search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Zealand"

    • உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம்பெற்றது.
    • இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    ஓமனில் நடைபெற்று வரும் முதலாவது ஐவர் மகளிர் ஆக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம்பெற்று இருந்தது.

    இதே பிரிவில் இந்தியாவுடன் அமெரிக்கா, போலந்து, நமீபியா ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன. லீக் சுற்றில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் வெற்றி பாதையில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    அந்த வகையில் இந்திய அணி இன்று (ஜனவரி 26) காலிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடியது.

     


    போட்டி முடிவில் இந்திய அணி 11-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்தியா சார்பில் தீபிகா சோரெங், ருதஜா பிசல் ஆகியோர் தலா 3 கோல்களும், மும்தாஜ் கான், மரியானா குஜூர் ஆகியோர் தலா 2 கோல்களும், ஓரிவா ஹெபி 1 கோல் அடித்தனர்.

    அரையிறுதி சுற்றில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லீக் சுற்று வெற்றிகளை தொடர்ந்து இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.
    • இன குழு பெருமையை சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

    நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினரின் ஆரவார பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 170 ஆண்டுகளில் நியூசிலாந்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் மைபி கிளார்க். 21 வயதான இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பி. ஆனார். மௌரி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.

    எம்.பி.யாக தேர்வான பிறகு நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார் மைபி கிளார்க். உரையின் போது மௌரி இனத்தின் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றான ஹக்கா செய்தது அரங்கத்தை அதிர செய்தது. போர், வெற்றி, ஒற்றுமை, இன குழு பெருமை என எல்லாவற்றையும் சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

     


    அந்த வகையில் நியூசிலாந்தின் இளம் பெண் எம்.பி. வெற்றி முழக்கமிட்டு பேசியது பாராளுமன்றத்தை அதிர வைத்தது. தொடர்ந்து பேசிய அவர், "நான் உங்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன்.. ஆனாலும் நான் உங்களுக்காகவே வாழ்வேன்," என்று தெரிவித்தார்.

    ஆக்லாந்து மற்றும் ஹாமில்டன் இடையே உள்ள ஹன்ட்லி என்ற சிறு நகரத்தில் வசிக்கும் மைபி கிளார்க் தனது மௌரி இனத்தின் லூனார் காலண்டரின் படி குழந்தைகளுக்கு தோட்டத்துறை சார்ந்த கல்வியை கற்பித்து வருகிறார். எம்.பி. என்ற பதவியை தாண்டி இவர் தன்னை மௌரி மொழியை காப்பாற்றவும், அதனை உலகறிய செய்யவும் நோக்கமாக கொண்டிருக்கிறார்.




    • கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருடத்தின் ஆங்கில புத்தாண்டு பிறந்தது.
    • நியூசிலாந்ததில் புத்தாண்டு களைகட்டி வருகிறது.

    நியூசிலாந்தில், இந்திய நேரப்படி சரியாக இன்று மாலை 4.30 மணியளவில் புத்தாண்டு பிறந்தது.

    உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருட ஆங்கில புத்தாண்டு பிறந்தது.

    இந்நிலையில், வாணவேடிக்கையுடன் நியூசிலாந்து மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மேலும், பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டி, ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதனால், நியூசிலாந்ததில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.

    • ரச்சின் ரவீந்திரா 108 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
    • ஃபகர் ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை குவித்தார்.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    இதனால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இந்த ஜோடி 68 ரன்களை சேர்த்த போது, கான்வே 35 ரன்களில் அவுட் ஆனார்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிறகு ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து கொண்ட வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இருவரும் அரைசதம் அடித்தனர். கேன் வில்லியம்சம் 95 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

    ரச்சின் ரவீந்திரா 108 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் மற்றும் மார்க் சாப்மென் முறையே 29 மற்றும் 39 ரன்களை எடுத்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 401 ரன்களை குவித்தது. இதை அடுத்து 402 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை பாகிஸ்தான் துரத்தியது.

    பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான அப்துல்லா ஷஃபிக் 4 ரன்களில் அவுட் ஆக, இவருடன் களமிறங்கிய ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் 66 ரன்களை எடுத்தார். 25.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்த நிலையில், மழை குறிக்கிட்டது.

    தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. எனினும், டி.எல்.எஸ். விதிகளின் படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • இரு அணிகளும் 8 புள்ளிகளை பெற்றுள்ளன.
    • இரு அணிகளும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நாளை மதியம் 2.00 மணிக்கு இந்த போட்டி துவங்குகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் முறையே முதல் இரு இடங்களில் உள்ளன.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் இந்த நான்கு போட்டிகளிலும் வெற்று பெற்றுள்ளன. அந்த வகையில், இரு அணிகளும் 8 புள்ளிகளை பெற்றுள்ளன. இந்தியா நெட் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    இரு அணிகளும் இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. அந்த வகையில், இந்த நிலை நாளை மாறவிருக்கிறது. நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டி தர்மசாலாவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்க உள்ளன.

    • ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்ஐ5 தலைவர் உரையாற்றினார்
    • உலகையே மாற்றும் கண்டுபிடிப்புகளை சொந்தமாக்கி கொள்ள முயல்கின்றனர்

    அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளின் உளவு அமைப்புகளின் கூட்டமைப்பு, ஐந்து கண்கள் எனப்படும் "ஃபை ஐஸ்" (Five Eyes).

    இந்த 5 நாடுகளில் உள்ள பெருவணிக நிறுவனங்களின் வியாபார தந்திரங்கள், தொழில் ரகசியங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த மென்பொருள் தரவுகளை சீனா மறைமுகமாக கைப்பற்றி வருவதாக "ஃபை ஐஸ்" குற்றம் சாட்டியுள்ளது.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் (Stanford University) நடைபெற்ற ஒரு சந்திப்பில் இங்கிலாந்தின் உளவு பிரிவான எம்ஐ5 (MI5) அமைப்பின் தலைவர் கென் மெக்கல்லம் (Ken McCallum) உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    மிக பரந்த அளவில் மிக மிக முக்கிய தொழில்நுட்பங்கள் களவாடப்படுகின்றன. அரசாங்கத்தின் ரகசியங்களை உளவாளிகள் கைப்பற்றுவதுதான் இதுவரை நடந்து வந்தது. ஆனால் தற்போது சிறு மற்றும் "ஸ்டார்ட் அப்" நிறுவனங்கள் மற்றும் பெரும் பல்கலைகழகங்கள் ஆகியவை மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் திருடப்படுகின்றன. சமூக வலைதளங்களில் இங்கிலாந்தில் உள்ள மக்களை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன உளவாளிகள் குறி வைத்து அவர்களிடம் நட்பை வளர்த்து செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நுட்பமான நுண்ணிய முக்கிய தகவல்களை கேட்டு பெறுகிறார்கள். கண்டறிய கடினமான முறையில் தங்கள் செயல்பாட்டை மறைத்து கொண்டு சீனர்கள் செயல்படுகின்றனர். உலகையே மாற்றும் சாத்தியம் உள்ள இத்தகைய கண்டுபிடிப்புகளை தங்களுக்கே சொந்தமாக்கி கொள்ள மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் பெறும் தகவல்களை கொண்டு நாடுகளுக்கு இடையேயான அரசியல்களிலும் ஒவ்வொரு நாட்டின் உள்நாட்டு அரசியலிலும் அவர்கள் விரும்பும் அழிவை கொண்டு வரவும் முடியும்.

    இவ்வாறு கென் தெரிவித்தார்.

    ஃபை ஐஸ் அமைப்பின் மற்ற தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர்.

    • உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஓய்விலிருந்து திரும்பிய கேன் வில்லியம்சன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெலிங்டன்:

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பீல்டிங் செய்கையில் காயமடைந்து ஓய்விலிருந்து திரும்பிய கேன் வில்லியம்சன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் டிம் சவுதி , டிரென்ட் பவுல்ட் போன்ற திறமையான பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி பின்வருமாறு;-

    நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, வில் யங்.

    • சிசேரியன் அறுவை சிகிச்சை முறைப்படி பிரசவம் நடைபெற்றது
    • கதிரியக்க படங்களில் வித்தியாசமாக எதுவும் தென்படவில்லை

    தென்மேற்கு பசிபிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு நியூசிலாந்து. இதன் தலைநகரம் வெலிங்டன்.

    இந்நாட்டிலுள்ள பெருநகரங்களில் ஒன்று ஆக்லாந்து. இங்குள்ள மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். சுகப்பிரசவம் [இயற்கையான] நடப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையில் அவருக்கு சி-செக்ஷன் (C-section)எனப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சை முறைப்படி பிரசவம் நடைபெற்றது.

    பிரசவம் முடிந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்தது. வழக்கமான மருந்து மற்றும் மாத்திரைகளால் வலி குறையாததால், அவருக்கு எக்ஸ்-ரே எனப்படும் கதிரியக்க படங்கள் எடுக்கப்பட்டன. பரிசோதனையிலும் எதுவும் வழக்கத்திற்கு மாறாக தென்படவில்லை. இதனையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிந்துரைக்கப்பட்டது.

    சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கும் மருத்துவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, அவரது வயிற்றில், சாப்பிடும் தட்டின் அளவிற்கு ஒரு பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து அப்பெண்ணிற்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அப்பொருள் வெளியில் எடுக்கப்பட்டது. அது, மருத்துவர்களால் அறுவை சிகிச்சையின் போது உபயோகப்படுத்தப்படும் அலெக்ஸிஸ் ரிட்ராக்டர் (Alexis retractor) என்பது தெரிய வந்துள்ளது.

    அறுவை சிகிச்சையில், அறுத்த தசைகளை தற்காலிகமாக விலக்கியே வைத்திருந்தால்தான் மருத்துவர்கள் கைகளாலும், உபகரணங்களை கொண்டும் சிகிச்சையை தொடர முடியும். இதற்காக பயன்படுத்தப்படும் ரிட்ராக்டர் எனப்படும் உபகரணம்தான் அப்பெண்ணின் வயிற்றில் இருந்துள்ளது.

    அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்திய இதனை, மருத்துவர்கள் கவனக்குறைவாக அப்பெண்ணின் வயிற்றிலேயே வைத்து தையல் போட்டுள்ளனர்.

    கதிரியக்க ஊடுருவலை தடுக்கும் பொருளால் உருவாக்கப்பட்டதால், அந்த உபகரணம் எக்ஸ்-ரே பரிசோதனையில் கண்டறியப்படவில்லை.

    "இது குறித்து மருத்துவமனையிலிருந்து எந்தவொரு விளக்கமும் கிடைக்கவில்லை. ஆக்லேண்டு மருத்துவமனையின் சுகாதார பராமரிப்பு, அடிப்படை தரத்திற்கும் கீழ்நிலையில் இருந்திருக்கிறது" என அந்நாட்டின் மருத்துவ துறையின் ஆணையர் இது குறித்து கூறினார்.

    அயல் நாடுகளில் மருத்துவ பராமரிப்பும், சுகாதார முறைகளும் உலகத்தரத்தில் விளங்குவதாக கருதும் போது, இது போன்ற செயல்கள் அங்கு நடப்பது வியப்பளிப்பதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
    • இந்த போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடர் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. உலக கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் ஒவ்வொரு அணிகளும், தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை மற்ற அணிகளுடன் விளையாடி வருகின்றன. இந்த போட்டிகள் ஒவ்வொரு அணிக்கும், உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்படுகின்றன. இதன் மூலம் அந்தந்த அணிகள் வீரர்களின் பலம், எந்த இடத்தில் ஆட வைக்க வேண்டும் என்று பல்வேறு விஷயங்கள் பற்றி அணி நிர்வாகம் இறுதி முடிவை எடுக்கும். 

    அந்த வரிசையில், இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதையொட்டி இந்த போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்று இருக்கிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்தார்.

    எனினும், உலக கோப்பை தொடரில் பென் ஸ்டோக்ஸ்-ஐ விளையாட வைக்க வேண்டும் என்ற கருத்து பொதுப்படையாக நிலவி வந்தது. மேலும் அணி நிர்வாகமும், இதே போன்ற கருத்தை கொண்டிருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு உலக கோப்பை தொடர் முடியும் வரை இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்று அணி நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில், தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்று இருக்கிறார். இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடரிலும் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் பிறகு, அவர் தனது இடது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வார் என்றும், இதனால் அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:

    ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜான்னி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், லியம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டொப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட் மற்றும் க்ரிஸ் வோக்ஸ்.

    லண்டனில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சவுதம்டனில் ஜூன் 5-ந் தேதி நடக்கிறது.

    முன்னதாக போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. லண்டனில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. உலக கோப்பைக்கு சிறந்த முறையில் தயாராக பயிற்சி ஆட்டம் முக்கியம் என்பதால் இரு அணிகளும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கும். இந்திய அணியில் 4-வது பேட்டிங் வரிசைக்கு பொருத்தமான வீரர் யார் என்பதை அறிய இந்த பயிற்சி ஆட்டம் உதவக்கூடும். இது பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களையும் மாற்றி, மாற்றி களத்தில் இறக்க அனுமதி உண்டு.

    சவுதம்டனில் இன்று நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹாலெ ஜென்சனும் ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வீராங்கனை நிகோலா ஹன்கோக்கும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். #Womencricketers
    கிறைஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹாலெ ஜென்சன். இவர் நியூசிலாந்து அணிக்காக 8 ஒரு நாள் போட்டி மற்றும் இருபது 20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 26 வயதான ஜென்சன், ஒரு ஓரின சேர்க்கை விரும்பி ஆவார். அவரும் ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் 23 வயது வீராங்கனை நிகோலா ஹன்கோக்கும் நெருங்கி பழகி வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதுடன், அந்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். பெண்கள் கிரிக்கெட் உலகில் கடந்த 3 ஆண்டுகளில் இவ்வாறு ஜோடி சேர்ந்த 3-வது ஓரின சேர்க்கை இணை இதுவாகும். #Womencricketers
    நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறியது. #NewZealand #GunLaw
    வெலிங்டன்:

    நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்தியர்கள் 7 பேர் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.

    உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பின் நியூசிலாந்தில் துப்பாக்கி பயன்பாடு மற்றும் விற்பனையில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது.

    அதன்படி துப்பாக்கி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என பிரதமர் ஜெசிந்தா உறுதி அளித்தார். இதற்கிடையில் அங்கு பாதியளவு தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது.
    ×