என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "terrorists"

    • ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது
    • பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    பாலிவுட் நடிகர் சல்மான் கான் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

    ரியாத் நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், "நீங்கள் ஒரு இந்தித் திரைப்படம் எடுத்து இங்கு (சவுதி அரேபியா) வெளியிட்டால், அது ஒரு சூப்பர் ஹிட் ஆகும்.

    தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படத்தை உருவாக்கினால் அது பல நூறு கோடிகளை சம்பாதிக்கும். ஏனெனில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர்.

    இங்கு பலூசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அனைவரும் இங்கு வேலை செய்கிறார்கள்" என பாகிஸ்தானையும், பலுசிஸ்தானையும் இருவேறு பகுதிகளாக பிரித்து பேசியிருந்தார்.

    இதன் விளைவாக, பாகிஸ்தான் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் 4வது அட்டவணையில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள விளக்கத்தில், "சல்மான் கானின் பெயர் பாகிஸ்தானின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையத்தின் (NACTA) தடைசெய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் இல்லை. உள்துறை அமைச்சகத்திடமிருந்தோ அல்லது மாகாண அரசிடமிருந்தோ அவர் 4வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் இல்லை.

    தற்போதைய செய்திகள் அனைத்தும் இந்திய ஊடகங்கள் அளித்த தவறான செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு தொடர்புடைய நிறுவனங்களையோ அல்லது அதிகாரப்பூர்வ வெளியீடுகளையோ யாரும் தொடர்பு கொள்ளவில்லை," என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. 

    • கைது செய்யப்பட்டவர்கள் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிடுவதில் ஈடுபட்டிருந்தனர்.
    • கைது செய்யப்பட்டர்களில் பலர் ரசாயன குண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள்.

    டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 பயங்கரவாதிளை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஆல் ஈர்க்கப்பட்டு ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிடுவதில் ஈடுபட்டிருந்தனர் என்றும் கைது செய்யப்பட்டர்களில் பலர் ரசாயன குண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், டெல்லி, மும்பை, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹைதராபாத்தில் போலீசார் தீவிர சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

    • அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • ஒரு ஜூனியர் கமிஷன்டு அதிகாரி காயமடைந்தார்.

    ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் திங்கள்கிழமை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    குல்காமின் குட்டர் காட்டில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது குறித்த ரகசியத் தகவலைப் பெற்றதை அடுத்து, சிஆர்பிஎஃப் போலீஸ் உடன் இணைந்து ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவமும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியது.

    இந்த நடவடிக்கையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 2 வீரர்கள் வீரமரணமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என்றும் மேலும் பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் ராணுவம் கூறியுள்ளது.

    • இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அடர்ந்த காடுகளில் குகைகளில் ஒளிந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
    • இந்த நடவடிக்கையில் இதுவரை 10 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    ஆகஸ்ட் 1 ஆம் தேதி அகால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது.

    இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அடர்ந்த காடுகளில் குகைகளில் ஒளிந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.

    இதையடுத்து ஆபரேஷன் அகால் என்ற பெயரில் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இன்று (சனிக்கிழமை) ஆபரேஷன் அகாலின் ஒன்பதாவது நாள்.

    இந்நிலையில் இன்று பயங்கரவாதிகள் உடனான சண்டையில் லான்ஸ் நாயக் பிரித்பால் சிங் மற்றும் சிப்பாய் ஹர்மிந்தர் சிங் என்ற 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

    இந்த நடவடிக்கையில் இதுவரை 10 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர். இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

    • ஜூலை 28 அன்று 'ஆபரேஷன் மகாதேவ்'வில் மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
    • பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்துள்ளன.

    ஜூலை 28 அன்று 'ஆபரேஷன் மகாதேவ்'வில் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் பாகிஸ்தானியர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 22 அன்று 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்திய மூன்று பேர் காஷ்மீரின் டாச்சிகாம்-ஹர்வான் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை எடுத்து ஜூலை 28 நடந்த ஆபரேஷனில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்ட மூத்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பைசல் ஜாட் என்கிற சுலைமான் ஷா, அபு ஹம்சா என்கிற ஆப்கான் மற்றும் யாசிர் என்கிற ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    அவர்களின் பயோமெட்ரிக் விவரங்கள், பாகிஸ்தான் அரசு வழங்கிய பாஸ்போர்ட் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானின் தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையம் (NADRA), பயோமெட்ரிக் விவரங்கள், லேமினேட் செய்யப்பட்ட வாக்காளர் சீட்டுகள், டிஜிட்டல் செயற்கைக்கோள் தொலைபேசி விவரங்கள் மற்றும் GPS இணைப்புகளை பாதுகாப்பு  அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளது.

    ஷா மற்றும் ஹம்சாவின் உடைமைகளில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்  இருந்துள்ளன. செயற்கைக்கோள் தொலைபேசியின் சேதமடைந்த SD அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப விவரங்கள் உள்ளன.

    இவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவலகோட்டின் சங்கமங்கா மற்றும் கோயன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை இது நிரூபிக்கிறது.

    கராச்சியில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் பாக்கெட்டுகளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன. பஹல்காமில் கண்டெடுக்கப்பட்ட கிழிந்த சட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளும் இந்த சந்தேக நபர்களை சுட்டிக்காட்டுகின்றன.

    இவர்கள் கடந்த மே 2022 இல் வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் துறை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

    பஹல்காம் தாக்குதலுக்கு முந்தைய நாள், ஏப்ரல் 21 அன்று, பைசரனில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹில் பார்க்கில் உள்ள ஒரு குடிசையில் மூவரும் தஞ்சம் புகுந்தனர்.

    அவர்களுக்கு உணவளித்ததற்காக இரண்டு உள்ளூர்வாசிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.  

    • 'ஆபரேஷன் அகால்' மூன்றாவது நாளாக தொடர்கிறது.
    • இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக பாதுகாப்புப் படையினரால் தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் அகால்' மூன்றாவது நாளாக தொடர்கிறது.

    தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் அகால் வனப்பகுதியில் இன்று நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் மேலும் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இதன் மூலம், இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் ஒரு ராணுவ வீரரும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ஆபரேஷன் அகால் என்ற பெயரில் ராணுவம், காட்டில் சோதனை நடத்தினர்.
    • மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில்  2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் .

    குல்காம் மாவட்டத்தின் அகால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்த குறிப்பிட்ட தகவலைப் பெற்றதை அடுத்து பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.

     ஆபரேஷன் அகால் என்ற பெயரில் ராணுவம், காட்டில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இன்று (சனிக்கிழமை) காலை ஆபரேஷன் அகால் தொடர்கிறது என்று ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உடனே ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது.

    இதுதொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "ஆபரேஷன் அகால் தொடர்கிறது. இதுவரை படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை" என்று தெரிவித்துள்ளது.

    வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இன்னும் இருக்க வாய்ப்புள்ளதால், படைகள் தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளன. 

    • ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு பாராளுமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்கவுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.

    ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் நடந்த தேடுதல் வேட்டையின்போது ஸ்ரீநகர் அருகே வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாராளுமன்றத்தில் இன்று பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ள நிலையில், பயங்கராவதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டதாக வெளியான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் மதியம் தொடங்குகிறது
    • மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது.

    இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளி லும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினமும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனால் கடந்த வாரம் முழுவதும் அலுவல் எதையும் கவனிக்காமல் பாராளுமன்றம் முடங்கியது. இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

    பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று முதல் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன.

    அதன்படி மக்களவையில் இன்றும், மாநிலங்களவை யில் நாளையும் (செவ்வாய்க் கிழமை) விவாதம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இரு அவைகளிலும் தலா 16 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரம் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

    இதையடுத்து பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க் கள் இன்று காலையில் பாராளுமன்றத்துக்கு வந்தனர். காலை 10.30 மணியள வில் அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடி னார்கள்.

    அப்போது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ் வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர். மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், கனி மொழி, ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ஆளும் கட்சியை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

    பின்னர் காலை 11 மணியளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்குள் சென்றனர். காலை 11 மணிக்கு பாராளுமன்ற கூட்டம் தொடங்கியது. பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    மாநிலங்களவையில் முதலில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து துணைத் தலைவர் ஹரிவன்ஸ் சிங் சபையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைத்தார்.

    அதே போல் பாராளுமன்ற மக்களவையிலும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் எதிரொலித்தது. இது தொடர்பாக விவாதம் நடத்த கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவின் இருக்கையை சூழ்ந்து கொண்டு கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து மிகவும் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்றத்தின் மாண்பை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சீர்குலைக்கின்றனர். சபை செயல்படுவதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனுமதிக்கவில்லை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றிக்கூட விவாதம் நடத்தக்கூட நீங்கள் தயாராக இல்லை. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த வேண்டாம் என்று எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்தி சொல்ல வேண்டும்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆவணங்களை கிழிக்கி றார்கள், பதாகைகளை காண்பிக்கிறார்கள். கோஷம் எழுப்புகிறார்கள். அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயவு செய்து சபையின் கண்ணியத்தை பேண வேண்டும். பாராளுமன்றம் 140 கோடி மக்களின் பிரதிநிதித்துவ சபையாகும். அங்கு முக்கியமான பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் எதிர்க் கட்சி எம்.பி.க்களுக்கு எச்சரிக்கை விடுத்து பேசினார். பின்னர் சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

    பின்னர் மதியம் 12 மணிக்கு மக்களவை மீண் டும் கூடியது. அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மக்களவையை மதியம் 1 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைத்தார்.

    பின்னர் மதியம் 1 மணிக்கு மீண்டும் மக்களவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் சபையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.

    அதே போல் பாராளுமன்ற மாநிலங்களவை மதியம் 12 மணிக்கு மீண்டும் கூடியது. இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் மாநிலங்களவையை மதியம் 2 மணி வரை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் சிங் ஒத்தி வைத்தார்.

    முன்னதாக பாராளுமன்ற கூட்டம் தொடங்கும் முன்பு காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த மந்திரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். அப்போது பாராளுமன்ற கூட் டத்தில் என்னென்ன விஷயங்களை பற்றி பேச வேண் டும் என்று அவர்கள் ஆலோசனை நடத்தி முடிவு எடுத்தனர்.

    • பகல் 12 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பேசவுள்ளார்.
    • மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் தொடக்கம். பகல் 12 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பேசவுள்ளார்.

    16 மணிநேரம் நடைபெறவுள்ள விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.

    இன்று பாராளுமன்றம் கூடிய நிலையில், பீகார் வாக்காளர் பட்டியலில் நடத்தப்படும் தீவிர சிறப்பு திருத்தம் குறித்து விளக்கம் கேட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

    எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 

    • நமக்கு தெரிந்தவரை, அவர்கள் இந்தியாவில் உருவான பயங்கரவாதிகளாக இருக்கலாம்.
    • போர் நிறுத்தத்தை அறிவித்தது இந்திய அரசு அல்ல. டொனால்ட் டிரம்ப் தான்.

    'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் தொடக்கம். பகல் 12 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பேசவுள்ளார்.

    16 மணிநேரம் நடைபெறவுள்ள விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.

    இந்நிலையில், "பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த ப. சிதம்பரம், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு NIA எடுத்த நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வெளியிட பாஜக அரசாங்கம் விரும்பவில்லை. அவர்கள் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டார்களா? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதாவது, நமக்கு தெரிந்தவரை, அவர்கள் இந்தியாவில் உருவான பயங்கரவாதிகளாக இருக்கலாம். அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அதற்கு எந்த ஆதாரமும் இல்லை

    ஆபரேஷன் சிந்தூரின் போது ஏற்பட்ட இழப்புகளை மறைக்கிறார்கள். ஒரு போரில், இரு தரப்பிலும் இழப்புகள் ஏற்படுவது இயல்பு தான். இந்தியா இழப்புகளைச் சந்தித்திருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்

    பிரதமர் ஏன் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசவில்லை? நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதம் நடத்துவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்

    போர் நிறுத்தம் எப்படி வந்தது என்பது குறித்து கேட்கப்படும் கேள்விகள் பாஜக அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறதா? ஏனென்றால், நேர்மையாகச் சொல்லப் போனால், போர் நிறுத்தத்தை அறிவித்தது இந்திய அரசு அல்ல. டொனால்ட் டிரம்ப் தான்" என்று தெரிவித்தார்.

    ப. சிதம்பரத்தின் இக்கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் குற்றவாளிகளில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
    • தாக்குதலுக்கு "ஜெய்ஷ் அல்-அடல்" என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.

    தென்கிழக்கு ஈரானில் இன்று நீதிமன்றக் கட்டடத்தின் மீது மரம் நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20 பேர் காயமடைந்தனர்.

    தெற்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாஹெதான் நகரில் உள்ள நீதிமன்ற கட்டடத்தில் இந்த தாக்குதல் நடந்தது. பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் குற்றவாளிகளில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

    தாக்குதலுக்கு "ஜெய்ஷ் அல்-அடல்" என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டியுள்ளது. இங்கு தீவிரவாதக் குழுக்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஈரானிய பாதுகாப்புப் படையினரிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுகின்றன. 

    ×