என் மலர்

    நீங்கள் தேடியது "முகாம்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுக்கோட்டை அன்னவாசலில் கர்ப்பிணிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது
    • கர்ப்பிணிகளுக்கு ஏ.என்.சி. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    அன்னவாசல் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தலைமை மருத்துவ அலுவலர் மணியன் தலைமை தாங்கினார். இதில் மகப்பேறு டாக்டர் வித்யாலட்சுமி கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு ஏ.என்.சி. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்தார். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆலங்குடியில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • கலெக்டர் மெர்சி ரம்யா உதவி உபகரணங்களை வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார்.பின்னர் மாவட்ட கலெக்டர் கூறும்போது, இம்முகாமில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    இம்முகாமில், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை, தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் மு.ராசி முருகானந்தம், சுகாதாரப்பணிகள் அறந்தாங்கி துணை இயக்குநர் நமச்சிவாயம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிகுமார், உதவித் திட்ட அலுவலர் தங்கமணி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராம்சந்தர், பேரூராட்சி உறுப்பினர் காஞ்சனா செல்வராஜ், ஆசிரியர் ஞானபிரகாசம், முடநீக்கு வல்லுநர் எஸ்.ஜெகன்முருகன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்லூரி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே யுள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்ப ணித்திட்டம், யூத் ரெட் கிராஸ் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகா மிற்கு கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    கல்லூரி தாளாளர் செல் லதுரை அப்துல்லா, ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப் துல்லா ஆகியோர் ரத்த தானம் வழங்கிய கொடையா ளர்களை பாராட்டினர்.

    இதில் விலங்கியல் துறை தலைவர் தயாளன், உதவி பேராசிரியர் முருகானந்தம், வட்டார மருத்துவ அலுவலர் ஜன்னத்து யாஸ்மின், மருத் துவ அலுவலர் நிலோபர் நிஷா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீரபெருமாள், சுகாதார ஆய் வாளர்கள் இளங்கோ–வன், நம்பிக்கை மைய ஆலோசகர் பாலமுருகன், நடமாடும் மருத்துவ குழுவினர் ராமநா–தபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் குழு வினர் கலந்துகொண்டனர்.

    இதில் 44 மாணவர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினர். நிகழ்ச் சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வள்ளிநாய கம், ராஜமகேந்திரன், சேக் அயாஸ் அகமது மற்றும் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர்கள், ஒருங்கி ணைப்பாளர்கள் ஒருங்கி ணைத்து நடத்தினர். இதற் கான ஏற்பாடுகளை கல் லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வை யாளர் சபியுல்லா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூரில் போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது
    • பொதுமக்களிடமிருந்து 24 மனுக்கள் பெறப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 24 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கதிராமங்கலத்தில்விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
    • வளர்ச்சி திட்டம் மூலம் கிடைக்கும் சலுகைகள் பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது

    அறந்தாங்கி, 

    ஆவுடையார்கோவில் தாலுகா கதிராமங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் சவிதா பயிற்சி குறித்து விளக்கி பேசினார். அப்போது வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்ட செயல்பாடுகள், வேளாண்மை கிடங்கில் உள்ள இடுபொருட்கள், விதை இருப்பு, நேரடி நெல் விதைப்பு தொழில்நுட்பங்கள், மானியம் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் கிடைக்கும் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. முகாமில் அங்கக விதை சான்றளிப்பு துறை அலுவலர் இளஞ்செழியன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜகுபர்அலி, பொறுப்பு அலுவலர் இன்பசேகரன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராமநாதன், கீர்த்திகா உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாளை (23ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (24ந் தேதி) ஆகிய 2 நாட்களில் நேரடியாக செலுத்தலாம்
    • கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தகவல்

    கோவை,

    பொதுமக்கள் மாநக ராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து சொத்து வரிகளின் நிலுவை களை செலுத்த சிறப்பு வரி வசூல் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு முகாம்கள் நாளை (23-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (24-ந் தேதி) ஆகிய 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

    இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    2023-2024ம் நடப்பு நிதியாண்டின் முதலாம் அரையாண்டு வரும் 30-ந் தேதி நிறைவடைய உள்ளது.

    ஆகையால் வரும் அக்டோபர் 1ந் தேதிக்கு மேல் செலுத்தப்படும் முதலாம் அரையாண்டு க்குரிய சொத்து வரியுடன் கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 1 சதவீத வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.

    எனவே பொதுமக்களின் வசதியினை கருத்தில் கொண்டு சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகை தொகை என அனைத்து வரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்த நாளை (23ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (24ந் தேதி) ஆகிய இரண்டு நாள் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெறவுள்ளது.

    அதன்படி, கிழக்கு மண்டலம்-56 மற்றும் 57-வது வார்டு பகுதிகளுக்கு ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி சங்கம் மைதா னத்திலும், மேற்கு மண்டலம் 38 வார்டு பொம்மானாம்பா ளையம் புவனேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும், 73-வது வார்டு பொன்னைய ராஜபுரம் வார்டு அலுவலகத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.

    அதே போல தெற்கு மண்டலம் 88ம் வார்டு தர்மராஜா கோவில் வளாகம், 96-வது வார்டு குறிச்சி மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

    வடக்கு மண்டலம் 11-வது வார்டு ஜனதா நகர் சூர்யா கார்டன் பகுதியிலும், 19-வது வார்டு மணிகா ரம்பாளையம் அம்மா உணவகத்தில் நடைபெற வுள்ளது.

    மத்திய மண்டலத்தில் 33-வது வார்டுக்கு உட்பட்ட நாராயணசாமி வீதி, 62-வது வார்டு சாரமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, 63-வது ஆண்டு பெருமாள் கோவில் வீதி, 80-வது வார்டு கேம்பட்டி காலனி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாம்கள் உட்பட மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களும் மேற்குறிப்பிட்ட நாட்களில் வழக்கம் போல செயல்படும். ஆகையால் இந்த வசதி யினை முழுமையாக பயன்படுத்தி மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு முதலாம் அரையாண்டு வரையிலான நிலுவைகளை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகத்தையும், பெரிய கோவிலையும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.
    • சோழர் கால நீர் மேலாண்மை விளக்கம் பெற்றனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணியில் 2019-2020 ஆண்டில் நியமனம் பெற்ற துணை கலெக்டர்கள் (பயிற்சி) பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

    இதனையடுத்து வெவ்வேறு மாவட்டங்களில் பணியில் உள்ள 16 இந்திய ஆட்சிப் பணி (பயிற்சி) அலுவலர்கள் தமிழ்நாடு தர்ஷன் எனும் பயிற்சியில் கடந்த 13 -ந் தேதி முதல் வரும் 25-ந் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வளம், புவியியல் பாகுபாடுகள் குறித்துப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூரில் உலகப் புகழ் வாய்ந்த தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு வந்திருந்து பயிற்சி பெற்றனர்.

    தஞ்சாவூர் கோயில் கலைகள், சோழர் கால நீர் மேலாண்மை, தமிழ்நாட்டின் நீர்வளமும், நீர் மேலாண்மையும் என்பன குறித்த அரிய கருத்துக்களை அறிஞர்கள், பேராசிரியர்களின் உரைவழிக் கேட்டறிந்து பயிற்சி பெற்று தங்களது சந்தேகங்களை கேட்டறிந்து விளக்கம் பெற்றனர்.

    மேலும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தையும், தஞ்சைப் பெரிய கோயிலையும் அலுவ லர்கள் பார்வையிட்டனர்.

    இந்த பயிற்சி வகுப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருவள்ளு வன் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதில் ஆன்மீக திருக்கயிலை மாமணி இராமநாதன், மற்றும் தஞ்சை சரஸ்வதி மகால் தமிழ்ப் பண்டிதர் மணிமாறன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொழில் மற்றும் நில அறிவியல் துறைப் பேராசிரியர் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு காட்சி படத்துடன் விளக்க உரை வழங்கினர்.

    இந்த பயிற்சி முகாமிற்கான கூட்டம் மற்றும் பயிற்சியினை அதன் ஒருங்கிணைப்பாளர், மொழிப்புல முதன்மையர் முனைவர் கவிதா ஏற்பாடு செய்திருந்தார்.

    இதுகுறித்து கடலூர் மாவட்டத்தில் துணை கலெக்டராக (பயிற்சி) பணிபுரியும் அபிநயா கூறும்போது, தமிழ்நாடு தர்ஷன் எனும் பயிற்சி மூலம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து தமிழின் பெருமை, தஞ்சை பெரிய கோயிலின் கட்டிட அமைப்பு, வரலாறு, கலைநயம், சிற்பக் கலை ஆகியவற்றை தெரிந்து கொண்டோம்.

    சோழர் கால மன்னர்கள், நாயக்கர் கால மன்னர்கள் மற்றும் மராட்டிய மன்னர்கள் ஆகியோர் தமிழ் உலகிற்கு எந்தளவிற்கு தொண்டு செய்திருக்கி றார்கள் என்பதை அறிந்து கொண்டுள்ளோம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீர் மேலாண்மை பற்றியும் குறிப்பாக அதில் ஏரிகளில் குமிழி தூண் பற்றிய விளக்க உரையில் தூர்வாரும்போது சேர் இல்லாமல் சுத்தமான தண்ணீர் எவ்வாறு கொண்டு செல்வது என்பது பற்றி தெரிந்து கொண்டு தாங்கள் பணிபுரியும் இடத்தில் குமிழி தூண் அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பாக இருக்கும். குமிழி தூண் முக்கியத்துவத்தையும், நீரின்றி அமையாது உலகு என்ற வார்த்தைக்கு ஏற்ப நீர் மேலாண்மை பற்றியும் தெரிந்து விளக்கம் பெற்றுள்ளோம் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நடந்தது.
    • இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச கருத்த ரித்தல் பரிசோதனை முகாம் உசிலம்பட்டியில் வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது.

    முகாமில், தொடர்ச்சி யாக கருசிதைவால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லாதவர்கள், கருக்குழாய் அடைப்பு உள்ளவர்கள், விந்தணு குறைபாடு உள்ள வர்கள், கர்ப்பப்பையில் நீர்கட்டி உள்ளவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.

    மேலும் ஆண், பெண்க ளுக்கான குழந்தையின்மை பிரச்சனைகள், கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள், கர்ப்பப்பையில் விந்தணு உட்செலுத்தும் முறை, செயற்கை கருத்தரித்தல், ஹார்மோன் சிகிச்சைகள், விந்தணுவை விதைப்பை யில் இருந்து பிரித்தெடுத்தல், விந்தணு கருமுட்டை மற்றும் கருவை தானமாக பெறுதல், விந்தணு கருமுட்டை மற்றும் கரு உறைநிலைப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சி னைகளுக்கு முகாமில் இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

    வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)உசிலம்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சரஸ்வதி மஹாலிலும்,

    25-ந் தேதி திங்கட்கிழமை தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையிலும் கருத்தரித்தல் முகாம் நடக்கிறது.

    முகாமில் பங்கேற்ப வர்களுக்கு பத்தாயிரம் மதிப்புள்ள மருத்துவ பரிசோதனைகள் இலவச மாக செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்க 89258-01358 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்யலாம். இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது
    • முகாமில் மொத்தம் 11 மனுக்கள் விசாரிக்கப்பட்டன

     அரியலூர்,

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த முகாமில் மொத்தம் 11 மனுக்கள் விசாரிக்கப்பட்டன. மனுதாரர்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அலுவலக நாட்களில் உதவி முகாம்கள் நடைபெற உள்ளது.
    • இ-சேவை மையம் வழியாக கட்டணம் ஏதுமின்றி வருவாய் கோட்ட அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குடும்பத்திற்காக வாழ்நாள் எல்லாம் ஓயாமல் உழைத்து கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பு க்கு கொடுக்கும் அங்கீகாரமாகும்.

    இந்த முதன்மையான திட்டத்தின் மூலம் மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் திட்டமானது 15.9.23 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 தொகையானது வரவு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விண்ணப்பி க்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதார ர்களுக்கான குறுஞ்செய்தி 18.09.2023 முதல் இந்த மாத இறுதி வரை அவர்களுடைய கைபேசி எண்ணிற்கு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    தகுதியான விண்ணப்பதாரராக இருந்து நிராகரிக்கப்பட்டதாக கருதும் விண்ணப்பதாரர்கள் தங்கள் மேல்முறையீட்டினை அருகில் உள்ள இ-சேவை மையம் வழியாக கட்டணம் ஏதுமின்றி வருவாய் கோட்ட அலுவலருக்கு விண்ணப்பிக்கலம்.

    இந்நிலையில் தகுதியான விண்ணப்பதார்களின் நிராகரிப்பிற்கான காரணம் தெளிவாக, அறிந்து கொள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அல்லது அறிவிக்கப்படாத விண்ணப்பதார ர்களுக்கென உதவி முகாம்கள் நடைபெறும் இடங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை, தொலைபேசி எண்: 04364 - 222588, மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலகம், தொலைபேசி எண்: 04364 - 222033, சீர்காழி வருவாய் கோட்ட அலுவலகம், தொலைபேசி எண்: 04364 - 270222, மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம், தொலைபேசி எண்: 04364 - 222456, குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம், கைப்பேசி எண்: 9943506139, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம், தொலைபேசி எண்: 04364 - 270527, தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம், தொலைபேசி எண்: 04364 - 289439, ஆகிய இடங்களில் அலுவலக நாட்களில் உதவி முகாம்கள் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் தங்கள் விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்கள், மேல்முறையீடு விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் தெரிந்துக்கொண்டு மேல்முறையீடு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print