search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harry Brook"

    • டெல்லி அணியால் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அணி வீரர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    • குடும்பத்தை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை.

    டெல்லி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த சீசனில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக கம்பேக் கொடுக்கவுள்ளார். நேற்று முதல் டெல்லி பயிற்சி முகாமில் இணைந்த ரிஷப் பண்ட், தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் டெல்லி அணியால் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக், வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

     

    ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். டெல்லி அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்ட போது, இந்த சீசனில் விளையாட ஆர்வமாக இருந்தேன். ஆனால் சூழ்நிலை வேறு மாதிரி அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து பின் வாங்கியதற்கு சொந்த காரணங்களை கூற வேண்டும் என்று நினைத்ததில்லை. கடந்த மாதம் எனது பாட்டி மறைந்துவிட்டார். சிறு வயதில் இருந்து எனது பாட்டியின் வீட்டில் வளர்ந்தவன், அவர் எப்போதும் எனக்கு ஒரு தூண் போல் நம்பிக்கை அளித்தவர்.

    இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அபுதாபியில் இருந்து புறப்படும் போது தான் பாட்டியின் உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனால் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தேன். தற்போது எங்களிடம் இருந்து பாட்டி மறைந்துவிட்டார். இதனால் எனது குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழலில் உள்ளேன்.

    குடும்பத்தை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதே சரியான முடிவாக கருதுகிறேன். என்னிடம் இன்னும் பல ஆண்டு கால கிரிக்கெட் மீதமிருப்பதால், வரும் காலங்களில் நிச்சயம் விளையாடுவேன். இந்த கடினமான சூழலில் எனக்கு ஆதரவாக இருந்த இங்கிலாந்து நிர்வாகம் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் இரண்டுக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன்.

    என்று ஹாரி ப்ரூக் கூறினார்.

    • ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.
    • 2023 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2023 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் அந்த தொடரில் அவர் வெறும் 190 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனை அடுத்து ஹாரி ப்ரூக்கை அந்த அணி கழட்டி விட்டது. பின்னர் 2024 தொடரில் ரூ.4 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் டெஸ்ட் போட்டி 25-ம் தேதி நடைபெறுகிறது.
    • மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார்.

    இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்யும் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. ஜனவரி 25-ம் தேதி இரு அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. ஹாரி புரூக் விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

     


    "தனிப்பட்ட காரணங்களுக்காக ஹாரி புரூக் உடனடியாக இங்கிலாந்துக்கு திரும்புகிறார். இதன் காரணமாக அவர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்," என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் ஹாரி புரூக். முன்னதாக இவர் கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கினார்.

    24 வயதான ஹாரி புரூக் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 1181 ரன்களை குவித்துள்ளார். இதில் நான்கு சதங்கள், ஏழு அரைசதங்கள் அடங்கும்.

    • இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்காக அபாரமாக ஆடிய ஹாரி புரூக் 75 ரன்கள் குவித்தார்.
    • அவருக்கு அடுத்த இடத்தில் காலின் டி கிராண்ஹோம் (1140 பந்து), டிம் சவுதி (1167 பந்து), பென் டக்கட் (1168 பந்து) ஆகியோர் உள்ளனர்.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்று நடப்பு ஆஷஸ் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்காக அபாரமாக ஆடிய ஹாரி புரூக் 75 ரன்கள் குவித்தார். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன ஹாரி புரூக் இந்த ஆட்டத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினார். இந்த ஆட்டத்தின் 75 ரன்கள் அடித்த அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை ஹாரி புரூக் படைத்துள்ளார். அவர் 1058 பந்துகளை எதிர்கொண்டு 1000 ரன்களை கடந்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் காலின் டி கிராண்ஹோம் (1140 பந்து), டிம் சவுதி (1167 பந்து), பென் டக்கட் (1168 பந்து) ஆகியோர் உள்ளனர்.

    • இங்கிலாந்து வெற்றிபெற 251 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
    • ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி அரை சதமடிக்க இங்கிலாந்து 254 ரன்கள் எடுத்து வென்றது.

    லண்டன்:

    ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 118 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி 80 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    26 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டிராவிஸ் ஹெட் 77 ரன்னும், கவாஜா 43 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டும், மார்க் வுட், மொயீன் அலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்தது

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது பென் டக்கெட் 23 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மொயீன் அலி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய சாக் கிராலி 44 ரன்னில் வெளியேறினார்.

    அவரை தொடர்ந்து ஜோ ரூட் 21 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ஹாரி புரூக் அரை சதமடித்து ஆறுதல் அளித்தார். 75 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இறுதியில், இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 254 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கிறிஸ் வோக்ஸ் 32 ரன்னும், மார்க் வுட் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தற்போது ஆஷஸ் தொடரில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.

    • டி20 கிரிக்கெட்டில் ஓப்பனிங் இடம் தான் பேட்டிங் செய்ய ஒரு சிறப்பான இடம் என்று அனைவரும் கூறுவார்கள்.
    • சமூக வலைதளத்தில் என்னை கிண்டல் செய்யாத ரசிகர்களே கிடையாது.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக துவக்க வீரர் ஹாரி புரூக் 55 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 100 ரன்களை குவித்தார்.

    பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 205 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதம் அடித்த ஹாரி புரூக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    சதம் அடித்தது குறித்து ஹாரி புரூக் கூறியதாவது:-

    இந்த இரவு எனக்கு ஒரு ஸ்பெஷலான இரவு. ஒரு வழியாக நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த போட்டியின் மிடில் ஓவர்களில் சற்று பதட்டமாக தான் இருந்தேன். ஆனாலும் அதன்பிறகு என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சிறப்பாக விளையாட முடிந்தது. டி20 கிரிக்கெட்டில் ஓப்பனிங் இடம் தான் பேட்டிங் செய்ய ஒரு சிறப்பான இடம் என்று அனைவரும் கூறுவார்கள்.

    ஆனால் என்னை பொறுத்தவரை நான் எங்கு களமிறங்கி விளையாடவும் தயார். ஏனெனில் என்னுடைய பேட்டிங் சக்சஸ் பெரும்பாலும் ஐந்தாவது இடத்தில் இறங்கும்போதுதான் நடந்திருக்கிறது. என்னுடைய நான்கு டெஸ்ட் சதங்களுமே ஐந்தாவது இடத்தில் இறங்கி கிடைத்தது தான். இந்த போட்டியில் ரசிகர்கள் எங்களை உற்சாகப்படுத்தியதில் மகிழ்ச்சி.

    சமூக வலைதளத்தில் என்னை கிண்டல் செய்யாத ரசிகர்களே கிடையாது. இன்று என் சதத்தை பார்த்து பாராட்டிய ரசிகர்கள் தான் சில நாட்களுக்கு முன்னர் என்னை விமர்சித்து இருந்தனர். இப்போது அவர்களையெல்லாம் வாயடைத்து போக வைத்ததில் மகிழ்ச்சி. நான் இன்று என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி.

    என ஹாரி புரூக் கூறினார்.

    • டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஐதராபாத் 228 ரன்கள் குவித்தது.

    கொல்கத்தா:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 19-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 9 ரன்னிலும், ராகுல் திரிபாதி 9 ரன்னிலும் வெளியேறினர்.

    அடுத்து இறங்கிய மார்க்ரம், அதிரடியில் மிரட்டினார். அவர் 26 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட அரை சதமடித்து அவுட்டானார்.

    3-வது விக்கெட்டுக்கு மார்க்ரம், புரூக் ஜோடி 72 ரன்கள் சேர்த்தது.

    அபிஷேக் சர்மா 17 பந்தில் 32 ரன் எடுத்தார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 55 பந்துகளில் 100 ரன்களுடனும், கிளாசன் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்தது. இதையடுத்து, 229 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.

    • 6-வது டெஸ்ட்டில் விளையாடும் ஹாரி புரூக்கிற்கு இது 4-வது சதம் ஆகும்.
    • கடந்த 10 ஆண்டுகளில் ஜோ ரூட் போல பேட்டிங் செய்ய வேண்டும் என்று அனைத்து குழந்தைகளும் விரும்பினர்.

    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜோ ரூட் நிதானமாக ஆடி சதம் அடித்தார். மறுமுனையில் இருந்த ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

    இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 315 எடுத்துள்ளது. ஹாரி புரூக் 184 ரன்களுடனும் ஜோ ரூட் 101 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    6-வது டெஸ்ட்டில் விளையாடும் ஹாரி புரூக்கிற்கு இது 4-வது சதம் ஆகும். 24 வயதாகும் அவர் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் 807 ரன்களை குவித்துள்ளார்.

    புரூக்கின் மிரட்டல் ஆட்டத்தை பார்த்து வியந்த இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் ஜோ ரூட் போல பேட்டிங் செய்ய வேண்டும் என்று அனைத்து குழந்தைகளும் விரும்பினர். தற்போது அடுத்த 10 ஆண்டுகளில் அதே குழந்தைகள் ஹாரி புரூக்கை போல விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்' என கூறியுள்ளார்.   

    • முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
    • ஹாரி ப்ரூக் 6 போட்டியில் ( 9 இன்னிங்ஸ்) 4 சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

    நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

    இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஜாக் கிராவ்லே (2) மற்றும் பென் டக்கர் (9) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். அடுத்ததாக களத்திற்கு வந்த ஓலி போப் 10 ரன்களில் வெளியேறினார்.

    இதன்பின் ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் ஜோடி, சிறப்பான பேட்டிங்கின் மூலம் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்ற ஹாரி ப்ரூக் இரண்டாவது போட்டியிலும் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.

    ஹாரி ப்ரூக் 169 பந்துகளில் 184 ரன்களும், ஜோ ரூட் 182 பந்துகளில் 101 ரன்களும் எடுத்திருப்பதன் மூலம் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

    இந்தநிலையில் விளையாடியுள்ள 6 போட்டியில் ( 9 இன்னிங்ஸ்) 4 சதம் அடித்து அசத்தியுள்ள ஹாரி ப்ரூக், இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

    டெஸ்ட் போட்டிகளில் முதல் 6 போட்டிகளுக்குள் 4 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில், கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் ஹார் ப்ரூக் இணைந்துள்ளார்.

    அதே போல் டெஸ்ட் போட்டிகளில் முதல் 9 இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர், வினோத் காம்ப்ளி போன்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி ஹாரி ப்ரூக் முதலிடத்தை பிடித்துள்ளார். முன்னாள் இந்திய வீரரான வினோத் காம்ப்ளே தனது முதல் 9 இன்னிங்ஸில் 798 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இதனை ஹாரி ப்ரூக் முறியடித்துள்ளார். அதே போல் முதல் 9 இன்னிங்ஸில் 800 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையும் ஹாரி ப்ரூக்கையே சாரும்.

    • நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 126 ரன்களுக்கு சுருண்டது.
    • இதன்மூலம் இங்கிலாந்து 267 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மவுண்ட் மாவ்கனி:

    இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 58.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 89 ரன்னும், டெக்க்ட் 84 ரன்னும் எடுத்தனர். ஒல்லி போப் 42 ரன்னும், போக்ஸ் 38 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், சபுத்தி, குஜ்ஜிலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 306 ரன்களில் ஆல் அவுட்டானது. டாம் பிளெண்டல் சதமடித்து, அவர் 138 ரன்னிலும், கான்வே 77 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    19 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 374 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ரூட், ஹாரி புரூக் மற்றும் பென் போக்ஸ் ஆகியோர் அரை சதமடித்தனர். ரூட் 57 ரன்னிலும், ஹாரி புரூக் 54 ரன்னிலும், பென் போக்ஸ் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப் ஒரு ரன்னில் அரை சதம் தவறவிட்டார்.

    நியூசிலாந்து சார்பில் டிக்னர், பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டும், நீல் வாக்னர், குஜ்ஜிலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    394 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்களை

    ஸ்டூவர்ட் பிராட் விரைவில் வெளியேற்றினார். இறுதியில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

    இந்நிலையில், நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்தின் டேரில் மிட்சேல் அரை சதம் அடித்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இறுதியில் நியூசிலாந்து 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்த்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் , ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஹாரி புரூக்குக்கு அளிக்கப்பட்டது.

    • டிசம்பர் மாத சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை ஐசிசி அறிவித்தது.
    • சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் கைப்பற்றி உள்ளார்.

    துபாய்:

    ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது.

    இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை ஐசிசி அறிவித்தது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக்குக்கு வழங்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த தொடரில் ஹாரி புரூக் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி 3 சதம் மற்றும் 1 அரைசதம் குவித்து அசத்தினார்.

    2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ஹாரி புரூக் ஐதராபாத் அணியால் 13.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் கைப்பற்றி உள்ளார்.

    • மூன்று டெஸ்டில் இரண்டு சதம், ஒரு அரைசதம் விளாசியுள்ளார்.
    • இரண்டு டெஸ்டிலும் அடுத்தடுத்து சதம் விளாசியுள்ளார்.

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பாகிஸ்தான் தொடரை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

    ஆனால், இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பயமில்லா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். வெற்றிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இருவருடைய எண்ணம்போன்று இங்கிலாந்து முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அபாரமாக விளையாடியது.

    ஒவருக்கு சராசரியாக 6 ரன்கள் என்றவிதம் பேட்டிங் செய்து பாகிஸ்தான் பந்து வீச்சை திணறடித்தனர். இதன் காரணமாக இரண்டு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.

    அந்த அணியின் ஹேரி ப்ரூக் பேட்டிங் இங்கிலாந்து வெற்றிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ராவல்பிடிண்யில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 116 பந்தில் 153 ரன்கள் விளாசினார். 2-வது இன்னிங்சில் 65 பந்தில் 87 ரன்கள் சேர்த்தார்.

    ஹேரி ப்ரூக்

    ஹேரி ப்ரூக்

    முல்தானில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 149 பந்தில் 108 ரன்கள் குவித்து முத்திரை பதித்தார்.

    22 வயதாகும் ப்ரூக் கடந்த ஜனவரி மாதம் டி20 அணியில் அறிமுகம் ஆனார். செப்டம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். ஒருநாள் போட்டியில் விளையாட தயாராக இருக்கிறார்.

    இந்த நிலையில் ஹேரி ப்ரூக்கை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் ஒப்பிட்டுள்ளார். ப்ரூக் குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறியதாகவது:-

    கடந்த கோடைக்கால சீசனில் அணியில் இணைந்த ப்ரூக் தற்போது, கோடைக்கால சீசன் முடிவடைவதற்குள் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகும் வகையில் முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் தொடரில் அவர் விளையாடிய விதம் அபாரமானது. அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஜொலிக்கும் அரிய வீரர்களில் ஒருவராவார். எந்த இடத்திலும் ஜொலிக்கும் வீரராக அவரை பார்க்கலாம்.

    அதேவேளையில், அரிய வீரர்களில் ஒருவர் இந்திய அணியின் விராட் கோலி. அவருடைய தொழில்நுட்ப ஆட்டம், மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் எந்த இடத்திலும் ரன்கள் குவிக்க எளிதாக்குகிறது.'' என்றார்.

    ×