அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது தனிச் சிறப்பு- ஹாரி புரூக் நம்பிக்கை

அரையிறுதியில் இந்தியாவைத் தான் எதிர்கொள்ள விரும்பினோம்.இந்திய அணி ஒரு உலகத்தரம் வாய்ந்த அணி என்பதில் சந்தேகமில்லை.
அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது தனிச் சிறப்பு- ஹாரி புரூக் நம்பிக்கை
Published on

2026 டி20 உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி முதல் அரையிறுதி ஆட்டம் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. நாளை 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது.

இந்நிலையில் தங்கள் அணி வீரர்கள் இந்தியாவை எதிர்கொள்ளவே ஆவலுடன் காத்திருப்பதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் கூறினார். அவர் அப்படி கூறியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது:-

எங்கள் அணியில் உள்ள சில வீரர்கள் அரையிறுதியில் இந்தியாவைத் தான் எதிர்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாகக் கூறக் கேட்டேன். இந்திய அணி ஒரு உலகத்தரம் வாய்ந்த அணி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு பெரிய மேடையில் அவர்களை வீழ்த்துவது என்பது தனிச் சிறப்பு. அந்த சவாலை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com