என் மலர்
நீங்கள் தேடியது "மருந்து"
- மருந்தை மற்ற ஆயுர்வேத மஹரிஷிகளும் பலவாறு கையாண்டுள்ளனர்.
- நான்கு மூல பொருட்கள் இம்மருந்தில் கலக்கப்படுகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையானவையை பற்றி ஆரோக்கிய திட்டம் என்ற தலைப்பில் தினமும் காலை பொழுதில் செய்யவேண்டிய கடமைகளைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் எலும்புகளை வலுவாக்கவும், தேய்மானத்தை தடுக்கவும் தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பார்த்தோம். அதிலும் மிக முக்கியமாக தலை, காது, பாதம் என்று மூன்று இடங்களில் கட்டாயம் எண்ணெய் தேய்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதை தனி தனி தலைப்புகளில் பார்த்தோம்.
அதில் மிக முக்கியமாக கால் வலியை தடுக்க தினமும் பாதத்தில் எண்ணெய் தேய்க்க வேண்டும். அதற்கு நல்லெண்ணெய் மிக நல்லது என்றாலும், சில மூலிகை மருந்துகள் கலந்த எண்ணெய் மிக மிக நல்லது. அவற்றை குறித்து தான் தற்போது பார்க்க இருக்கிறோம். மூலிகை மருந்துகள் கலந்து செறிவூட்டப்பட்ட எண்ணெய்கள் பல வகையில் இருக்கின்றன. அவற்றை ஆயுர்வேத மருத்துவர் நோயாளின் உடல்வாகிற்கு தக்க வண்ணம், நோயின் தாக்கத்திற்கு தக்க வண்ணம் மூலிகை எண்ணெய்களை தேர்வு செய்வார்.
மூட்டு வலி உடையவர்கள் வீட்டில் இருந்தாலும் சரி அல்லது கணுக்கால் வலி, பாத எரிச்சல், உணர்வு குறைவாக இருந்தாலும் சரி அல்லது நடைமுறை வாழ்க்கையில் அதிக அளவு வாகன பிரயாணம் செய்பவர்கள் இருந்தாலும் சரி, பாரம் தூக்கும் பணியாளர்கள், நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்கள் இருந்தாலும் சரி, உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய ஒரு அற்புத ஆயுர்வேத மூலிகை எண்ணெய் தான் பிண்ட தைலம் என்ற மருந்து. இந்திய முறை மருந்துகள் எடுத்துக்கொண்டவர்கள் அல்லது அதன் பால் ஆர்வம் கொண்டவர்கள் தெரிந்திருக்க அல்லது கேள்விபட்டுயிருக்க வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக தற்போது இருக்ககூடிய அனைத்து மருத்துவ முறைகளிலும் ஆயின்மெண்ட் என்ற மேற்பூச்சு பசை மருந்து மிக பிரபலம். பிண்ட தைலம் என்ற மருந்து தான் மருத்துவ துறையின் முதல் ஆயின்மெண்ட் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா... ஆம் இம்மருந்தை அக்காலத்தில் கூறியுள்ளது போல தயாரித்தால் அது ஆயின்மெண்ட் போல தான் இருக்கும். மேலும் இதனுடைய காரண பெயர் சொல்லே சுவாரஸ்யமாக இருக்கும்.
ஆம் பிண்டம் என்றால் உருண்டை என்ற பொருள். அதாவது இம்மருந்தை பிரயோகப்படுத்தும் போது உருட்டி எடுத்து தேய்க்க வேண்டுமாம். அதனால் தான் இதற்கு பிண்ட தைலம் என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நடைமுறையில் எளிதாக பயன்படுத்தும் வண்ணம் எண்ணெய் போலவே தயாரித்து கொடுக்கப்படுகிறது. இதனை முதல் முதலில் அறிமுகபடுத்தியவர் ஆயுர்வேத பொது மருத்துவத்தின் தந்தை என கருதக்கூடிய மஹரிஷி சரகர் என்பவர்தான்.

அவர் எழுதிய சரக சம்ஹிதை என்ற புத்தகத்தில் வாத சோணிதம் என்ற மூட்டுகளை பாதிக்கக்கூடிய சரவாங்கி நோய்பற்றிய சிகிட்சையில் இந்த தைலத்தை குறித்து பதிவு செய்துள்ளார். இந்த உன்னத மருந்தை மற்ற ஆயுர்வேத மஹரிஷிகளும் பலவாறு கையாண்டுள்ளனர். எப்படி எனில் காலத்திற்கு தக்க வண்ணம் இம்மருந்தின் மூலிகை கலவையில் ஒரு மருந்தை கூட்டியோ அல்லது குறைத்தோ, தயாரிக்கும் முறையில் சற்று வேறுபடுத்தி தயாரித்து பல வியாதிகளை குணப்படுத்தி உள்ளனர்.
ஆமா அப்படி என்ன தான் அந்த மருந்தில் உள்ளது... மொத்தம் நான்கு மூல பொருட்கள் இம்மருந்தில் கலக்கப்படுகிறது. அவை மஞ்சட்டி, நன்னாரி, தேன் மெழுகு, குங்கல்யம் ஆகும். இவற்றில் மஞ்சட்டி நன்னாரியை கஷாயமாக வைத்து நல்லெண்ணெய்யில் கலந்து காய்ச்சி தைல பாகம் வந்த பின்பு, குங்கல்யம், தேன் மெழுகு இவை இரண்டையும் வடிக்கட்டும் பாத்திரத்தில் கலந்து, எண்ணெயை பத்திரப்படுத்த வேண்டும். இவை மூட்டு வலியை ஆபாகம் செய்வதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

ரா. பாலமுருகன்
ஆபாகம் என்ற சொல்லுக்கு வலியை ஆசுவாசப்படுத்தி குறைத்தல் என்று அர்த்தம், ஆகையால் வலியால் அவதியுறுபவர்களுக்கு இம்மருந்து ஒரு வரப்பிரசாதம். இதனை எப்போது பயன்படுத்தலாம் என்றால் ஒரு நாளைக்கு இருவேளை காலையில் குளிக்கும் முன்பு பிண்ட தைலத்தை சூடு செய்து வலியுள்ள இடத்தில் தேய்த்து சுமார் 30 நிமிடம் கழித்து சூடு தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலை நேரத்தில் சிறிதளவு எண்ணெய்யை சூடு செய்து தேய்த்த பின்பு சூடு தண்ணீரை வலியுள்ள இடத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இம்மருந்தில் கலக்கப்படும் நல்லெண்ணெய்க்குப் பதிலாக தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், வேப்பெண்ணெய் போன்ற எண்ணெய்கள் கலந்தால் பயன்படும் விதமும் மாறுபடும். இம்மருந்து பயன்படுத்தும் போது உணவு கட்டுப்பாடுகளில் புளிப்பு, உப்பு, காரத்தை சற்று குறைத்து கொண்டால் பலன் விரைவில் கிடைக்கும். அதோடுமட்டுமில்லாமல் வியாதியின் தீவிரத்தை கட்டுப்படுத்தும். வரும் முன் காப்பது போல வலி அதிகரிக்கும் முன் தடுக்க இம்மருந்து மிகுந்த உதவியாகயிருக்கும் என்பதில் ஐயமில்லை.
- தமிழகத்திலிருந்து மட்டும் ஆண்டுதோறும் ரூ.8,000 கோடியிலிருந்து ரூ.10,000 கோடி வரையிலான மதிப்புடைய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முன்கூட்டியே கூடுதலான மருந்துகளை தங்களுக்கு அனுப்புமாறு ஆா்டா் கொடுத்துள்ளன.
சென்னை:
உச்சக்கட்ட போா் சூழலைத் தொடா்ந்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து வகையான பலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டது. அதை ஏற்று தமிழக மருந்து உற்பத்தியாளா் சங்கத்தினா் ஏற்றுமதி நடவடிக்கைகளை நிறுத்தினா்.
இதுகுறித்து தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநில மருந்து உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் டாக்டா் ஜெயசீலன் கூறியதாவது:-
இந்தியாவின் மருந்து சந்தை மிகப்பெரியது. உலக அளவில் உற்பத்தியாகும் மருந்துகளில் 60 சதவீத பங்களிப்பு இந்தியாவுடையது என்பதில் இருந்தே அதை உணரலாம். உள்நாட்டு பயன்பாட்டுக்கு மட்டுமன்றி அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, நெதா்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து மருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குறிப்பாக, 'ஜெனரிக்' எனப்படும் மூலப்பெயரிலான மருந்துகள் மற்றும் அதற்கான மூலப்பொருள்கள் ஏற்றுமதியில் நமது நாடு முன்னிலை வகிக்கிறது. ஆண்டுதோறும் ரூ. 2.40 லட்சம் கோடி மதிப்பிலான மருந்துகள் உலக நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன.
தமிழகத்திலிருந்து மட்டும் ஆண்டுதோறும் ரூ.8,000 கோடியிலிருந்து ரூ.10,000 கோடி வரையிலான மதிப்புடைய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு உயிா் காக்கும் சில முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன. அதன் வா்த்தக மதிப்பு ரூ.100 கோடி வரை உள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியும், தேச நலனைக் கருத்தில் கொண்டும் பாகிஸ்தானுக்கு மருந்து மற்றும் மூலப்பொருள் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளோம். இதன் காரணமாக ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படலாம். அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை இந்நிலை தொடரும். அதேவேளையில் பிற நாடுகளுக்கான ஏற்றுமதியில் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் போா்ப் பதற்றத்தைத் தொடா்ந்து அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முன்கூட்டியே கூடுதலான மருந்துகளை தங்களுக்கு அனுப்புமாறு ஆா்டா் கொடுத்துள்ளன.
தமிழகத்துக்கு தேவையான சில மூலப்பொருள்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே, போா்ச் சூழல் அதிகரித்தாலும் உள்நாட்டு மருந்துகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம்.
- முறையான மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் முதல் எடைக்குறைப்பு மருந்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின் எடைக்குறைப்பு மருந்தான மவுஞ்சாரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முறையான மருத்துவ ஆலோசனைக்கு பிறகே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று Eli Lilly நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த எடை குறைப்பு மருந்தை வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மருந்தை தயாரித்துள்ள Eli Lilly நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
உடல் பருமன், நீரிழிவு நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளதால் அதற்கு தீர்வு காணும் வகையில் மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தினர்.
- தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திடனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு கொசுக்கள்உற்பத்தியை தடுத்து காய்ச்சல்ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படு த்தப்பட்டு உள்ளது.
முதல்கட்டமாக பள்ளி, கல்லூரிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை டெங்கு தடுப்பு பணியாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்து அழித்து வருகின்றனர்.
பள்ளி குடிநீர் தொட்டிகள், கழிவறை, கைகள் சுத்தம் செய்யும் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி யாவதை தடுக்க மருந்து தெளிக்கப்பட்டது.
மேலும் பள்ளிவளாகங்களை சுற்றி பழையடயர்கள், உடைந்த பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டு பிளிசிங் பவுடர் தெளித்தும் மருந்து தெளித்தும் தூய்மைபடுத்தினர்.
மேலும் பள்ளி ஒன்றில் தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திட பாட்டிலில் களபணியாளர்கள் எடுத்து சென்றனர்.
- சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது.
- அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர்.
திருப்பூர் :
அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கவில்லையெனில் 104க்கு தொடர்பு கொள்ளுங்கள் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்துள்ள போதும் சில நேரங்களில், குறிப்பிட்ட சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது. விலை உயர்வாக இருக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனை, மேம் படுத்தப்பட்ட, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் குறிப்பிட்ட சில மருந்துகள் இல்லையென தெரிவித்தால் அந்த மருந்து குறித்து 104 என்ற அரசின் இலவச உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.உடனே, அவர்கள் அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர். மருந்து கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவர் என திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பயத்தவரன்காடு சுப்பையா உதவி நடுநிலைப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம்.
- நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பயத்தவரன்காடு சுப்பையா உதவி நடுநிலைப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமை வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவருமான தென்னரசு தொடங்கி வைத்தார்.
இதில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, வழக்கறிஞர் அன்பரசு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாகை மாவட்ட தலைவர் வேதநாயகம், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வர்த்தக சங்க முன்னாள் மாவட்ட தலைவர் குணசேகரன், வேதாரண்யம் வர்த்தக சங்க செயலாளர் சுபஹானி, பொருளாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் தங்கதுரை, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜாகிருஷ்ணன், தேசிய நல்லாசிரியர் செல்வராஜ், அரிவையார் சங்க உறுப்பினர்கள் மல்லிகா, கவிதா மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மருத்துவர்கள் சபரிகிருஷ்ணன், சதாசிவம் அடங்கிய மருத்துவ குழுவினர் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொது மருத்துவம், நுரையீரல், ஆஸ்துமா, நீரிழிவு இருதய, உடல் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
- ஆற்றில் அரசு மருத்துவமனை மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தன
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மதனத்தூரில் கொள்ளிடம் ஆறு உள்ளது. அந்த பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு செல்லும் பகுதியில் உள்ள பள்ளத்தில் மருந்து, மாத்திரைகள் குவியலாக கொட்டப்பட்டிருந்தன. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதைக்கண்டு மருந்து, மாத்திரைகளை எடுத்து பார்த்தபோது, மாத்திரைகளின் அட்டை மற்றும் மருந்துகளின் மூடி ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு என்று அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவை அரசு மருத்துவமனைகளில் வினியோகிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் என்பது தெரியவந்தது. இதில் சில மருந்துகள் கடந்த ஜூன் மாதத்துடன் காலாவதியாகி இருந்த நிலையில், பல மாத்திரை அட்டைகளில் அதன் காலாவதி ஆகும் காலம் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றை கொள்ளிடம் ஆற்றில் கொண்டு வந்து கொட்டியது யார்? காலாவதியான மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்துவதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ள நிலையில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படாமல், அவற்றை தூக்கி வீசிச்சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஆற்றில் அவை வீசப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சிலர் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே ஆற்றில் கொட்டப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்தி, அவற்றை அங்கு வீசிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதி ஆகாத மாத்திரைகள், ஊசி மருந்து குப்பிகள் உள்ளிட்டவையும் அப்பகுதியில் வீசப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரேட்டல் எலி மருந்து விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்
- ரேட்டல் எலி மருந்து பெரும்பாலும் தற்கொலைக்குப் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது
அரியலூர்:
கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசு பூச்சிக்கொல்லிக்கான மோனோகுரோட்டோபாஸ், புரோபனபாஸ், அசிபேட், புரோப்பனபாஸ் பிளஸ் சைபர் மெத்திரின், குளோர்பைப்பாஸ் பிளஸ் சைபர்மெத்திரின், குளார்பைப்பாஸ் ஆகிய பூச்சிக்கொல்லிகள், ரேட்டல் என்ற பெயரில் விற்கப்படும் எலி மருந்தான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் பசை ஆகியவற்றுக்கு ஆறுமாத காலம் தடை விதித்துள்ளது. உயிருக்கு கடும் அபாயகரமானதாக உள்ள இவை பெரும்பாலும் தற்கொலைக்குப் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் உடனடியாக விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை கடைகள், சூப்பர் மார்க்கெட், பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்களில் இவைகளை விற்பது தெரியவந்தால் உரிமம் ரத்து உள்ளிட்ட மிக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியை டிரோன் எனும் எந்திரத்தை மூலம் தொடங்கி விட்டனர்.
- 3 முதல் 4 ஏக்கர் வரை விரைவாக மருந்து தெளிக்கப்படுவதால் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை வட்டத்தில் சமீபகாலமாக டிரோன் மூலம் மருந்து தெளிக்க விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கூலி ஆட்கள் பற்றாகுறை, கூலிதொகை உயர்வு, அதிகரித்து வரும் செலவு போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்போது விவசாய பணிக்கு அதிகளவில் இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
வயல்களை உழவு செய்தல், வரப்பு சீர்செய்தல், நடவு நடுதல் உள்பட அனைத்து விவசாய தேவைக்கும் கடந்த சில வருடங்களாக அதிகளவில் இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணியிலும் டிரோன் எனும் இயந்திரத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர். டிரோன் மூலம் மணிக்கு 3முதல் 4ஏக்கர் வரை விரைவாக மருந்து தெளிக்கப்படுவதால் பெரும்பாலான விவசாயிகள் டிரோன் மூலம் மருந்து தெளிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- ஆடுகள், மாடுகள், நாய்களுக்கு மருத்துவ சிகிச்சை.
- கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினை ஊசி போடுதல், மடிவீக்க மருந்து முதலியவை வழங்கப்பட்டது.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் பேரளத்தை சுற்றியுள்ள ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அந்தப் பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொள்வதுடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி சிறப்பு முகாம் என்பது நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக இஞ்சிக்குடி என்கின்ற கிராமத்தை தேர்ந்தெடுத்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
பின்பு அந்தப் பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்பகுதியில் உள்ள மாடுகள் ஆடுகள் நாய் மருத்துவ சிகிச்சை நடைபெற்றது. இந்த முகாமில் நாட்டு நல பணித்திட்ட மாணவ மாணவர்கள் மாடுகள் வளர்க்கும் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினை ஊசி போடுதல், மடிவீக்க நோய்களுக்கான மருந்து, தீவனபுல், தாதுஉப்பு கலவை முதலிவை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திருவாரூர் மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம், பேரளம் பேரூராட்சி தலைவர் கீதா நாகராஜன், நாட்டுநல பணிதிட்ட அலுவலர் பாரி, பேரளம் பள்ளி தலைமை ஆசிரியர் மாதவன், இஞ்சிக்குடி பள்ளி தலைமை ஆசிரியர் காசிராஜா மற்றும் 20க்கும் மேற்ப்பட்ட நாட்டுநலபணிதிட்ட மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 10-ந் ேததி குருமூர்த்தி வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
- இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி திருஞானம் நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 37). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கும் இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கவுரி (30) என்ற பெண்ணுடன் திருமணமாகி பிரணவ், ரித்திகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 10-ந்ேததி குருமூர்த்தி வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குருமூர்த்தி எப்படி இறந்தார்? என தகவல் தெரியவந்துள்ளது. சமீபத்தில் புதிதாக வீடு கட்டி இருப்பதும் அதற்காக சில நபர்களிடம் பணம் கடன் வாங்கியுள்ளார். அதை கட்ட முடியாமல் கடும் மன உளைச்சலில் தனது மனைவியிடம் புலம்பி வந்தார். இதனால் சம்பவத்தன்று குருமூர்த்தி மது போதையில் மோட்டார்சைக்கிளை ஓட்டிக்கொண்டு நேராக ஏரியில் பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடினர்.
மேலும் வீராணம் ஏரியில்
தீயணைப்பு வீரர்கள், அப்ப குதி பொதுமக்கள் இறங்கி தேடினர். அப்போது மோட்டர்சைக்கிள் ஆழமான
பகுதியில் கிடந்தது. இதை
யடுத்து அந்த மோட்டார்சை க்கிளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால் தான் அதிக காய்களை மகசூலாக பெற முடியும்.
குடிமங்கலம்:
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் மரப்பயிர்களுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ளது. இதனால் அதிகப்படியான இடங்களில் மா விவசாயத்தில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.அதன்படி மாந்தோப்புகள் அதிகமாக உள்ளன. தற்போது மாமரங்களில் அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளன. ஏப்ரல் முதல் இவை காய்ப்புக்கு வரும் என்பதால் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மாங்கன்றுகள் நட்டு 4 ஆண்டுகளில் இருந்து பலன் தரும். கோடை காலங்களில் இதன் விளைச்சல் உச்சநிலையில் இருக்கும்.இப்பகுதியில் விளையும் மாங்காய்கள் அதிக தசைப்பிடிப்புடன் இனிப்புத்தன்மை நிறைந்ததாக இருப்பதால் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால் தான் அதிக காய்களை மகசூலாக பெற முடியும்.
குறைவான பராமரிப்பு, கூலி ஆட்கள் தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பலரும் மா விவசாயத்திற்கு மாறி கொண்டிருக்கின்றனர். விளைச்சல் அதிகரிப்புக்கு பராமரிப்புப்பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.






