என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ நாய்"

    • பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினருக்குக் காட்டிக்கொடுத்தது.
    • கொல்லப்பட்டவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தப்பியோடிக் கொண்டிருந்த ஜெய்ஷ் இ முகமது கமாண்டர் சைபுல்லாவும் ஒருவர்.

    ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தின் சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் துல்லியமான இடத்தை கண்டறிய, ராணுவத்தின் பாரா பிரிவைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாயான 'டைசன்' அழைத்துச் செல்லப்பட்டது.

    கரடுமுரடான அந்தப் பகுதிக்குள் டைசன் நுழைந்தபோது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் டைசனின் காலில் தோட்டா பாய்ந்து பலத்த காயமேற்பட்டது.

    காயமடைந்த போதிலும், டைசன் பின்வாங்காமல் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினருக்குக் காட்டிக்கொடுத்தது.

    டைசன் காட்டிய இடத்தை வைத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்டவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தப்பியோடிக் கொண்டிருந்த ஜெய்ஷ் கமாண்டர் சைபுல்லாவும் ஒருவர்.

    சம்பவ இடத்திலிருந்து இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    காயமடைந்த டைசன் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதன் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம்பட்டபோதும் டைசனின் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது. 

    • பாதுகாப்பு படையினருடன் சென்ற ராணுவ நாய் ஜூம் 4 குண்டுகள் பட்டு பலத்த காயம் அடைந்தது.
    • பலத்த காயம் பட்ட நிலையிலும் ஜூம் துணிச்சலுடன் போராடி பயங்கரவாதிகளை நிலைகுலைய வைத்தது.

    ஜம்மு-காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் டாங்க்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்களுடன் 'ஜூம்' என்று அழைக்கப்படும் பயிற்சி பெற்ற ராணுவ நாயும் சென்றது.

    அப்போது ஒரு வீட்டிற்குள் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடிக்க முயன்றனர்.

    இதில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினருடன் சென்ற ராணுவ நாய் ஜூம் 4 குண்டுகள் பட்டு பலத்த காயம் அடைந்தது.

    இதற்கிடையே ஜூம் நாய் உதவியால் அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பின்னர் காயம் அடைந்த ஜூம் நாயை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜூம் நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    எனினும் அந்த நாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூம் நாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    இதுகுறித்து ராணுவ அதிகாரி கூறியதாவது:-

    ராணுவ நாய் ஜூம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இன்று மதியம் 12 மணியளவில் உயிரிழந்தது. காலை 11:45 மணி வரை உடல்நிலை நன்றாக முன்னேறி வந்த நிலையில் நாய், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.

    தெற்கு காஷ்மீரில் ராணுவ அதிகாரிகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஜூமின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. சம்பவத்தன்று பயங்கரவாதிகள் சுட்டதில் 4 குண்டுகள் ஜூம் மீது பாய்ந்தது. இருப்பினும் ஜூம் 2 பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க உதவியதோடு பயங்கரவாதிகளை தாக்கி பாதுகாப்பு படையினருக்கு உதவியது.

    இதனால் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலத்த காயம் பட்ட நிலையிலும் ஜூம் துணிச்சலுடன் போராடி பயங்கரவாதிகளை நிலைகுலைய வைத்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காயம் அடைந்த ஜூம் நாய்க்கு 2½ வயதாகும். இந்த நாய் கடந்த 10 மாதங்களாக ராணுவத்தின் 15 கார்ப்பிசின் தாக்குதல் பிரிவில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×