search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும்

    • இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    • டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் இல்லாமல் அரசால் மக்களை நோய் நொடியின்றி எப்படி காப்பாற்ற முடியும்.?

    புதுச்சேரி:

    புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டெங்கு காய்ச்சலை தடுக்கவும், மற்ற காய்ச்சல்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் இதர நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கும் போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதி அரசு மருத்துவமனைகளில் இல்லை என்பது தான் உண்மையான நிலைமை.

    மேலும் சுகாதார துறையில் 100-க்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.போதுமான டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் இல்லாமல் அரசால் மக்களை நோய் நொடியின்றி எப்படி காப்பாற்ற முடியும்.?

    இப்போது மருந்து வாங்கியதில் பெரிய தவறுகளும், மோசடிகளும் நடந்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தி ருக்கிறது. எனவே மாநில அரசின் ஆலோசனை கூட்டங்கள் பெயரளவில் இல்லாமல் மருந்துகள், சிகிச்சைகள், பணியாளர்கள் போன்ற மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்தும் உண்மையான முயற்சியாக இருக்க வேண்டும். எத்தனை நோயாளிகள் வந்தாலும் அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் நிலைக்கு சுகாதாரத்துறை செயல்பட வேண்டும்.

    இவ்வாறு சலீம் அறிக்கையில் கூறி யுள்ளார்.

    Next Story
    ×