என் மலர்
உள்ளூர் செய்திகள்

மலைவாழ் பெண்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்
- 200 தேனீ வளர்க்கும் பெட்டிகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
சென்னை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், மாநில அலுவலகம், மற்றும் திருப்பத்தூர் சர்வேதாய சங்கம் சார்பில் கலாசிபாளையம், சித்தேரி மலைவாழ் பெண்களின் மேம்பாட்டிற்காக தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் சித்தேரி மலை கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் சர்வதேச சங்க செயலாளர் சி.லோகேஸ்வரர் தலைமை வகித்தார், கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் பி.என்.சுரேஷ், அனைவரையும் வரவேற்றார்.
தொடக்க நிகழ்ச்சியாக காந்தி திருவுருப்படத்திற்கு கதர் மாலை அணிவித்து, குத்துவிளக்கு ஏற்றி தேனி வளர்ப்பு முகமை தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென் மண்டல துணை தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எஸ் பாண்டே தேனி வளர்ப்பு பற்றி விளக்கி பேசினார், சிறப்பு அழைப்பாளராக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின்தலைவர்.
மனோஜ் குமார் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 20 பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் 10 பெட்டிகள் வீதம் 200 தேனீ வளர்க்கும் பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் அருர் தொகுதி சம்பத் எம்.எல்.ஏ. உப்பட ஏராளமார் கலந்து கொண்டு பேசினார்கள்.
நிகழ்ச்சியில் சர்வதே சங்க அலுவலர்கள் மலைவாழ் மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், உதவி இயக்குனர் சித்ரா மதன் நன்றி கூறினார்.






