search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medicines"

    • ஊரல் கிராமத்தில் இலவச பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இலவசமாக பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாத்திரை,மருந்துகள் இலவசமாக. வழங்கப்பட்டது.

    திண்டிவனம் நகரம் லயன் சங்கம் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான கழகம் வெண்மணி, பட்டணம் ஆத்தூர் ஊராட்சி,ஊரல் ஊராட்சி ஆகியவை இணைந்து திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் இலவச பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் சிறப்பு மருத்துவம்,எலும்பு முறிவு சிகிச்சை, மருத்துவம், பொது மருத்துவம் ,முகப்பேர் மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் சிகிச்சை மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் சர்க்கரை நோய் மருத்துவம் ஆகியவை இலவசமாக பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாத்திரை,மருந்துகள் இலவசமாக. வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 500 பேர் கலந்து கொண்டனர். இதில் இதற்கான ஏற்பாடுகளை ஊரல், பட்டணம், வெண்மணியாத்தூர், ஒன்றிய கவுன்சிலர் ஊரல் சிலம்பரசன், ஊரல் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை ஆகியோர் செய்து இருந்தனர்.லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நன்மை தரும் பூச்சி, நுண்ணுயிர்களை அவை அழிக்கும்.
    • இலைப்புள்ளி, இலை கருகல், இலையுறை அழுகல் நோய்களை கட்டுப்படுத்தும்.

    ஈரோடு, 

    வேளாண் பயிர்கள் உற்பத்தியில் பயிர்களை தாக்கி சேதத்தை ஏற்படுத்தும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த ரசாயன பூச்சி கொல்லி மருந்துகள், பூஞ்சாண கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது.

    ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல், உடல் நல பாதிப்பு, உண்ணக்கூடிய பயிர்களை நச்சு கொண்டதாக மாற்றும். எனவே மனிதர்களுக்கு மட்டுமின்றி, கால்நடைகளுக்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன், நன்மை தரும் பூச்சி, நுண்ணுயிர்களை அவை அழிக்கும்.

    எனவே, பூச்சி கொல்லி மருந்தால், பயிர்களுக்கான உற்பத்தி செலவு அதிகரிக்கும். எனவே உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேளாண் துறையின் கீழ் செயல்படும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் மூலம், உற்பத்தி செய்யப்படும்.

    எதிரி உயிரி பூஞ்சாணமான டிரைகோடெர்மா விரிடி பயிர்களில் ஏற்படும் வேர் அழுகல், கிழங்கு அழுகல் போன்ற மண்ணின் மூலம் பரவு நோய்களையும், எதிரி உயிரி பாக்டீரியாவான சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மண்ணின் மூலம் பரவும் நோய்கள் மட்டுமின்றி, இலைப்புள்ளி, இலை கருகல், இலையுறை அழுகல் நோய்களை கட்டுப்படுத்தும்.

    மேலும் பல தொழில் நுட்பங்களை பயன்படுத்து–வதால், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் அனைத்தும், பூச்சி கொல்லி மருந்துகளை ஒப்பிடும்போது, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்ட விவசாயிகள், அருகே உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இந்த தகவலை வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • மேற்கு தெரு ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மன் திருமண்டபத்தில் இலவச மருத்துவமுகாமை நடத்துகின்றனர்
    • காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

     தஞ்சாவூர்:

    கலைஞரின் 100-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அனு மருத்துவமனை சிவகுமார் எம்.டி., டி.எம். மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி கவுன்சிலர் எஸ்.சி. மேத்தா ஆகியோர் இணைந்து நாளை 3-ந்தேதி தஞ்சாவூர் மேற்கு தெரு ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மன் திருமண்டபத்தில் இலவச மருத்துவமுகாமை நடத்துகின்றனர்.இந்த மருத்துவமுகாம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

    மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு சுகாதார சோதனைகள்,ஈசிஜி, ரத்த குளுக்கோஸ் சோதனை உள்ளிட்ட சோதனைகளும், இலவச மருந்துகள் வழங்கப்பட உள்ளன.

    இந்த இலவச மருத்துவ சேவையில் அனைவரும் பங்கேற்று பயன் அடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

    • கடந்த 10-ந் ேததி குருமூர்த்தி வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
    • இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி திருஞானம் நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 37). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கும் இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கவுரி (30) என்ற பெண்ணுடன் திருமணமாகி பிரணவ், ரித்திகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த 10-ந்ேததி குருமூர்த்தி வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குருமூர்த்தி எப்படி இறந்தார்? என தகவல் தெரியவந்துள்ளது. சமீபத்தில் புதிதாக வீடு கட்டி இருப்பதும் அதற்காக சில நபர்களிடம் பணம் கடன் வாங்கியுள்ளார். அதை கட்ட முடியாமல் கடும் மன உளைச்சலில் தனது மனைவியிடம் புலம்பி வந்தார். இதனால் சம்பவத்தன்று குருமூர்த்தி மது போதையில் மோட்டார்சைக்கிளை ஓட்டிக்கொண்டு நேராக ஏரியில் பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடினர்.

    மேலும் வீராணம் ஏரியில்

    தீயணைப்பு வீரர்கள், அப்ப குதி பொதுமக்கள் இறங்கி தேடினர். அப்போது மோட்டர்சைக்கிள் ஆழமான

    பகுதியில் கிடந்தது. இதை

    யடுத்து அந்த மோட்டார்சை க்கிளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • மருந்துகள் இருப்பு மற்றும் மருத்துவர்கள் வருகை குறித்து கேட்டறிந்தார்.
    • மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களையும் கேட்டறிந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, அங்கு வரும் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்து, நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ஆய்வு செய்தார்.

    குறிப்பாக நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவம னையில் ஆய்வு செய்த அவர், மருந்துகள் இருப்பு மற்றும் மருத்துவர்கள் வருகை குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் கேட்டறிந்தார்.

    மேலும், நாகூர் தர்கா அலங்காரவாசலில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு அங்கிருந்த பதிவேட்டை ஆய்வு செய்தார். மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களையும் கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது நாகை நகர்மன்ற தலைவர்மாரிமுத்து, துணைத் தலைவர்செந்தில் குமார், நகர்மன்ற உறுப்பி னர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    • ஆற்றில் அரசு மருத்துவமனை மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தன

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மதனத்தூரில் கொள்ளிடம் ஆறு உள்ளது. அந்த பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு செல்லும் பகுதியில் உள்ள பள்ளத்தில் மருந்து, மாத்திரைகள் குவியலாக கொட்டப்பட்டிருந்தன. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதைக்கண்டு மருந்து, மாத்திரைகளை எடுத்து பார்த்தபோது, மாத்திரைகளின் அட்டை மற்றும் மருந்துகளின் மூடி ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு என்று அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவை அரசு மருத்துவமனைகளில் வினியோகிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் என்பது தெரியவந்தது. இதில் சில மருந்துகள் கடந்த ஜூன் மாதத்துடன் காலாவதியாகி இருந்த நிலையில், பல மாத்திரை அட்டைகளில் அதன் காலாவதி ஆகும் காலம் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றை கொள்ளிடம் ஆற்றில் கொண்டு வந்து கொட்டியது யார்? காலாவதியான மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்துவதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ள நிலையில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படாமல், அவற்றை தூக்கி வீசிச்சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஆற்றில் அவை வீசப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சிலர் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே ஆற்றில் கொட்டப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்தி, அவற்றை அங்கு வீசிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதி ஆகாத மாத்திரைகள், ஊசி மருந்து குப்பிகள் உள்ளிட்டவையும் அப்பகுதியில் வீசப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • மா, பலா, முந்திரி, கொய்யா போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்து போன மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும்.
    • பசுமை குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தென்மேற்கு பருவமழை காலத்தில் கனமழை மற்றும் பலத்த காற்றில் இருந்து தோட்டக்கலை பயிர்களை விவசாயிகள் பாதுகாப்பது குறித்து தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    கத்தரி, வெங்காயம், வெண்டை, மிளகாய் மற்றும் கொடி வகை காய்கறி பயிர்களுக்கு நல்ல வடிகால் வசதி, மழைநீர் தேங்கா வண்ணம் அமைக்க வேண்டும். முன் தடுப்பு நடவடிக்கையாக டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூேடாமோனஸ் பூஞ்சாண உயிரியியல் கட்டுபாடு மருந்துகளை மண் மூலமாகவும், இலை வழியாகவும் தெளிக்க வேண்டும். மா, பலா, முந்திரி, கொய்யா போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்து போன மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். தேவையான அளவில் வடிகால் வசதி செய்திட வேண்டும்.

    கனமழை காற்று முடிந்த உடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்பகுதியை சுற்றி மண் நணைக்க வேண்டும். மிளகு செடிகளில் நிழலினை ஒழுங்குப்படுத்த கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். கொக்கோவில் அதிகப்படியான இலைத்த ளைகளை கவாத்து செய்ய வேண்டும். முதிர்ந்த பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.

    பசுமை குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும். கதவுகள் மற்றும் ஜன்னல்களை் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்ற உட்புகாமல் பாதுகாக்க வேண்டும். கிழந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்ய வேண்டும்.

    அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.வருடாந்திர பயிரான வாழை காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றி விட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும்.

    நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். வடிகால் அமைக்க வேண்டும். உபரி நீர் வடிந்த பின் நடவு, விதைவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கலாம். காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுக்க வேண்டும். இதேப்போல் இதர தோட்டக்கலை பயிர்களில் அனைத்த வயல்களிலும் அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும்.மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர், உதவி தோட்டகலை அலுவ லர்களை ெதாடர்பு கொள்ள வேண்டும்.

    தஞ்சை, பூதலூர் தோட்ட க்கலை உதவி இயக்குனர் முத்தமிழ்செல்வியை 9943422198 என்ற எண்ணிலும், ஒரத்தநாடு, திருவோணம் உதவி இயக்குனர் சாந்திபிரியாவை 9488945801 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதேப்போல் அம்மாபே ட்டை, திருவையாறு, பாபநாசம் தோட்டகலை உதவி இயக்குனர் பரிமே லழகனை 9445257303, கும்பகோணம், திருவிடை மருதூர், திருப்பனந்தாள் உதவி இயக்குனர் அனுசி யாவை 9842569664, பட்டுக்கோட்டை, மதுக்கூர் இயக்குனர் ராகிணியை 9597059469, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உதவி இயக்குனர் வள்ளி யம்மாளை 8903431728 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×