என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "travis head"
- திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார்.
- அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசினார்.
ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் - திராவிஷ் ஹேட் ஆகியோர் களமிறங்கினார். மயங்க் அகர்வால் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் திராவிஷ் ஹேட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார். அவர் 24 பந்தில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் ருத்ர தாண்டவம் ஆடிய அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசினார். அவர் 23 பந்தில் 63 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து வந்த கிளாசனும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.
இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அணியாக அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 263 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை சன்ரைசர்ஸ் முறியடித்துள்ளது.
- பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது.
- ஐபிஎல் தொடரில் அதிகவேக அரைசதம் அடித்த வீரர்களில் ஜெய்ஸ்வால் முதல் இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் - திராவிஷ் ஹேட் ஆகியோர் களமிறங்கினார். மயங்க் அகர்வால் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் திராவிஷ் ஹேட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே இவரது சாதனை இளம் வீரர் அபிஷேக் முறியடித்தார்.
அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகவேக அரை சதம் விளாசிய 3-வது வீரரானார். முதல் இடத்தில் ஜெய்ஸ்வாலும் (13 பந்தில்) 2-வது இடத்தில் கேஎல் ராகுல் மற்றும் பேட் கம்மின்ஸ் (14) உள்ளனர்.
- முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
- இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
சிட்னி
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் இருவரும் விலகியுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் இடம் பிடித்திருந்த டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகத்தில் உள்ளது.
- ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
- தற்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் டிராவிஸ் ஹெட். தொடக்க வீரரான இவர் 120 பந்தில் 15 பவுண்டரி, 4 சிக்சருடன் 137 ரன்கள் குறித்து ஆட்டமிழந்தார்.
இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய அணியிடம் இருந்து உலகக் கோப்பையை பறித்துக் கொண்டார் என்றால் அது மிகையாகாது.
இது மட்டுமல்ல. கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியிலும் சதம் விளாசியதுடன், ஆட்ட நாயகன் விருது வெற்று இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியடைய காரணமாக இருந்தார்.
இதன்மூலம் ஒரே வருடத்தில் இரண்டு ஐசிசி டிராபிகளை இந்தியாவிடம் இருந்து பறித்துக் கொண்டார் டிராவிஸ் ஹெட்.
- பந்து வீச்சாளர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
- பேட்ஸ்மேன்களில் மாரன்ஸ் லபுசேன் 903 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
துபாய்:
ஐசிசி இன்று வெளியிட்டுள்ள சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் 884 புள்ளிகளுடன் ஹெட் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது . இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்சில் சதம் (163) அடித்தும், 2வது இன்னிங்சில் 18 ரன்களும் எடுத்தார். முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய அவர் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஸ்மித் 885 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் நீடிக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் மாரன்ஸ் லபுசேன் 903 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
மேலும் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அணியைச் சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ஒரே அணியை சேர்த்த வீரர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பது அரிதான நிகழ்வு. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இது கடைசியாக 1984-ல் நிகழ்ந்தது. மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் கோர்டன் கிரீனிட்ஜ் (810 ரேட்டிங் புள்ளிகள்), கிளைவ் லாயிட் (787) மற்றும் லாரி கோம்ஸ் (773) ஆகியோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர்.
இந்தியா சார்பில் ரிஷப் பண்ட் 10-வது இடத்தில் உள்ளார். ரகானே முதல் இன்னிங்சில் 89 மற்றும் 2-வது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் 37-வது இடத்திற்குத் திரும்பினார். ஷர்துல் தாக்கூர் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்ததன் மூலம் 6 இடங்கள் முன்னேறி 94-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
- டிராவிஸ் ஹெட் 40 பந்துகளில் 39 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
- கவஜா 6 ரன்னில் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 139 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதனையடுத்து அஸ்வின் - அக்ஷர் படேல் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய அக்சர் படேல் 74 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 1 ரன் பின் தங்கி உள்ளது.
ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளும் மேத்யூ குஹ்னெமன், டாட் மர்பி தலா 2 விக்கெட்டும் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடினர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் 1 சிக்சர் உள்பட 5 பவுண்டரிகளை விளாசினார். கவாஜா 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 12 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் குவித்துள்ளது. ஹெட் 40 பந்துகளில் 39 ரன்களுடனும் மார்னஸ் லாபுசாக்னே 19 பந்துகளில் 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
- முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது.
- லபுசேன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இது பகல்-இரவு போட்டியாகும். இந்த போட்டிக்கு பிரத்யேகமாக பிங்க் (இளஞ்சிவப்பு) நிற பந்து பயன்படுத்தப்படும். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட், லபுசேனுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சதமடித்து அசத்தினர்.
முதல் நாள் முடிவில் ஆச்திரேலியா அணி 89 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது. லபுசேன் 120 ரன்னும், டிராவிஸ் ஹெட் 114 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 199 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 6-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய இடக்கை ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய கேப்டன் விராட் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. அவரை எங்களது பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். அவர், மூன்று அதிவேக பந்து வீச்சாளர்களை (ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ்) சந்திக்க வேண்டியது இருக்கும். போதுமான நெருக்கடி கொடுத்தால் நிச்சயம் தவறிழைத்து ஆட்டம் இழந்து விடுவார். இதை செய்வதற்குரிய பவுலர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.
‘இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இடக்கை ஆட்டக்காரர்களுக்கு எதிராக நன்றாக பந்து வீசக்கூடியவர், அதை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்’ என்று கேட்கிறீர்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரது பந்து வீச்சை சந்தித்து இருக்கிறேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பவுலிங்கை அதிகமாக சந்தித்த அனுபவம் கிடையாது. அதே சமயம் சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ளக்கூடிய பேட்ஸ்மேன்கள் எங்களது அணியில் உள்ளனர். பயிற்சி ஆட்டத்தின்போது அஸ்வினின் பந்து வீச்சை நீல்சன் (சதம் அடித்தவர்) சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தார். அதனால் அஸ்வினை சமாளிப்பது குறித்து நீல்சனிடம் பேசி அறிந்து கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார். #AUSvIND #TravisHead #ViratKohli
இதற்கு முன் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கெதிராக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானங்களில் விளையாட முக்கிய பங்கு வகிக்கும் என ஆஸ்திரேலியா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், வரும் சனிக்கிழமை தொடங்கும் பயிற்சி ஆட்டத்திற்கான பாகிஸ்தான் ‘ஏ’ அணியில் எந்தவொரு சுழற்பந்து வீச்சாளரும் இடம்பெறவில்லை. இது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
பாகிஸ்தான் ‘ஏ’ அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. சமி அஸ்லாம், 2. அபித் அலி, 3. இஃப்தோகர் அகமது, 4. ஆசாத் ஷபிக், 5. உஸ்மான் சலுயாஹுதின், 6. சாத் அலி, 7. அகா சல்மான், 8. முகமது ரிஸ்வான், 9. வஹாப் ரியாஸ், 10. ரஹத் அலி, 11. வகாஸ் மெக்சூட், 12. ஆமெர் யாமின், 13. உமைத் ஆசிப், 14. சவுத் ஷகீல்.
அடுத்த மாதம் ஆஸ்திரேலியா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அப்போது ஆஸ்திரேலியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக நாங்கள் புனே டெஸ்டில் விளையாடும்போது அந்த ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதுபோன்று ஆடுகளம் அமைக்கப்பட்டால், நாங்கள் ஏன் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடக்கூடாது?.
டிராவிஸ் ஹெட்
ஆனால் நாங்கள் கடந்த முறை சென்றிருந்த போது ஆடுகளம் பிளாட்டாக இருந்தது. தற்போது நாங்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க தயாராகுவோம். இருந்தாலும், அங்குள்ள கண்டிசனை பார்க்கும்வரை உறுதியாக கூறுவது கடினம்.
என்னைத் தவிர மார்னஸ் லபுஸ்சேக்னே, டிராவிஸ் ஹெட் ஆகியோரும் உள்ளனர். இவர்கள் ஐந்தாவது மற்றும் 6-வது வரிசையில் பேட்டிங் செய்வார்கள். நன்றாக பந்தும் வீசுவார்கள்’’ என்றார்.
இதற்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆரோன் பிஞ்ச் உள்பட ஐந்து புதுமுக வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. ஆரோன் பிஞ்ச் டி20 அணியின் கேப்டனாக இருந்த போதிலும் இதுவரை டெஸ்ட் போட்டியில் விளையாடியது கிடையாது.
ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. டிம் பெய்ன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), 2. அஷ்டோன் அகர், 3. பிரெண்டன் டாக்கெட், 4. ஆரோன் பிஞ்ச், 5. டிராவிஸ் ஹெட், 6. ஜான் ஹோலண்ட், 7. உஸ்மான் கவாஜா, 8. மார்னஸ் லபுஸ்சாக்னே, 9. நாதன் லயன், 10. மிட்செல் மார்ஷ், 11. ஷான் மார்ஷ், 12. மைக்கேல் நேசர், 13. மேத்யூ ரென்ஷா, 14. பீட்டர் சிடில்.
இதில் பிஞ்ச் உடன் டிராவிஸ் ஹெட், நேசர், டாக்கெட், மார்னஸ் ஆகியோர் இதுவரை டெஸ்ட் போட்டியில் களம் இறங்கியது கிடையாது.
இதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. சசக்ஸ் அணிக்கெதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் ஸ்டாய்னிஸின சதத்தால் ஆஸ்திரேலியா 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது பயிற்சி ஆட்டத்தில் மிடில்செக்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட்டின் (106) அபார சதத்தால் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது. ஷேன் மார்ஷ் 49 ரன்னும், ஆரோன் பிஞ்ச் 54 ரன்களும் சேர்த்தனர். அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் 6 பந்தில் 3 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். முதல் போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை. ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.
ஸ்மித், வார்னர் இல்லாததால் மேக்ஸ்வெல் அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என்று எதிர்பார்த்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடாதது அந்த அணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மிடில்செக்ஸ் அணி களம் இறங்கியது. கேன் ரிச்சர்ட்சன், ஸ்டேன்லேக், நேசர் ஆகியோரின் அபார பந்து வீச்சல் மிடில்செக்ஸ் அணி 41 ஓவரில் 182 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்