என் மலர்
நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள்"
- 5 இந்திய தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.
- இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ் அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் அடிக்கடி அரசு படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்தநிலையில் மேற்கு மாலியில் உள்ள கோப்ரி பகுதியில் இயங்கி வரும் ஒரு நிறுவனத்துக்குள் துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் புகுந்தனர். அங்கு, பணிபுரிந்து கொண்டிருந்த 5 இந்திய தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.
கடத்தப்பட்ட இந்தியர்கள் மின்மயமாக்கல் திட்டங்களில் பணிபுரிந்து வந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற இந்தியர்கள் தலைநகர் பமாகோவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த ஜூலை மாதம் 3 இந்திய தொழிலாளர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது
- பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.
ரியாத் நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், "நீங்கள் ஒரு இந்தித் திரைப்படம் எடுத்து இங்கு (சவுதி அரேபியா) வெளியிட்டால், அது ஒரு சூப்பர் ஹிட் ஆகும்.
தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படத்தை உருவாக்கினால் அது பல நூறு கோடிகளை சம்பாதிக்கும். ஏனெனில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர்.
இங்கு பலூசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அனைவரும் இங்கு வேலை செய்கிறார்கள்" என பாகிஸ்தானையும், பலுசிஸ்தானையும் இருவேறு பகுதிகளாக பிரித்து பேசியிருந்தார்.
இதன் விளைவாக, பாகிஸ்தான் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் 4வது அட்டவணையில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள விளக்கத்தில், "சல்மான் கானின் பெயர் பாகிஸ்தானின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையத்தின் (NACTA) தடைசெய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் இல்லை. உள்துறை அமைச்சகத்திடமிருந்தோ அல்லது மாகாண அரசிடமிருந்தோ அவர் 4வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் இல்லை.
தற்போதைய செய்திகள் அனைத்தும் இந்திய ஊடகங்கள் அளித்த தவறான செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு தொடர்புடைய நிறுவனங்களையோ அல்லது அதிகாரப்பூர்வ வெளியீடுகளையோ யாரும் தொடர்பு கொள்ளவில்லை," என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
- லஷ்கர்-இ-தொய்பா உள்பட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
- பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இத்தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்திய போர் விமானங்கள் ஊடுருவி தாக்கியது.
பஹாவல்பூர், முரிட்கே, முசாபராபாத் மற்றும் பல இடங்களில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா உள்பட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் தங்களது முகாம்கள் அழிக்கப்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டனர்.
இந்தநிலையில் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை எதிரொலியால் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களான ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தங்களது முகாம்களை வேறு இடத்துக்கு மாற்ற தொடங்கி உள்ளன. இதை இந்திய ராணுவ வட்டாரங்கள் கண்டறிந்து உள்ளது.
பயங்கரவாதிகள் தங்களது முகாம்களை ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியத் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடியதாக பயங்கரவாதிகள் கருதுகிறார்கள்.
இதையடுத்து இந்திய எல்லையில் இருந்து அதிக தூரத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாத முகாம்களை அமைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஓட்டம் பிடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானில் தனித்தனியாக நடந்த தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
- பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் பலியாகினர்.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.
தலிபான்கள் அதனை மறுத்து வந்தாலும் தாக்குதல் தொடர் கதையாக உள்ளது. எனவே எல்லையோர மாகாணங்களில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் கடந்த 4 நாட்களாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது பஜவுர் மாவட்டத்தில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 22 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
அதேபோல், தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது 13 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை கைப்பற்றப்பட்டன.
இந்த இரு தாக்குதலிலும் கொல்லப்பட்டது தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் பயங்கரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் பலியாகினர்.
- கைது செய்யப்பட்டவர்கள் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிடுவதில் ஈடுபட்டிருந்தனர்.
- கைது செய்யப்பட்டர்களில் பலர் ரசாயன குண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள்.
டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 பயங்கரவாதிளை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஆல் ஈர்க்கப்பட்டு ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிடுவதில் ஈடுபட்டிருந்தனர் என்றும் கைது செய்யப்பட்டர்களில் பலர் ரசாயன குண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், டெல்லி, மும்பை, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹைதராபாத்தில் போலீசார் தீவிர சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
- அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- ஒரு ஜூனியர் கமிஷன்டு அதிகாரி காயமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் திங்கள்கிழமை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
குல்காமின் குட்டர் காட்டில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது குறித்த ரகசியத் தகவலைப் பெற்றதை அடுத்து, சிஆர்பிஎஃப் போலீஸ் உடன் இணைந்து ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவமும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இந்த நடவடிக்கையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 2 வீரர்கள் வீரமரணமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என்றும் மேலும் பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் ராணுவம் கூறியுள்ளது.
- சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) போன்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் கனடாவில் நிதி திரட்டுகின்றன.
- பயங்கரவாதம் நாட்டிற்குள்ளேயே ஆதரவைப் பெறுகிறது என்பதை கனடா வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் கனடாவில் நிதி உதவி பெறுவது அம்பலமாகி உள்ளது.
கனடா நிதி அமைச்சகம் 'கனடாவில் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி மதிப்பீடு-2025' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், "கனடிய குற்றவியல் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) போன்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் கனடாவில் நிதி திரட்டுவதாக உளவுத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்கள் அடையாளம் கண்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி மற்றும் வங்கிகள் மூலம் இந்த நிதி திரட்டல் நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான பஞ்சாபில் ஒரு சுதந்திர அரசை நிறுவுவதற்காக காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை கூறுகிறது.
மேலும், பயங்கரவாத குழுக்கள் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு பெறப்பட்ட நிதியை பயன்படுத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது.
பயங்கரவாதம் நாட்டிற்குள்ளேயே ஆதரவைப் பெறுகிறது என்பதை கனடா வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை.
முன்னதாக, இந்திய அரசாங்கம் கனேடிய அரசாங்கம் காலிஸ்தானியர்களை ஊக்குவிப்பதாகவும், இந்தியாவைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் தூள் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
- தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.
ஜம்மு:
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை வேட்டை யாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு பெற்று காஷ்மீரில் ரகசியமாக செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் கடந்த 1-ந்தேதி முதல் ஆபரேஷன் அசல் என்ற அதிரடி நடவடிக்கையை பாதுகாப்பு படை தொடங்கியுள்ளது. அதன்படி பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டு வருகிறார்கள். குல்காம் மாவட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த நிலையில் காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் மலைப் பகுதியான தூள் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் இன்று காலை சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். அங்கு 2 பயங்கரவாதிகள் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து இந்திய ராணுவத்தின் எக்ஸ் தளப் பதிவில், "பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டு உள்ளது.
- இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அடர்ந்த காடுகளில் குகைகளில் ஒளிந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
- இந்த நடவடிக்கையில் இதுவரை 10 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி அகால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது.
இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அடர்ந்த காடுகளில் குகைகளில் ஒளிந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
இதையடுத்து ஆபரேஷன் அகால் என்ற பெயரில் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இன்று (சனிக்கிழமை) ஆபரேஷன் அகாலின் ஒன்பதாவது நாள்.
இந்நிலையில் இன்று பயங்கரவாதிகள் உடனான சண்டையில் லான்ஸ் நாயக் பிரித்பால் சிங் மற்றும் சிப்பாய் ஹர்மிந்தர் சிங் என்ற 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்த நடவடிக்கையில் இதுவரை 10 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர். இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
- ஜூலை 28 அன்று 'ஆபரேஷன் மகாதேவ்'வில் மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்துள்ளன.
ஜூலை 28 அன்று 'ஆபரேஷன் மகாதேவ்'வில் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் பாகிஸ்தானியர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 அன்று 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்திய மூன்று பேர் காஷ்மீரின் டாச்சிகாம்-ஹர்வான் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை எடுத்து ஜூலை 28 நடந்த ஆபரேஷனில் அவர்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட மூத்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பைசல் ஜாட் என்கிற சுலைமான் ஷா, அபு ஹம்சா என்கிற ஆப்கான் மற்றும் யாசிர் என்கிற ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களின் பயோமெட்ரிக் விவரங்கள், பாகிஸ்தான் அரசு வழங்கிய பாஸ்போர்ட் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையம் (NADRA), பயோமெட்ரிக் விவரங்கள், லேமினேட் செய்யப்பட்ட வாக்காளர் சீட்டுகள், டிஜிட்டல் செயற்கைக்கோள் தொலைபேசி விவரங்கள் மற்றும் GPS இணைப்புகளை பாதுகாப்பு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளது.
ஷா மற்றும் ஹம்சாவின் உடைமைகளில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்துள்ளன. செயற்கைக்கோள் தொலைபேசியின் சேதமடைந்த SD அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப விவரங்கள் உள்ளன.
இவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவலகோட்டின் சங்கமங்கா மற்றும் கோயன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை இது நிரூபிக்கிறது.
கராச்சியில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் பாக்கெட்டுகளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன. பஹல்காமில் கண்டெடுக்கப்பட்ட கிழிந்த சட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளும் இந்த சந்தேக நபர்களை சுட்டிக்காட்டுகின்றன.
இவர்கள் கடந்த மே 2022 இல் வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் துறை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு முந்தைய நாள், ஏப்ரல் 21 அன்று, பைசரனில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹில் பார்க்கில் உள்ள ஒரு குடிசையில் மூவரும் தஞ்சம் புகுந்தனர்.
அவர்களுக்கு உணவளித்ததற்காக இரண்டு உள்ளூர்வாசிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
- 'ஆபரேஷன் அகால்' மூன்றாவது நாளாக தொடர்கிறது.
- இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக பாதுகாப்புப் படையினரால் தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் அகால்' மூன்றாவது நாளாக தொடர்கிறது.
தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் அகால் வனப்பகுதியில் இன்று நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் மேலும் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதன் மூலம், இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஒரு ராணுவ வீரரும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆபரேஷன் அகால் என்ற பெயரில் ராணுவம், காட்டில் சோதனை நடத்தினர்.
- மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் .
குல்காம் மாவட்டத்தின் அகால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்த குறிப்பிட்ட தகவலைப் பெற்றதை அடுத்து பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
ஆபரேஷன் அகால் என்ற பெயரில் ராணுவம், காட்டில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இன்று (சனிக்கிழமை) காலை ஆபரேஷன் அகால் தொடர்கிறது என்று ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உடனே ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது.
இதுதொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "ஆபரேஷன் அகால் தொடர்கிறது. இதுவரை படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை" என்று தெரிவித்துள்ளது.
வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இன்னும் இருக்க வாய்ப்புள்ளதால், படைகள் தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளன.






