொந்த மண்ணில் நடந்த அனைத்து டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி முத்திரை பதித்து இருந்தது. தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும் வென்று சொந்த மண்ணில் 10-வது டெஸ்ட் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. வெஸ்ட் இன்டீசை 2016-ல் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

    ஆசிய கோப்பை போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார். தொடக்க வீரராக யார் களம் இறங்குவார் என்பதே அனைவரது எதிபார்ப்பாக இருக்கிறது. வழக்கமாக விளையாடும் தவான், முரளி விஜய் அணியில் இருந்து கழற்றவிட்டப்பட்டு உள்ளனர்.


    இதனால் லோகேஷ் ராகுலுடன் தொடக்க வீரராக விளையாட வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பதே கேள்வியாக இருக்கிறது. பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராக ஆடுவார்கள்.

    பேட்டிங்கில் கேப்டன் கோலி, புஜாரா, ரகானே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதே போல ரிஷப் பந்தும் அணிக்கு வலுசேர்ப்பார். மிடில் ஆர்டரில் ஹனுமா விஹாரிக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    சுழற்பந்தில் அஸ்வின்- ஜடேஜா கூட்டணி சொந்த மண்ணில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவார்கள். வேகப்பந்தில் புதுமுக வீரர் முகமது சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இடம் பெற்றால் உமேஷ் யாதவ், முகமது‌ ஷமி ஆகியோரில் ஒருவர் நீக்கப்படலாம்.

    டெஸ்டில் நம்பர் 1 அணியாக திகழும் இந்தியா அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள இந்த டெஸ்ட் தொடரை சரியாக பயன்படுத்திக் கொள்ளும்.


    ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் இலங்கையுடன் ‘டிரா’ செய்தது. அதை தொடர்ந்து வங்காளதேசத்தை 2-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவை எதிர்கொள்ளும்.

    வேகப்பந்து வீரர் கேமாரோச் சொந்த காரணத்துக்காக நாடு திரும்பி உள்ளார். அவர் இல்லாதது அந்த அணிக்கு பாதிப்பே. புதுமுக வீரர்களை கொண்ட வெஸ்ட் இன்டீஸ் இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க கடுமையாக போராட வேண்டும்.

    நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #INDvWI #RajkotTest #ViratKohli #JasonHolder
    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள புதுமுக வீரர்களான மயாங்க் அகர்வால், ப்ரித்வி ஷா மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம் என்று ரகானே தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் இருந்தனர். இந்த நீண்ட கால பட்டியலில் தற்போது வெட்டு விழுந்ததுள்ளது. இங்கிலாந்து தொடரின்போது ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டார். இங்கிலாந்து தொடரின்போதே முரளி விஜய் நீக்கப்பட்டார்.

    இருவருக்கும் பதில் உள்ளூர் தொடர் மற்றும் இந்தியா ‘ஏ’ அணியில் சிறப்பாக விளையாடிய மயாங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இருவரில் ஒருவர் லோகேஷ் ராகுல் உடன் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆவது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே அணியில் இடம்பிடிக்க பலத்த போட்டி நிலவி வரும் நிலையில் இவர்களுக்கு நெருக்கடி இருக்கத்தான் செய்யும். இந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை வைத்துதான் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்.



    இந்நிலையில் புதுமுக வீரர்களான மயாங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம் என்று துணைக் கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘மயாங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம். அவர்களுக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருக்கும். இது அவர்கள் திறமையை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பு.

    ப்ரித்வி ஷா இந்திய அணியில் இடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவன் சிறுவனாக இருக்கும்போதே நான் பார்த்திருக்கிறேன். இருவரும் இணைந்து பயிற்சி மேற்கொண்டிருக்கிறோம். உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். உள்ளூர் தொடரிலும், இந்தியா ‘ஏ’ அணிக்காகவும் ப்ரித்வி ஷா விளையாடிய ஆட்டத்தை பார்க்க விரும்புகிறேன். இந்த அணிக்காக சிறப்பாக விளையாடுவார்.



    வெஸ்ட் இண்டீஸ் அணியை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். ஆனால், எங்களுடைய ஆட்டம் மேம்படைய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவோம். எதிரணியை பார்ப்பதைவிட எங்களுடைய முக்கிய திட்டம், சிறப்பான கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான்.

    தனிப்பட்ட முறையில் விஜய் ஹசாரே தொடரில் விளையாடியது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான சிறந்த பயிற்சி’’ என்றார்.
    பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணியுடன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் மோதியது.

    இந்த பயிற்சி ஆட்டம் வதோதராவில் நேற்றுமுன்தினம் (செப்டம்பர் 29-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்ற பிரசிடென்ட் லெவன் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ப்ரித்வி ஷா, மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ப்ரித்வி ஷா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். மயாங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் வந்த விஹாரி (3), கருண் நாயர் (29) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் அய்யர் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அங்கித் பவ்னே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பிரசிடென்ட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பவ்னே 116 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தது. பிராத்வைட், பொவேல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிராத்வைட் 52 ரன்களும், பொவேல் 44 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.



    3-வது வீரராக களம் இறங்கிய ஷாய் கோப் 36 ரன்கள் சேர்த்தார். ஆனால் ஹெட்மையர் (7), சேஸ் (5)  ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினார்கள். அதன்பின் வந்த டவ்ரிச் 65 ரன்கள் சேர்த்தார். அம்ப்ரிஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.

    அம்ப்ரிஸ் 114 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க வெஸ்ட் இண்டீஸ் 89 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் என்பதால் பிரசிடென்ட் அணி 2-வது இன்னிங்சை விளையாட நேரமில்லை. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

    பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்கள் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணி 360 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்துள்ளது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணியுடன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த பயிற்சி ஆட்டம் வதோதராவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பிரசிடென்ட் லெவன் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ப்ரித்வி ஷா, மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ப்ரித்வி ஷா 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    மயாங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த விஹாரி (3), கருண் நாயர் (29) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் அய்யர் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த அங்கித் பவ்னே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பிரசிடென்ட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பவ்னே 116 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    ×