search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private hospital"

    • நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து விட்டு டாக்டர் கைகளை சுத்தம் செய்ய சென்றுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் ஆன்ட்ரோ ரோமியன்தாஸ் (வயது 41). இவர் தெற்குகள்ளிகுளம் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மருந்துகள் வாங்கிய வகையில் சில மருந்து நிறுவனங்களுக்கு கொடுப்பதற்காக டாக்டர் ஆன்ட்ரோ தனது அறையில் உள்ள பையில் ரூ.5 லட்சம் வைத்திருந்தார்.

    அப்போது நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து விட்டு டாக்டர் கைகளை சுத்தம் செய்ய சென்றுள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் டாக்டரின் அறையில் இருந்த ரூ.5 லட்சத்தை லாவகமாக திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    இதற்கிடையே மாலையில் டாக்டர் தனது பையை பரிசோதனை செய்தபோது அதில் வைத்திருந்த பணம் திருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அடிப்படையில் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு பணம் திருடிய நபர் தேடி வந்தனர். இதில் அவர் கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த ஜீவன்லால் (வயது 60) என்பதும், இப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை வள்ளியூர் போலீசார் கைது செய்தனர்.

    • தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ராஜகோபாலசுவாமி கோவிலில் கடலூர் உட்கோட்ட போலீசார் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.

    கடலூர்:

    கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா. இவரும் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுவை தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி பூரண குணமடைய வேண்டி கடலூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் கடலூர் உட்கோட்ட போலீசார் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.

    கடலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், ருத்திராம்பாள், கவியரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், ஏட்டு அருள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் இளங்கோவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    சென்னையில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள CADENCE என்கிற தனியார் மருத்துவமனையில் கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

    மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் இளங்கோவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அனுமதி பெறாமல் மனநோய் சிகிச்சை அளித்ததற்காகவும், அவசரகால மருத்துவர்கள் இல்லாதது, உபகரணங்கள் இல்லாதது என 11 காரணங்களுக்காக மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக Cadence மருத்துவமனையில் சட்ட விரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது மற்றும் உரிய அனுமயின்றி மனநோய் (Psychiatric) சார்ந்த சிகிச்சை மேற்கொள்வது தொடர்பான புகார் மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த 06.01.2024 அன்று பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை இயக்குநர் மற்றும் மரு.களத்தூர் ரவிகிருஷ்ணா ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட एक आ, A, PCPNDT ACT, 1994/TNCEA-1997 & மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு. இரா.இளங்கோ மகேஸ்வரன், எம்.எஸ்., டி.சி.எச் அவர்களின் ஆணைப்படி, இணை இயக்குநர் (சட்டம்) அவர்களின் தலைமையில் இணை இயக்குநர் (குடும்ப நலம்) மற்றும் தேசிய சுகாதார திட்ட மாவட்ட மனநல மருத்துவர். ஆகியோரைக்கொண்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

    விசாரணை குழுவினர் 02.05.2024 அன்று மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வில் மேற்காணும் மருத்துவமனையில் Scan பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதும் மரு. முரளி உரிய அனுமதியின்றி Scan செய்ததும், மாதாந்திர அறிக்கைகளை அரசிடம் சமர்ப்பிக்காமல் இருந்ததும், மேலும் கர்ப்பிணி பெண்களிடம் பெறக்கூடிய Form-F முறையாக பராமரிக்கப்படாததும் கண்டறியப்பட்டது.

    மேற்காணும் குறைபாடுகளைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் மாவட்ட அமலாக்க அலுவலர், PCPNDT Act, 1994 அவர்களால் உரிய விளக்கம் கோரப்பட்டது. 17.05.2024-ம் நாளிட்ட Cadence மருத்துவமனையின் விளக்க

    கடிதமானது குறைபாடுகளுக்கு தொடர்பில்லாமலும் திருப்தியின்றியும் அமைந்தது.

    அதனைத் தொடர்ந்து விசாரணைக் குழுவானது 23.05.2024 அன்று கேடீன்ஸ் மருத்துவமனையில் மீண்டும் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வில், மருத்துவமனையில் நிர்வாகம் மேற்கொள்ள முறையான பணியாளர்கள் இல்லை என்பதும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம்- 1997 சட்டத்தின் கீழ், உரிய அனுமதி பெறாமல் மருத்துவர்கள் பணியாற்றியதும், மேலும் உரிய அனுமயின்றி கருக்கலைப்பு செய்வதும் மகளிர் நலன் மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைகள் முறையான மகளிர் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல் செய்யப்பட்டதும், அவசர காலங்களில் மயக்கவியல் நிபுணர், பொது நல மருத்துவர் மற்றும் அவசரகால மருத்துவர்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது.

    மேற்காணும் மருத்துவமனை மனநல பாதுகாப்பு சட்டம் 2017, அத்தியாயம் 10, பிரிவு-65(1)ன் கீழ் மனநல மருத்துவம் அளிக்க மாநில மனநல அலுவலர் அவர்களிடம் முறையான அனுமதி பெறாமல் மனநல சிகிச்சை மேற்கொண்டது கண்டறியப்பட்டது. மேலும், மருத்துவமனையில் போதுமான கட்டமைப்பு வசதிகளில் (Generator. Defibrillator and Ventilator in emergency department) குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

    ஆய்வின் அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்தும்) சட்டம், 1997 விதி 5(1)-ன் கீழ் பொது மக்களின் நலன் கருதி Cadence மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட பதிவுச்சான்றிதழை தற்காலிகமாக நீக்கம் (Temporary Cancellation) செய்து ஆணையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 23.05.2024 அன்று முதல் மருத்துவமனை மூடப்பட்டது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை:

    ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(வயது77). ம.தி.மு.க கட்சியை சேர்ந்த இவர் ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்.பியாகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் கணேசமூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் கணேசமூர்த்தி மயக்க நிலையில் இருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலையும் டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறும் போது, கணேசமூர்த்தி எம்.பியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து எக்மோ கருவியை பொருத்தி அதன் மூலம் சிகிச்சை நடந்து வருகிறது என தெரிவித்தனர்.

    இதற்கிடையே கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கணேசமூர்த்தியை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடமும் கேட்டறிந்தனர்.

    கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர் மழை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
    • தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுத் தொல்லையும் அதிகரித்து உள்ளது. மழைக்காலம் என்பதால் தற்போது மதுரையில் பொதுமக்கள் பலருக்கும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் அதிகரித்து வருகின்றனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் காய்ச்சல், உடல் வலி, சளி, தொடர் இருமல் போன்ற பாதிப்புகளால் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் தீவிர பாதிப்பு உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இதில் கடந்த வாரம் மட்டும் 17 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள தனிவார்டில் 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில் நேற்று 15 பேருக்கும், இன்று 8 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை நகரில் நாளுக்குநாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர் மழை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் மாநகராட்சியும் இணைந்து மதுரையில் டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கிய இடங்களில் மருத்துவ முகாம், டெங்கு விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் வார்டு வாரியாக கொசுமருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஆனாலும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்து நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

    • ஒரு உறுப்புக்கு பதில் இன்னொரு உறுப்பை எடுத்து மாட்டும் அற்புதத்தை மருத்துவர்கள் நிகழ்த்துகிறார்கள்.
    • தசை பொருந்தாவிட்டால் விரல் அசையாது. ரத்த நாளம் வழியாக ரத்தம் சென்றால்தான் விரல் இயங்கும்.

    சென்னை:

    மருத்துவ துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது இயந்திரங்களின் பாகங்களை கழட்டி மாட்டுவது போல் மனிதர்களின் உறுப்புகளையும் கழட்டி பொருத்தி மருத்துவர்கள் சாதித்து வருகிறார்கள்.

    சிறுநீரகம், இதயம், கல்லீரல், கண் போன்ற உறுப்புகளில் மாற்று அறுவை சிகிச்சை சாதாரணமாகிவிட்டது. அதே போல் உடலில் அத்தியாவசிய தேவை எனும் போது ஒரு உறுப்புக்கு பதில் இன்னொரு உறுப்பை எடுத்து மாட்டும் அற்பு தத்தை மருத்துவர்கள் நிகழ்த்துகிறார்கள்.

    32 வயதான இளைஞர் ஒருவர் தான் பணிபுரியும் தொழிற்சாலையில் எந்திரத்தில் கை சிக்கியதில் வலது கை கட்டை விரலும், சுட்டு விரலும் துண்டித்து விழுந்தது.

    தனியாக துண்டிக்கப் பட்ட அந்த 2 விரல்களுடன் அந்த வாலிபர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். துண்டித்த விரலை எப்படியாவது பொருத்திவிடுவார் கள் என்ற நம்பிக்கையில் சென்றுள்ளார்.

    அந்த விரல்களை பரிசோதித்த மருத்துவமனையின் முடநீக்கியல் துறை அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சீனிவாசன் ராஜப்பா விரல்கள் சிதைந்து பொருத்த முடியாத நிலையில் இருந்ததை பார்த்துள்ளார்.

    அதே விரல்களை மீண்டும் பொருத்துவது சாத்தியமில்லை என்று கூறியிருக்கிறார்.

    ஆனால் வலது கையில் விரல்கள் அவசியம். அதிலும் கட்டை விரல் கட்டாயம் தேவை என்பதால் மாற்று வழிகள் பற்றி மருத்துவர்களிடம் அந்த வாலிபர் கேட்டுள்ளார்.

    அதற்கு கால் விரலை எடுத்து கையில் பொருத்த முடியும் என்று டாக்டர் ராஜப்பா கூறியிருக்கிறார். காலில் ஒரு விரலை எடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அதற்கு ஒத்துக் கொண்டார்.

    இதையடுத்து இந்த சிக்கலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர் சீனிவாசன் ராஜப்பா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடங்கினார்கள்.

    அந்த வாலிபரின் இடது காலின் 2-வது விரலை துண்டித்து எடுத்து கை கட்டை விரலாக பொருத்த முடிவு செய்தனர். திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை செய்து அந்த வாலிபரின் கட்டை விரலுக்கு பதில் கால் விரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு தற்போது அவர் நல்ல நிலையில் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த அறுவை சிகிச்சை பற்றி டாக்டர் சீனிவாசன் ராஜப்பா கூறியதாவது:-

    இது மிகவும் சிக்கலான ரிஸ்க் நிறைந்த அறுவை சிகிச்சை. ஏனெனில் கால் விரல் பகுதியின் ரத்த நாளங்கள் மிகவும் நுண்ணியது. கிட்டத்தட்ட ஒரு தலைமுடி அளவு விட்டம் கொண்டது. அவற்றை துல்லியமாக கண்டறிந்து துண்டித்து கையில் மிக துல்லியமாக பொருத்த வேண்டும்.

    தசை பொருந்தாவிட்டால் விரல் அசையாது. ரத்த நாளம் வழியாக ரத்தம் சென்றால்தான் விரல் இயங்கும். எலும்பு பொருந்தினால்தான் பலம் இருக்கும். இல்லாவிட்டால் அடித்தளம் இல்லாத கட்டிடம் போல் ஆகிவிடும்.

    இத்தனை ரிஸ்க்கையும் சவாலாக ஏற்று மிக துல்லியமாக கால் விரலை துண்டித்து மருத்துவ நுண்ணோக்கியில் துல்லியமாக பார்த்து பார்த்து ரத்த நாளங்களை இணைத்தோம். 8 மணி நேரம் நடந்த இந்த ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்தது.

    விபத்து நேரிடும் போது உறுப்புகள் துண்டிக்க நேர்ந்தால் அதை சுத்தமான பிளாஸ்டிக் உரையில் வைத்து கட்டி, ஐஸ்கட்டிகள் நிரப்பிய பாத்திரத்தில் எடுத்து வர வேண்டும். துண்டிக்கப்பட்ட பாகங்களில் ஐஸ்கட்டியோ, தண்ணீரோ நேரடியாக படக்கூடாது. இந்த மாதிரி உறுப்புகளை மாற்றுவது சாத்தியமே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வளர்ச்சி குறைவாக உள்ள குழந்தையை கருக்கலைப்பு செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
    • டாக்டர் குழுவினர் இளம்பெண்ணுக்கு வளர்ச்சி குறைவான குழந்தையை கருக்கலைப்பு மூலமாக அகற்றினர்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அவரை பரிசோதனைக்காக குடும்பத்தினர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை ஸ்கேன் சென்டர் ஒன்றில் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு இரட்டை குழந்தை கருவில் இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஒரு குழந்தை வளர்ச்சி குறைவாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் இளம்பெண்ணின் உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் வளர்ச்சி குறைவாக உள்ள குழந்தையை கருக்கலைப்பு செய்ய சம்மதம் தெரிவித்தனர். டாக்டர் குழுவினர் இளம்பெண்ணுக்கு வளர்ச்சி குறைவான குழந்தையை கருக்கலைப்பு மூலமாக அகற்றினர். பின்னர் பரிசோதனை செய்து பார்த்தபோது மற்ற குழந்தை நலமாக இருப்பதாக கூறினார்கள்.

    இதையடுத்து அந்த இளம்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற அந்த பெண் கழிவறைக்கு சென்றபோது மற்றொரு குழந்தையும் இறந்து வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த இளம்பெண்ணை உடனடியாக மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது உறவினர்கள் டாக்டரின் கவனக்குறைவால் குழந்தை இறந்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரில் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதேபோல் டாக்டர் தரப்பினரும் புகார் கூறியிருந்தனர். இருதரப்பு புகார் மீதும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மூர்த்தி மகன்களுடன் தங்களுக்கு சொந்தமான பைபர் படிகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
    • தனியார் மருத்துவக் கல்லூரில ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம ்மரக்காணம் அருகே கோமுட்டி சாவடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). இவருடைய 2 மகன்களான குமரேசன் (23), சுமன் ராஜ் (20) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான பைபர் படிகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவர்களது பைபர் படகு கடலில் கவிழ்ந்தது. இதில் 3 பேரும் கடலில் தத்தளித்தனர். அதே பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

    இதில் மூர்த்தி பலியானார். 2 மகன்களும் உயிர்பிழைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரில ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அழைத்து வரும் புரோக்கர்களுக்கு ரூ.1 முதல் 2 லட்சம் வரை கமிஷனாக தரப்பட்டுள்ளது.
    • சிறுநீரகம் கொடுத்ததற்காக அவரிடம் பேசியபடி தனியார் ஆஸ்பத்திரி குறிப்பிட்ட தொகையை தரவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் சமீப காலமாக கிட்னி விற்பனை அதிகளவில் நடந்துள்ளது.

    புரோக்கர்கள் மூலம் ஆசைவார்த்தை கூறி ஏழைகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு அழைத்து வரும் புரோக்கர்களுக்கு ரூ.1 முதல் 2 லட்சம் வரை கமிஷனாக தரப்பட்டுள்ளது. புரோக்கர்களை நம்பி காமராஜர் என்பவர் தனது கிட்னியை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொடுத்துள்ளார். சிறுநீரகம் கொடுத்ததற்காக அவரிடம் பேசியபடி தனியார் ஆஸ்பத்திரி குறிப்பிட்ட தொகையை தரவில்லை.

    இதையடுத்து அவர் விசாகப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆஸ் பத்திரியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு அனுமதி இல்லாமல் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

    • தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.24.50 லட்சம் மோசடி செய்த பெண் காசாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மதுரை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகி மாட்டுத்தாவணி போலீசில் புகார் மனு கொடுத்தார்.

    மதுரை

    மதுரை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் முத்துவேல் ராஜன் என்பவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் மருத்துவமனையில் திருமால்புரம், தங்கவேல் நகரைச் சேர்ந்த முத்து மனைவி அங்கம்மாள், அய்யர்பங்களா, சக்தி நகரைச் சேர்ந்த ஜெயசீலன் மனைவி வைடூரியம் ஆகிய 2 பேரும் காசாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    அப்போது அவர்கள் போலி ஆவணம் தயாரித்து ரூ.24.50 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதன்அடிப்படையில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கம்மாள், வைடூரியம் ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவர்களின் விவகாரங்களை வைத்தே எந்த மருத்துவமனையில் தரவுகள் திருடப்பட்டது என்பதை கிளவுடு செக் அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
    • கடந்த வாரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளின் தரவுகளை ஹேக் செய்து ரூ.200 கோடி வேண்டுமென ஹேக்கர்கள் பேரம் பேசினர்.

    திருப்பூர்:

    இந்த நவீன உலகில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை எல்லாம் ஆன்லைன் வழியாகவே நடக்கிறது. இதனால் பொதுமக்கள் குறித்து பல தரவுகள் ஆன்லைனில் தான் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாகத் தரவுகளைச் சேமித்து வைக்கும்போது, அவை திருடப்படும் வாய்ப்புகளும் இருக்கிறது. ஹேக்கர்கள் இந்த தரவுகளைத் திருடி விற்று வருகின்றனர்.

    வெளிநாடுகளில் நிகழும் இந்த சம்பவம் தற்போது தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. திருப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் 1.50 லட்சம் நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகளை சில ஹேக்கர்கள் திருடியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சைபர் கிரைம் தளங்கள் மற்றும் டெலிகிராம் மூலம் அந்த டேட்டாக்களை விற்பனை செய்யும் முயற்சியிலும் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த ஹேக்கிங்கை முதலில் கிளவுடு செக் என்ற அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்த மருத்துவமனைக்கும், இந்த ஹேக்கிங்கிற்கும் தொடர்பு இல்லை எனவும், மூன்றாம் தரப்பு நபரிடம் இருந்தே தரவுகள் திருடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக கடந்த 2007 முதல் 2011 வரையிலான நோயாளிகளின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக கிளவுடு செக் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் தங்களிடம் நோயாளிகளின் டேட்டா இருப்பதை காட்ட சிறு தரவுகளை அனைவரும் பார்க்கும் வகையில் பொதுவெளியிலும் பகிர்ந்துள்ளனர். திருடப்பட்ட தரவுகளில் நோயாளிகளின் பெயர்கள், பிறந்த தேதிகள், முகவரி, பாதுகாவலரின் பெயர்கள் மற்றும் மருத்துவரின் விவரங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    இந்த மருத்துவர்களின் விவகாரங்களை வைத்தே எந்த மருத்துவமனையில் தரவுகள் திருடப்பட்டது என்பதை கிளவுடு செக் அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்த ஹேக்கிங் குறித்து உறுதி செய்யப்பட்ட உடனே சம்பந்தப்பட்ட நபர்களிடம் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டதாக கிளவுடுசெக் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பழனிசாமி கூறுகையில், எங்களது மருத்துவமனையில் நோயாளிகளின் விபரங்கள் குறித்த தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கிளவுடு செக் அமைப்பிடமிருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது எத்தனை சதவீதம் உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில் எங்கள் மருத்துவமனையில் நோயாளிகளின் பெயர் மற்றும் முகவரி விபரங்கள் மட்டுமே பெறுவதாகவும், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் பின்பற்றுவது போன்ற நடைமுறைகளை இங்கு பின்பற்றுவது இல்லை. அதனால் எங்களது தரவுகள் வெளியே செல்ல வாய்ப்புகள் இல்லை என்றார்.

    மேலும் கிளவுடு செக் அமைப்பு எங்களிடம் மருத்துவமனையின் தரவுகளை ஹேக் செய்ய முடியாத அளவிற்கு சாப்ட்வேர் இருப்பதாகவும் அதை வாங்கும் படியும் தெரிவித்துள்ளனர். எனவே அது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளோம். எங்களை பொறுத்தவரை இது ஒரு வதந்தி மட்டுமே. எங்களது மருத்துவமனையின் எந்த தரவுகளும் ஹேக் செய்யப்படவில்லை என்றார்.

    கடந்த வாரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளின் தரவுகளை ஹேக் செய்து ரூ.200 கோடி வேண்டுமென ஹேக்கர்கள் பேரம் பேசினர். தற்போது திருப்பூர் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 5 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
    • ஆஸ்பத்திரி விவகாரத்தில் பல முக்கிய தகவல்களை அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்ததாக கூறப்படுகிறது.

    கோவை

    கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் தலைவர் ராமச்சந்திரன்( வயது 72). இவர் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு சென்னையை சேர்ந்த உமா சங்கர் (54) என்பவரிடம் ஆஸ்பத்திரி கட்டிடத்தை வாடகை அடிப்படையில் நடத்த ஒப்பந்தம் போட்டு ஒப்படைத்ததார்.

    இந்நிலையில், ராமச்சந்திரன் ரூ. 100 கோடி மதிப்பிலான தனது ஆஸ்பத்திரிையை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற உமாசங்கர் கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதி பலியானார்.

    இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டில் ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் ஆஸ்பத்திரி தலைவர் ராமச்சந்திரன், உதவியாளர் காமராஜ் (45), மூர்த்தி (45), முருகேசன் (47), டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    5 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவி பாஸ்கரன் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

    இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பேரையும் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 5 பேரிடமும் தனித்தனியாக விடிய, விடிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆஸ்பத்திரி விவகாரத்தில் பல முக்கிய தகவல்களை அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்ததாக கூறப்படுகிறது. 

    ×