search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government hospitals"

    • ரூ.27 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய்களை கண்டறியும் பரிசோதனைகள்.
    • ரூ. 32 கோடி மதிப்பீட்டில் இருதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகங்கள்.

    மக்கள் நல்வாழ்வுத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் பல்வேறு திட்டங்கள் குறித்து தகவல் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மிக அதிக உடல் எடையுடன் (Morbid Obesity) உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, குடலிறக்கம், கல்லீரல் செயலிழப்பு, இதயநோய் போன்ற பல்வேறு பாதிப்புகள் உள்ளோருக்கான உயிர்காக்கும் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை (Bariatric Surgery) சென்னை ஸ்டான்லி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், ரூ.27 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய்களை கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

    ரூ. 32 கோடி மதிப்பீட்டில் இருதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகங்கள்.

    கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊடுகதிர் பரிசோதனை.

    தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட நிதியுதவியுடன், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்த ரூ.18.13 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கான மருத்துவ சேவைகள்.

    பச்சிளங் குழந்தைகளுக்கான சிறப்பு கண்காணிப்பு மையங்கள்.

    ரூ. 26.62 கோடி மதிப்பீட்டில் "பாதம் பாதுகாப்போம்" திட்டம்

    ரூ 50.00 கோடி மதிப்பீட்டில் நவீன மருத்துவ வகுப்பறைகள்.

    ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள்.

    குழந்தைகளுக்கான சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை!

    ₹250 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை நிறுவப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு.

    கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்திலும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும் அமைகிறது.

    • தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
    • மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் பணிபுரியம் கடைநிலை ஊழியர்களுக்கு இதுவரை 2 ஷிப்ட் என்ற முறைகள் பணிநேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர் உதவியாளர்கள் ( தரம் 2) மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

    காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என்று மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மொத்த பணியாளர்களில் 50 சதவீத பேர் முதல் ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 2 வது ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 3-வது ஷிப்டிலும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு மருத்துவமனைகளில் காலியாக டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப மருத்துவ தேர்வு வாரியம் மூலம் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • தமிழகத்தில் தற்போது எந்த நோய் பரவலும் இல்லை.

    சென்னை:

    சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வசதிகளுடன் மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டிடம் மற்றும் அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விடுதி கட்டிடம் ஆகியவற்றிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.197.14 கோடி மதிப்பில் நவீன கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    அரசு மருத்துவமனைகளில் காலியாக டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப மருத்துவ தேர்வு வாரியம் மூலம் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக 1021 மருத்துவர்கள் 20 மாவட்டங்களில் நியமிக்கப்படுகிறார்கள்.

    டாக்டர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு 3-ந்தேதி நடைபெறுகிறது. 4-ந்தேதி பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. மகளிருக்கு சலுகை விலையில் ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் தற்போது எந்த நோய் பரவலும் இல்லை. டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 15 வருடங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது. மழை, வெள்ளம் பாதிப்பு இருந்த போதும்கூட தொற்று நோய் பரவவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாதிரி எடுத்த அடுத்த 6 மணி நேரத்துக்குள், நோயாளிக்கு பரிசோதனை விபரங்களை அளித்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    டெங்கு காய்ச்சல் பரிசோதனை முடிவுகளில் தாமதம் கூடாது. மாதிரி எடுத்த 6 மணி நேரத்துக்குள் முடிவுகளை வழங்கி விட வேண்டும் என ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு தொடர்பவர்கள் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்கின்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை பணிகளை வேகப்படுத்த வேண்டும். மாதிரி எடுத்த அடுத்த 6 மணி நேரத்துக்குள், நோயாளிக்கு பரிசோதனை விபரங்களை அளித்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தரப்பில் இருந்து, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு விட்டால் அவர் குறித்த விபரங்களை உடனடியாக நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி, மாநகராட்சி நகர் நல அலுவலர், சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    • டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் இல்லாமல் அரசால் மக்களை நோய் நொடியின்றி எப்படி காப்பாற்ற முடியும்.?

    புதுச்சேரி:

    புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டெங்கு காய்ச்சலை தடுக்கவும், மற்ற காய்ச்சல்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் இதர நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கும் போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதி அரசு மருத்துவமனைகளில் இல்லை என்பது தான் உண்மையான நிலைமை.

    மேலும் சுகாதார துறையில் 100-க்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.போதுமான டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் இல்லாமல் அரசால் மக்களை நோய் நொடியின்றி எப்படி காப்பாற்ற முடியும்.?

    இப்போது மருந்து வாங்கியதில் பெரிய தவறுகளும், மோசடிகளும் நடந்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தி ருக்கிறது. எனவே மாநில அரசின் ஆலோசனை கூட்டங்கள் பெயரளவில் இல்லாமல் மருந்துகள், சிகிச்சைகள், பணியாளர்கள் போன்ற மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்தும் உண்மையான முயற்சியாக இருக்க வேண்டும். எத்தனை நோயாளிகள் வந்தாலும் அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் நிலைக்கு சுகாதாரத்துறை செயல்பட வேண்டும்.

    இவ்வாறு சலீம் அறிக்கையில் கூறி யுள்ளார்.

    • கருக்கலைப்பு செய்வதற்கு வகுக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தனி வாரியம் அமைக்கப்படும்.
    • உரிய காரணம் இல்லாவிட்டால் கருக்கலைப்பு விண்ணப்பத்தை நிராகரிக்க வாரியத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் 32 அரசு மருத்துவமனைகளில் தனித்தனியான கருக்கலைப்புக்கான வாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கருக்கலைப்பிற்கு உரிய அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்க அரசு மருத்துவமனைகளில் தனி வாரியம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    கருக்கலைப்பு செய்வதற்கு வகுக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தனி வாரியம் அமைக்கப்படும். கருக்கலைப்பிற்கான கருத்துக்களை 3 நாட்களுக்குள் வாரியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

    உரிய காரணம் இல்லாவிட்டால் கருக்கலைப்பு விண்ணப்பத்தை நிராகரிக்க வாரியத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும்.

    சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனைகள் இதில் அடங்கும். பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் உறுப்பினர்களாக வாரியத்தில் இருப்பார்கள்.

    • டாய் எனப்படும் தமிழ்நாடு விபத்து, அவசர சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • அனைத்து வார்டுகளிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை தயாராக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் விபத்து உயிரிழப்புகளை தடுக்க சுகாதார துறை சார்பில், டாய் எனப்படும் தமிழ்நாடு விபத்து, அவசர சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக விபத்தில் சிக்கி வருவோருக்கு விரைந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் விபத்து உயிரிழப்புகள் குறைந்தன.அரசால் செயல்படுத்தப்படும் இது போன்ற திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்ற சிறப்புக்குழு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்வது வழக்கம்.

    இம்மாதம் உச்சநீதிமன்ற சிறப்புக்குழு தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில், செயல்படுத்தப்படும் டாய் திட்டம் குறித்து ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், டாய் வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்யவும், அங்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து வார்டுகளிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை தயாராக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    • இன்று 2-வது நாளாக கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
    • மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் வேகம் எடுத்து ள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 350-ஐ கடந்து விட்டது.

    நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதை தடுக்க தமிழக சுகாதாரத் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் அரசு ஆஸ்பத்தி ரிகள் நகர, கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பி க்கப்பட்டது.

    இந்த நடை முறை அமலுக்கு வந்து விட்டது. இதைபோல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகள், உடன் கவனித்து கொள்பவர்களும் முககவசம் அணிய வேண்டும் என நடைமுறை வந்துவிட்டது.

    இந்நிலையில் கொரோ னா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கை யாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ மனைகளில் கொரோனா அவசர கால தடுப்பு ஒத்திகை 2 நாட்கள் நடைபெறும் என அறிவித்தி ருந்தனர்.

    அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

    ஈரோடு மாவட்டத்திலும் நேற்று அரசு ஆஸ்பத்தி ரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்காக தனியாக 100 படுக்க வசதி கொண்ட வார்டு தயார் நிலையில் உள்ளது.

    மருந்து, உள் கட்டமைப்பு வசதிகளை அதிகாரிகள் உறுதி செய்த னர். ஆக்சிஜன், படுக்கை வசதி மருந்து கையிருப்பு ஆகியவற்றையும் அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.

    இதேபோல் கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கொடுமுடி போன்ற அரசு ஆஸ்பத்திரி களிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடை பெற்றது.

    அதனை த்தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்ட த்தில் உள்ள அரசு ஆஸ்பத்தி ரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

    அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் வந்த நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி க்கப்பட்டு பதிவு செய்து பரிசோதனை முடிந்து ஆக்ஸிஜன் பொருத்துவது உள்ளிட்ட ஒத்திகைகள் செய்து பார்த்தனர்.

    கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளை எவ்வாறு மருத்துவமனைக்குள் கொண்டு வருவது. அவருக்கு எவ்வாறு முறையாக சிகிச்சை அளிப்பது போன்ற ஒத்திகையும் நடைபெற்றது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 725 ஆக உயரந்துள்ளது.

    மேலும் பாதிப்பில் இருந்து 3 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    இதனால் குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 1லட்சத்து 35 ஆயிரத்து 974 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள னர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    • தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணய வேண்டும் என்ற உத்தரவானது இன்று முதல் அமலுக்கு வந்தது.

    நெல்லை:

    தமிழகத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் வெளி நோயாளிகள், உள் நோயாளிகள், மருத்துவமனை யின் அனைத்து நிலை ஊழியர்களும் இன்று முதல் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

    பொது இடங்களிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக முக கவசம் அணிந்து செல்வது நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து இந்த நடைமுறை இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது.

    நெல்லை

    இதையடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த உத்தரவானது இன்று முதல் அமலுக்கு வந்தது. நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் இன்று காலை முதலே நோயாளிகளின் உறவினர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் நடமாடும் அனைத்து தரப்பினரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    முகக்கவசம் அணியாமல் சிலர் வந்தபோதிலும், அவர்களுக்கு மருத்து வக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் முகக்கவசம் வழங்கினார். தொடர்ந்து அனைவரையும் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தினார்.

    ஏற்கனவே சமீப காலமாகவே நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, வட்டார அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோர் முகக்கவசம் அணிந்தபடியே சிகிச்சை அளித்து வருவதால் எங்களுக்கு இது புதிதாக தோன்றவில்லை என டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

    தென்காசி, தூத்துக்குடி

    தென்காசி, தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் இன்று முதல் அனைத்து நோயாளிகள், உறவினர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவு றுத்தப்பட்டனர். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை 100 சதவீதம் உறுதிப்படுத்திட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

    ஏனென்றால் நோய் தொற்று என்பது முதலில் ஆஸ்பத்திரிகளிலேயே தொடங்குகிறது. எனவே, ஆஸ்பத்திரிகளில் இத்தகைய சீர்திருத்தத்தை தொடங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதன் பேரில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் முகக்கவசம் அணியவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு அறுவை சிகிச்சைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
    • மாதத்திற்கு 644 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.

    கோவை,

    தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு சுகாதார சீா்திருத்த திட்டம் மற்றும் தேசிய சுகாதார இயக்கம் சாா்பில், 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து தரவரிசைப் படுத்தப்படுகிறது.

    அதன்படி, தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் (ஏப்ரல் முதல் செப்டம்பா்) சிறப்பாக செயல்பட்ட ஆஸ்பத்திரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி 3-ம் இடம் பிடித்துள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி முதலிடத்தையும், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

    இந்த ஆய்வில், புறநோயாளிகள், உள்நோயாளிகள் எண்ணிக்கை, எம்.ஆா்.ஐ., இருதய பிரிவு, அறுவை சிகிச்சைகள், மகப்பேறு சிகிச்சை, பாம்பு கடிக்கு அளிக்கப்படும் சிகிச்சை, விபத்து சிகிச்சை, நோயாளிகள் கவனிப்பு, டாக்டர்கள் - நோயாளிகளின் எண்ணிக்கை, நிா்வாக செயல்பாடுகள் உள்ளிட்ட 39 விதமான செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

    இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிா்மலா கூறியதாவது:-

    கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையான மாதங்களில் தினசரி சராசரியாக 3,204 போ் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்றுள்ளனா். தவிர, உள்நோயாளிகள் பிரிவில் 1,353 போ் சிகிச்சைப் பெறுகின்றனா். 238 டாக்டர்கள் உள்ளனா்.

    மேலும், 936 சிக்கலான அறுவை சிகிச்சைகள், 1,175 மகப்பேறு சிகிச்சைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு அறுவை சிகிச்சைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

    கடந்த 6 மாதங்களில் சராசரியாக மாதத்திற்கு 644 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. அரசு ஆஸ்பத்திரியில் தாய் - சேய் உயிரிழப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் 22 அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளை அரவணைக்கும் தாய்ப்பால் வங்கிகள் இயங்கிவருகிறது.
    சென்னை:

    ரத்த வங்கி, கண் வங்கி என்ற வரிசையில் தாய்ப்பாலையும் சேமித்துவைத்து பயன்படுத்த வேண்டிய காலகட்டத்தை நாம் அடைந்திருக்கிறோம். பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் இன்றியமையாதது. தாய்ப்பால் தான் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, பச்சிளம் குழந்தையின் வளர்ச்சிக்கு அச்சாரமாக திகழ்கிறது.

    பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், குறைமாதம் மற்றும் எடை குறைவாக பிறந்த குழந்தைகள், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கிகள் தான் உதவி வருகின்றன.

    குழந்தைகளின் தேவையை தாண்டி அதிகமாக பால் சுரக்கும் தாய்மார்களும், குழந்தை பிறந்த சில மாதங்களில் வேலைக்கு செல்லும் தாய்மார்களும் தன்னார்வத்துடன் தாய்ப்பால் தானம் செய்துவருகின்றனர்.

    தாய்மார்களிடம் இருந்து சேகரிக்கப்படும் தாய்ப்பால் 200 மி.லி. அளவுள்ள பாட்டில்களில் அடைக்கப்பட்டு 62 டிகிரி வெப்பநிலையில் 30 நிமிடங்கள் பதப்படுத்தப்படுகிறது. பாலில் கிருமித் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டபின் சேமித்துவைக்கப்படுகிறது. இந்த தாய்ப்பாலை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

    எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் பிரிவு உதவி பேராசிரியர் டாக்டர் வைத்தீஸ்வரன் கூறியதாவது:-

    எங்கள் மருத்துவமனையில் ஒரு நாளைக்கு சராசரியாக 5 லிட்டர் தாய்ப்பால் சேகரிக்கப்படுகிறது. மேலும் 5 லிட்டர் தாய்ப்பால் எப்போதும் இருப்பில் இருக்கும். தாய்ப்பால் தானத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம். மாதத்துக்கு 1,500 பிரசவங்கள் நடக்கிறது.

    டாக்டர் வைத்தீஸ்வரன்

    ஒரு குழந்தைக்கு அதன் வளர்ச்சியை பொறுத்து சராசரியாக 10 மி.லி. முதல் 20 மி.லி. அளவுக்கு தாய்ப்பால் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கவேண்டும். அதன்படி ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு 100 மி.லி. முதல் 200 மி.லி. தாய்ப்பால் தேவைப்படும். பிரசவம் முடிந்து செல்லும் தாய்மார்கள் தடுப்பூசி போட வரும்போது, பால் அதிகமாக இருந்தால் தானமாக கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் பிரிவு டாக்டர் கமலரத்தினம் கூறியதாவது:-

    உடல்நலம் பாதிக்கப்பட்டு குழந்தைகள் பால் குடிக்கவில்லை என்றால் தாய்மார்களுக்கு பால் சுரப்பது குறைந்துவிடும். தொடர்ச்சியாக பால் கொடுத்தால் தான் பால் நன்றாக சுரக்கும்.

    எனவே இதுபோன்ற தாய்மார்கள் தாய்ப்பால் தானம் கொடுக்கலாம். வேலைக்கு செல்லும் தாய்மார்கள் சிலர் ‘பேஸ்புக்’ மூலம் தாங்களாக ஒரு குழுவை ஏற்படுத்தி தன்னார்வத்துடன் தாய்ப்பால் தானம் கொடுக்கிறார்கள். தாய்மார்களுக்கு இதுகுறித்து நாங்கள் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்.

    எங்களுடைய தாய்ப்பால் வங்கியில் ஒரு நாளுக்கு 1 லிட்டர் முதல் 1½ லிட்டர் பால் சராசரியாக சேகரிக்கப்படுகிறது. 10 முதல் 20 வரையிலான தாய்மார்கள் தானம் கொடுத்துவருகிறார்கள். அதனை சராசரியாக 15 முதல் 20 பச்சிளம் குழந்தைகளுக்கு புகட்டி வருகிறோம். அதிகமான தேவை இருப்பதால் தாய்ப்பால் பற்றாக்குறையாகத்தான் உள்ளது. தாய்மார்கள் தன்னார்வத்துடன் தாய்ப்பாலை தானமாக வழங்க வேண்டும் என்று ஊக்குவித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா தாய்-சேய் நல மருத்துவமனை உள்பட தமிழகத்தில் 22 அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

    அரசு மருத்துவமனைகளில் உள்ள தாய்ப்பால் வங்கிகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 120 லிட்டர் தாய்ப்பால் இருப்பு வைக்கப்படுகிறது. இதன்மூலம் தினமும் சராசரியாக 150-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பால் புகட்டப்படுகிறது.
    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டதில் சில பிரிவுகளில் முறைகேடு நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. #TNGovtHospitals #VigilanceRaid
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளிடம், சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பதற்கு ஊழியர்கள் பணம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    டாக்டர்கள் ஒப்புதல் சீட்டு இல்லாமல் மருந்து - மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு இருப்புகளை குறைவாக ஆவணங்களில் பதிவு செய்து இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.



    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி ஆஸ்பத்திரி, காஞ்சீபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், தஞ்சை, மதுரை, கடலூர், கோபிசெட்டிபாளையம், ஓமலூர் ஆகிய 10 அரசு ஆஸ்பத்திரிகளில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் உள்ள மருந்து, மாத்திரைகள் வழங்கும் இடம், எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் பகுதி, அறுவை சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வைக்கும் இடம், உணவு இருப்பு ஆகியவற்றில் சோதனை செய்தனர். ஊழியர்கள் பதிவேடு, ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது உள்நோயாளிகள், புறநோயாளிகளிடம் ஆஸ்பத்திரி ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது.

    சென்னை அரசு ஆஸ்பத்திரியில் 11 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தபோது 3 ஊழியர்களிடம் கணக்கில் வராத தலா ரூ.1000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை அவர்கள் நோயாளிகளிடம் லஞ்சமாக பெற்றது தெரிய வந்தது.

    இதே போல் திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக வரும் பெண்களின் உறவினர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது.

    அங்கு நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கும் ஊழியர்களிடம் இருந்து லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் அறையில் முதலில் சோதனையிட்டனர்.

    பச்சிளம் குழந்தைகள் வார்டு, மருந்தகம், பிணவறையிலும், கண் சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, மருந்து கிடங்கு, சமையல் அறை உள்ளிட்ட மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு செய்தனர்.

    இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றது. பின்னர் முக்கிய ஆவணங்களை லஞ்ச போலீசார் எடுத்துச்சென்றனர்.

    புற நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து குறித்து 4-ந்தேதிக்குப் பிறகு ஆவணத்தில் கணக்கு எழுதாதது, சமையல் செய்ய பொருட்கள் வாங்கியது பதிவை சமையல் ஒப்பந்ததாரர் புத்தகத்தில் எழுதாதது ஆகியவை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    கண் சிகிச்சைப் பிரிவில் கண்கள் பாதிப்புக்காக பயன்படுத்தப்படும் லென்ஸ் 350-க்கும் மேல் இருந்தது. ஆனால் இருப்பு கணக்குப்பதிவின்படி 150 லென்ஸ்தான் உள்ளது. இதனால் கண் லென்சில் முறைகேடு நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சோதனையில் சில பிரிவுகளில் முறைகேடு நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள், சமையல் ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    காஞ்சீபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு, ஸ்கேன் சென்டர், எக்ஸ்ரே பிரிவு, விபத்து பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடந்தது.

    இதில் ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடலூர் நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் அங்குள்ள மகப்பேறு பிரிவு, எக்ஸ்-ரே பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் அவர்கள் சென்று சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனை இரவு 7.30 மணி வரை நடந்தது. சோதனை முடிவில் கணக்கில் வராத ரூ.6 ஆயிரம் மற்றும் உதவித்தொகை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

    ஈரோடு மாவட்டம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் மதியம் தொடங்கிய சோதனை இரவு 9.30 மணி வரை நீடித்தது.

    சோதனையின்போது கணக்கில் வராத ரூ.1000 கைப்பற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #TNGovtHospitals #VigilanceRaid

    ×