என் மலர்
நீங்கள் தேடியது "England"
- நியூசிலாந்து அணி தோற்றால் பாகிஸ்தான் அணிக்கு அரைஇறுதி வாய்ப்புக்கான கதவு திறக்கும்.
- இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரைஇறுதியை உறுதி செய்வதோடு, புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடிக்கும்.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் சுற்றில் இங்கிலாந்து தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை போட்டுத்தாக்கி முதல் அணியாக அரைஇறுதிக்கு முன்னேறியது. முந்தைய பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 165 ரன் இலக்கை கேப்டன் ஹாரி புரூக்கின் பிரமாதமான சதத்தால் எட்டிப்பிடித்தது. சூப்பர் சுற்றில் 'ஹாட்ரிக்' வெற்றி யோடு புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஆவலுடன் உள்ளது.
நியூசிலாந்து அணி ஒரு வெற்றி, ஒரு முடிவில்லை என 3 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. இலங்கைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 84 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த போதிலும் கேப்டன் மிட்செல் சான்ட்னெர் (47 ரன்). கோல் மெக்கோன்சி (31 ரன்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 168 ரன் திரட்டியதோடு, இலங்கையை 107 ரன்னில் சுருட்டியது. அதே உத்வேகத்துடன் இன்று இங்கிலாந்தையும் பதம் பார்க்க காத்திருக்கிறார்கள்.
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரைஇறுதியை உறுதி செய்வதோடு, புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடிக்கும். தோற்றால் பாகிஸ்தான் அணிக்கு அரைஇறுதி வாய்ப்புக்கான கதவு திறக்கும். ஆனால் ரன்ரேட்டில் நியூசிலாந்து திடமாக இருப்பதால் தோற்றாலும் அந்த அணிக்கே அடுத்த சுற்றை எட்டுவதற்கான வாய்ப்பு அதிகம்.
- இலங்கை 2 தோல்வியுடன் வெளியேறியது.
- ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 8 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. குரூப் 2 பிரிவில் போட்டியை நடத்தும் இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இலங்கை 2 தோல்வியுடன் வெளியேறியது. 2-வதாக நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு நுழையும். நியூசிலாந்து 3 புள்ளியுடனும், பாகிஸ்தான் ஒரு புள்ளியுடனும் உள்ளன.
கொழும்பில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். அப்படி நிகழ்ந்தால் பாகிஸ்தான்-இலங்கை இடையே 28-ந்தேதி நடைபெறும் ஆட்டத்தின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
நியூசிலாந்து தோற்றால் பாகிஸ்தான்-இலங்கை இடையேயான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இரண்டு அணிகளும் 3 புள்ளியுடன் சமநிலை பெறும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும்.
தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானை விட நியூசிலாந்து ரன்ரேட்டில் நல்ல நிலையில் இருக்கிறது. இதனால் அந்த அணிக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. நாளைய போட்டியில் இங்கிலாந்து வெற்றிக்காக பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.
சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஹாரிக் புரூக் தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றி வேட்கையில் உள்ளது.
இரு அணிகளும் 30 போட்டியில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 17-ல், நியூசிலாந்து 10-ல் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் முடிவு இல்லை.
- ஐபிஎல் உரிமையாளர்களுக்குச் சொந்தமான அணிகள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை
- இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் 8 அணிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'தி ஹன்ட்ரட்' (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்திய ஐபிஎல் (IPL) உரிமையாளர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் வெளியாகின.
மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய நான்கு அணிகளும் இந்திய உரிமையாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அணிகள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், THE HUNDRED கிரிக்கெட் தொடரில் இந்திய நிறுவனங்களை உரிமையாளர்களாகக் கொண்ட அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என்பதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், The Hundred தொடர் அனைத்து வீரர்களை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும், வீரர்கள் தேசத்தின் அடிப்படையில் விலக்கப்பட மாட்டார்கள் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் 8 அணிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த தொடரில் இந்திய நிறுவனங்களை உரிமையாளர்களாக கொண்ட அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என செய்தி பரவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 164 ரன்கள் சேர்த்தது.
பல்லேகலே:
டி20 உலகக் கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டம் இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது. ஷாகிப்ஜாதா பர்ஹான் அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹாரி புரூக் தனி ஆளாகப் போராடி அதிரடியாக ஆடி சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை ஹாரி புரூக் படைத்தார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 98 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
- ஐபிஎல் உரிமையாளர்களுக்குச் சொந்தமான அணிகள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை
- இங்கிலாந்தில் இந்த பாகுபாட்டை அனுமதிக்கக் கூடாது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'தி ஹன்ட்ரட்' (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்திய ஐபிஎல் (IPL) உரிமையாளர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய நான்கு அணிகளும் இந்திய உரிமையாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அணிகள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், THE HUNDRED கிரிக்கெட் தொடரில் இந்திய நிறுவனங்களை உரிமையாளர்களாகக் கொண்ட அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என்பதற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் மொயீன் அலி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மொயீன் அலி, "இங்கிலாந்தில் இந்த பாகுபாட்டை அனுமதிக்கக் கூடாது. வீரர்கள் அனைவரும் இதற்கு எதிராகப் பேச வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் கவனம் செலுத்தி, இத்தகைய செயல் நடைபெறாமல் இருப்பதை தடுக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
- சிறப்பாக விளையாடிய ஷெர்பேன் ரூதர்போர்ட் அரைசதம் அடித்து அசத்தினார்.
- இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரசீத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்றைய போட்டியில் வேஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரான்டன் கிங் 1 ரன்னிலும் ஹோப் டக் அவுட்டாகியும் வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மயர் 23 ரன்னிலும் ரோஸ்டன் சேஸ் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
சிறப்பாக விளையாடிய ஷெர்பேன் ரூதர்போர்ட் அரைசதம் அடித்து அசத்தினார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 33 ரன்கள் அடித்து அவுட்டானார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரூதர்போர்ட் 76 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார்.
இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரசீத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே போலீசார் அந்தச் சிறுவனைக் கைது செய்தனர்.
- லண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இந்த விசாரணையைத் கையில் எடுத்துள்ளது.
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனின் ப்ரெண்ட் பகுதியில் கிங்ஸ்பரி உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
நேற்று மதியம் 12:40 மணியளவில் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுவன் ஒருவன், அதே பள்ளியில் பயிலும் 12 மற்றும் 13 வயதுடைய 2 மாணவர்களைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினான்.
தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே போலீசார் அந்தச் சிறுவனைக் கைது செய்தனர். அவனிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கத்திக்குத்துக்கு உள்ளான இரண்டு மாணவர்களும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இந்த விசாரணையைத் கையில் எடுத்துள்ளது.
- டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 184 ரன்கள் குவித்தது.
- நேபாளம் அணி 180 ரன்கள் அடித்து தோல்வியடைந்தது.
டி20 உலகக் கோப்பை தொடரின் 5வது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, நேபாளம் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. பெத்தேல், ஹாரி புரூக் அரை சதம் கடந்தனர்.
அடுத்து ஆடிய நேபாளம் இலக்கை எட்டிப்பிடிக்கும் வகையில் சிறப்பாக விளையாடியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்ட நிலையில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நேபாளம் அணி 4 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது.
நேபாள அணியினரின் சிறப்பான ஆட்டத்துக்கு இங்கிலாந்து கேப்டன் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டி20 உலக கோப்பையில் இங்கிலாந்தை கதிகலங்க வைத்த நேபாள் அணிக்கு, தனது சேவைகள் தேவைப்பட்டால் வழங்கத் தயாராக உள்ளதாக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
- டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 184 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் பெத்தேல், ஹாரி புரூக் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடரின் 5வது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, நேபாளம் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. பெத்தேல், ஹாரி புரூக் அரை சதம் கடந்தனர்.
அடுத்து ஆடிய நேபாளம் இலக்கை எட்டிப்பிடிக்கும் வகையில் சிறப்பாக விளையாடியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்ட நிலையில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நேபாளம் அணி 4 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது.
நேபாள அணியினரின் சிறப்பான ஆட்டத்துக்கு இங்கிலாந்து கேப்டன் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போட்டிக்கு பிறகு நேபாள அணி கேப்டன் ரோகித் பவுடல் பேசியதாவது:
எங்களது வீரர்கள் தங்களது முழு முயற்சியையும் களத்தில் காட்டினர். அவர்களை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.
நாங்கள் உலகக் கோப்பைக்கு நம்பிக்கையுடன் தான் வந்துள்ளோம். வெறுமனே பங்கேற்றுவிட்டு செல்வதற்காக இங்கு வரவில்லை.
முயற்சி என வரும்போது பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் 100 சதவீத பங்களிப்பை வழங்கினோம்.
கடைசி ஓவரை சாம் கர்ரன் உண்மையிலேயே சிறப்பாக வீசினார்.
எங்களை நினைத்து நேபாள ரசிகர்கள் பெருமைப்படுவார்கள். நாங்கள் எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். அதேபோல், மற்ற அணிகளும் எந்த அணியையும் சாதாரணமாக நினைக்க மாட்டார்கள். இந்த ஆட்டம் உணர்த்திய செய்தி இது தான் என தெரிவித்தார்.
- பாலஸ்தீனம் விடுதலை பெறவேண்டும் என்ற போஸ்டர்களை பிரிட்டிஷ் தம்பதி ஒட்டியுள்ளனர்.
- பிரிட்டிஷ் தம்பதியின் விசாவை ரத்து செய்தனர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய பிரிட்டிஷ் தம்பதியை இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து லூயிஸ் கேப்ரியல் மற்றும் அவரது காதலி அனுஷி எம்மா கிறிஸ்டின் ஆகியோர் சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்துள்ளனர்.
ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் மாவட்டத்தில் பாலஸ்தீனம் விடுதலை பெறவேண்டும்,இஸ்ரேலை புறக்கணியுங்கள் (FREE PALESTINE, BOYCOTT ISRAEL) என்ற போஸ்டர்களை பிரிட்டிஷ் தம்பதி ஒட்டியுள்ளனர்.
இதனை கன்டுபிடித்த உளவுத்துறை, பிரிட்டிஷ் தம்பதியின் விசாவை ரத்து செய்து இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளனர்.
- இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 69 சிக்சர்கள் அடித்து இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 69 சிக்சர்கள் அடித்து இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.
இதற்கு முன்பு 5 போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 தொடரில் 64 சிக்சர்கள் அடித்திருந்த இங்கிலாந்து அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
- இங்கிலாந்துக்கு 250 மில்லியன் பவுண்ட் மிச்சமாகும்.
- சீனாவுடனான வர்த்தகம் இங்கிலாந்துக்கு ஆபத்தானது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 4 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்று தற்போது நாடு திரும்பியுள்ளார்
தனது பயணத்தின்போது, தலைநகர் பிஜீங் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் சீனாவுக்கு செல்வது இது முதல் முறை ஆகும்.
நேற்று முன் தினம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தது. இதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் பிரிட்டனின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான விஸ்கி மீதான இறக்குமதி வரியைச் சீனா பாதியாகக் குறைத்துள்ளது.
அதாவது 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு 250 மில்லியன் பவுண்ட் மிச்சமாகும். இதில் இங்கிலாந்து பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தும்.

மேலும் இந்தப் பயணத்தின் மூலம் பல பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் பிரதமர் ஸ்டார்மர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு மிரட்டல்களுக்கு மத்தியில், பிரிட்டன், கனடா ஆகிய நாட்டு தலைவர்கள் சீன பயணம் மேற்கொண்டு அந்நாட்டுடன் உறவை வளர்த்து வருகின்றனர்.
இதற்கிடையே சீனாவுடனான வர்த்தகம் இங்கிலாந்துக்கு ஆபத்தானது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.






