search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
    X

    செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

    • செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது
    • சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது

    கரூர்:

    கரூரில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகி தேர்தல் நடந்தது. இதில், மாநில கவுரவ தலைவர் லீலாவதி தலைமை வகித்தார். தொடர்ந்து நடந்த தேர்தலில், தலைவராக மகாலட்சுமி, துணை தலைவராக சண்முகவள்ளி, செயலாளராக மணிமேகலை, துணை செயலாளர் ஆக பிரேமா, பொருளாளராக கங்காதேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின், அரசு மருத்துவக் கல்லுாரி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். செவிலியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு உட்பட பல்வேறு சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், செவிலியர்கள் திரளாக பங்கேற்றனர்.

    Next Story
    ×