search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nurses"

    • நோயாளி ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்தும் செவிலியர்கள் தங்களது பணியை செய்யாததால் விரக்தி அடைந்து தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
    • மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கழிவறைக்கு சென்ற 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சந்தை மேடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல் காக்க வைக்கப்பட்டு செவிலியர்கள் ஒரு அறையில் ஒருங்கிணைந்து சேலை விற்பனை நடைபெற்றதை பார்த்து விற்பனையில் ஈடுபட்டனர்.

    பெண்களிடம் செவிலியர்கள் மும்முரமாக பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்தும் செவிலியர்கள் தங்களது பணியை செய்யாததால் விரக்தி அடைந்து தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கழிவறைக்கு சென்ற 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடைபெற்றது எனவும், செவிலியர்கள் யாரும் சேலை விற்பனை செய்வதை வேடிக்கை பார்க்க செல்லவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இம்மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    • தமிழகத்தில் 47ஆயிரத்து 938 செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவற்றில் 12,787 பேர் ஒப்பந்த செவிலியர்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் அரசு துணை சுகாதார மையங்களில் 8,713 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தவிர மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கும் செவிலியர்கள் பணியிடங்கள் உள்ளது.

    இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 2250 கிராம செவிலியர்களை தேர்ந்தெடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு 2,250 பேரை தேர்ந்தெடுக்க தற்காலிக அடிப்படையில் ரூ.19,500 ஊதிய விகிதத்தில் நேரடி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இதன்படி விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இம்மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வயது, கல்வித் தகுதி, பொது தகவல், தகுதி நிபந்தனைகள் பிற முக்கிய வழிமுறைகள் போன்ற விவரங்கள் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் www.mrb.tn.gov.in இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் 47ஆயிரத்து 938 செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவற்றில் 12,787 பேர் ஒப்பந்த செவிலியர்கள்.

    இந்த ஒப்பந்த செவிலியர்கள் 2016, 2017 மற்றும் 2020-ம்ஆண்டு கால கட்டங்களில் பணிக்கு வந்தவர்கள்.

    அவர்களுடைய பணி பாதிப்பு இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஒப்பந்த காலம் முடிந்தவுடன் அவர்களை மீண்டும் மாவட்ட மருத்துவ சங்கம் மூலம் 14,000 ரூபாயில் இருந்து மூலம் 18,000 ரூபாயாக உயர்த்தி அவர்களுடைய சொந்த மாவட்டங்களில் பணி அமர்த்தப்பட்டு உள்ளார்கள்.

    இந்நிலையில் செவிலியர்களுக்கு தற்போது 499 நிரந்தர செவிலியர்கள் காலியிடங்கள் உள்ளது. அந்த 499 செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை ஒப்பந்த செவிலியர்களையே நிரப்பிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

    13.10.2023 அன்று கலந்தாய்வு மூலம் மூப்பு நிலை மற்றும் சுழற்சி மூலம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தற்போது எம்.ஆர்.பி. மூலம் ஒப்பந்ததார செவிலியர்கள் கால முறை ஊதியத்தில் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அன்பழகன் வலியுறுத்தல்
    • பணியில் உள்ள செவிலியர்கள் பணி சுமையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் 2 மணி நேரம் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்துக்கு புதுவை மாநில அதிமுக செயலாளர் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுகாதாரத் துறையில் நீண்ட காலமாக காலியாக உள்ள சுமார் 700-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை நிரப்பவில்லை. பணியில் உள்ள செவிலியர்கள் பணி சுமையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த போராட்டம் அரசின் தொடர் அலட்சியத்தால் செவிலியர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விதிப்படி 5 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் பணி செய்ய வேண்டும். ஆனால் 40 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் தற்போது பணி செய்கின்றனர். 10 ஆண்டாக செவிலியர் எண்ணிக்கை அதிகப்படுத்தவில்லை.

    கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் துச்சம் என மதித்து ஒப்பந்த செவிலியர் பணி செய்தனர். காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த செவிலியர்கள், தேசிய சுகாதார இயக்க செவிலியர்கள் மூலம் நிரப்ப வேண்டும்.

    அரசு உயர் அதிகாரிகள் தங்களது வீண் பிடிவாதத்தால் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்பாமல் வேடிக்கை பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    7-வது சம்பவளக் குழுவில் உயர்த்தப்பட்ட அலவன்ஸ் நிலுவை தொகையைக்கூட இன்றுவரை வழங்கவில்லை. இதற்கு நிதித்துறை செயலர் மற்றும் தலைமைச் செயலரின் பொருப்பற்ற செயல்பாடே காரணம். முதல்-அமைச்சர் செவிலியர்களை அழைத்து பேசி நியாயமான அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.
    • ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும்.

    சென்னை:

    அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாமதமாக பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். உள் நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.

    புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.

    ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 105 நர்சு பணி இடங்களை நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவது சம்பந்தமாக அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.
    • நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவது சம்பந்தமாக அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு சுகாதாரத்துறை 105 நர்சு பணி இடங்களை நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவது சம்பந்தமாக அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.

    இப்பணிக்கு வருகிற 1-ந் தேதி முதல் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், புதுவை அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு கொள்கை அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே சுகாதாரத்துறை மூலம் கொரோனா தொற்று காலத்தில் பணி அமர்த்தப்பட்ட தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த நர்சுகள் தங்கள் உயிரை துச்சமென நினைத்து பணியாற்றினர்.

    மத்திய அரசு கொரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த டாக்டர், நர்சு மற்றும் உதவியாளர்களுக்கு தக்க சன்மானமும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்கியுள்ளது.

    ஆகையால், தற்போது நிரப்பப்பட உள்ள நர்சு பணியிடங்களுக்கு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிலும் கொரோனா காலத்தில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் அஅரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய நர்சுகளுக்கு முன்னுரிமை அளித்து பணிக்கான இடங்களை நிரப்பவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நைட்டிங்கேல் பிறந்தநாளை உலக செவிலியர் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
    • நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பேரணி நடைபெற்றது.

    நெல்லை:

    மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் பொதுமக்களுக்கு ஆற்றி வரும் உன்னத சேவையை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் உலக செவிலியர் தினம் ஆண்டு தோறும் மே மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    கடந்த 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவி லியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் அவர் பிறந்த நாளான மே 12-ந் தேதியை உலக செவிலியர் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதன்படி ஆண்டு தோறும் இன்றைய தினம் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மருத்துவமனை சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், கந்தசாமி, துணை முதல்வர் சுரேஷ் துரை, செவிலிய கண்காணிப்பாளர்கள் பானு, வள்ளி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி செவிலியர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் பேரணியாக சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.

    • மாநகர நல சங்கத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
    • மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு மாநகர நல சங்கத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி 21 நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். பி.எஸ்.சி. நர்சிங், துணை நர்சிங் படிப்பு, டிப்ளமோ நர்சிங் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.14 ஆயிரம் வழங்கப்படும்.

    1 மருந்தாளுனர், 3 ஆய்வக நுட்புநர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். மருந்தாளுனர் பணிக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம், ஆய்வக நுட்புநர் பணிக்கு ரூ.13 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக வருகிற 25-ந் தேதி திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் இந்த நேர்காணலில் தங்களது அசல் சான்றிதழ்கள், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0421 2240153 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நேர்காணலில் தகுதி பெற்று காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நபர்களை 6 மாத காலத்துக்குள் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக பணி நியமனம் செய்யப்படும்.

    இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    • தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

    அம்மாபேட்டை:

    பாபநாசம் அடுத்த ராஜகிரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை ஆகியவை இணைந்து ரத்ததான முகாம் நடை பெற்றது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு 13-வது முறை நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட துணை தலைவர் சிக்கந்தர் அலி தலைமை தாங்கினார்.

    பாபநாசம் தாசில்தார் பூங்கொடி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராஜகிரி கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    முகாமில் தஞ்சாவூர் அரசு ராசாமி ராசுதார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலி யர்கள், ரத்த வங்கியின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். அதை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
    • செவிலியர்களுக்கு ரூ.14 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. தற்காலிக பணியில் சேர்ந்தால் ரூ.18 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்படும்.

    சென்னை:

    கொரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 6,282 நர்சுகள் தற்காலிக முறையில் ஒப்பந்த நர்சுகளாக நியமிக்கப்பட்டனர். அதில், 3000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது.

    இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி 810 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீதமிருந்த 2,472 செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி பணி நீட்டிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ந் தேதியில் இருந்து ஒப்பந்த செவிலியர்கள் பணி பாதுகாப்பு, நிரந்தர பணி கோரி தமிழகம் முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாற்று பணி வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். அதை செவிலியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

    இது குறித்து சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்ட சுகாதார மையம் மூலமாக 3,949 காலிப் பணியிடங்களை மாவட்ட கலெக்டர்கள் நேர் முகத்தேர்வு மூலம் நிரப்ப உள்ளனர். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு இந்த காலிப்பணியிடங்கள் நிரப்புவதில் முன்னுரிமை கொடுக்கப்படும். தேர்வில் 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் பெற்றுவிட்டாலே பணிகிடைத்து விடும். 20 மாதம் கொரோனா காலத்தில் பணியாற்றி இருந்தால் மாதத்துக்கு 2 மதிப்பெண் வீதம் மொத்தம் 40 மதிப் பெண்கள் கொடுக்கப்படும்.

    ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களும் இந்த தேர்வில் பங்கேற்கலாம். கொரோனா காலத்தில் பணியாற்றியதற்கு மதிப்பெண் கொடுக்கப்படுவதால் 2,600 செவிலியர்களுக்கு எளிதாக பணி கிடைத்துவிடும்.

    இதற்கு முன்பு செவிலியர்களுக்கு ரூ.14 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. இந்த பணியில் சேர்ந்தால் ரூ.18 ஆயிரம் மாதம் ஊதியம் வழங்கப்படும். இது தற்காலிக ஒப்பந்த பணியாகும். இந்த வாய்ப்பை செவிலியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கொரோனா கால செவிலியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறினால், வேறு புதிய செவிலியர்கள் பணியில் சேர்ந்துவிடுவார்கள். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் செவிலியர்களில் சுமார் 500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எம்.ஆர்.பி. கொரோனா செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.ராஜேஷிடம் கேட்ட போது, "கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் தற்காலிக ஒப்பந்த பணி தேவையில்லை. பணி பாதுகாப்பு, நிரந்தர பணிதான் வேண்டும். எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தகட்டமாக நாளை (12-ந்தேதி) கோட்டை நோக்கி பேரணி செல்ல இருக்கிறோம்" என்றார்.

    • இதுவரை 14000 ரூபாய் தற்காலிக மாத ஊதியம் பெற்று வந்த நிலையில் புதிதாக சேரும் பணியில் 18000 ரூபாய் கிடைக்கும்.
    • தற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டது போல் ஒப்பந்த பணி வழங்கவேண்டும் என செவிலியர்கள் கோரிக்கை

    சென்னை:

    சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2020 ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் உச்சத்தில் இருந்த சமயத்தில் அன்றைய அரசினால் ஏப்ரல் 28ம் தேதி அன்று மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 2570 செவிலியர்கள் தற்காலிக பணி நியமனங்கள் குறித்து ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, 2020 ஏப்ரல் 28ம் தேதி வெளியிட்டு 2300 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

    அன்று முதல் அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு 6 மாதத்திற்கு பிறகும் பணி நீட்டிப்பு என்பது தொடர்ச்சியாக செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பேரிடர் முடிவுக்கு வந்த சூழலில் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த நிலையில் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர், பேரிடர் காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் என்பதால் அவர்கள் யாருக்கும் பணி பாதிப்பு இருக்கக் கூடாது என்கின்ற வகையில், ஒரு மாற்று யோசனையின்படி மாவட்ட வாரியாக இருக்கிற அமைப்புகளின் சார்பில் டிபிஎச்இ மக்களை தேடி மருத்துவம், நகர்ப்புற நலவாழ்வு மையம் ஆகிய துறைகளில் இருக்கிற காலி பணி இடங்களை இவர்களை கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என அறிவுத்தினார். அந்த வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதுவரை 14000 ரூபாய் தற்காலிக பணிநியமனத்திற்காக மாத ஊதியம் பெற்று வந்த நிலையில் புதிதாக சேரும் பணியில் 18000 ரூபாய் கிடைக்கும், அது மட்டுமல்லாது ஏற்கனவே இருக்கிற தற்காலிக பணி நியமனங்களின் மூலம் அவர்களில் பெரும் பகுதியானவர்கள் தலைமை மருத்துவமனைகளில்தான் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.

    அவர்கள்கூட பல்வேறு மனுக்களின் வாயிலாக தங்களின் சொந்த ஊர்களுக்கு பக்கத்திலேயே பணி மாறுதல் வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து விடுத்து வந்தார்கள். தற்காலிக செவிலியர்களை இடமாற்றம் செய்வது இயலாத காரியம் என்பதால் அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மாவட்ட சுகாதார சங்கம் மூலம் இந்த பணி நியமனங்கள் செய்யப்பட்டு, மிகப்பெரிய அளவு பணி பாதுகாப்பு இருக்கும் என்கிற அளவில் சொல்லப்பட்டது.

    இந்த நிலையில் செவிலியர்கள் எங்களுக்கு ஏற்கனவே இருப்பது போல் DMS ஒப்பந்த பணியாளர்கள் என்ற அடிப்படையிலேயே நீடிக்க வழிவகை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி வந்தார்கள். தொடச்சியாக இரண்டு நாட்கள் போராட்டங்களையும் நடத்தி வந்தார்கள். இன்று சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து ஏறக்குறைய 2 மணி நேரம் பேசியிருக்கிறோம். அவர்களுக்கு தனித்தனியே கொடுக்கப்பட்ட வேலைக்குரிய ஆணையையும் எங்களிடம் காட்டினார்கள். அதிலே மிக தெளிவாக கூறப்பட்டிருப்பது என்னவென்றால், தற்காலிகமாக பணி ஆணை தரப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் நானும் துறையின் செயலாளரும் என்எச்எம் இயக்குனர், திட்ட இயக்குனர், டிபிஎச், டிஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து உயர் அலுவலர்கள் அவர்களிடம் பேசினோம். அவர்கள் என்எச்எம் நிதி ஆதாரத்தின் கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தின் பணி நியமனங்கள் வேண்டாம். இங்கு டிஎம்எஸ் ஒப்பந்த அடிப்படையிலேயே நீடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணி அது, இப்போது அந்த நிலை இல்லை என்பதால் அது முடியாது என்ற வகையில் அலுவலர்கள் எடுத்து சொன்னார்கள். அவர்களும் பிடிவாதமாக மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக வேண்டாம் என்று சொன்னார்கள்.

    அதற்காக அவர்கள் சொன்ன காரணம், என்எச்எம் நிதி ஆதாரம் இல்லாமல் நேரடியாக தமிழக அரசின் நிதி ஆதாரத்தின் கீழ் எங்களுக்கு பணி வழங்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். கடைசியாக இட ஒதுக்கீடு பின்பற்றாத தற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டது போல் எங்களுக்கும் ஒப்பந்த பணி வழங்கிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

    இதையடுத்து, மாவட்ட ஆட்சி தலைவர்கள் மூலம் மாவட்ட சுகாதார சங்கம் மூலமும் அந்த மாவட்டங்களில் காலி பணியிடங்கள் நிரப்பும்போது, நீங்கள் விண்ணப்பியுங்கள் உங்கள் அத்தனை பேருக்கும் பணி உத்தரவாதம் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறோம். காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும். இதில் இருக்கிற சட்டப்பூர்வான விஷயங்கள் அனைத்தும் எடுத்துச் சொல்லப்பட்டிருகிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இன்னும் சில விஷயங்கள் குறித்து பேசப்படும்.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    • கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • அதன்படி, ரூ.14 ஆயிரம் மாத சம்பளத்தில் சுமார் 6 ஆயிரம் நர்சுகள் தற்காலிக மாக நியமிக்கப்பட்டனர்.

    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய நர்சுகளுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.அதன்படி, ரூ.14 ஆயிரம் மாத சம்பளத்தில் சுமார் 6 ஆயிரம் நர்சுகள் தற்காலிக மாக நியமிக்கப் பட்டனர். இவர்களுக்கு டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் பணி முடிந்துவிட்டது என்றும், அதன் பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அறிவித்தது.

    இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நர்சுகள் யாரும் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.

    இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலையோரம் நர்சுகள் அனைவரும் அமர்ந்து இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 105 நர்சுகளை இரவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோட்டையில் உள்ள மண்டபத்தில், அவர்களை அடைத்தனர்.

    இதையடுத்து அவர்களை காலையில் போலீசார் விடுவித்தனர். ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை யாரும் இங்கிருந்து செல்லமட்டோம் என கூறினர். மேலும் அவர்கள் கூறும்போது:- தற்காலிக மாக நியமிக்கப்பட்ட எங்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் அனைவரும் பணிபுரிந்தோம். சுகாதா

    ரத்துறையில் காலியாக உள்ள நர்சுகள் பணியிடங்க ளில் எங்களுக்கு முன்னு ரிமை வழங்க வேண்டும் என்றனர்.இதனால் கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது
    • சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது

    கரூர்:

    கரூரில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகி தேர்தல் நடந்தது. இதில், மாநில கவுரவ தலைவர் லீலாவதி தலைமை வகித்தார். தொடர்ந்து நடந்த தேர்தலில், தலைவராக மகாலட்சுமி, துணை தலைவராக சண்முகவள்ளி, செயலாளராக மணிமேகலை, துணை செயலாளர் ஆக பிரேமா, பொருளாளராக கங்காதேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின், அரசு மருத்துவக் கல்லுாரி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். செவிலியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு உட்பட பல்வேறு சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், செவிலியர்கள் திரளாக பங்கேற்றனர்.

    ×