என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணியை மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சையில், உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு பேரணி

    • உதவி பேராசிரியர் மூளை நரம்பியல் துறை மருத்துவர் சேகர் வரவேற்றார்.
    • விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மருத்துவ கல்லூரி வளாகத்தில் சென்றனர்.

    தஞ்சாவூர்:

    உலக பக்கவாத நோய் தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சாவூர்மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார்.

    இதில் மருத்துவ கண்காணிப்பாளர் மருதுதுரை, துணை முதல்வர் ஆறுமுகம்,

    நிலைய மருத்துவ அதிகாரி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உதவி பேராசிரியர் மூளை நரம்பியல் துறை மருத்துவர் சேகர் வரவேற்புரை ஆற்றினார்.

    மூளை நரம்பியல் துறை தலைமை பேராசிரியர் ரவிக்குமார் பக்கவாத நோய் குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினார். மூளை நரம்பியல் துறை உதவி பேராசிரியர் சாந்தபிரபு நன்றியுரை ஆற்றினார்.

    இந்த பேரணியில் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என திரளானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி மருத்துவ கல்லூரி வளாகத்தில் சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×