என் மலர்
நீங்கள் தேடியது "ban"
- வதந்தியை பரப்பாதீர் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.
- அப்படி எந்த ஒரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என தகவல்.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக வதந்தி பரவுவதாக தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
வதந்தியை பரப்பாதீர் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இது முற்றிலும் வதந்தியே.
அப்படி எந்த ஒரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார் என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
- டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு 5 ஆண்டுக்கு முன் தடை விதித்தது.
- டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை.
புதுடெல்லி:
சீன வீடியோ செயலியான டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு 5 ஆண்டுக்கு முன் தடை விதித்தது.
இதற்கிடையே, டிக் டாக் மீதான தடையை இந்தியா நீக்கியுள்ளது என செய்திகள் நேற்று மாலை முதல் தீயாகப் பரவின. டிக் டாக் அல்லது அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், டிக் டாக் தடையை நீக்கும் எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற எந்தவொரு அறிக்கையும், செய்தியும் தவறானது மற்றும் தவறாக வழிநடத்தும் என இந்தியா அரசு தெரிவித்துள்ளது.
- தடைசெய்யப்பட்ட 25 புத்தகங்களும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 152, 196 மற்றும் 197 இன் கீழ் வருவது கண்டறியப்பட்டுள்ளது.
- புத்தகங்களுடன் தொடர்புடைய அனைத்து பிரதிகள், ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாநிலத்திற்கு பறிமுதல் செய்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 25 புத்தகங்களை வெளியிடுவதற்கும் விநியோகிப்பதற்கும் அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் உள்ளதாகக்கூறி 25 புத்தகங்களுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு தடை விதித்தது. அவை பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் பிரிவு 98 கீழ் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அருந்ததி ராயின் 'ஆசாதி', அரசியல் எழுத்தாளர் சுமந்திர போஸ் எழுதிய 'காஷ்மீர் அட் தி க்ராஸ்ரோட்ஸ்' உள்ளிட்ட புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் உள்துறை, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஆகஸ்ட் 5-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், இந்தப் புத்தகங்கள் ஜம்மு-காஷ்மீர் பற்றிய ஒரு தவறான கதையை பரப்புகின்றன என்றும், அது வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் இளைஞர்கள் பங்கேற்பதற்குப் பின்னால் குறிப்பிடத்தக்க உந்துசக்தியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட 25 புத்தகங்களும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 152, 196 மற்றும் 197 இன் கீழ் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது பிரிவினைவாதத்தை ஊக்குவித்தல் மற்றும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவித்தல் தொடர்பானது. இந்த விதிகளின் கீழ், இந்த புத்தகங்களுடன் தொடர்புடைய அனைத்து பிரதிகள், ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாநிலத்திற்கு பறிமுதல் செய்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
- இது தண்டனை அல்ல. மரபுகள் மற்றும் மதிப்புகளை பாதுகாப்பதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கை.
- நாங்கள் காதல் திருமணத்தையோ, சட்டங்களையோ எதிர்க்கவில்லை.
சண்டிகர்:
பஞசாப் மாநிலம் சண்டிகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் மனக்பூர் ஷெரீப் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி முறை தவறி திருமணம் செய்து கொண்டதாக எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து இனி பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் ஜோடியினர் திருமணம் செய்ய தடை விதித்து கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யும் ஜோடி அந்த கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள பகுதிகளிலோ வசிக்க முடியாது.
அவர்களுக்கு யாராவது அடைக்கலம் கொடுத்தால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிராம தலைவர் தல்வீர் சிங் கூறும்போது, இது தண்டனை அல்ல. மரபுகள் மற்றும் மதிப்புகளை பாதுகாப்பதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கை ஆகும். நாங்கள் காதல் திருமணத்தையோ, சட்டங்களையோ எதிர்க்கவில்லை, ஆனால் எங்கள் கிராமத்தில் நாங்கள் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
கிராம கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
- பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக டாபர் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
- வழக்கு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக டாபர் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பிய பிறகும் கூட ஒரே வாரத்தில் 6,182 விளம்பரங்களை டாபர் நிறுவனத்திற்கு எதிராக வெளியிட்டதாக பதஞ்சலி மீது குற்றம்சாட்டியது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, டாபர் நிறுவனத்தின் லேகியத்தை அவதூறாகச் சித்தரிக்கும் வகையில் விளம்பரம் வெளியிடக் கூடாது எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கனரக வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயக்குவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
- மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஜேசிபி, ஹிட்டாட்சி, பாறைகளை துளையிடும் இயந்திரம், போர் வெல் உள்ளிட்ட கனரக வாகனங்களால் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக இயற்கை வளங்களை பாதிக்கும் வண்ணம் அரசு அனுமதியின்றி தடை செய்யப்பட்ட கனரக வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று முதல் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த கனரக வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயக்குவது கண்டறியப்பட்டால் இயக்குபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வாகனங்களை வைத்திருந்தாலோ, இயக்கினாலோ ரூ.25,000 அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம். அதே போல முதல் முறை அபராதம் விதிக்கப்படும், தொடர்ந்து கனரக வாகனங்கள் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்வதுடன் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.
- ஆட்டோ டிரைவர்கள் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்குமாறு கோரி தீவிர போராட்டம் நடத்தினர்.
- கர்நாடக அரசு, இந்த பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் டாக்சி நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன.
பெங்களூருவில் மட்டும் சுமார் 1.20 லட்சம் பைக் டாக்சிகள் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வந்தன. பைக் டாக்சியால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய ஆட்டோ டிரைவர்கள் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்குமாறு கோரி தீவிர போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, கர்நாடக அரசு, இந்த பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் கர்நாடகத்தில் பைக் டாக்சி சேவை முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக பைக் டாக்சி சேவையை வழங்கிய 1.20 லட்சம் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதை நம்பி இருந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ள பைக் டாக்ஸி சேவையை மீண்டும் அனுமதிக்கக் கோரி 8 மாவட்டங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் பெங்களூருவில் பேரணி நடத்தினர்.
மைசூரு, மண்டியா, ஹாசன், தாவணகெரே, தும்கூர், ராமநகரா, சிவமொக்கா மற்றும் கனகபுரா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
- கர்நாடக அரசு கடந்த 2021-ம் ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்கியது
- பைக் டாக்சி சேவையை வழங்கிய 1.20 லட்சம் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதை நம்பி இருந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் டாக்சி நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன.
பெங்களூருவில் மட்டும் சுமார் 1.20 லட்சம் பைக் டாக்சிகள் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பைக் டாக்சிகளால் ஆட்டோ டிரைவர்களின் வருவாய் வெகுவாக குறைந்தது. ஒருவர் மட்டும் பயணம் மேற்கொள்பவா்கள் பைக் டாக்சியை அதிகம் நாடினர்.
இதற்கிடையே பைக் டாக்சி ஓட்டுனர்கள், பெண் பயணிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவங்கள் அதிகரித்தன.
அத்துடன் பைக் டாக்சியால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய ஆட்டோ டிரைவர்கள் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்குமாறு கோரி தீவிர போராட்டம் நடத்தினர்.
இருப்பினும் கர்நாடக அரசு கடந்த 2021-ம் ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்கியது. ஆனால் பயணம் செய்த பெண் பயணிகளுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல், அந்த டாக்சி சேவையை தவறாக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் கர்நாடக அரசு கடந்த ஆண்டு (2024) பைக் டாக்சிக்கு வழங்கிய அனுமதியை வாபஸ் பெற்றது.
இதையடுத்து கர்நாடக அரசு, இந்த பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பிறகு ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரின. இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும் ஜூன் 16-ந் தேதி (நேற்று) முதல் கர்நாடகத்தில் பைக் டாக்சி சேவையை நிறுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி கர்நாடகத்தில் பைக் டாக்சி சேவை முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக பைக் டாக்சி சேவையை வழங்கிய 1.20 லட்சம் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதை நம்பி இருந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
அதாவது அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய மென்போருள் சேவை நிறுவனங்களின் சங்கம் (நாஸ்காம்), கர்நாடக அரசின் போக்குவரத்துத்துறை ஆகியவை பைக் டாக்சியை அனுமதிப்பது குறித்து விரைவாக விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் மாநில அரசு, பைக் டாக்சியை அனுமதிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்பது போல் தெரிகிறது.
பைக் டாக்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பெங்களூருவில் தடையை மீறி இயக்கப்படும் பைக் டாக்சிகளை பறிமுதல் செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, யஷ்வந்தபுரம் மற்றும் ராஜாஜிநகர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தங்களது பகுதிகளில் தடையை மீறி இயக்கப்பட்ட பைக் டாக்சிகளை பறிமுதல் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். நேற்று காலையில் இருந்து ராஜாஜிநகர், யஷ்வந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்
அப்போது தடையை மீறி இயக்கப்பட்ட பைக் டாக்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். யஷ்வந்தபுரம், ராஜாஜிநகர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட பைக் டாக்சிகளை பறிமுதல் செய்தார்கள்.மேலும் அந்த வாகன ஓட்டிகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் பெங்களூரு மாநகர் முழுவதும் அத்துமீறி இயங்கிய 103 பைக் டாக்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- புகை பிடிப்பவர் மட்டுமின்றி அதனை சுவாசிப்பவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது.
- இ-சிகரெட்டுகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாரீஸ்:
ஐரோப்பிய நாடான பிரான்சில் புகை பிடிப்பதால் ஒரு நாளில் சராசரியாக 200 பேர் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இது புகை பிடிப்பவர் மட்டுமின்றி அதனை சுவாசிப்பவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. குறிப்பாக குழந்தைகளிடம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
எனவே குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, பூங்காக்கள் அருகே புகை பிடிப்பதை தடை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) 1-ம் தேதி முதல் இந்தத் தடை அமலுக்கு வரும் என சுகாதாரத்துறை மந்திரி கேத்தரின் வவுட்ரின் தெரிவித்தார்.
அதே சமயம், இ-சிகரெட்டுகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- மையோனைஸ் தயாரிக்க பச்சை முட்டை பயன்படுத்துவதால், கிருமிகள் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- மையோனைஸ் உற்பத்தி செய்ய, சேமித்து வைக்க, விநியோகம் செய்ய, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
முட்டையில் இருந்து செய்யப்படும் மையோனைஸ்-க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மையோனைஸ் என்பது முட்டை மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் மசாலா பொருட்கள் கலந்த ஒரு உணவுப்பொருள். இதை தயாரிக்க பச்சை முட்டை பயன்படுத்துவதால், கிருமிகள் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மையோனைஸ் உற்பத்தி செய்ய, சேமித்து வைக்க, விநியோகம் செய்ய, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில், ஏப்ரல் 8-ந்தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து எம்.பி.க்கள் யுவான் யாங், அப்திசம் முகமது நுழைய தடை.
- இஸ்ரேலுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்தை பரப்ப விரும்பியதால் தடை.
இங்கிலாந்து எம்.பிக்களை கொண்ட பாராளுமன்ற குழுவினர் இஸ்ரேல் நாட்டுக்கு சென்றனர். இக்குழுவில் இடம்பெற்றிருந்த ஆளும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த 2 பெண் எம்.பி.க்களான யுவான் யாங், அப்திசம் முகமது ஆகியோரை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. அவர்களை நாட்டுக்குள் நுழைய தடை விதித்து திருப்பி அனுப்பியது.
இதுதொடர்பாக இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடியேற்ற ஆணையம் கூறும்போது, இங்கிலாந்து எம்.பி.க்கள் யுவான் யாங், அப்திசம் முகமது ஆகியோர் பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தவும் இஸ்ரேல் எதிர்ப்பு வெறுப்பைப் பரப்பவும் திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இஸ்ரேலுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்தை பரப்ப விரும்பியதால் அவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்தது.

எம்.பிக்களுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இஸ்ரேலுக்கு இங்கிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டேவிட் லாமி கூறும்போது, இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களை இதுபோன்று நடத்துவது சரியல்ல என்பதை இஸ்ரேல் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளேன்.
இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது, எதிர்மறையானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. 2 எம்.பி.க்களை தொடர்பு கொண்டு ஆதரவை தெரிவித்துள்ளேன்.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு திரும்புவதையும், ரத்தக்களரியை நிறுத்துவதற்கும், பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கும், காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் இங்கிலாந்து அரசு கவனம் செலுத்துகிறது என்றார்.
- கோடை சீசனை வரவேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி தயாராகி வருகிறது.
- தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 7 பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டி:
கோடை சீசனை வரவேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி தயாராகி வருகிறது. சீசனை அனுபவிக்க ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் மலர் கண்காட்சி, காய், கனி கண்காட்சி, ரோஜா கண்காட்சி என பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா என பூங்காக்களில் இந்த கண்காட்சிகள் நடைபெற உள்ளன. கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கி நடப்பதால் பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் 5-ந் தேதி வரை இந்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான 7 பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






