என் மலர்
நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா இந்தியா தொடர்"
- சச்சின் பலமுறை சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
- சுனில் கவாஸ்கரிடம் விராட் கோலி ஆலோசனை கேட்டால் நிச்சயமாக அவர் நல்ல தீர்வை கொடுப்பார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த தோல்விக்கு இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் முக்கிய காரணம் என விமர்சனங்கள் என தொடங்கியுள்ளன.
குறிப்பாக மூத்த வீரரான விராட் கோலியின் பேட்டிங் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அவர் இந்த டெஸ்ட் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் மொத்தமே 190 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரது சராசரி 24 ரன்களுக்கு குறைவாக உள்ளது.
இந்நிலையில் விராட் கோலியின் ஆட்டம் குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் விமர்சகருமான இர்பான் பதான்
இந்தியாவுக்கு சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் தேவையில்லை. அவர்களுக்கு அணி கலாச்சாரம் தேவை. கடைசியாக விராட் கோலி உள்ளூர் போட்டிகளில் எப்போது விளையாடினார் என்று உங்களால் சொல்ல முடியுமா? அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் பலமுறை சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். கோலியை குறைத்து மதிப்பிடுவதற்காக நான் இதனை சொல்லவில்லை. ஒரே மாதிரியாக அவர் அவுட் ஆகி வெளியேறுகிறார் என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். சுனில் கவாஸ்கரிடம் விராட் கோலி ஆலோசனை கேட்டால் நிச்சயமாக அவர் நல்ல தீர்வை கொடுப்பார்.
தவறிலிருந்து பாடம் பெற்று அதனை திருத்திக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் விராட் கோலி அதில் ஆர்வம் காட்டவில்லை.
என்று பதான் கூறியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி 9 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ளார். அவற்றில் 8 முறை அவர் ஆட்டம் இழந்தார். அவை அனைத்தும் ஒரே மாதிரியாக நடந்தவை என்பதால் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
- போராட்ட குணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினோம்.
- மற்றவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டிய சூழல் உருவானது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்தும் வெளியேற்றப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1 - 3 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய ஜஸ்பிரித் பும்ரா, "காயத்தால் விளையாட முடியாதது விரக்தியை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் உடலுடன் மல்லுக்கட்டாமல் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இந்த தொடரில் பந்துவீச அதிக சாதகமான பிட்ச்-இல் பந்துவீச முடியாமல் போனது ஏமாற்றம். முதல் இன்னிங்ஸில் விளையாடும் போதே, கொஞ்சம் அசவுகரியமாக உணர்ந்தேன். இதனால் தான் அந்த முடிவை எடுத்தேன்.
அப்போது மற்ற பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பேசிக் கொண்டோம். ஒரு பந்துவீச்சாளர் குறைந்த நிலையில், மற்றவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. இன்று காலை வெற்றிக்கு தேவையான போராட்ட குணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினோம்.
இந்த தொடர் துவங்கியதில் இருந்தே நாங்கள் கடினமான போட்டியை வெளிப்படுத்தினோம். இதனால் இன்று நாங்கள் ஒருதலைபட்சமாக தோற்றோம் என்று அர்த்தமல்ல. டெஸ்ட் போட்டிகள் அப்படித்தான் செல்லும். நீண்ட நேரம் களத்தில் நின்று சூழ்நிலைக்கு ஏற்றவாரு விளையாடுவது முக்கியம். இதுபோன்ற அனுபவங்கள் எங்களுக்கு வருங்காலத்தில் உதவும்.
தங்கள் பலத்தை அடிப்படையாக வைத்து விளையாடிய இளம் வீரர்கள் நல்ல அனுபவம் பெற்றனர். தொடரை வெல்ல முடியாததால் அவர்கள் ஏமாற்றத்தை சந்தித்திருப்பார்கள். ஆனால் இந்த அனுபவத்தில் இருந்து அவர்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொள்வார்கள். இது சிறந்த தொடராக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். அவர்கள் கடினமாக போராடினார்கள்," என்று கூறினார்.
- ஆஸ்திரேலிய வீரர்கள் துவக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
- முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா பந்துவீசினர்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது. இன்று நடந்த மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை சேர்த்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு பத்து ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது.
இதுதவிர இன்றைய வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்ததோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேற்றப்பட்டு இருக்கிறது.
இன்றைய போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஒரு வீரரை மட்டும் சார்ந்து இருக்காத நல்ல அணி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசும் போது, "ஜஸ்பிரித் பும்ரா இல்லாததால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்று நான் கூற விரும்பவில்லை. எங்களுக்கான தருணங்கள் இருந்தன, அவர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரு வீரரை மட்டும் சார்ந்து இல்லாத ஒரு நல்ல அணி வெற்றி பெற்றுள்ளது."
"நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக பேட்டிங் செய்து 250-275 ரன்கள் இலக்கை நிர்ணயித்து இருந்தால், ஆஸ்திரேலியாவுக்கான விஷயங்கள் கடினமாக இருந்திருக்கும். முகமது சிராஜின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது," என்று கவுதம் கம்பீர் தெரிவித்தார்.
- இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
- இந்திய அணி 50.00 சதவீத புள்ளியுடன் 3ஆவது இடத்தை பிடித்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது.
சிட்னி டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா இழந்து வெளியேற்றப்பட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 19 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி, 8 தோல்விகளை சந்தித்துள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள் டிரா ஆனது. இதன் காரணமாக இந்திய அணி 50.00 சதவீத புள்ளியுடன் 3ஆவது இடத்தை பிடித்தது.
இதற்கு முன்பு நடைபெற்ற 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியா இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது. 2019-21-ல் நியூசிலாந்து அணியிடமும், 2021-23-ல் ஆஸ்திரேலியா அணியிடமும் தோற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இழந்தது.
சிட்னி டெஸ்ட் வெற்றி மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 11 ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
- 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
- பத்து ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் பார்டர் கவாஸ்கர் கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் துவங்கிய நிலையில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் பிறகு நடத்த மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி துவங்கிய நான்காவது நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி துவங்கிய கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் அந்த அணி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது. இதோடு, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே தகுதி பெற்று இருந்தது. இந்த நிலையில், இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி இந்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
- ஆஸ்திரேலிய வீரர்கள் துவக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
- முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா பந்துவீசினர்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் துவக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி பந்துவீச்சில் விக்கெட்டுகளை எடுக்கும் முனைப்பு காட்டியது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவெளிக்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களை எதிர்கொண்டு விளையாடியது. இந்தியா சார்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா பந்துவீசினர்.
ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான சாம் கோன்ஸ்டாஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 6 ரன்களுக்கும், இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா அணி 71 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
உணவு இடைவெளிக்கு பிறகு முகமது சிராஜ் வீசிய பந்தில் உஸ்மான் குவாஜா ஆட்டமிழந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி ரன் குவிப்பில் கவனம் செலுத்தியது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் வெஸ்டர் இந்திய அணி பந்துவீச்சாளர்களிடம் சிக்காமல் ரன் குவித்தனர்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.
- இந்திய அணி ஆஸ்திரேலியா வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
- பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் துவக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறைந்த இலக்கு மற்றும் இரண்டு நாட்கள் முழுமையாக இருப்பதால் அந்த அணி எடுத்ததவும் ரன் குவிப்பில் ஈடுபடவில்லை.
மறுப்பக்கம் இந்திய அணி பந்துவீச்சில் விக்கெட்டுகளை எடுக்கும் முனைப்பு காட்டியது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவெளிக்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களை எதிர்கொண்டு விளையாடியது. இந்தியா சார்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா பந்துவீசினர்.
ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான சாம் கோன்ஸ்டாஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 6 ரன்களுக்கும், இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா அணி 71 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்றைய ஆட்ட நேரம் முடிய இன்னும் 65 ஓவர்களுக்கும் மேல் இருப்பதால், உணவு இடைவெளிக்கு பிறகும் இந்திய அணி விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தி வெற்றி பெற முனைப்பு காட்டும் என்று தெரிகிறது. மறுபுறம் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 91 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- இந்தியா 2வது இன்னிங்சில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஆஸ்திரேலியாவின் போலண்ட் 6 விக்கெட் வீழ்த்தினார்.
சிட்னி:
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடந்து வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 4 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் சுருண்டது. வெப்ஸ்டர் 57 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 3 விக்கெட்டும், பும்ரா, நிதிஷ்குமார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
4 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சிராஜ் மற்றும் பும்ரா விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில் இந்தியா 2வது இன்னிங்சில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 6 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.
- ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது.
- ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விளையாடி கொண்டிருந்த போது பும்ரா பாதியிலேயே வெளியேறினார்.
5-வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது.
ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விளையாடி கொண்டிருந்த போது இந்திய அணியின் கேப்டன் பும்ரா பாதியிலேயே வெளியேறினார். 2-வது நாளின் முதல் செஷனின் கடைசி 5 ஓவர்களில், பும்ரா 3 ஓவர்களை வீசினார். இதனைத் தொடர்ந்து, உணவு இடைவேளைக்கு பிறகு வந்த பும்ராவால், 120 மற்றும் 130 வேகத்தில்தான் பந்துவீச முடிந்தது. அப்போது, பும்ரா சோர்வுடனும் காணப்பட்டார். இதனால், உடனே களத்தை விட்டு வெளியேறிய பும்ரா, மருத்துவ ஊழியருடன் இணைந்து, மருத்துவனைக்கு சென்றார்.
Where's Jasprit Bumrah off to ?#AUSvIND pic.twitter.com/P0yD1Q8pnV
— 7Cricket (@7Cricket) January 4, 2025
இந்நிலையில் அவரது காயம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 3-ம் நாளில் பும்ரா நிச்சயமாக பேட்டிங் செய்வார். ஆனால் காலையில் அவர் எப்படி உணருகிறார் என்பதைச் சரிபார்த்த பிறகு அவரது பந்துவீச்சு குறித்து முடிவு எடுக்கப்படும் என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
- முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- 2-வது இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
சிட்னி:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 185 ரன்களும், ஆஸ்திரேலியா 181 ரன்களிலும் ஆல் அவுட் ஆனார்கள்.
பின்னர் 4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்துள்ளது. ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக 2-வது இன்னிங்சில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால், ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சின் முதல் ஓவரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். ஒருநாள் (16) மற்றும் டி20 (18) போட்டியில் தொடக்க ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரராக சேவாக் உள்ளார்.
டெஸ்ட்டில் ஒட்டுமொத்தமாக 4-வது இடத்தை ஜெய்ஸ்வால் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்கள் முறையே மைக்கேல் ஸ்லேட்டர் (ஆஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) ஓஷத பெர்னாண்டோ (இலங்கை) ஆகியோர் தொடக்க ஓவரில் 16 ரன்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sometimes JaisWall, sometimes JaisBall! ?Another #YashasviJaiswal ? #MitchellStarc loading? ??#AUSvINDOnStar ? 5th Test, Day 2 | LIVE NOW! | #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/W4x0yZmyO9
— Star Sports (@StarSportsIndia) January 4, 2025
- இந்த தொடரில் 8 முறை அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்தை சீண்டி அவுட் ஆகி உள்ளார்.
- மற்ற 2 இன்னிங்களில் ஒன்றில் நாட் அவுட். மற்றொன்றில் பேட்டிங் செய்யவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் 4 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.
மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ராகுல் 13, ஜெய்ஸ்வால் 22, சுப்மன் கில் 13, விராட் கோலி 6, ரிஷப் பண்ட் 61, நிதிஷ் ரெட்டி 4 என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
முன்னதாக இந்த இன்னிங்சில் விராட் கோலி 6 ரன்னில் போல்ண்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதுவும் அவுட் சைடு ஆப் ஸ்டம்புக்கு சென்ற பந்தை தொட்டு ஆட்டமிழந்தார். இதன் மூலம் அவுட் சைடு அப் ஸ்டம்ப் பந்தை சீண்டி இந்த தொடரில் மட்டும் 8-வது முறையாக அவுட் ஆகி உள்ளார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 10 இன்னிங்சுகளில் 8 முறை இந்த மாதிரி அவுட் ஆகியுள்ளார்.
#ViratKohli? is absolutely shameless he will never retire and suck up the place of a talented player despite knowing how he's letting down India repeatedly. This guy needs to be thrown out from the team. #INDvsAUSTest #INDVSAUS #ViratKohlipic.twitter.com/O3VJVoqEAr
— Ganesh (@me_ganesh14) January 4, 2025
மற்ற 2 இன்னிங்களில் ஒன்றில் நாட் அவுட். மற்றொன்றில் பேட்டிங் செய்யவில்லை. முதல் டெஸ்ட்டில் 2-வது இன்னிங்சில் 100 நாட் அவுட்டில் இருந்தார். அவர் சதம் அடித்தவுடன் இந்தியா டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 3-வது டெஸ்ட் மழையால் டிரா ஆனது. அதனால் விராட் கோலி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
A familiar trap? ?#ViratKohli falls for the 7th time to an outside-off delivery, prompting a sharp reaction from #IrfanPathan! Here's what he had to say ??#AUSvINDOnStar ? 5th Test, Day 1 | LIVE NOW | #BorderGavaskarTrophy #ToughestRivalry pic.twitter.com/2pBnBOrKm0
— Star Sports (@StarSportsIndia) January 3, 2025
விராட் கோலிக்கு பல முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறினார். ஆனால் அதையெல்லாம் அவர் யோசிப்பாரா இல்லையா என்பது தெரியவில்லை என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சச்சின் வீடியோவை மீண்டும் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
- விராட் கோலி எப்பவும் போல அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் திசையில் அவுட் ஆனார்.
- ஆஸ்திரேலிய தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் 4 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.
இந்த இன்னிங்சிலும் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலாக இருந்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் களமிறங்கினர். பொறுமையாக விளையாடிய கேஎல் ராகுல் திடீரென அதிரடியாக விளையாட முயற்சித்தார். இதனால் அவர் 13 ரன்னில் அவுட் ஆனார்.
बोलैंड ने राहुल को बोल्ड किया।#scottboland #KLRahul #INDvsAUSTest pic.twitter.com/q5Ib3LUnXO
— Utkarsh Singh (@UtkarshSingh_) January 4, 2025
போலண்ட் பந்து வீச்சில் திணறி வந்த ஜெய்ஸ்வால் அவர் ஓவரிலேயே போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த சுப்கில் அதிரடியாக விளையாட முயற்சித்தார். வெளியில் சென்ற பந்தை அடிக்க முயற்சித்தார். இப்படி அடிக்கடி அதிரடியாக விளையாட முயன்றார். ஆஸ்திரேலியாவின் அறிமுக வீரர் பந்தை இறங்கி வந்த அடிக்க முயற்சித்த போது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்த சிறிது நேரத்தில் விராட் கோலி எப்பவும் போல அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் திசையில் சென்ற பந்தை அடிக்க முயற்சித்து 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
Scott Boland gets Virat Kohli. ?pic.twitter.com/YM4wVoubC0 - Virat Kohli's reaction says it all – how many times can he get out to the same delivery? ?#ViratKohli #AUSvsIND #INDvsAUS #scottboland #Cricket
— Akaran.A (@Akaran_1) January 4, 2025
இதனையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக மாற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி பண்ட் சிக்சர் அடித்து (29 பந்தில்) அரை சதம் கடந்தார். அவர் 61 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
Rishabh Pant smashed a six off the ball bowled by Scott Boland. ?#RishabhPant #ScottBoland #Cricket #TeamIndia #BorderGavaskarTrophy #PinkTest #INDvsAUS #AUSvIND #SydneyTestpic.twitter.com/xpPjl9Z3mt
— Fantasy Khiladi (@_fantasykhiladi) January 4, 2025
அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 4 ரன்னில் வெளியேறினார். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.