என் மலர்
உள்ளூர் செய்திகள்

வன ஊழியர்களுக்கு பயிற்சி முகாம்
- வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
- செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
ஊட்டி,
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன்பு மற்றும் பின்பு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவது வழக்கம். நடப்பாண்டில் பருவ மழைக்குப் பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது. இதையொட்டி வன ஊழியர்களுக்கு தெப்பக்காடு முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது. வனச்சரகர்கள் மனோகரன், விஜயன், மனோஜ் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். முகாமில் வன விலங்குகளை நேரில் காணுதல், கால் தடயங்கள் மற்றும் எச்சங்களை கொண்டு கணக்கெடுப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜி.பி.எஸ். மற்றும் தொலைநோக்கு கருவிகள் கொண்டு கணக்கெடுப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
Next Story






