என் மலர்
நீங்கள் தேடியது "டெஸ்ட் கிரிக்கெட்"
- இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம் பிடித்துள்ளார்.
- இங்கிலாந்து அணி இங்கு 80 டெஸ்டுகளில் ஆடி 37-ல் வெற்றியும், 25-ல் தோல்வியும், 18-ல் டிராவும் சந்தித்துள்ளது.
லீட்ஸ்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம் பிடித்துள்ளார்.
இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்ட தொடர் என்பதால் அந்த வகையிலும் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் இரு அணியினரும் வெற்றியோடு தொடங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-
இந்தியா:
லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்து:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாமி சுமித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டாங்கு, சோயிப் பஷீர்.
- இலங்கை- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
- நஜ்முல் ஹொசைன் சாண்டோ 136 ரன்களுடனும் முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றனர்.
இதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக ஷாத்மான் இஸ்லாம்- அனமுல் ஹக் ஆகியோர் களமிறங்கினர். இதில் அனமுல் ஹக் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ஷாத்மான் இஸ்லாம் 14 ரன்னிலும் மோமினுல் ஹக் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ- முஷ்பிகுர் ரஹீம் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசி அசத்தினர்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 292 ரன்கள் எடுத்தது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ 136 ரன்களுடனும் முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
- 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேத்யூஸ் 16 சதங்களுடன் 8,167 ரன்கள் விளாசியுள்ளார்.
- பேட்டிங் மட்டுமில்லாமல் பந்து வீச்சிலும் மேத்யூஸ் 120 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இன்று நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ்க்கு சக வீரர்கள் Guard of honour கொடுத்து மரியாதை செலுத்தினர்.
இவர் 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி (சராசரி: 45), 16 சதங்களுடன் 8,167 ரன்கள் விளாசியுள்ளார். 226 ஒருநாள் போட்டிகள், 5,916 ரன்கள் (சராசரி: 40), 3 சதங்கள் விளாசினார். பந்து வீச்சில் 120 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் 90 டி20 போட்டிகளில் 1,416 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும்.
இவர் இலங்கை அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார். அதன்படி, 2014 டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
மேலும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் 2009, 2012 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் இலங்கை அணியின் வீரராக மேத்யூஸ் இருந்தார்.
2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் லசித் மாலிங்காவுடன் இணைந்து 9-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 132 ரன்கள் என்ற உலக சாதனையை படைத்தார்.
2014 ஆசியக் கோப்பையை இலங்கை அணி மேத்யூஸ் தலைமையில் கைப்பற்றியது.
2023 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக "டைம்டு அவுட்" முறையில் ஆட்டமிழந்தவர் என்ற சாதனையயும் மேத்யூஸ் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பவுமா 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்றார்.
- டெஸ்ட் போட்டியில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
லண்டன்:
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் பெற்றது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னும், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 207 ரன் எடுத்தது.
இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன் இலக்காக இருந்தது. தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டை இழந்து இந்த ரன்னை எடுத்தது. தொடக்க வீரர் மர்க்ராம் 136 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். 27 ஆண்டுகளுக்க பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு ஐ.சி.சி. கோப்பை கிடைத்துள்ளது. கடைசியாக 1998-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்று இருந்தது. அதற்கு பிறகு தற்போது தான் அந்த அணி ஐ.சி.சி. பட்டத்தை வென்றுள்ளது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா புதிய வரலாறு படைத்தார். அதோடு அவர் கேப்டன் பதவியிலும் புதிய சாதனை நிகழ்த்தினார்.
பவுமா 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்றார். அவர் தலைமையில் 10 டெஸ்டில் விளையாடி 9-ல் வெற்றி கிடைத்தது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. ஒரு டெஸ்டில் கூட தோற்கவில்லை. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
அவர் 104 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். 1920-21 ஆண்டுகளில் தோல்வியை தழுவாமல் 8 டெஸ்டில் வெற்றி பெற்றார். பவுமா தோல்வியை சந்திக்காமல் 9 டெஸ்டில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.
- இந்த போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இறுதிப்போட்டி நடைபெறும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ஆஸ்திரேலிய அணி பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு எனத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த மைதானத்தில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய அணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட், 20-ம் தேதி லார்ட்ஸில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா விளையாட உள்ளது.
- இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி மோதுகிறது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதனை தொடர்ந்து முத்தரப்பு தொடரிலும் விளையாட உள்ளது. முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியின் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியோர் அறிமுகமாகின்றனர்.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் பிரீவிஸ், கார்பின் போஷ், டோனி டி ஜோர்ஜி, ஜுபைர் ஹம்சா, கேசவ் மஹாராஜ், குவேனா மபாகா, வியான் முல்டர், லுங்கி என்கிடி, லுவான்-ட்ரே ப்ரிடோரியஸ், லெசெகோ செனோக்வானே, பிரெனலன் சுப்ராயென், கைல் வெர்ரெய்ன், கோடி யூசுப்.
- நான் சிவப்பு பந்துடன் நிறைய கிரிக்கெட் விளையாடுவதை என் அப்பா பார்த்திருக்கிறார்.
- நான் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது அவர் கொஞ்சம் ஏமாற்றமடைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மே 2025-ல் அறிவித்தார். அவரது ஓய்வு அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.
இந்த முடிவுக்கு சமீபத்திய ஆட்டங்கள் காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2024-25 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் பேட்டிங் (5 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள், சராசரி 6.20) மற்றும் கேப்டன்ஷிப்பில் ஏமாற்றமளித்ததாக இருக்கலாம்.
இந்நிலையில் தாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு தனது தந்தைக்கு ஏமாற்றமடைந்தது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சிவப்பு பந்தில் நான் விளையாடிய போட்டிகளை என் தந்தை அதிகளவில் பார்த்திருக்கிறார். அவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டை அதிகம் பாராட்டுவார். அந்த வகையில், நான் ஓய்வு அறிவித்தது அவரை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது. எனினும், அவரிடம் அதே அளவுக்கு மகிழ்ச்சியும் இருந்தது. அது தான் என் தந்தை.
நான் இன்று இந்த நிலையில், இருப்பதற்கு அவர் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தியுள்ளார். அவரது உதவியின்றி, இது எதுவும் சாத்தியமில்லை என ரோகித் கூறினார்.
- கே.எல். ராகுல் இங்கிலாந்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- 34.11 சராசரியுடன் 2 சதங்களுடன் 614 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. முதல் பயிற்சி போன்று இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2-வது பயிற்சி போட்டியில் கேஎல் ராகுல் விளையாட உள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் சீனியர் அணியின் இடம் பிடித்த கேஎல் ராகுல், இந்திய ஏ அணியுடன் இணைந்து பயிற்சி போட்டியில் விளையாடுவார். அவர் வருகிற திங்கள்கிழமை விமானம் மூலம் இங்கிலாந்து செல்ல உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
கே.எல். ராகுல் இங்கிலாந்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், 34.11 சராசரியுடன் 2 சதங்களுடன் 614 ரன்கள் எடுத்துள்ளார்.
- டி20, ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருப்பது கடினமானது.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்படுவது குழப்பமான விஷயம் கிடையாது.
டெஸ்ட் கேப்டன் பதவி உங்களது லட்சியங்களில் ஒன்றாக இருந்ததா என்று அஸ்வின் யூடியூப் அரட்டையில் ஜடேஜாவிடம் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து ரவீந்திர ஜடேஜா கூறியதாவது:-
ஆம், நிச்சயமாக! பல ஆண்டுகளாக, நான் வெவ்வேறு கேப்டன்களின் கீழ் விளையாடியுள்ளேன். நான் விளையாடிய ஒவ்வொரு கேப்டனின் மனநிலையையும் நான் அறிவேன். மேலும் வீரர்களுக்கு என்ன தேவை, அவர்களின் மனநிலையையும் நான் புரிந்துகொள்கிறேன்.
நான் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கியபோது, இவ்வளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. வெள்ளை பந்து கிரிக்கெட்தான் எனது பலம் என்று நான் எப்போதும் நினைத்தேன். அங்கு நிலைநிறுத்த விரும்பினேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் பவுலருக்கு தகுந்தார் போல் 2 - 3 பீல்டர்களை மாற்றினால் போதும். பேட்ஸ்மேனுக்கு தகுந்தார் போல் மாற்ற வேண்டியதில்லை. அதனாலேயே டெஸ்ட் பார்மெட்டில் கேப்டனாக செயல்படுவது வித்தியாசமான விஷயம் என்று நான் சொல்கிறேன்.
டெஸ்ட் போட்டிகளில் பவுலர் நல்ல ரிதத்தில் இருக்கிறாரா என்பதைப் பார்த்து பவுலிங் செய்ய வைக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும். எப்போது உங்களுடைய முதன்மை பவுலரை கொண்டு வர வேண்டும் என்பது முக்கியம். அது கொஞ்சம் கணக்கீடுகளைப் பொறுத்தது. ஆனால் அது ஐபிஎல் போன்ற டி20 பார்மட்டில் கேப்டனுக்கு தேவைப்படாது. ஏனெனில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்திலும் வித்தியாசமான நிகழ்வு காத்திருக்கும். ஒரு பந்து பவுண்டரி அல்லது சிக்சர் சென்றால் அதற்காக நீங்கள் மாற்றத்தை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.
அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்படுவது குழப்பமான விஷயம் கிடையாது. நான் நிறைய கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். அவர்களுக்கு டெஸ்ட் போட்டிகள் சவாலாக இருந்ததைப் பார்த்ததில்லை. அழுத்தமே இல்லாதது போல் இருக்கும்.
டெஸ்ட் போட்டியில் திடீரென நீங்கள் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் அல்லது புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருக்கும் ஒரே சவால் என்னவெனில் பவுலரை எப்படி சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனக் ஜடேஜா கூறினார்.
- இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஆட்டநாயகனாக சோயிப் பஷிர் தேர்வு செய்யப்பட்டார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 565 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஆலி போப் 171 ரன்களும், டக்கெட் 140 ரன்களும், ஜாக் கிராலி 124 ரன்களும் குவித்தனர். ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக முசரபானி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரையன் பென்னட் நிலைத்து நின்று ஆடி அணியை மீட்டெடுத்தார். சிறப்பாக ஆடி சதமடித்த பிரையன் பென்னட் 139 ரன்களில் அவுட்டானார்.
முடிவில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 63.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 'பாலோ-ஆன்' ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஷோயப் பஷிர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 300 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே நேற்றைய முடிவில் 2 விக்கெட்டுக்கு 30 ரன் எடுத்துள்ளது. பென் கரண் 4 ரன்களுடனும், சீன் வில்லியம்ஸ் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 255 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 88 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- முகமது சமி போன்ற ஒரு பந்து வீச்சாளரை நாங்கள் எப்போதும் தேர்வு செய்யவே விரும்புவோம்.
- ஷ்ரேயாஸ் கடந்த சில காலமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ரோகித், விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி நிலையில் யார் இந்திய அணியின் புதிய கேப்டன் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். இந்த பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது சமி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை.
இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அஜித் அகார்கர் கூறியதாவது:-
இந்தத் தொடரிலிருந்து சமி நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் எங்களிடம் கூறியுள்ளனர். அவர் தொடருக்குத் தகுதி பெற முயற்சித்து வருகிறார். ஆனால் கடந்த வாரம் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. மேலும் அவருக்கு சில எம்ஆர்ஐ ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம் தொடரின் சில போட்டிகளில் அவர் இருப்பார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் தற்போது அவர் உடல் தகுதி பெறவில்லை என்றால், காத்திருப்பது மிகவும் கடினம். அது துரதிர்ஷ்டவசமானது. அவரைப் போன்ற ஒரு பந்து வீச்சாளரை நாங்கள் எப்போதும் தேர்வு செய்யவே விரும்புவோம்.
ஷ்ரேயாஸ் கடந்த சில காலமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அது மட்டுமல்லாமல் உள்நாட்டு கிரிக்கெட்டு தொடரிலும் அவர் அபாரமாக ரன்களை சேர்த்து இருக்கிறார். ஆனால் தற்போதைய சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் அவர்களுக்கு இடம் இல்லை.
என்று அஜித் அகார்கர் கூறினார்.
- நாங்கள் 1-2 சுற்றுப்பயணத்திற்கு கேப்டன்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.
- நாங்கள் எதிர்காலைத்தை கருத்தில் கொண்டு முன்னேற விரும்புகிறோம்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்தது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், அதனால்தான் கில்லை தேர்ந்தெடுக்கிறோம் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் 1-2 சுற்றுப்பயணத்திற்கு கேப்டன்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாங்கள் எதிர்காலைத்தை கருத்தில் கொண்டு முன்னேற விரும்புகிறோம். கடந்த 2 ஆண்டுகளில் அவரிடம் (கில்) சில முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறோம்.
இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவது கடினமாக இருக்கும். ஒருவேளை நாம் கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதனால்தான் நாங்கள் அவரைத் தேர்ந்தெடுக்கிறோம்.
என்று கூறினார்.