என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nitish Kumar Reddy"

    • அவரது பந்து வீச்சை பார்த்து யாராவது ஆல்-ரவுண்டர் என்று சொல்வார்களா.
    • அவரது பந்துவீச்சில் வேகம் இல்லை. ஸ்விங் இல்லை. மெச்சத்தகுந்த பேட்ஸ்மேனும் கிடையாது.

    மும்பை:

    உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அணித் தேர்வை முன்னாள் கேப்டனான தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் கடுமையாக குறைகூறியுள்ளார்.

    அவர் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், 'ஒரு டெஸ்ட் முடிந்ததும் அடுத்த போட்டியில் யாராவது ஒருவரை அறிமுக வீரராக இறக்குகிறார்கள். அவர்கள் சோதனை முயற்சி என்று சொல்லி தவறு செய்கிறார்கள். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் விரும்பியதை சொல்லிவிட்டு போகட்டும். அது பற்றி எனக்கு கவலையில்லை. நான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன். தேர்வு குழுவின் முன்னாள் தலைவர். எனக்கு என்ன பேச வேண்டும் என்பது தெரியும்.

    அணித் தேர்வில் தொடர்ந்து சீரான தன்மை இருக்க வேண்டியது அவசியம். கவுகாத்தி டெஸ்டுக்கு ஆல்-ரவுண்டர் என்ற பெயரில் நிதிஷ்குமார் ரெட்டியை கொண்டு வந்தார்கள். நிதிஷ்குமாரை ஆல்-ரவுண்டர் என்று சொன்னது யார்? அவரது பந்து வீச்சை பார்த்து யாராவது ஆல்-ரவுண்டர் என்று சொல்வார்களா? மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்தார்.

    அதன் பிறகு என்ன செய்து விட்டார். அவரது பந்துவீச்சில் வேகம் இல்லை. ஸ்விங் இல்லை. மெச்சத்தகுந்த பேட்ஸ்மேனும் கிடையாது. அவர் எப்படி ஒரு நாள் போட்டி அணியிலும் இருக்கிறார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாகவா? என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. நிதிஷ்குமாரை நீங்கள் ஆல்-ரவுண்டர் என்று வர்ணித்தால், நான் அவரை விட சிறந்த ஆல்-ரவுண்டர் என்று சொல்ல முடியும். அக்ஷர் பட்டேலுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அனைத்து மட்டத்திலும் சீராக ஆடும் அவரை ஏன் நீக்க வேண்டும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.
    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் துணை கேப்டனாக இருப்பதால் ரிஷப் பண்ட் விளையாடுவார்.

    தென் ஆப்பிரிக்கா அணி 3 வடிவ கிரிக்கெட் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

    இதன் முதல் போட்டி வருகிற 14-ந் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் துணை கேப்டனாக இருப்பதால் ரிஷப் பண்ட் கண்டிப்பாக ஆடுல் லெவனில் இருப்பார் என்பது உறுதி. அதேசமயம் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்டரான துருவ் ஜூரல் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார்.

    அவர் நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக விளையாட உள்ளார் என்ற கூடுதல் தகவலும் தெரிய வந்துள்ளது.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் களமிறங்கிய இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன் எடுத்த போது ஆட்டம் மழையால் தடை பட்டது. பல மாதங்களுக்கு பின் விளையாடிய விராட் கோலி டக் அவுட்டும் ரோகித் சர்மா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இந்த போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர் நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகமானார். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, அவரிடம் தொப்பியைக் கொடுத்து அணிக்கு வரவேற்றார்.

    இதேபோல் ஆஸ்திரேலிய அணியில் மிச்சேல் ஓவன், மேத்யூ ரென்சா ஆகியோரும் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்கள்.

    • இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.
    • 4வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி நேற்று ஜிம் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் முழங்காலில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் பயிற்சியின் போது அர்ஷ்தீப் சிங் காயமடைந்தார்.

    இந்நிலையில், காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமாரும், 4வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

    4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: 

    இந்திய அணி; சுப்மன் கில் (C), ரிஷப் பண்ட் (VC & WK), ஜெய்ஸ்வால், KL ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ஜடேஜா, துருவ் ஜூரல் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ்

    • மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.

    மான்செஸ்டர்:

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி நேற்று ஜிம் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் முழங்காலில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் எஞ்சிய இரு ஆட்டங்களில் விளையாடுவது கடினம் தான். எனவே அவர் இந்தப் போட்டி தொடரில் இருந்து விலகுவார் என கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் நிதிஷ்குமார் ரெட்டியின் காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    • மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ்குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார்.
    • பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ்குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார்.

    ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது வரிசையில் களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிதிஷ்குமார் ரெட்டி படைத்தார்.

    இந்நிலையில், அண்மையில் நிதிஷ்குமார் கொடுத்த பாட்காஸ்டில் மெல்போர்ன் டெஸ்ட் சதம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

    பாட்காஸ்டில் பேசிய நிதிஷ்குமார், "ஒருமுறை விராட் கோலி சர்ஃபராஸ் கானிடம் 'உன் ஷூ சைஸ் என்ன?' என கேட்டார். அதற்கு அவர் 9 என்றார். பின் திரும்பி என்னை பார்த்து என்னுடைய அளவை கேட்டார். அவருக்கும் எனக்கும் ஒரே அளவு இல்லை என்றாலும், எனக்கு அவரின் ஷூ வேண்டும் என்ற ஆசையில் எப்படியோ யோசித்து 10 எனக் கூறினேன். அவர் ஷூவை கொடுத்தார். அதை அணிந்து மெல்போர்ன் டெஸ்டில் விளையாடி போட்டியில் சதமடித்தேன்" என்று தெரிவித்தார்.

    • சன்ரைசர்ஸ் அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
    • இன்றைய போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    ஐதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

    நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்னுக்கு மேல் குவித்து வியக்க வைத்த ஐதராபாத் அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது.

    இருப்பினும் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் சோபிக்க தவறும்பட்சத்தில் அந்த அணி தடாலடியாக சரிவை சந்திக்கிறது.

    கடந்த 4 ஆட்டங்களில் 3 சறுக்கலை சந்தித்துள்ள ஐதராபாத் அணி முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் ஐதராபாத் நிர்ணயித்த 174 ரன் இலக்கை மும்பை அணி 17.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

    முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்தது அந்த அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. எனவே அந்த அணி சூழ்நிலைக்கு தகுந்தபடி தங்களது பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டியது முக்கியமானதாகும்.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 444 ரன்கள்), ஹென்ரிச் கிளாசென் (339), அபிஷேக் ஷர்மா (326), நிதிஷ்குமார் ரெட்டியும், பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமாரும் வலுசேர்க்கிறார்கள்.

    கடந்த சில ஆட்டங்களில் அபிஷேக் ஷர்மாவும், ஹென்ரிச் கிளாசெனும் நிலைத்து நின்று ஆடாதது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. மேலும் ஷபாஸ் அகமது, அப்துல் சமத் ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.

    லக்னோ அணி

    லக்னோ அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் ஐதராபாத்துக்கு இணையாக இருக்கும் லக்னோவும் அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எஞ்சிய ஆட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டில் வெற்றி பெற்றாக வேண்டும்.

    லக்னோ அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 98 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் மண்ணை கவ்வியது. 236 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் 137 ரன்னில் அடங்கி படுதோல்வி அடைந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் (36 ரன்), லோகேஷ் ராகுல் (25 ரன்) தவிர யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. அந்த மோசமான தோல்வியை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் லக்னோ அணி உள்ளது.

    லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (3 அரைசதம் உள்பட 431 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (ஒரு சதம், 2  அரைசதம் உள்பட 352 ரன்), நிகோலஸ் பூரன் (315 ரன்), குயின்டான் டி காக் நல்ல நிலையில் உள்ளனர். இளம் வேகப்பந்து வீச்சாளர்

    மயங்க் யாதவ் காயம் காரணமாக ஆடமுடியாமல் போனதுடன், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மொசின் கான் காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணியின் பந்து வீச்சில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    பந்து வீச்சில் யாஷ் தாக்குர், நவீன் உல்-ஹக், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளிக்கிறார்கள். குருணல் பாண்ட்யா ஏற்றம் காண வேண்டியது இன்றியமையாததாகும்.

    வெற்றிப்பாதைக்கு திரும்பி 7-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்று முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, மயங்க் அகர்வால், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், மார்கோ யான்சென், ஷபாஸ் அகமது, அப்துல் சமத், கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், நடராஜன்.

    லக்னோ: லோகேஷ் ராகுல் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிலோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ஆஷ்டன் டர்னர், குருணல் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக், மொசின் கான் அல்லது யாஷ் தாக்குர்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • ஓபனிங் பேட்டர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் களமிறங்கவுள்ளார்கள்.

    வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2 - 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றதை தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

    முதல் டி20 ஆட்டம் மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியின் ஓபனிங் பேட்டர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் களமிறங்கவுள்ளார்கள்.

    இப்போட்டியின் மூலம் நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகின்றனர்.

    • நிதிஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
    • சிறப்பாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் 82 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    மெல்போர்ன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 140 ரன்களும் லபுசேன் 72 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர்களாக ரோகித் -ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ரோகித் 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேஎல் ராகுல் 24 ரன்னில் அவுட் ஆனார்.

    சிறப்பாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் 82 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஜெய்ஸ்வால் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே விராட் கோலியும் ஆப் சைடு வந்த பந்தை அடிக்க முற்பட்டு அவுட் ஆகி வெளியேறினார்.

    இதனையடுத்து களமிறங்கிய பண்ட் 28 ரன்களிலும் ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ்குமார் - வாசிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.

    பொறுப்புடன் விளையாடிய நிதிஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். பாக்ஸிங் டே டெஸ்டில் அரை சதம் கடந்ததை 'புஷ்பா' ஸ்டைலில் நிதிஷ் குமார் கொண்டாடினார்.

    தற்போதுவரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ்குமார் 69 ரன்களிலும் வாசிங்டன் சுந்தர் 34 ரன்களிலும் களத்தில் ஆடி வருகின்றனர்.

    • பாக்ஸிங் டே டெஸ்டில் அரை சதம் கடந்ததை 'புஷ்பா' ஸ்டைலில் நிதிஷ் குமார் கொண்டாடினார்.
    • நிதானமாக விளையாடிய வாசிங்டன் சுந்தர் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 140 ரன்களும் லபுசேன் 72 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர்களாக ரோகித் -ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ரோகித் 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேஎல் ராகுல் 24 ரன்னில் அவுட் ஆனார்.

    சிறப்பாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் 82 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஜெய்ஸ்வால் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே விராட் கோலியும் ஆப் சைடு வந்த பந்தை அடிக்க முற்பட்டு அவுட் ஆகி வெளியேறினார்.

    இதனையடுத்து களமிறங்கிய பண்ட் 28 ரன்களிலும் ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ்குமார் - வாசிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.

    பொறுப்புடன் விளையாடிய நிதிஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். பாக்ஸிங் டே டெஸ்டில் அரை சதம் கடந்ததை 'புஷ்பா' ஸ்டைலில் நிதிஷ் குமார் கொண்டாடினார்.

    இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் சிறுது நேரம் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் நிதானமாக விளையாடி வந்த வாசிங்டன் சுந்தர் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பும்ரா டக் அவுட்டாகி வெளியேறினார்.

    இதனையடுத்து பொறுப்புடன் விளையாடி வந்த நிதிஷ்குமார் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

    இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் இளம் வயதில் சதம் அடித்த 3 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை நிதிஷ்குமார் படைத்துள்ளார்.

    3 ஆம் நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ்குமார் 105 ரன்களுடனும் சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • பண்ட் விளையாடியது முட்டாள்தனமாக ஷாட் என்று சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார்.
    • இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்களை அடித்துள்ளது.

    மெல்போர்ன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 140 ரன்களும் லபுசேன் 72 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து இருந்தது. ரிஷப் பண்ட் 6 ரன்னிலும் ஜடேஜா 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், 3 நாள் ஆட்டத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட்,  ஸ்காட் போலண்ட் பந்துவீச்சில் வித்தியாசமான ஷாட் அடித்து லியான் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டனார்.

    அப்போது கமெண்ட்ரியில் இருந்த சுனில் கவாஸ்கர், பண்ட் விளையாடியது முட்டாள்தனமாக ஷாட் என்று கடுமையாக விமர்சித்தார்.

    அப்போது கமெண்ட்ரியில் பேசிய அவர், "இந்தியா தற்போது இருக்கும் சூழலில் இப்படியா விக்கெட்டை பறிகொடுப்பது? நிலைமையை புரிந்து விளையாட வேண்டும். இதுதான் எனது இயல்பு என்றெல்லாம் கூறமுடியாது. இது உங்கள் அணியை பிடித்து கீழே இழுப்பதுபோல் உள்ளது" என்று காட்டமாக தெரிவித்தார்.

    இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்களை அடித்துள்ளது. நிதானமாக விளையாடிய நிதிஷ்குமார் சதம் அடித்து அசத்தினார்.

    • இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது.
    • உண்மையில் இந்த நாள் ஒரு சிறப்பான நாள்.
    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 140 ரன்களும் லபுசேன் 72 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. 2-வது நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பண்ட் 28 ரன்களிலும் ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ்குமார் - வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் சிறுது நேரம் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் நிதானமாக விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பும்ரா டக் அவுட்டாகி வெளியேறினார். இந்நிலையில் பொறுப்புடன் விளையாடி வந்த நிதிஷ்குமார் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

    3-ம் நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ்குமார் 105 ரன்களுடனும் சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் நிதிஷ் குமாரின் தந்தையிடம் சதம் குறித்து வர்ணனையாளர் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு நிதிஷ் குமாரின் தந்தை கூறியதாவது:-

    எங்கள் குடும்பத்திற்கு இது சிறப்பு வாய்ந்த தினம். இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. 14-15 வயது முதலே நன்றாக ஆடி வந்தான். இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடுகிறான். உண்மையில் இந்த நாள் ஒரு சிறப்பான நாள், சிறப்பான உணர்வைத் தந்த நாள். என்றார்.

    உடனே கில்கிறிஸ்ட், 99 ரன்களில் இருந்த போது உங்கள் உணர்வுகள் என்ன என்றார்.. அதற்கு நிதிஷின் தந்தை, "ஒரே டென்ஷன் டென்ஷன் டென்ஷன் என்றார். ஒரு விக்கெட்தான் இருந்தது, நல்ல வேளை சிராஜ் நின்றார்" என்றார் நெகிழ்ச்சியுடன்

    ×