என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தடுப்பூசி"
- அறையின் சுவா்களையொட்டி மருந்துகளை வைக்காமல், அதிலிருந்து சற்று தள்ளி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
- பொது மக்கள், சுகாதாரத்துறை களப்பணியாளா்களுக்கும் அது உகந்த நேரமாக இருக்கும்.
சென்னை:
பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை சேமித்து வைத்திருக்கும் குளிா் பதனக் கிடங்குகள், மருந்தகங்கள், சேமிப்பு கிடங்குகளில் உரிய காற்றோட்ட வசதி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அறையின் சுவா்களையொட்டி மருந்துகளை வைக்காமல், அதிலிருந்து சற்று தள்ளி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோன்று, சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.
இதன் மூலம் வெப்ப அலையால் தடுப்பூசியின் வீரியம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். அதனுடன், பொது மக்கள், சுகாதாரத்துறை களப்பணியாளா்களுக்கும் அது உகந்த நேரமாக இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும்.
- தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை 90 சதவீதம் தடுக்க முடியும்.
உலகெங்கிலும் உள்ள பெண்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இந்த நோயால், ஒவ்வொரு ஆண்டும் 3,00,000-க்கும் அதிகமானோர் இறக்கிறார்கள். ஹெச்.பி.வி. தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஹெச்பிவி என்றால் என்ன?
ஹெச்பிவி என்பது மிகவும் பொதுவான வைரஸ்களின் குழுப்பெயர். இங்கு 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஹெச்.பி.வி. வைரஸ்கள் உள்ளன. இவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் பொதுவாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. சில வைரஸ்கள் நம் உடலில் மருக்களை ஏற்படுத்தும். அவை நம் கை, கால், பிறப்புறுப்பு அல்லது வாயில் தோன்றலாம்.
இருப்பினும், பெரும்பாலான மக்கள், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர மாட்டார்கள். அவர்களின் உடல்கள் சிகிச்சையின்றியே வைரஸை அகற்றும். ஆனால் அதிக ஆபத்துள்ள ஹெச்.பி.வி. வைரஸ் வகைகள், அசாதாரண திசு வளர்ச்சியை ஏற்படுத்தும். இவை புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.
ஹெச்.பி.வி. தடுப்பூசி எவ்வாறு பாதுகாக்கிறது?
ஹெச்.பி.வி. தடுப்பூசி ஒன்பது வகையான ஹெச்பிவி வைரஸ்களின் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு ஹெச்.பி.வி. தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பாதுகாக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், அதற்கும் மேல் நீண்ட காலம் பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின்பாதிப்பை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.
ஹெச்.பி.வி. தடுப்பூசி யாருக்கு?
ஹெச்.பி.வி. தடுப்பூசியை பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஹெச்.பி.வி. பாதிப்பிற்கு முன் எடுத்துக் கொண்டால் அது சிறப்பாக செயல்படும். ஏனெனில், தடுப்பூசிகளால் தற்காத்துக்கொள்ள மட்டுமே முடியும், அவை உடலில் பாதிப்பை ஏற்படுத்திய பின்னர், அவற்றை வெளியேற்ற முடியாது.
தடுப்பூசி ஒன்று அல்லது இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று டோஸ்களைப் பெற வேண்டும்.
யாருக்கு ஹெச்பிவி ஏற்படும்?
ஹெச்.பி.வி. எளிதில் பரவக் கூடியது. இது தோல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. பெரும்பாலான மக்கள் தங்களின் 25 வயதிற்குள்ளாகவே ஹெச்.பி.வி. பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான நேரங்களில் மக்கள் 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பாதிக்கப்படுகின்றனர்.
இது பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்ல. இது பாலியல் திரவங்களாலும் பரவுவதில்லை. ஆனால், இது தொடுதல் உள்ளிட்ட பாலியல் தொடர்புகளின் போது இது அடிக்கடி பரவுகிறது.
- நோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் முக்கிய இடம்.
- கடைசி கட்டத்திற்கு வந்தபின்ரே இதன் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும்.
பெண்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் நோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் முக்கிய இடம் வகிக்கின்றது. கருப்பை வாய் புற்றுநோயினை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்துக்கொள்வது மிகவும் கடினம். கடைசி கட்டத்திற்கு வந்தபின்ரே இதன் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும்.
இருப்பினும் இது குறித்த போதிய தெளிவு இருக்கும் பட்சத்தில் சில அறிகுறிகள் மூலம் கருப்பை வாய் புற்றுநோய் இருப்பதை தெரிந்துக்கொள்ள முடியும். குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள பெண்களிடையே கருப்பை வாய் புற்றுநோய் அதிகமாக கண்டறியப்படுகின்றது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
கருப்பைவாய் புற்றுநோய் என்றால் என்ன?
பெண்களின் கருப்பைக்கும், யோனிக்கும் இடையில் காணப்படும் ஒரு சிறிய வாய் பகுதியைத்தான் கருப்பைவாய் என அழைக்கப்படுகின்றது. இந்த சிறிய பகுதியில் ஏற்படும் புற்றுநோய் தான் கருப்பைவாய் புற்றுநோய் எனப்படும். அதாவது தேவையற்ற வகையில் கலன்கள் பிரிந்து பெருகுவதே புற்றுநோய் எனப்படும். இந்த செல்களின் பெருக்கம் எந்த பாகத்தில் ஏற்படுகின்றது என்பதை பொருத்தே இது எந்த வகை புற்றுநோய் என அடையாளப்படுத்தப்படுகின்றது.
கருப்பைவாய் புற்றுநோயின் அறிகுறிகள்
சாதாரணமாக பிறப்புறுப்பில் இருந்து திரவம் வெளியேறுவது வழக்கமான நிகழ்வு தான். ஆனால் அசாதாரண அளவில் அதிகமாக பிறப்புறுப்பில் இருந்து திரவங்கள் வெளியேறுவது இயல்பான விஷயமாக கருத முடியாது. இதுபோன்று அசாதாரணமாக திரவ வெளியேற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பிறப்புறுப்பில் இருந்து திவரம் வெளியேறுவது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளின் அறிகுறியாகக் கருதப்படுகின்றது. குறிப்பாக கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் இதுவும் முக்கியமான அறிகுறியாகும்.
கால்கள் மற்றும் பாதங்களில் அதிக வலியை உணர்தல் அல்லது வீக்கம் ஏற்படுவதும் கருப்பை வாய் புற்றுநோய்க்கான ஆரம்ப கால அறிகுறியாக கருத முடியும்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு என்பது இயல்பானது தான். ஆனால் அசாதாரண நிலையில் அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ அல்லது மாதவிடாய் காலம் தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது முடிந்த பிறகோ பிறப்புறுப்பில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டாலோ மருத்துப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
பொதுவாக சிறுநீர் பை நிரம்பும் போது சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும். நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கக்கூடும்.
சில சமயங்களில் சிறுநீர் பை நிரம்பி சிறுநீரை உங்களால் கட்டுப்படுத்தவே முடியாத நிலை ஏற்படும். இது எப்போதாவது ஏற்படுவது இயல்புதான் ஆனால் அடிக்கடி இந்த நிலை ஏற்பட்டால் இது கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
அதேபோல சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுதல் மற்றும் உடலுறவு கொண்ட பின்னர் அதிக வலியை உணர்தல் போன்றவையும் கருப்பை வாய் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகும். பி.சி.ஓ.எஸ். உள்ளிட்ட பல பிரச்சினைகளின் போது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஹார்மோன் சமநிலை பிரச்சினை எதுவும் இல்லாத பட்சத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்டால் அது கருப்பை வாய் புற்றுநோயின் ஆபத்தான அறிகுறி என எச்சரிக்கப்படுகின்றது.
கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் முதுகு வலியும் முக்கிய இடம் வகிக்கின்றது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் முதுகு வலி ஏற்படலாம். இதுவே தாங்கமுடியாத வலியாக இருந்தால் அதைனை அலட்சியப்படுத்த கூடாது.
உடலுறவில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்படும். குறிப்பாக கருப்பை வாய் பாதையில் புண்கள், கட்டிகள் குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு இருந்தால் அவர்களால் சாதாரணமாக உடலுறவில் ஈடுப்பட முடியாத நிலை காணப்படும் இவ்வாறாக அறிகுறிகள் கருப்பை வாய் புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகளாகும். மேலும் உடலுறவில் விருப்பமற்ற தன்மை, உடலுறவின் போது பிறப்புறுப்பு மற்றும் கருப்பை வாய் பகுதியில் வலி ஆகியவை உண்டாகலாம்.
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தாலும் அது கருப்பை வாய் புற்றுநோயாக இருக்கலாம். இவ்வாறன அறிகுறிகள் இருப்பின் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
- மாணவர் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது காலில் இரும்பு கம்பி கிழித்தது.
- சூரியபிரகாசை அண்ணா நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அறுவை சிகிச்சை மூலம் இடுப்பில் இருந்த உடைந்த ஊசி அகற்றப்பட்டது.
அம்பத்தூர்:
பாடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவரது மகன் சூரிய பிரகாஷ் (21). என்ஜினீயரிங் மாணவர். இவர் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது காலில் இரும்பு கம்பி கிழித்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சூரியபிரகாஷ் தடுப்பூசி போட சென்றார். அவருக்கு நர்சு ஒருவர் தடுப்பூசியை இடுப்பில் போட்டதாக தெரிகிறது. அப்போது ஊசி உடைந்து உடலுக்குள் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடம் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். ஆனால் அவர்கள் உரிய பதில் கூறவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் சூரியபிரகாசை அண்ணா நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அறுவை சிகிச்சை மூலம் இடுப்பில் இருந்த உடைந்த ஊசி அகற்றப்பட்டது.
உரிய சிகிச்சை அளிக்கப்படாதது குறித்து கொரட்டூர் போலீஸ் நிலையத்திலும், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மாணவரின் தந்தை புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- 2020ல் பரவிய கொரோனா பெருந்தொற்று லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது
- கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசியே புதிய திரிபிலிருந்தும் காக்கும் என்றார் டெட்ரோஸ்
2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றி பரவிய கொரோனா வைரஸ் நுண்கிருமியால், கோவிட்-19 எனும் சுவாச தொற்று நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவியது.
இதை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தி சுகாதார அவசர நிலையை கொண்டு வந்தது.
2020ல் உலகின் அனைத்து நாடுகளிலும் வெகுவேகமாக பரவிய இந்த பெருந்தொற்று, லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது.
உயிரிழந்தவர்களின் உடல்களை கூட உறவினர்கள் தூரத்தில் நின்று மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டு, அந்த உடல்களை மருத்துவமனை ஊழியர்களே அடக்கம் செய்தனர்.
பெருந்தொற்று பரவலை தடுக்க இந்தியா உட்பட பல உலக நாடுகள் மாதக்கணக்காக ஊரடங்கை பிறப்பித்தன. இதனால், பெருமளவு தொழில் முடக்கம் மற்றும் வேலை இழப்பு ஏற்பட்டது.
லட்சக்கணக்கான உயிர்சேதத்தினாலும், கோடிக்கணக்கான பொருளாதார இழப்பினாலும் உலகையே அச்சுறுத்திய கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி கொள்ள அறிவுறுத்தின.
இதன் பயனாக தொற்றினால் தாக்கப்படுபவர்கள் குறைய தொடங்கினர்.
2022 தொடக்கம் முதல் இந்தியாவில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவில் குறைந்தனர்.
2023 மே மாதம் உலக சுகாதார அமைப்பு, கோவிட் பெருந்தொற்றுக்கான சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில், சமீப சில மாதங்களாக ஆங்காங்கே இந்தியா உட்பட உலக நாடுகளில், ஜேஎன்.1 (JN.1) எனும் கொரோனா வைரசின் புதிய திரிபு பரவ தொடங்கி உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேய்சஸ் (Tedros Adhanom Ghebreyesus), ஜெனிவாவில் இந்த புதிய திரிபு குறித்து கருத்து எச்சரித்துள்ளார்.
அவர் இது குறித்து தெரிவித்ததாவது:
2023 டிசம்பர் மாதம் மட்டுமே, ஜேஎன்.1 திரிபால் சுமார் 10 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எண்ணிக்கையில், கொரோனா பெருந்தொற்று காலத்தை ஒப்பிட்டால் இது குறைவுதான் என்றாலும் இது ஏற்க கூடியது அல்ல.
மேலும் சில இடங்களில் இது பரவி தகவல்கள் தெரிவிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கங்கள்தான் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
இதுவும் ஓமிக்ரான் (omicron) வகை வைரஸ் என்பதால், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளே இந்த வைரசுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும்.
மக்கள் தடூப்பூசி இன்னமும் செலுத்தி கொள்ளா விட்டால் விரைவாக செலுத்தி கொள்வது நல்லது. அத்துடன் முககவசம் அணிவதும், பணிபுரியும் இடங்கள் மற்றும் வசிக்கும் இடங்ககள் காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டியதும் அவசியம்.
இவ்வாறு டெட்ரோஸ் கூறினார்.
- ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாகவே அமையும்.
- தாயின் வயிற்றுக்குள் கதகதப்புடன் இருக்கும்.
சுற்றுச்சூழல், காற்று, வெயில், மழை, குளிர் என அனைத்தும் பிறந்த குழந்தைகளுக்குப் புதிதாக இருக்கும். குழந்தைகளின் வருகை மகிழ்ச்சியைத் தந்தாலும் இதுப்போன்ற புதிய சூழலுக்கு எப்படி அவர்களைப் பராமரிப்பது? என்பது ஒவ்வொரு தாய்மார்களுக்கும் ஒரு பெரும் சவால் தான். முதன் முறையாக குழந்தையை பெறும் தாயாக இருந்தால் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற அச்சமும் ஏற்படும். அதிலும் குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாகவே அமையும்.
அரவைணப்பு:
குழந்தைகள் 9 மாத காலங்களுக்கு தாயின் வயிற்றுக்குள் கதகதப்புடன் இருக்கும். நவம்பர் முதல் ஜனவரி வரையிலான குளிர்காலத்தில் பிறக்கும் சூழல் ஏற்பட்டால் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்தால் தாய்மார்கள் கங்காரு மதர் கேர் முறையைப் பின்பற்ற வேண்டும்.
பிறந்தவுடன் தாயின் அரவணைப்பில் மட்டுமே இருக்க வேண்டும். குழந்தைகளைப் பார்ப்பதற்கு யார் வந்தாலும் தூக்க சொல்ல வேண்டாம். இது குழந்தைக்குத் தொற்று பாதிப்பிற்கு வழிவகுக்கும். அம்மாவின் அரவணைப்பு மற்றும் குளிருக்கு இதமான ஆடைகள் தான் குளிர்காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்றதாக அமையும்.
மசாஜ்:
தாயின் வயிற்றில் இருந்து வெளிவரும் குழந்தையின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். ஆனால் குளிர்ந்த காற்று அவர்களின் சருமத்தை வறண்டு விடச் செய்கிறது. உடலின் வெப்பநிலையும் சமமாக இருக்காது. இந்தநேரத்தில் குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். இது உடலின் வெப்பநிலையை அதிகரித்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. சுத்தமான இயற்கை எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
சூடான நீரில் குளிக்க வைத்தல்:
குழந்தையின் உடல் நலம் மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு அவர்களைக் குளிக்க வைக்க வேண்டும். குளிர்காலத்தில் சூடான நீரில் மட்டுமே அவர்களைக் குளிக்க வைக்கவும். எடைக்குறைவாக இருக்கும் குழந்தைகள் என்றால், குளிக்க வைக்க வேண்டாம். மாறாக காட்டன் துணிகளை சூடான நீரில் நனைத்து துடைத்தெடுக்கவும்.
ஆடை:
குழந்தைகளை சூடாகவும் குளிரின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் ஆடைகளின் தேர்வு முக்கியமானது. அதற்கென்று குழந்தைகளுக்கு எரிச்சலூட்டம் வகையிலான ஆடைகளை அணிய கூடாது. மிருதுவான ஸ்வெட்டர்கள், தொப்பிகள், கையுறைகள், சாக்ஸ் போன்றவற்றை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தடுப்பூசி:
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றைக் குறைக்க வேண்டும் என்றால் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் சளி, இருமல் தொல்லை இருந்தால் மருத்துவரின் அறிவுரையின் படி தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது நல்லது.
தாய்ப்பால்:
பிறந்தவுடன் குழந்தைகளுக்கு தாய்மார்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதிலும் குளிர்காலத்தில் அதிகமாக குழந்தைகள் சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால் அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இரவில் நல்ல தூக்கத்தில் இருந்தாலும், குழந்தையை எழுப்பிவிட்டு உட்கார்ந்து தான் பால் கொடுக்க வேண்டும். படுத்துக் கொண்டு கொடுக்கவே கூடாது. மேலும் புதிதாகப் பிறந்த குழந்தையின் கழுத்துத் தசைகள் வளர நேரம் எடுக்கும் என்பதால் குழந்தைகளைத் தூக்கும் போது எப்போதும் தலையிலும் கை வைத்து தூக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
டயப்பர் மாற்றுதல்:
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு பல டயப்பர்கள் தேவைப்படும். எனவே அடிக்கடி அவற்றை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
- ஆரோக்கியத்திற்காக கருவில் இருக்கும்போதே தடுப்பூசி போடப்படுகிறது.
- தடுப்பூசி தவறாமல் போட்டு கொள்வது அவசியமானது.
குழந்தை பிறந்ததும் தடுப்பூசி போடுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. குழந்தையின் ஆரோக்கியத்திற்காக கருவில் இருக்கும் போதே தடுப்பூசி போடப்படுகிறது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என அனைத்து மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகளை அட்டவணையில் பதிவிட்டு வழங்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி மூலம் குழந்தை பிறந்தது முதல் வளரும் வரை தாக்கப்படும் நோய்களிலுருந்து பாதுகாத்து கொள்ள முடியும். இதில் முக்கியமானது எந்தெந்த நாட்களில் தடுப்பூசிகளை போட வேண்டுமோ அதை தவறாமல் போட்டு கொள்வது அவசியமானது. அது போல ஒவ்வொரு தடுப்பூசியும் எதற்காக போடப்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
டிபிடி என்பது டிஃப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் போன்ற நோய்கள் வராமல் தற்காத்து கொள்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் பாக்டீரியாவால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நோய்களாக இருக்கிறது.
டிப்தீரியா மற்றும் பெர்டுசிஸ் ஆகியவை காற்று, நீர், தொடுதல், இருமல், தும்மல் மற்றும் பிற முறைகள் மூலம் நபருக்கு நபர் பரவுகின்றன, அதேசமயம் டெட்டனஸ் பாக்டீரியா வெட்டுக்கள் மற்றும் காயங்கள் மூலம் உடலில் நுழைகிறது.
டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் என்றால் என்ன.?
டிப்தீரியா தொண்டை பிரச்சனை, சுவாசப் பிரச்சனைகள், பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்துகிறது.
டெட்டனஸ் ஒரு பாக்டீரியா தொற்று. இது தசைகள் வலிமிகுந்த இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. தாடையனாது செயல்இழுக்கப்பட்டுவை திறக்க முடியாமல் செய்கிறது. டெட்டனஸ் உலகளவில் 10 சதவீதம் உயிரைக் கொல்கிறது. ஒழிப்பை இந்தியா நோக்கமாகக் கொண்டிருந்தாலும், கர்நாடகாவில் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.
பெர்டுசிஸ் நோய் ஏற்பட்டால் குழந்தைகளால் சாதாரணமாக சுவாசிக்க முடியாது. தொடர்ந்து இருமல் இருந்து கொண்டே இருக்கும். அதோடு மட்டுமில்லாமல் இருமலோடு வாந்தி பிரச்சினையையும் ஏற்படுத்தும். மேலும் இவை தொடர்ந்து நீடிக்கப்பட்டு தண்ணீர் குடிப்பதில் பிரச்சினை, உணவு சாப்பிடுவதில் பிரச்சினை போன்றவையே ஏற்படுத்தும். இவற்றை கவனிக்காம விட்டால் நுரையீரலில் அலர்ஜியை ஏற்படுத்தும். மேலும் நிமோனியா காய்ச்சல் மற்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
2 மாதங்கள், 4 மாதங்கள், 6 மாதங்கள், 15 முதல் 18 மாதங்கள், 4 முதல் 6 ஆண்டுகள் இந்த ஊசியானது ஐந்து அளவுகளில் வழங்கப்படுகிறது.
பக்க விளைவுகள்:
ஊசி போட்ட இடத்தில் சிவந்து போதல் அல்லது அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு காணப்படும்.
காய்ச்சல், பசியின்மை, தூக்கம், எரிச்சல், வாந்தி, வலிப்பு ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது நல்லது.
- ரூபெல்லா தடுப்பூசி ஒரு டோஸ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- 440 பணியாளர்கள் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை துணை இயக்குனர் ஜவஹர்லால் மேற்பார்வையில் 55 மருத்துவ குழுவைக் கொண்டு 144 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
நாளை முதல் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி ஒரு டோஸ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 250 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் இருந்து 55 மருத்துவ குழுவினர், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து 33 மருத்துவ குழுவினர் மற்றும் 440 பணியாளர்கள் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- தெரு நாய்கள் வலை மூலம் பிடிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் தடுப்பூசி.
- நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் வண்ணம் பூசவும் திட்டம்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 93,000 நாய்களுக்கும் வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தெரு நாய்கள் வலை மூலம் பிடிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் தடுப்பூசிகள் விட முடிவு செய்யப்படுகிறது.
தடுப்பூசி போடப்பட்டு பின்னர் அதே தெருவில்
தடுப்பூசி செலுத்திய நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் ஒரு பகுதிகளில் வண்ணம் தீட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- வருகிற 6-ந் தேதி தஞ்சை ஒன்றியம் கொல்லங்கரை கிராமத்தில் கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.
- கால்நடைகளுக்கும் காதுவில்லை அணிவித்து தனித்துவ 12 இலக்க எண் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றுதல்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் 'குக்கிராமங்களில் உள்ள 2.92 லட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி (கோமாரி நோய்) போடும் பணி நடைபெறுகிறது.
இந்த தடுப்பூசி போடும் பணி வருகிற 6 ஆம் தேதி முதல் தொடங்கி 21 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் டிசம்பர் 21 முடிய உள்ள காலத்தில் விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த தடுப்பூசி போடும் பணியை வருகிற 6-ந் தேதி தஞ்சை ஒன்றியத்தில் உள்ள கொல்லங்கரை கிராமத்தில் கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.
எனவேநான்கு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து கறவை, சினை உள்ளிட்ட பசு, எருமை மற்றும் அனைத்து எருதுகளுக்கும் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அனைத்து கால்நடைகளுக்கும் காதுவில்லை அணிவித்து தனித்துவ 12 இலக்க எண் உள்ளிட்ட கால்நடை தொடர்பான விவரங்களை பதிவேற்றுதல் இந்திய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் தங்கள் கிராமத்திற்கு வருகை புரியும் போது அனைத்து கால்நடைகளுக்கும் அடையாள காதுவில்லை பொருத்தி 100 சதவீதம் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி மேற்கொண்டு பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கால்நடை வளர்ப்போர்கள் கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்கனர் டாக்டர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
- புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் 1500 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது
- ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் ஆடுகளுக்கான ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி தலைமை வகித்து ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் தளவாபாளையம் கால்நடை மருத்துவர் டாக்டர் கோபிநாத் தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.
- பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது
- கார்பா கொண்டாட்டத்தின் போது 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
கோவிட் பெருந்தொற்று என பரவலாக அழைக்கப்பட்ட, 2019 டிசம்பரில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தாக்குதல், 2020 முழுவதும் உலகையே உலுக்கியது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு, 3 வெவ்வேறு காலகட்டங்களில் பெருமளவில் அனைத்து இந்தியர்களுக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது.
ஆனால், 2022லிருந்து 20 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்ட பலர் இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழந்த செய்திகள் சில மாதங்களாக வெளி வந்தன.
இதற்கிடையே, நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 15 தொடங்கி அக்டோபர் 24 வரை தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் பிரபலமான 'கார்பா' நடன நிகழ்ச்சி நடைபெற்றது. துரதிர்ஷ்டவசமாக, இந்த கார்பா கொண்டாட்டங்களின் போது 12-ஆம் வகுப்பு மாணவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Mansukh Mandaviya) கருத்து தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) கோவிட் பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் குறித்து ஒரு விரிவான ஆராய்ச்சியை நடத்தியுள்ளது. அதில், கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் தங்கள் உடலை அதிகம் வருத்தி கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், சுமார் 2 வருடங்கள் வரை உடலுக்கு அதிக சிரமம் தரும் உடற்பயிற்சியிலோ அல்லது கடின உழைப்பு தேவைப்படும் செயல்களிலோ ஈடுபட கூடாது. இதனால் மாரடைப்பு வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.
இவ்வாறு மாண்டவியா எச்சரித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்