என் மலர்
நீங்கள் தேடியது "visa"
- டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் (IVAC) மூடப்பட்டது.
- அந்நாட்டில் தலைவர்கள் பொதுவெளியில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருகின்றனர்.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் (IVAC), பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்காவில் உள்ள ஜமுனா ஃபியூச்சர் பார்க் வளாகத்தில் இயங்கி வரும் இந்திய விசா விண்ணப்ப மையம், நேற்று மதியம் 2 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
வங்கதேசத்தில் உள்ள சில கிளர்ச்சியாளர்கள் இந்திய தூதரகத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றதாலும், அந்நாட்டில் சில தலைவர்கள் பொதுவெளியில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருவதாலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு இடைக்கால அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வங்கதேச உயர் ஆணையருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் வங்கதேச மக்களுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை வலுப்படுத்தவே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
- குறைந்த செலவில் வெளிநாட்டுப் பயணம் செல்ல விரும்பும் இந்தியர்களின் சொர்க்கமாகத் தாய்லாந்து உள்ளது.
- சிங்கப்பூர் இந்தியர்களின் டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
தினம் பின் தூங்கி முன் எழுந்து வாரம் முழுவதும் அலுவலகத்துக்கு வீட்டுக்கும் இடையில் பலரின் பயணம் முடிந்துவிடுகிறது.
வார விடுமுறை, பண்டிகை விடுமுறை, தொடர் விடுமுறை எப்போதும் வரும் என காத்திருப்பவர்களே அதிகம்.
கூண்டுக்குள் வாழ்ந்து பழகிய கிளிக்கு சுதந்திரம் என்பது தண்டனையாகவும் இருக்கலாம். ஆனால் மனித இனத்திற்கு பயணம் என்பது இன்றியமையாதது.
அதிலும் சுற்றுலா என்பது வெறும் பயணம் மட்டுமல்ல. அது புதிய கலாச்சாரங்களை கண்டறிவதும் புதிய மக்களைச் சந்திப்பதும் என்றென்றும் நிலைத்திருக்கும் நினைவுகளை உருவாக்குவதும் ஆகும். அது ஆன்மீக தேடலாகவும் உள்நோக்கிய பயணமாகவும் இருக்கலாம்.
இருப்பது ஒரு வாழ்க்கை, இதில் நாம் வாழும் இந்த அழகான உலகத்தின், இயற்கையின் பிரமிப்புகளை கண்ணுற்று காணும் வாய்ப்பு ஒவ்வொரு மனிதனுக்குமான உரிமை.
அந்த வகையில் சுற்றுலா செல்வதில் இந்தியர்களை அடித்துக் கொள்ள முடியாது. அது பக்கத்தில் ஊரில் உள்ள மொட்டைப் பாறையாக இருந்தாலும் சரி வெளிநாடாக இருந்தாலும் சரி அவரவர் சக்திக்கு ஏற்றவாறு சுற்றுலா சென்றவண்ணம் தான் உள்ளனர்.

சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் மகனை டூருக்கு அனுப்ப காசில்லாத தந்தை ராஜ்கிரண் அவர்களை அதே ஊரிலேயே குளத்தில் குளிப்பது, நாடகம் பார்ப்பது என சிறு சிறு விஷயங்களில் உள்ள இன்பத்தை அனுபவிக்கச் செய்வார்.
அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அதன் இயக்குனர் சேரன், ஒரு ஊருக்குள்ளேயே இத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறது என்பதை உணர்த்தவே அந்த சீக்வன்ஸ் என்று கூறியிருப்பார்.

ஆனால் இப்போது நகர்வாசிகளாகிவிட்ட மனிதர்களுக்கு அதுவும் கிடைப்பது அரிதே. எனவே இந்த வெற்றிடத்தை சசுற்றுலா இட்டு நிரப்புகிறது என்றே கூறலாம்.
அந்த வகையில் 2025-ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் விரும்பிச் சென்ற நாடுகளைப் பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.
2025-ஆம் ஆண்டில் இந்தியர்களின் வெளிநாட்டுப் பயண ஆர்வம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வழக்கமான சுற்றுலாத் தலங்கள் மட்டுமின்றி, ஜப்பான், தென் கொரியா, ஜார்ஜியா போன்ற புதிய நாடுகளையும் இந்தியர்கள் தேடிச் சென்றுள்ளனர்.
இருப்பினும், இந்திய சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இப்போதும் முதலிடத்தில் இருப்பவை பாரம்பரியமான சில நாடுகளே.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகம் பயணித்த முதல் 10 நாடுகளின் இவைதான்...
பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஐக்கிய அரபு அமீரகம். சுற்றுலா, தொழில் நிமித்தமான பயணங்கள் மற்றும் அங்கு வசிக்கும் உறவினர்களைக் காணச் செல்வது என சுமார் 7.78 மில்லியன்(77 லட்சம்) இந்தியர்கள் இந்த ஆண்டு அமீரகத்திற்குப் பயணம் செய்துள்ளனர்.

துபாய் மற்றும் அபுதாபி ஆகியவை இந்தியர்களின் விருப்பமான இடங்களாகத் தொடர்கின்றன.
இரண்டாவது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா உள்ளிட்ட புனிதப் பயணங்கள் மட்டுமின்றி, தொழில் மற்றும் குடும்பப் பயணங்களுக்காகவும் சுமார் 3.42 மில்லியன் இந்தியர்கள் இந்தாண்டு இங்கு சென்றுள்ளனர்.

சுற்றுலா, கல்வி மற்றும் குடும்ப உறவுகளை இந்தியர்கள் சந்திக்கச் செல்வதில் அமெரிக்கா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

டிரம்ப் அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதும், அதை இம்மியளவும் சட்டை செய்யாமல் இந்த ஆண்டில் சுமார் 2.14 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நான்காவது தாய்லாந்து. குறைந்த செலவில் வெளிநாட்டுப் பயணம் செல்ல விரும்பும் இந்தியர்களின் சொர்க்கமாகத் தாய்லாந்து உள்ளது.

தாய்லாந்து
ஆன்மிகச் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு என சுமார் 1.91 மில்லியன் இந்தியர்கள் இவ்வாண்டு தாய்லாந்தை கண்டு ரசித்துள்ளனர்.

ஐந்தாவது சிங்கப்பூர். பாதுகாப்பு, எளிதான போக்குவரத்து மற்றும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கக்கூடிய இடங்கள் அதிகம் இருப்பதால், சிங்கப்பூர் இந்தியர்களின் டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

ஆறாவது பிரிட்டன். லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் காணவும், கல்வி மற்றும் வணிக ரீதியாகவும் இந்தியர்கள் பிரிட்டனை அதிக அளவில் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஏழாவது கத்தார். கத்தாரின் எளிமையாக்கப்பட்ட விசா நடைமுறைகள் மற்றும் தோஹா வழியாகச் செல்லும் சர்வதேச விமான இணைப்புகள் காரணமாக, இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை இங்கு அதிகரித்துள்ளது.

எட்டாம் இடத்தில் கனடா. சுற்றுலா மற்றும் அங்கு குடியேறியுள்ள உறவினர்களைச் சந்திக்கச் செல்வதற்காகக் கனடா இப்போதும் இந்தியர்களின் விருப்பமான நாடாகவே நீடிக்கிறது.

ஒன்பதில் ஓமன்.. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மற்றும் கலாச்சார அனுபவங்களுக்காக இந்தியர்கள் ஓமனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். விசா விதிமுறைகள் தளர்த்தப்பட்டது இதற்கு முக்கியக் காரணமாகும்.

பட்டியலில் 10 ஆம் இடத்தை பிடிக்கிறது மலேசியா. பட்ஜெட் பயணங்கள் மற்றும் குடும்பச் சுற்றுலாவுக்குஉகந்த நாடாக மலேசியா பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியர்களுக்கான விசா விலக்கு மற்றும் சிறந்த விமான போக்குவரத்து வசதிகள் மலேசியாவை இந்தியர்களின் விருப்பமான இடமாக தொடர்ச் செய்துள்ளது.
மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டை இனிதே இந்தியர்கள் கழித்துள்ளனர். விசா நடைமுறைகள் எளிதாக்கப்படுவதும், நேரடி விமான சேவைகள் அதிகரிப்பதும் வரும் ஆண்டுகளில் இந்தப் பட்டியலை இன்னும் மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பில்லியன் கணக்கான டாலர்கள் கருவூலத் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு கணக்கில் வந்து சேரும்.
- குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கோல்டு கார்டு விசா ரத்து செய்யப்படலாம்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக குடியேற்றத்துக்கு கடும் கட்டுபாடுகளை விதித்தார். அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கும் கட்டுபாடுகளை கொண்டு வந்தார்.
இதற்கிடையே அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற கோல்டு கார்டு(தங்க அட்டை) விசா திட்டம் கொண்டு வரப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார். 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.44.98 கோடி) செலுத்தினால் கோல்டு கார்டு விசா வழங்கப்படும் என்றும் இதற்கான நடைமுறைகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதன்பின் கோல்டு கார்டு விசாவுக்கான கட்டணத்தை குறைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் 1 மில்லியன் டாலர் செலுத்தும் தனிநபர்களுக்கும், வெளிநாட்டு ஊழியருக்கு 2 மில்லியன் டாலர் செலுத்தும் நிறுவனங்களுக்கும் கோல்டு கார்டு விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கோல்டு கார்டு விசா திட்டத்தை அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கோல்டு கார்டு விற்பனையை டிரம்ப் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் வெளிநாட்டினர் அமெரிக்க அரசிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.8.98 கோடி) நன்கொடையாக வழங்குவதன் மூலம் நிரந்தரமாக தங்கும் அந்தஸ்தைப் பெறுவார்கள்.
இதுதொடர்பாக டிரம்ப் கூறுகையில்," கோல்டு கார்டு விசா என்பது ஒரு கிரீன் கார்டு போன்றது. ஆனால் கிரீன் கார்டை விட பெரிய நன்மைகளை கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து நிதிகளும் "அமெரிக்க அரசாங்கத்திற்கே செல்லும்.
பில்லியன் கணக்கான டாலர்கள் கருவூலத் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு கணக்கில் வந்து சேரும். இதன்மூலம் நாம் நாட்டிற்கு நன்மை பயக்கும் காரியங்களைச் செய்ய முடியும். இந்தத் திட்டம் பெருநிறுவனங்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற திறமையாளர்களைப் பணியமர்த்தித் தக்கவைத்துக் கொள்ள உதவும்" என்றார்.
அமெரிக்காவின் மற்ற விசாவை போலவே, தேசிய பாதுகாப்பு அல்லது குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கோல்டு கார்டு விசா ரத்து செய்யப்படலாம். 21 வயதுக்குட்பட்ட வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் திருமணமாகாத குழந்தைகளை விண்ணப்பத்தில் சேர்க்கலாம்.
ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 15 ஆயிரம் டாலர் செயலாக்கக் கட்டணமும், விசாவை பெற 1 மில்லியன் டாலரும் நன்கொடையாக செலுத்த வேண்டும்.
- வெளிநாடுகளை சேர்ந்த 85 ஆயிரம் பேர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
- நமது சமூகங்களின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பவர்கள்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப் பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவோம் என்ற முழக்கத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வெளிநாட்டினரின் 85 ஆயிரம் விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிபர் டிரம்ப்பும் செயலாளர் மார்கோ ரூபியோவும் ஒரு எளிய ஆணையைப் பின்பற்றுகிறார்கள். அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றும் வரை அவர்கள் ஓயமாட் டார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 85 ஆயிரம் பேர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
இதுமுந்தைய ஆண்டை விட 2 மடங்கு அதிகம். தாக்குதல்கள் மற்றும் திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம். இவை மட்டுமே கிட்டத்தட்ட பாதி விசா ரத்துகளுக்குக் காரணம் ஆகும்.
இவர்கள் நமது சமூகங்களின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பவர்கள். எனவே அவர்கள் நம் நாட்டில் இருக்க நாங்கள் விரும்பவில்லை.
அமெரிக்கா வர விசாவுக்கு விண்ணபிப்பவர்களுக்கு அனுமதி வழங்க நாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமோ எடுத்துக்கொள்வோம். மேலும், விண்ணப்பதாரர் அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்பதை உறுதி செய்யும் வரை நாங்கள் விசா வழங்க மாட்டோம்.
ஒரு விண்ணப்பதாரர் விசாவிற்குத் தகுதி பெறுகிறாரா என்பதைத் தீர்மானிக்கும்போது, தூதரக அதிகாரிகள் ஒரு காரணியை மட்டும் பார்க்காமல், அந்த நபரின் ஒட்டுமொத்த சூழ்நிலையையும் பார்த்து, பின்னர் விசா வழங்குவற்கான தகுதி குறித்து தீர்மானிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே பெண் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- புதுடெல்லியில் பிரதமர் மோடி, அதிபர் புதின் ஆகியோர் கூட்டாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
- அப்போது பேசிய பிரதமர் மோடி ரஷியர்களுக்கு விரைவில் இ டூரிஸ்ட் விசா வசதியை வழங்கவுள்ளோம் என்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், இந்தியா–ரஷியா நாடுகளுக்கு இடையிலான மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ரஷிய சுற்றுலாப் பயணிகளுக்கான 30 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் இலவச இ-விசா வசதியை இந்தியா அறிவித்துள்ளது. இந்த முடிவு இரு நாடுகளின் நெருங்கிய உறவை பிரதிபலிக்கிறது.
புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி கூறுகையில், ரஷிய குடிமக்களுக்கு விரைவில் இ டூரிஸ்ட் விசா மற்றும் குரூப் டூரிஸ்ட் விசா வசதிகளை இலவசமாக வழங்க உள்ளோம். விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
- ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார்.
- அமெரிக்காவில் மேற்படிப்பை தொடர ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார்.
ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் ரோகிணி (வயது 38). இவர் தற்போது ஐதராபாத்தில் உள்ள பத்மாராவ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார். அமெரிக்காவில் வசிக்கவும், மேற்படிப்பை தொடரவும், பயிற்சி பெறவும் ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்ய அமெரிக்காவிற்கு சென்ற ரோகிணி விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல மாதங்கள் காத்திருந்தார்.
அவரது விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் ரோகிணியின் அமெரிக்காவில் பயிற்சி பெற வேண்டும் என்ற கனவு தகர்ந்து போனது. விரக்தியுடன் காணப்பட்ட ரோகிணி மீண்டும் ஐதராபாத் திரும்பினார்.
நேற்று வீட்டின் அறையில் தனியாக இருந்த ரோகிணி அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் ரோகிணியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் ரோகிணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு ரோகிணியின் பெற்றோர் கதறி துடித்தனார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
- அமெரிக்காவில் பல மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.
அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.
டிரம்ப் அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் 2025-26ம் கல்வி ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை சரிவை சந்தித்துள்ளது.
சர்வதேசக் கல்வி நிறுவனத்தின் (Institute of International Education) அறிக்கைப்படி, 2025-26ம் கல்வி ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை 17% சரிந்துள்ளது.
2023-24 உடன் ஒப்பிடுகையில் இளங்கலையில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 11.3% அதிகரித்துள்ளது. அதே சமயம் முதுகலை பிரிவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 9.5% சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவுக்கு புதிய விசா நடைமுறை இதற்கு ஒரு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
- நாட்டிற்குள் நுழைய பயணத்திற்கு முன்பு முன்பு விசா பெற வேண்டும்
இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஈரான் இந்த சலுகையை வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்த சலுகையை ஈரான் நிறுத்தி வைத்துள்ளது.
வரும் நவம்பர் 22 முதல், சாதாரண பாஸ்போர்ட் கொண்ட இந்திய பயணிகள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நாட்டிற்குள் நுழைய பயணத்திற்கு முன்பு முன்பு விசா பெற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு செல்ல ஈரான் முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் நிலையில் இந்த விசா ரத்து சிரமத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.
- டிரம்ப் நிர்வாகம் அமெரிக்கர்களுக்கே வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது
- திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை
அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. மேலும் H-1B விசா தொடரான பல புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டன.
இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.
H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், H-1B விசா திட்டம் குறித்து தனது முந்தைய நிலைப்பாடுகளில் இருந்து மாறி, அதற்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய டிரம்ப், "தனது நிர்வாகம் அமெரிக்கர்களுக்கே வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இருப்பினும் சிக்கலான, பல உயர் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை, உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அமெரிக்கா ஈர்ப்பது மிக அவசியம்" என்று தெரிவித்தார்.
- அமெரிக்க விசா வழங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
- டிரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன. இதில் விசா வழங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் அமெரிக்கா விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு இதய நோய், நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்று டிரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் நபருக்கு தொற்று நோய் இருக்கிறதா, என்னென்ன தடுப்பூசிகளை இதுவரை அவர்கள் செலுத்தி இருக்கிறார்கள், அவர்களின் மனநிலை ஆரோக்கியமாக இருக்கிறதா ஆகிய ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.
இதில் தற்போது கூடுதலாக நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் டிரம்ப் நிர்வாகம் சேர்த்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.
அதில் விண்ணப்பதாரரின் உடல் நலன் எப்படி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், குறிப்பாக இதய நோய் , சுவாச நோய், புற்றுநோய், நீரிழிவு, வளர்சிதை மாற்ற நோய்கள், நரம்பியல் நோய்கள் மற்றும் மனநல நிலைமைகள் உள்ளிட்ட சில மருத்துவ நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நோய்கள் பராமரிப்புக்கு லட்சக்கணக்கான டாலர் தேவைப்படலாம் அந்த செலவுகளை ஏற்கக் கூடிய வகையில் விண்ணப்பதாரர் இருக்கிறாரா என்பதையும் விசா அதிகாரிகள் மதிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் விண்ணப்பதாரரின் குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையை மதிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு கொண்டு வந்துள்ளது.
- இதில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை குறைத்துள்ளது.
டொரண்டோ:
கனடாவில் குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் கொண்டு வந்தது. இதில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை அதிரடியாகக் குறைத்தது.
இந்நிலையில், தற்காலிகமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், மாணவர் விசாக்கள் தொடர்பான மோசடிகளைக் குறைக்கவும் தொடர்ந்து 2-வது ஆண்டாக சர்வதேச மாணவர்களுக்கான அனுமதியை கனடா அரசு குறைத்துள்ளது.
கனடாவின் உயர்கல்வி நிலையங்களில் படிக்க அனுமதி கோரிய இந்திய மாணவர்களின் விண்ணப்பங்களில் சுமார் 74 சதவீதம் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
- விசா நிலையை பழைய கட்டணத்தில் மாற்றி கொள்ளலாம்.
- எச்-1பி விசாவில் வெளிநாட்டு நபரை பணியமர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் தங்கி பணிபுரிய வெளிநாட்டு பணியாளர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) உயர்த்தி அதிபர் டிரம்ப் கடந்த மாதம் 19-ந்தேதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
எச்-1பி விசாவில் வெளிநாட்டு நபரை பணியமர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது அதிகளவில் எச்-1பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்குதான் பொருந்தும் என்றும் ஏற்கனவே எச்-1பி வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என்றும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில் எச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், எப்-1 மாணவர் விசா அல்லது எல்-1 தொழில்முறை விசா போன்ற செல்லுபடியாகும் விசாக்களில் அமெரிக்காவில் வசிக்கும் நபர்கள் தங்களது விசாவை எச்-1பி விசா நிலைக்கு மாற்ற விண்ணப்பிக்கும்போது உயர்த்தப்பட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் தங்கள் நிலையைப் புதுப்பிக்க அல்லது நீட்டிக்க பழைய கட்டணத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி மீண்டும் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அமெரிக்காவில் படித்து வரும் சர்வதேச மாணவர்கள் உள்பட பல்வேறு வகை விசா வைத்திருப்பவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.






