என் மலர்
நீங்கள் தேடியது "ban"
- பிப்ரவரி 12, 1965 அன்று கோயம்புத்தூருக்கு இந்திரா காந்தி வருகை புரியவில்லை.
- முழுப் படமும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள 'பராசக்தி' படத்தை தடைசெய்ய வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அணி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில துணைத் தலைவர் அருண் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"1965-ல், அனைத்து மாநிலங்களிலும் அஞ்சல் அலுவலகப் படிவங்கள் இந்தியில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்று காங்கிரஸ் அரசாங்கம் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது எங்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்குடன் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான புனைவு ஆகும்.
திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்திப்பது போன்றும், அதில் இந்திரா காந்தி வில்லத்தனமாகப் பேசுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது முழுவதும் ஒரு கற்பனை சித்தரிப்பு காட்சி. மறைந்த தேசியத் தலைவர்களை அவர்கள் வரலாற்றில் இடம்பெறாத நிகழ்வுகளில் சம்பந்தப்படுத்திச் சித்தரிப்பது சட்டத்திற்குப் புறம்பானது.
இந்த சித்தரிப்பை மேலும் வலுப்படுத்தி திரைப்படத்தில் இந்திரா காந்தி பிப்ரவரி 12, 1965 அன்று கோயம்புத்தூருக்கு வருகை தந்ததாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் அப்படி ஒரு வருகை நிகழவே இல்லை. பின்னர், அவர் முன்னிலையில் ஒரு ரயில் எரிக்கப்படுவது போன்ற காட்சிகளும், இந்தி திணிப்புக்கு எதிரான கையெழுத்துக்களை அவர் ஏற்றுக்கொண்டது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் எதுவும் வரலாற்றில் நடக்கவில்லை, இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அதுபோல திரைப்படத்தின் இறுதியில், நமது தலைவர்களான கே. காமராஜர், இந்திரா காந்தி மற்றும் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் உண்மையான புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. அதனுடன், பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி 200-க்கும் மேற்பட்ட தமிழ் மக்களைச் சுட்டுக் கொன்றது என்ற முற்றிலும் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு எந்தவித ஆதாரமும் இல்லாமல் முன்வைக்கப்பட்டு, நமது கட்சியையும், நமது தலைவர்களையும் தவறான மற்றும் அவதூறான தகவல்களின் மூலம் வேண்டுமென்றே கலங்கப்படுத்தும் காட்சி.
இது தவிர, காங்கிரஸ் கொடி எரிக்கப்படும் காட்சிகள் கூட படத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த முழுப் படமும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் நிகழாத நிகழ்வுகளைச் சித்தரிக்கும் பராசக்தி திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். திரைப்படத் தயாரிப்புக் குழு பொது மன்னிப்புக் கோர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அநீதிக்கு எதிராகத் தங்கள் குரல்களை எழுப்புமாறு அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
#பராசக்தி திரைப்படத்தைத் தடை செய்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- அயோத்தியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை மதிக்க இந்த நடவடிக்கை.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி மற்றும் அசைவ உணவு விற்பனை மற்றும் விநியோகதிற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஏற்கெனவே அயோத்தியின் பஞ்சகோசி மற்றும் கோசி பரிக்ரமா எல்லைகளுக்குள் மது மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தத் தடை 15 கி.மீ சுற்றளவிற்கு விரிவாக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இந்தப் பகுதிக்குள் அசைவ உணவுகளைத் தயாரிக்கவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது.
மேலும், ராமர் கோயிலை மையமாக வைத்து 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு உட்பட்ட பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்யக் கூடாது என்று ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அயோத்தியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை மதிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது மக்களின் தனிமனித உணவு உரிமையில் தலையிடும் செயல் என்றும், உணவு விநியோகத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களைப் பாதிக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- இந்த மருந்து அதிகமாக காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
- விற்பனை செய்தல் மற்றும் வினியோகிப்பதை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என்று மத்திய அரசு கருதுகிறது.
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது. இந்த வகையில் தற்போது 100 மி. கிராமுக்கு மேலான 'நிம்சுலைடு' மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து அதிகமாக காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில்,
"100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், அந்த மருந்துக்கு பாதுகாப்பான மாற்றுகள் கிடைக்கின்றன என்றும் மத்திய அரசு அறிந்துள்ளது. மனித பயன்பாட்டுக்காக நாட்டில் இந்த மருந்தை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் வினியோகிப்பதை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என்று மத்திய அரசு கருதுகிறது.
எனவே, மருந்து பொருட்கள் சட்டப்பிரிவுகளின்படி 100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் தடை செய்யப்படுகின்றன" என கூறப்பட்டுள்ளது.
- குடியரசு தினமான ஜனவரி 26 முதல் இந்த தீர்மானம் அமலுக்கு வருகிறது
- குழந்தைகள் தங்கள் வீடுகளில் பெண்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தின் கீழ் உள்ள 15 கிராமங்களில் மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் கேமராக்கள் பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்களை பயன்படுத்த அக்கிராம பஞ்சாயத்துகள் மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. காசிபூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இக்கிராமங்களின் தலைவர் சுஜ்னராம் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற ஒரு சமூக கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த தடை ஜலோர் மாவட்டத்தின் காஜிபுரா, பாவ்லி, கல்ரா, மனோஜியா வாஸ், ராஜிகாவாஸ், டட்லாவாஸ், ராஜ்புரா, கோடி, சிட்ரோடி, அல்ரி, ரோப்சி, கானாதேவல், சாவிதர், பின்மாலின் ஹாத்மி கி தானி மற்றும் கான்பூர் உள்ளிட்ட கிராமங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களுக்கு பதில் மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் பேசுவதற்கு கீபேட் ஃபோன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும்,
இது தவிர, பள்ளி செல்லும் பெண்கள் தங்கள் படிப்புக்கு மொபைல் போன்கள் தேவைப்பட்டால் வீட்டில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள், சமூக நிகழ்வுகள் அல்லது பக்கத்து வீட்டிற்கு கூட மொபைல் ஃபோன்களை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அடுத்த மாதம் ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் தங்கள் வீடுகளில் பெண்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், இது அவர்களின் பார்வைத்திறனை பாதிக்கக்கூடும் என்றும் சவுத்ரி தெளிவுபடுத்தினார். இதுபோன்ற சர்ச்சைக்குரிய விதிமுறைகள் இக்கிராமத்தில் அடிக்கடி விதிக்கப்படுகின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டு, ஒரு இளம் ஜோடி காதல் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அக்கிராம தலைவர்கள் இரண்டு குடும்பங்களையும் ஒதுக்கிவைத்து உத்தரவிட்டனர். மேலும் மீண்டும் அவர்கள் ஊருக்குள் நுழைய ரூ.12 லட்சம் அபராதம் விதித்தனர். பின்னர் அந்த ஜோடி இதுதொடர்பாக காவல்துறையை அணுக, அதைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு பெரும்பாலான பெரியவர்களுடன் சமரசம் செய்து கொண்டனர். இருப்பினும் ஒரு சிலர் அவர்களை ஒதுக்கி வைத்ததை நியாயப்படுத்தினர். இதுபோல பல சம்பவங்கள் அக்கிராமத்தில் அரங்கேறி உள்ளன.
- கிராம பஞ்சாயத்து அலுவலகம் அருகே ஒரு சைரன் அமைத்தனர்.
- பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சுவர்ண விதான சவுதா அருகில் உள்ளது ஹலகா கிராமம். இங்கு 1452 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலான குழந்தைகள் செல்போன்களில் மூழ்கினர். மேலும் பொதுமக்கள் டி.வி. பார்ப்பதிலும் கவனம் செலுத்தினர்.
இதை கவனித்த கிராம பஞ்சாயத்து தலைவர் லட்சுமி ஜெகபதி மாணவர்களிடம் படிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அப்போது மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கிராம மக்கள் தினமும் 2 மணி நேரம் செல்போன் மற்றும் டி.வி. பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடிவு செய்து இருப்பது தெரியவந்தது. எனவே அதே போன்று இங்கும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.
அதன்படி கிராம மக்களை அழைத்து இது குறித்து தெரிவித்தார். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதன்படி கிராம பஞ்சாயத்து அலுவலகம் அருகே ஒரு சைரன் அமைத்தனர். அந்த சைரன் தினமும் இரவு 7 மணிக்கு ஒலிக்க தொடங்கியதும் கிராமத்தில் உள்ள அனைவரும் இரவு 9 மணிவரை 2 மணி நேரம் செல்போன், டி.வியை அணைத்து விடுகிறார்கள். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
- உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ரூ.5,000 வரை அபராதம்
- மின்சாரம், எரிவாயு அடிப்படையிலான அடுப்புகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், தந்தூரி தயாரிக்கப் பயன்படும் அடுப்புகளுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது டெல்லி முழுவதும் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள், தாபாக்கள், தெருவோர உணவகங்களில் நிலக்கரி மற்றும் விறகுகளைப் பயன்படுத்தும் தந்தூரி அடுப்புகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திறந்த வெளியில் எவ்விதமான எரிக்கும் செயல்களைச் செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதில் மின்சாரம், எரிவாயு அடிப்படையிலான அடுப்புகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது ரூ.5,000 வரை அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
"நகராட்சி நிறுவனங்களின் ஆணையர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் உட்பட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், சோதனைகளை நடத்தி, தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து உணவகங்களும் உடனடியாக நிலக்கரி மற்றும் விறகு பயன்பாட்டை நிறுத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன" என இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது எக்ஸ் தளத்தில், "திறந்த வெளியில் குப்பை உள்ளிட்டவற்றை எரிக்க வேண்டாம். உங்களின் சிறிய ஒத்துழைப்பு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- வெளிநாடுகளை சேர்ந்த 85 ஆயிரம் பேர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
- நமது சமூகங்களின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பவர்கள்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப் பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவோம் என்ற முழக்கத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வெளிநாட்டினரின் 85 ஆயிரம் விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிபர் டிரம்ப்பும் செயலாளர் மார்கோ ரூபியோவும் ஒரு எளிய ஆணையைப் பின்பற்றுகிறார்கள். அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றும் வரை அவர்கள் ஓயமாட் டார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 85 ஆயிரம் பேர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.
இதுமுந்தைய ஆண்டை விட 2 மடங்கு அதிகம். தாக்குதல்கள் மற்றும் திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம். இவை மட்டுமே கிட்டத்தட்ட பாதி விசா ரத்துகளுக்குக் காரணம் ஆகும்.
இவர்கள் நமது சமூகங்களின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பவர்கள். எனவே அவர்கள் நம் நாட்டில் இருக்க நாங்கள் விரும்பவில்லை.
அமெரிக்கா வர விசாவுக்கு விண்ணபிப்பவர்களுக்கு அனுமதி வழங்க நாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமோ எடுத்துக்கொள்வோம். மேலும், விண்ணப்பதாரர் அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்பதை உறுதி செய்யும் வரை நாங்கள் விசா வழங்க மாட்டோம்.
ஒரு விண்ணப்பதாரர் விசாவிற்குத் தகுதி பெறுகிறாரா என்பதைத் தீர்மானிக்கும்போது, தூதரக அதிகாரிகள் ஒரு காரணியை மட்டும் பார்க்காமல், அந்த நபரின் ஒட்டுமொத்த சூழ்நிலையையும் பார்த்து, பின்னர் விசா வழங்குவற்கான தகுதி குறித்து தீர்மானிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே பெண் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வதந்தியை பரப்பாதீர் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.
- அப்படி எந்த ஒரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என தகவல்.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக வதந்தி பரவுவதாக தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
வதந்தியை பரப்பாதீர் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இது முற்றிலும் வதந்தியே.
அப்படி எந்த ஒரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார் என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
- டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு 5 ஆண்டுக்கு முன் தடை விதித்தது.
- டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை.
புதுடெல்லி:
சீன வீடியோ செயலியான டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு 5 ஆண்டுக்கு முன் தடை விதித்தது.
இதற்கிடையே, டிக் டாக் மீதான தடையை இந்தியா நீக்கியுள்ளது என செய்திகள் நேற்று மாலை முதல் தீயாகப் பரவின. டிக் டாக் அல்லது அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், டிக் டாக் தடையை நீக்கும் எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற எந்தவொரு அறிக்கையும், செய்தியும் தவறானது மற்றும் தவறாக வழிநடத்தும் என இந்தியா அரசு தெரிவித்துள்ளது.
- தடைசெய்யப்பட்ட 25 புத்தகங்களும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 152, 196 மற்றும் 197 இன் கீழ் வருவது கண்டறியப்பட்டுள்ளது.
- புத்தகங்களுடன் தொடர்புடைய அனைத்து பிரதிகள், ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாநிலத்திற்கு பறிமுதல் செய்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 25 புத்தகங்களை வெளியிடுவதற்கும் விநியோகிப்பதற்கும் அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் உள்ளதாகக்கூறி 25 புத்தகங்களுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு தடை விதித்தது. அவை பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் பிரிவு 98 கீழ் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அருந்ததி ராயின் 'ஆசாதி', அரசியல் எழுத்தாளர் சுமந்திர போஸ் எழுதிய 'காஷ்மீர் அட் தி க்ராஸ்ரோட்ஸ்' உள்ளிட்ட புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் உள்துறை, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஆகஸ்ட் 5-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், இந்தப் புத்தகங்கள் ஜம்மு-காஷ்மீர் பற்றிய ஒரு தவறான கதையை பரப்புகின்றன என்றும், அது வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் இளைஞர்கள் பங்கேற்பதற்குப் பின்னால் குறிப்பிடத்தக்க உந்துசக்தியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட 25 புத்தகங்களும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 152, 196 மற்றும் 197 இன் கீழ் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது பிரிவினைவாதத்தை ஊக்குவித்தல் மற்றும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவித்தல் தொடர்பானது. இந்த விதிகளின் கீழ், இந்த புத்தகங்களுடன் தொடர்புடைய அனைத்து பிரதிகள், ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாநிலத்திற்கு பறிமுதல் செய்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
- இது தண்டனை அல்ல. மரபுகள் மற்றும் மதிப்புகளை பாதுகாப்பதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கை.
- நாங்கள் காதல் திருமணத்தையோ, சட்டங்களையோ எதிர்க்கவில்லை.
சண்டிகர்:
பஞசாப் மாநிலம் சண்டிகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் மனக்பூர் ஷெரீப் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி முறை தவறி திருமணம் செய்து கொண்டதாக எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து இனி பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் ஜோடியினர் திருமணம் செய்ய தடை விதித்து கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யும் ஜோடி அந்த கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள பகுதிகளிலோ வசிக்க முடியாது.
அவர்களுக்கு யாராவது அடைக்கலம் கொடுத்தால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிராம தலைவர் தல்வீர் சிங் கூறும்போது, இது தண்டனை அல்ல. மரபுகள் மற்றும் மதிப்புகளை பாதுகாப்பதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கை ஆகும். நாங்கள் காதல் திருமணத்தையோ, சட்டங்களையோ எதிர்க்கவில்லை, ஆனால் எங்கள் கிராமத்தில் நாங்கள் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
கிராம கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
- பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக டாபர் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
- வழக்கு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக டாபர் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பிய பிறகும் கூட ஒரே வாரத்தில் 6,182 விளம்பரங்களை டாபர் நிறுவனத்திற்கு எதிராக வெளியிட்டதாக பதஞ்சலி மீது குற்றம்சாட்டியது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, டாபர் நிறுவனத்தின் லேகியத்தை அவதூறாகச் சித்தரிக்கும் வகையில் விளம்பரம் வெளியிடக் கூடாது எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






