என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜகிரியில், ரத்ததான முகாம்
    X

    ரத்ததான முகாம் நடைபெற்றது.

    ராஜகிரியில், ரத்ததான முகாம்

    • தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

    அம்மாபேட்டை:

    பாபநாசம் அடுத்த ராஜகிரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை ஆகியவை இணைந்து ரத்ததான முகாம் நடை பெற்றது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு 13-வது முறை நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட துணை தலைவர் சிக்கந்தர் அலி தலைமை தாங்கினார்.

    பாபநாசம் தாசில்தார் பூங்கொடி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராஜகிரி கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    முகாமில் தஞ்சாவூர் அரசு ராசாமி ராசுதார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலி யர்கள், ரத்த வங்கியின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×