என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் மருத்துவமனை"

    • கர்ப்பிணிப் பெண் இறந்த சம்பவத்தில் மருத்துவமனை இயக்குநர் அசோக் குமார் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    • போதுமான உள்கட்டமைப்பு இல்லாமல் நோயாளிகளை அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டது.

    தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை ஏடிஎம்களாகப் பார்க்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மயக்க மருந்து செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் இறந்த சம்பவத்தில் மருத்துவமனை இயக்குநர் அசோக் குமார் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    தன் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி மருத்துவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரசாந்த் குமார் தலைமையிலான அமர்வு, தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை ஏடிஎம் மிஷன்களாகவும், பணம் கறக்கும் கினிப் பன்றிகளாகவும் பார்க்கின்றன.

    பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் போதுமான உள்கட்டமைப்பு இல்லாமல் நோயாளிகளை அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டது.

    மருத்துவர் நோயாளியை அனுமதித்து, அறுவை சிகிச்சைக்கு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அனுமதி பெற்றதாகவும், ஆனால் மயக்க மருந்து இல்லாததால் சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றும் கூறி, சட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி அசோக் குமார் ராயின் மனுவை நிராகரித்தது.

    • பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்களா?
    • மருத்துவர் பிரபாகரனுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவரை தனியாருக்கு மாற்றி பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் மனித உரிமைகள் ஆணையம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க செல்லும் அரசு மருத்துவர்களை கண்காணிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.

    பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்களா? என கண்காணிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி அரசு மருத்துவமனை தீக்காயப்பிரிவு மருத்துவர் பிரபாகரனுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க ஆஐண பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • ஒரு உறுப்புக்கு பதில் இன்னொரு உறுப்பை எடுத்து மாட்டும் அற்புதத்தை மருத்துவர்கள் நிகழ்த்துகிறார்கள்.
    • தசை பொருந்தாவிட்டால் விரல் அசையாது. ரத்த நாளம் வழியாக ரத்தம் சென்றால்தான் விரல் இயங்கும்.

    சென்னை:

    மருத்துவ துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது இயந்திரங்களின் பாகங்களை கழட்டி மாட்டுவது போல் மனிதர்களின் உறுப்புகளையும் கழட்டி பொருத்தி மருத்துவர்கள் சாதித்து வருகிறார்கள்.

    சிறுநீரகம், இதயம், கல்லீரல், கண் போன்ற உறுப்புகளில் மாற்று அறுவை சிகிச்சை சாதாரணமாகிவிட்டது. அதே போல் உடலில் அத்தியாவசிய தேவை எனும் போது ஒரு உறுப்புக்கு பதில் இன்னொரு உறுப்பை எடுத்து மாட்டும் அற்பு தத்தை மருத்துவர்கள் நிகழ்த்துகிறார்கள்.

    32 வயதான இளைஞர் ஒருவர் தான் பணிபுரியும் தொழிற்சாலையில் எந்திரத்தில் கை சிக்கியதில் வலது கை கட்டை விரலும், சுட்டு விரலும் துண்டித்து விழுந்தது.

    தனியாக துண்டிக்கப் பட்ட அந்த 2 விரல்களுடன் அந்த வாலிபர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். துண்டித்த விரலை எப்படியாவது பொருத்திவிடுவார் கள் என்ற நம்பிக்கையில் சென்றுள்ளார்.

    அந்த விரல்களை பரிசோதித்த மருத்துவமனையின் முடநீக்கியல் துறை அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சீனிவாசன் ராஜப்பா விரல்கள் சிதைந்து பொருத்த முடியாத நிலையில் இருந்ததை பார்த்துள்ளார்.

    அதே விரல்களை மீண்டும் பொருத்துவது சாத்தியமில்லை என்று கூறியிருக்கிறார்.

    ஆனால் வலது கையில் விரல்கள் அவசியம். அதிலும் கட்டை விரல் கட்டாயம் தேவை என்பதால் மாற்று வழிகள் பற்றி மருத்துவர்களிடம் அந்த வாலிபர் கேட்டுள்ளார்.

    அதற்கு கால் விரலை எடுத்து கையில் பொருத்த முடியும் என்று டாக்டர் ராஜப்பா கூறியிருக்கிறார். காலில் ஒரு விரலை எடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அதற்கு ஒத்துக் கொண்டார்.

    இதையடுத்து இந்த சிக்கலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர் சீனிவாசன் ராஜப்பா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடங்கினார்கள்.

    அந்த வாலிபரின் இடது காலின் 2-வது விரலை துண்டித்து எடுத்து கை கட்டை விரலாக பொருத்த முடிவு செய்தனர். திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை செய்து அந்த வாலிபரின் கட்டை விரலுக்கு பதில் கால் விரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு தற்போது அவர் நல்ல நிலையில் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த அறுவை சிகிச்சை பற்றி டாக்டர் சீனிவாசன் ராஜப்பா கூறியதாவது:-

    இது மிகவும் சிக்கலான ரிஸ்க் நிறைந்த அறுவை சிகிச்சை. ஏனெனில் கால் விரல் பகுதியின் ரத்த நாளங்கள் மிகவும் நுண்ணியது. கிட்டத்தட்ட ஒரு தலைமுடி அளவு விட்டம் கொண்டது. அவற்றை துல்லியமாக கண்டறிந்து துண்டித்து கையில் மிக துல்லியமாக பொருத்த வேண்டும்.

    தசை பொருந்தாவிட்டால் விரல் அசையாது. ரத்த நாளம் வழியாக ரத்தம் சென்றால்தான் விரல் இயங்கும். எலும்பு பொருந்தினால்தான் பலம் இருக்கும். இல்லாவிட்டால் அடித்தளம் இல்லாத கட்டிடம் போல் ஆகிவிடும்.

    இத்தனை ரிஸ்க்கையும் சவாலாக ஏற்று மிக துல்லியமாக கால் விரலை துண்டித்து மருத்துவ நுண்ணோக்கியில் துல்லியமாக பார்த்து பார்த்து ரத்த நாளங்களை இணைத்தோம். 8 மணி நேரம் நடந்த இந்த ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்தது.

    விபத்து நேரிடும் போது உறுப்புகள் துண்டிக்க நேர்ந்தால் அதை சுத்தமான பிளாஸ்டிக் உரையில் வைத்து கட்டி, ஐஸ்கட்டிகள் நிரப்பிய பாத்திரத்தில் எடுத்து வர வேண்டும். துண்டிக்கப்பட்ட பாகங்களில் ஐஸ்கட்டியோ, தண்ணீரோ நேரடியாக படக்கூடாது. இந்த மாதிரி உறுப்புகளை மாற்றுவது சாத்தியமே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியார் மருத்துவமனை முன்பு, பின்பு உள்ள பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்
    • வீடுகளுக்கு முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வடசேரியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனர். அந்த வகையில் மொத்தம் 19 மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் மகேஷ் அதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    முன்னதாக இன்று காலை 2-வது வார்டுக்குட்பட்ட தனியார் மருத்துவமனை முன்பு, பின்பு உள்ள பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பின்புறம் உள்ள மகளிர் தங்கும் விடுதி முன்பு தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து களியங்காடு 4 முக்கு ரோடு, விவேகானந்தர் தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது களியங்காடு 4 முக்கு ரோடு பகுதியில் தண்ணீர் தேங்குவதாக புகார் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து மேயர் மகேஷ், இந்த பகுதியில் கல்வெட்டு (சிறிய பாலம்) அமைக்க உத்தரவிட்டார். மேலும் சாலையையும் உயர்த்தி காங்கிரீட் தளம் அமைக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பின்னர் தெருவில் வீடுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அதிக அளவு இருந்தது. இதனை பார்த்த மேயர் வீடுகளுக்கு முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    அப்போது மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், தி.மு.க. மாநகர துணை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    மேலும் 44-வது வார்டுக்குட்பட்ட மறவன் குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் ரூ.60 லட்சத்தில் சாலை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    • தொடர் மழை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
    • தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுத் தொல்லையும் அதிகரித்து உள்ளது. மழைக்காலம் என்பதால் தற்போது மதுரையில் பொதுமக்கள் பலருக்கும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் அதிகரித்து வருகின்றனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் காய்ச்சல், உடல் வலி, சளி, தொடர் இருமல் போன்ற பாதிப்புகளால் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் தீவிர பாதிப்பு உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இதில் கடந்த வாரம் மட்டும் 17 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள தனிவார்டில் 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில் நேற்று 15 பேருக்கும், இன்று 8 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை நகரில் நாளுக்குநாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர் மழை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் மாநகராட்சியும் இணைந்து மதுரையில் டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கிய இடங்களில் மருத்துவ முகாம், டெங்கு விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் வார்டு வாரியாக கொசுமருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஆனாலும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்து நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

    • டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை:

    ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(வயது77). ம.தி.மு.க கட்சியை சேர்ந்த இவர் ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்.பியாகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் கணேசமூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் கணேசமூர்த்தி மயக்க நிலையில் இருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலையும் டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறும் போது, கணேசமூர்த்தி எம்.பியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து எக்மோ கருவியை பொருத்தி அதன் மூலம் சிகிச்சை நடந்து வருகிறது என தெரிவித்தனர்.

    இதற்கிடையே கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கணேசமூர்த்தியை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடமும் கேட்டறிந்தனர்.

    கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் இளங்கோவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    சென்னையில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள CADENCE என்கிற தனியார் மருத்துவமனையில் கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

    மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் இளங்கோவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அனுமதி பெறாமல் மனநோய் சிகிச்சை அளித்ததற்காகவும், அவசரகால மருத்துவர்கள் இல்லாதது, உபகரணங்கள் இல்லாதது என 11 காரணங்களுக்காக மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக Cadence மருத்துவமனையில் சட்ட விரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது மற்றும் உரிய அனுமயின்றி மனநோய் (Psychiatric) சார்ந்த சிகிச்சை மேற்கொள்வது தொடர்பான புகார் மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த 06.01.2024 அன்று பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை இயக்குநர் மற்றும் மரு.களத்தூர் ரவிகிருஷ்ணா ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட एक आ, A, PCPNDT ACT, 1994/TNCEA-1997 & மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு. இரா.இளங்கோ மகேஸ்வரன், எம்.எஸ்., டி.சி.எச் அவர்களின் ஆணைப்படி, இணை இயக்குநர் (சட்டம்) அவர்களின் தலைமையில் இணை இயக்குநர் (குடும்ப நலம்) மற்றும் தேசிய சுகாதார திட்ட மாவட்ட மனநல மருத்துவர். ஆகியோரைக்கொண்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

    விசாரணை குழுவினர் 02.05.2024 அன்று மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வில் மேற்காணும் மருத்துவமனையில் Scan பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதும் மரு. முரளி உரிய அனுமதியின்றி Scan செய்ததும், மாதாந்திர அறிக்கைகளை அரசிடம் சமர்ப்பிக்காமல் இருந்ததும், மேலும் கர்ப்பிணி பெண்களிடம் பெறக்கூடிய Form-F முறையாக பராமரிக்கப்படாததும் கண்டறியப்பட்டது.

    மேற்காணும் குறைபாடுகளைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் மாவட்ட அமலாக்க அலுவலர், PCPNDT Act, 1994 அவர்களால் உரிய விளக்கம் கோரப்பட்டது. 17.05.2024-ம் நாளிட்ட Cadence மருத்துவமனையின் விளக்க

    கடிதமானது குறைபாடுகளுக்கு தொடர்பில்லாமலும் திருப்தியின்றியும் அமைந்தது.

    அதனைத் தொடர்ந்து விசாரணைக் குழுவானது 23.05.2024 அன்று கேடீன்ஸ் மருத்துவமனையில் மீண்டும் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வில், மருத்துவமனையில் நிர்வாகம் மேற்கொள்ள முறையான பணியாளர்கள் இல்லை என்பதும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம்- 1997 சட்டத்தின் கீழ், உரிய அனுமதி பெறாமல் மருத்துவர்கள் பணியாற்றியதும், மேலும் உரிய அனுமயின்றி கருக்கலைப்பு செய்வதும் மகளிர் நலன் மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைகள் முறையான மகளிர் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல் செய்யப்பட்டதும், அவசர காலங்களில் மயக்கவியல் நிபுணர், பொது நல மருத்துவர் மற்றும் அவசரகால மருத்துவர்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது.

    மேற்காணும் மருத்துவமனை மனநல பாதுகாப்பு சட்டம் 2017, அத்தியாயம் 10, பிரிவு-65(1)ன் கீழ் மனநல மருத்துவம் அளிக்க மாநில மனநல அலுவலர் அவர்களிடம் முறையான அனுமதி பெறாமல் மனநல சிகிச்சை மேற்கொண்டது கண்டறியப்பட்டது. மேலும், மருத்துவமனையில் போதுமான கட்டமைப்பு வசதிகளில் (Generator. Defibrillator and Ventilator in emergency department) குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

    ஆய்வின் அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்தும்) சட்டம், 1997 விதி 5(1)-ன் கீழ் பொது மக்களின் நலன் கருதி Cadence மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட பதிவுச்சான்றிதழை தற்காலிகமாக நீக்கம் (Temporary Cancellation) செய்து ஆணையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 23.05.2024 அன்று முதல் மருத்துவமனை மூடப்பட்டது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தடுப்பூசிக்கு எவ்வித கட்டணமும் பொதுமக்களிடம் வசூலிக்கக் கூடாது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் எந்தவித கட்டணமின்றி குழந்தைகள், பெரியவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

    இதே போல தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    அரசு மருத்துவமனைகளில் அனைத்து தடுப்பூசிகளும் இலவசமாக போடப்படுவது போல தனியார் மருத்துவ மனைகளிலும் போடுவதற்கான திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அந்த மருத்துவமனைகள் பொது மக்களுக்கு இலவசமாக போடுகிறோம் என்று உறுதி அளித்தால் தடுப்பூசியை சுகாதாரத்துறை வழங்கும். தடுப்பூசிக்கு எவ்வித கட்டணமும் பொதுமக்களிடம் வசூலிக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர் என முதல்கட்ட தகவல் வெளியானது.

    தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகள் ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்றைய தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
    • உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்

    திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நேற்றைய தினம் [டிசம்பர் 12] ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

    இது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரித்துள்ளார்.

    • வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
    • செல்போன் மூலம் தொடர்பு கொண்டது யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபர், கடலூர் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதையடுத்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதற்கிடையே மருத்துவ மனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகளும், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளும் வெடி குண்டு மிரட்டலால் பீதியடைந்தனர். பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை அறிந்ததும் நிம்மதி அடைந்தனர்.

    இந்த நிலையில் காவல்துறை கட்டுப்பட்டறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டது யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெடிகுண்டு வைத்ததாக பேசி இணைப்பை துண்டித்தது தெரிய வந்தது.

    மேலும் இந்த மாணவன் விழுப்புரம் மாவட்டம் பூவரசன் குப்பத்தை சேர்ந்தவர் என்பதும், தனது உறவினர் வீடான கடலூர் முதுநகருக்கு வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் மாணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஏசி எந்திரத்தில் இருந்து தீப்பொறி உருவாகி தீயானது மளமள வென்று பரவியது.
    • ஷெட் முழுவதிலும் கரும்புகை ஏற்பட்டு வெளியேறியது.

    மதுரை:

    மதுரை மாநகர் புதூர் அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே புதூர் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மருத்துவமனை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தற்காலிகமாக பிளாஸ்ட் ஆப் பாரிஸ் மூலம் செட் அமைக்கப்பட்டு அதில் செவிலியர்கள் சிலர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் இன்று காலை செவிலியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

    முதலில் புகை வெளியேறிய நிலையில் அதன் மூலம் தீப்பொறி உருவாகி தீயானது மளமள வென்று அனைத்து அறைகளுக்கும் பரவத்தொடங்கியது.

    இதனையடுத்து அங்கு தங்கியிருந்த ஐந்து செவிலியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். இதற்கி டையே தீ விபத்து ஏற்பட்ட மூன்றாவது மாடியில் இருந்து வானுயர எழுந்த புகையை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அவர்கள் உடனடியாக கீழே இறங்கி வந்த செவிலியர்களை மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். அப்போது ஒரு நர்சிங் மாணவி மயக்கம் அடைந்ததார். பின்னா் இயல்பு நிலைக்கு மாணவி திரும்பிய நிலையில் அருகில் உள்ள விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    இதற்கிடையே தீயானது வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் ஷெட் முழுவதிலும் கரும்புகை ஏற்பட்டு வெளியேறியது. தகவல் அறிந்த மதுரை தல்லாகுளம் தீய ணைப்புத் துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைத்து, செவிலியர்கள் தங்கும் அறையில் உள்ள கண்ணாடி மற்றும் ஷெட் ஆகியவற்றை உடைத்து கரும்புகையை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.


    இந்த தீ விபத்தில் செவிலியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த அவர்களின் உடைமைகள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. தொடர்ந்து இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஆக்சிஜன் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் புகையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

    மதுரை புதூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் தங்கி இருந்த செவிலியர்கள் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த காயமும் இன்றி தப்பினர். தீ விபத்து தொடர்பாக புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×