என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிலெய்டு டெஸ்ட்"

    • மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 142 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் அடிலெய்டில் நடந்து வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 371 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அலெக்ஸ் கேரி சதமடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் தனி ஆளாகப் போராடி 83 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 142 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அவர் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் கடைசியாக ஆடிய 4 டெஸ்ட்களிலும் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 175 ரன், 119 ரன், இந்தியாவுக்கு எதிராக 140 ரன், இங்கிலாந்துக்கு எதிராக 142 ரன்) சதம் அடித்துள்ளார்.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் குறிப்பிட்ட மைதானத்தில் தொடர்ச்சியாக 4 சதம் கண்ட 5-வது வீரர் என்ற பெருமையை டிராவிஸ் ஹெட் பெற்றார்.

    ஏற்கனவே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் பிராட்மேன் (மெல்போர்ன் மைதானம்), மைக்கேல் கிளார்க் (அடிலெய்டு), ஸ்டீவன்சுமித் (மெல்போர்ன்), இங்கிலாந்தின் வாலி ஹேமன்ட் (சிட்னி) ஆகியோர் ஆஸ்திரேலிய மைதானத்தில் தொடர்ச்சியாக தலா 4 சதம் அடித்துள்ளனர். அந்த சாதனை பட்டியலில் டிராவிஸ் ஹெட் இணைந்தார்.

    • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் எடுத்தார்.
    • இந்த ஆண்டில் ஜெய்ஸ்வால் 3 சதம், 7 அரை சதத்துடன் 1,280 ரன்கள் குவித்துள்ளார்.

    அடிலெய்டு:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நாளை மறுதினம் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. பிங்க் பந்து டெஸ்ட் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டில் ஜெய்ஸ்வால் இதுவரை 3 சதம், 7 அரை சதத்துடன் 58.18 சராசரி மற்றும் 72.52 ஸ்டிரைக் ரேட்டுடன் 1,280 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ரன் குவிப்பு 214 ஆகும்.

    அதன்படி, காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் குவித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு மேலும் 282 ரன்கள் தேவையாக உள்ளது.

    கடந்த 2010-ம் ஆண்டில் சச்சின் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 சதம், 5 அரை சதத்துடன் 1,562 ரன்களை 78.10 சராசரியுடன் குவித்திருந்தார்.

    ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ள ஜெய்ஸ்வாலுக்கு தற்போது இந்த சாதனையை தகர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக ரன் குவித்த சாதனை, பாகிஸ்தான் வீரர் முகம்மது யூசப் வசம் உள்ளது. அவர், 2006ல் 11 போட்டிகள், 19 இன்னிங்சில் 1,788 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

    • முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.

    அடிலெய்டு:

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை மறுதினம் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி அடிலெய்டில் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சியைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்யும்போது குறைந்தது 3,000 ரசிகர்கள் திரண்டு வந்தனர். இந்திய வீரர்களை தொந்தரவு செய்யும் வகையில் சில ரசிகர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

    குறிப்பாக, சில ரசிகர்கள் ரோகித் சர்மாவையும், ரிஷப் பண்டையும் உடல் பருமனாக இருப்பதைக் குறிவைத்து கிண்டல் செய்து இருக்கிறார்கள். இதனால் வீரர்கள் ஒழுங்காக பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், இனி எந்த ஒரு பயிற்சி போட்டிக்கும் ரசிகர்கள் வந்துபார்க்க அனுமதி வழங்கப் போவதில்லை என பிசிசிஐ தெரிவித்து உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமும் பிசிசிஐ தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளது.

    ×