என் மலர்
நீங்கள் தேடியது "Jacob Duffy"
- ஜேக்கப் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகளை ஜேக்கப் கைப்பற்றி உள்ளார்.
நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்றது.
இந்த போட்டியிலும் நியூசிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி தட்டி சென்றார். இந்த தொடரில் 23 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார்.
இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை ஜேக்கப் டஃபி (81 விக்கெட்டுகள்) படைத்துள்ளார். இதற்கு முன்பு சர் ரிச்சர்ட் ஜான் ஹட்லி 1985-ம் ஆண்டில் 79 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவரது நீண்டகால சாதனையை ஜேக்கப் முறியடித்துள்ளார். இதன் மூலம் 48 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
ஜேக்கப் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4 டெஸ்ட் போட்டியில் விளையாடி 25 விக்கெட்டுகளும் 20 டி20 போட்டியில் விளையாடி 35 விக்கெட்டுகளும் 11 ஒருநாள் போட்டியில் விளையாடி 21 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
மொத்தமாக ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் பட்டியலில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதல் 2 இடங்களில் உள்ளார். அவர் 2001-ம் ஆண்டில் 136 விக்கெட்டுகளும் 2006-ம் ஆண்டில் 128 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 1994-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே 120 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். 119 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் மெக்ராத் (1999-ம் ஆண்டு) உள்ளார்.
- இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் தங்களது அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையை சமன் செய்துள்ளது.
- ஒரு இன்னிங்சில் 100 ரன்னுக்கு மேல் விட்டுக்கொடுத்த 3-வது நியூசிலாந்து பவுலர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 295 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டப்பி 10 ஓவர்கள் பந்து வீசி 100 ரன்களை வாரி வழங்கினார். ஒரு இன்னிங்சில் 100 ரன்னுக்கு மேல் விட்டுக்கொடுத்த 3-வது நியூசிலாந்து பவுலர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
இந்தியா தரப்பில் இந்த ஆட்டத்தில் மொத்தம் 19 சிக்சர்கள் நொறுக்கப்பட்டன. இதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் தங்களது அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையை சமன் (2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் 19 சிக்சர்) செய்துள்ளது. இந்தூர் மைதானத்தில் ஒரு நாள் போட்டியில் இதுவரை தோல்வியையே சந்திக்காத இந்திய அணி இங்கு பெற்ற 6-வது வெற்றி இதுவாகும்.
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்த பென் சியர்ஸ் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஜேக்கப் டஃபி அணியில் இணைந்துள்ளார்.
- சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் பென் சியர்ஸ் இடம் பெற்றிருந்தார்.
- பென் சியர்ஸ்-க்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டது.
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அணியில் இருந்து முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகி வருகின்றனர்.
அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸ் தொடை எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக ஜேக்கப் டஃபியை நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.






