என் மலர்
நீங்கள் தேடியது "training camp"
- 3 நாள்கள் மேற்கு மண்டலம் பாரத சாரண, சாரணியா் பயிற்சி முகாம் நடக்கிறது.
- 300 சாரணா், 300 சாரணியா்கள் பயிற்சி பெற உள்ளனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூா் ஓட்டுபட்டரை ஸ்டான்லி பாா்க் பகுதியில் 3 நாள்கள் மேற்கு மண்டலம் பாரத சாரண, சாரணியா் பயிற்சி முகாம் நடக்கிறது.
இந்த முகாமினை பள்ளி கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா். இந்த முகாமில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 300 சாரணா், 300 சாரணியா்கள் பயிற்சி பெற உள்ளனா்.
முகாமை தொடங்கிவைத்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், மாநிலங்களின் பண்பாடு, நாட்டுப்பற்று, பிறருக்கு உதவி புரிவது, நட்பு வட்டாரங்களை விரிவுபடுத்துவது, சாரண, சாரணியா்கள் எவ்வாறு அணிவகுப்பு மரியாதை செய்வது போன்று பயிற்சிகள் முகாமில் அளிக்கப்படும். இவற்றை முறையாக கற்று சாரண, சாரணியா் பினபற்ற வேண்டும் என்றாா்.
இதில் வனத் துறை அமைச்சா் க.ராமசந்திரன், மாவட்ட கலெக்டா் அம்ரித் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
- 200 தேனீ வளர்க்கும் பெட்டிகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
சென்னை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், மாநில அலுவலகம், மற்றும் திருப்பத்தூர் சர்வேதாய சங்கம் சார்பில் கலாசிபாளையம், சித்தேரி மலைவாழ் பெண்களின் மேம்பாட்டிற்காக தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் சித்தேரி மலை கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் சர்வதேச சங்க செயலாளர் சி.லோகேஸ்வரர் தலைமை வகித்தார், கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் பி.என்.சுரேஷ், அனைவரையும் வரவேற்றார்.
தொடக்க நிகழ்ச்சியாக காந்தி திருவுருப்படத்திற்கு கதர் மாலை அணிவித்து, குத்துவிளக்கு ஏற்றி தேனி வளர்ப்பு முகமை தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென் மண்டல துணை தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எஸ் பாண்டே தேனி வளர்ப்பு பற்றி விளக்கி பேசினார், சிறப்பு அழைப்பாளராக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின்தலைவர்.
மனோஜ் குமார் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 20 பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் 10 பெட்டிகள் வீதம் 200 தேனீ வளர்க்கும் பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் அருர் தொகுதி சம்பத் எம்.எல்.ஏ. உப்பட ஏராளமார் கலந்து கொண்டு பேசினார்கள்.
நிகழ்ச்சியில் சர்வதே சங்க அலுவலர்கள் மலைவாழ் மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், உதவி இயக்குனர் சித்ரா மதன் நன்றி கூறினார்.
- வேளாண்மை உழவர் நலத்துறை திட்டங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பான விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது
- பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
சங்கரன்கோவில்:
மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொடர்பான பண்ணை பள்ளி ஈச்சந்தா பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரியசாமிபுரம் கிராமத்தில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் அறிவழகன் அறிவுரையின்படி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
பண்ணைப் பள்ளிக்கு துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஈச்சந்தா ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி கலந்து கொண்டார். பண்ணைப் பள்ளியின் தொடக்கத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரதீஷ் கமாலின் வரவேற்று பேசினார்.பின்பு துணை வேளாண்மை அலுவலர் வேளாண்மை உழவர் நலத்துறை திட்டங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பான விளக்கங்களை விவசாயிகளிடையே எடுத்துக் கூறினார்.
மேலும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வேளாண்மை பயிற்றுனர் தூண்டில் காளை கோடை உழவு, மக்காச்சோளத்தில் விதை நேர்த்தி, களை நிர்வாகம், உர நிர்வாகம், பூச்சி மேலாண்மை படைப்புழு கட்டுப்பாடு குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். பண்ணைப்பள்ளி பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மெட்டாரேஸ்யம் எனும் பூஞ்சான மருந்து இலவசமாக கொடுக்கப்பட்டது. பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தன் செய்திருந்தார்.
- தீ விபத்துக்களை தடுத்தல் மற்றும் மீட்பு குறித்து, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை சார்பில், செயல்விளக்க பயிற்சி நடந்தது.
- மரத்தின் கிளைகள், இலைகளை கொண்டு அணைப்பது மற்றும் மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.
உடுமலை:
ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட கரட்டுபதி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு, வனத்தீ ஏற்படுவதை தடுத்தல், தீ விபத்துக்களை தடுத்தல் மற்றும் மீட்பு குறித்து, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை சார்பில், செயல்விளக்க பயிற்சி நடந்தது.
அமராவதி வனச்சரக அலுவலர் சுரேஷ், உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் மூர்த்தி தலைமையிலா தீயணைப்புத்துறை வீரர்கள், தீத்தடுப்பு குறித்தும், வனத்தீ ஏற்படுவது மற்றும் அதனை தடுப்பது குறித்தும் வனப்பகுதிகளில் தீத்தடுப்புக்கோடு அமைப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் வனத்தில் அடிபட்ட நபர்களை மீட்கும் முறைகள் குறித்தும், செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.பின்னர் தீயணைப்புத்துறையினரால், வனத்தில் செயற்கையான தீ விபத்து உருவாக்கப்பட்டு, வனப்பாதுகாவலர்களைக்கொண்டு, மரத்தின் கிளைகள், இலைகளை கொண்டு அணைப்பது மற்றும் மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.
- தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியமும், ஜல்ஜீவன் இணைந்து நடத்திய களநீர் பரிசோதனை பயிற்சி முகாம்.
- தண்ணீரின் தரம், தண்ணீரின் சேமிப்பு, பாதுகாப்பு, தண்ணீரால் பரவும் நோய்கள், நீர் மாசு குறித்து விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளிக்கபட்டது.
சிவகிரி:
தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியமும், தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, ஜல்ஜீவன் இணைந்து நடத்திய களநீர் பரிசோதனை பயிற்சி முகாமை நிர்வாகப் பொறியாளர் கோபால் (திட்ட மற்றும் பராமரிப்பு கோட்டம்) தலைமை தாங்கி தென்காசி யூனியனில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி நிர்வாக பொறியாளர் ஆதிநாராயணன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 யூனியன்களில் பயிற்சி நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற செயலர், மக்கள் நல ஒருங்கிணைப்பாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான களநீர் பரிசோதனை பயிற்சி முகாம் வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் வைத்து நேற்று நடைபெற்றது. யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெங்கடேசன் வரவேற்று பேசினார்.
பயிற்சி முகாமில் ராஜேஸ்வரி, பிரபாவதி, தனசேகரன், முருகன் ஆகியோர் தண்ணீரின் தரம், தண்ணீரின் சேமிப்பு, பாதுகாப்பு, தண்ணீரால் பரவும் நோய்கள், நீர் மாசு குறித்து விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளித்தனர். பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.
- ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது
- அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிக்குட்பட்ட பொது மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி, மினிடேங்க் உள்ளிட்டவைகள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சில ஊராட்சிகளில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
குடிநீரை பரிசோதனை செய்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் சார்பில் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், பம்ப் ஆபரேட்டர்கள், சுகாதார குழு உறுப் பினர்களுக்கான குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் திருப் பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.சங்கர், ஜே.மணவாளன் தலைமை வகித்தனர். ஐ.ஆர்.டி.டீ. நிறுவன செயலாளர் மனோ ரஞ்ஜிதம் வரவேற்றார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருப்பத்தூர் மாவட்ட நிர்வாக பொறியாளர் பி.லதா பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். துணை நிர்வாக பொறியாளர் பர்குணன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். கிராம குடிநீர் மற்றும் சுகாதாரக்குழு உறுப்பினர்களுக்கு குடிநீர் பரிேசாதனை பயிற்சி கையேடும் வழங்கப்பட்டது.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.ராஜா, மற்றும் பரிசோதனை குழுவினர் மஞ்சுநாதன், திலகவதி, சர்மிளா, பாக்யா, மற்றும் உராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
- வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
- செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
ஊட்டி,
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன்பு மற்றும் பின்பு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவது வழக்கம். நடப்பாண்டில் பருவ மழைக்குப் பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது. இதையொட்டி வன ஊழியர்களுக்கு தெப்பக்காடு முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது. வனச்சரகர்கள் மனோகரன், விஜயன், மனோஜ் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். முகாமில் வன விலங்குகளை நேரில் காணுதல், கால் தடயங்கள் மற்றும் எச்சங்களை கொண்டு கணக்கெடுப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜி.பி.எஸ். மற்றும் தொலைநோக்கு கருவிகள் கொண்டு கணக்கெடுப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
- மாநில துணைப் பொதுச் செயலாளா் யு.கே.சிவஞானம் பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்தாா்.
- திருப்பூா் ஒன்றிய கிராம கூட்டமைப்பின் தலைவா் கணேசன் நன்றி கூறினாா்.
திருப்பூர்:
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தலித் ஊராட்சித் தலைவா்களுக்காக உள்ளாட்சி நிா்வாகத்தில் சமூகநீதி என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் அரிமா சங்க அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமுக்கு மாவட்டத் தலைவா்நந்தகோபால் தலைமை வகித்தாா், மாவட்டப் பொருளாளா்பஞ்சலிங்கம் வரவேற்றாா். மாநில துணைப் பொதுச் செயலாளா் யு.கே.சிவஞானம் பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்தாா்.
இதில் தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டம், கிராம சபையின் முக்கிய அம்சங்கள் தொடா்பாக மாநிலக் குழு உறுப்பினா் வேணியும், தலித் மற்றும் பழங்குடியின ஊராட்சித் தலைவா்கள் மீதான பாகுபாடுகளும்-தடுப்பதற்கான வழிமுறைகளும் தொடா்பாக மாநிலத் தலைவா் செல்லக்கண்ணு பேசினாா்.இதில் பங்கேற்ற ஊராட்சித் தலைவா்கள் தங்களது அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.முடிவில் திருப்பூா் ஒன்றிய கிராம கூட்டமைப்பின் தலைவா் கணேசன் நன்றி கூறினாா்.
- காபி, குறுமிளகு போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
- காபி பயிரில் ஏற்படும் தண்டு துளைப்பானை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஊட்டி,
குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சியில் செங்கல்கொம்பை பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு காபி, குறுமிளகு போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அங்கு, குன்னூர் வட்டார தோட்டக்கலை துறை சார்பில் தேசிய மண் வள இயக்கத்தின் மூலம் மண் வளத்தின் முக்கியத்துவம் மற்றும் மண்வளத்தை பாதுகாப்பது குறித்து பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு காபி பயிரில் ஏற்படும் தண்டு துளைப்பானை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் குறுமிளகு செடிகளில் ஏற்படும் வாடல் நோயை கட்டுப்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு தேவையான இயற்கை இடுபொருட்கள் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
இதுதவிர முதன் முறையாக வெண்ணை பழம் என்று சொல்லப்படும் பட்டர் புரூட் மற்றும் எலுமிச்சை நாற்றுகள் 2 எக்டருக்கு தேவையான அளவில் வழங்கப்பட்டது. இங்கு விளைவிக்கப்படும் காபி மற்றும் குறுமிளகு எந்தவித ரசாயனங்களும் இன்றி இயற்கை முறையிலேயே விளைவிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே அவர்களுக்கு அங்கக சான்றிதழ் வாங்கி பயன்படுத்த தோட்டக்கலைத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மண் மாதிரி எடுப்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. இதில் தோட்டக்கலை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட மேலாளர், தோட்டக்க–லை அலுவலர், குன்னூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் பழங்குடியின விவசா–யிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
- குழந்தைகள் பராமரிப்பு பற்றிய வழிமுறைகளை விளக்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ஆலங்காயம் வட்டாரத்திற்கு உட்பட்ட புலவர்பள்ளி அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
செந்தாமரை தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி கலந்து கொண்டு 2 வயது வரையிலான குழந்தைகளுக்கான வளர்ச்சி மற்றும் பராமரிப்பு பற்றிய வழிமுறைகளை பணியாளர்களுக்கு மிக எளிய முறையில் எடுத்து கூறினார்.
இந்த முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் கலந்து கொண்டனர்.
- செங்கோட்டை வட்டாரத்தில் வல்லநாடு கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
- அப்போது கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் முக்கிய நோக்கமான விவசாயிகளுக்கு உதவுதல், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் பற்றி எடுத்துரைத்தார்.
செங்கோட்டை:
வல்லநாடு கிள்ளிக் குளத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கீழ் செயல்படும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் 7-ம் பருவத்தின் பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக கிராமப் புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் படி கல்லூரி முதல்வர் டாக்டர் தேரடிமணி தலைமையில், பேராசிரியர்கள் தாமோதரன், செந்தில்நாதன் வழிகாட்டுதலுடன் இணைப் பேராசிரியர் டாக்டர் ஆல்வின் மேற்பார்வையில் செங்கோட்டை வட்டாரத்தில் மாணவர்கள் முகாமிட்டுள்ளனர்.
பயிற்சியின் தொடக்கமாக தென்காசி மாவட்ட இணை வேளாண் இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின் பேரில் வேளாண்உதவி இயக்குனர் கனகம்மாள் ஆலோசனைப்படி மாணவர்கள் செங்கோட்டை வட்டார துணை வேளாண் அலுவலர் ஷேக் முஹைதீனை சந்தித்து உரையாடினார். அந்த உரையாடலில் செங்கோட்டை வட்டாரத்தைப் பற்றியும், அங்கு பயிரிடப்படும் பயிர்களைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
அப்போது கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் முக்கிய நோக்கமான விவசாயிகளுக்கு உதவுதல், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் பற்றி எடுத்துரைத்தார். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகையதீன் தலைமையில் ஒன்பது மாணவர்கள் 75 நாட்கள் செங்கோட்டை வட்டாரத்தில் தங்கி செயல்பட உள்ளனர்.
- 2 நாட்கள் நடக்கிறது
- பயிற்சி முகாமை அதிகாரிகள் ஆய்வு
சேத்துப்பட்டு:
பெரணமல்லூர், வட்டாரவள மையத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
முகாமை வட்டார வள மேற்பார்வையாளர் ராஜா, தொடங்கி வைத்தார். அனைவரையும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் செண்பகவல்லி, வரவேற்றார்.
முன்னதாக பயிற்சி முகாமை வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆசிரியர் பயிற்றுனர்கள். விஜயலட்சுமி, சுகந்தி, மொளூ கு, இசையருவி, ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வருகிற 21-ந்தேதி பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு குறித்து பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.






