என் மலர்
நீங்கள் தேடியது "Taliban"
- ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜீஸ் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
- இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.
ஆப்கனிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் பாகிஸ்தான் நேற்று இரவு டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜீஸ் தற்போது இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் போது இந்தத் தாக்குதல் நடந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் பாகிஸ்தானின் பெஷாவரில் துணை ராணுவ தலைமையகத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பொறுப்பேற்றது. இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்த சூழலில் தற்கொலை தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் மோதல் வெடித்த நிலையில் கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சூழலில் போர் நிறுத்தத்தை மீறி தற்போதைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தாலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், தாங்கள் எந்த தாக்குதலும் நடத்தவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது.
- பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நுழைந்து காபூல் நதியில் இணைகிறது.
- இது இறுதியாக அட்டோக்கில் சிந்து நதியுடன் இணைகிறது.
ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அண்மையில் இரு நாடுகளுக்கும் எல்லையில் ஏற்பட்ட சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கத்தாரின் மத்யஸ்தத்தால் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்த சூழலில் தங்கள் நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் குனார் ஆற்றில் ஒரு பெரிய அணையைக் கட்டி, நீர் ஓட்டத்தைக் தடுக்க தாலிபான் முடிவு செய்துள்ளது.
அணையின் கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகத்திற்கு தாலிபான் உச்ச தலைவர் மௌல்வி ஹிபதுல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைகளில் உருவாகும் 480 கி.மீ நீளமுள்ள குனார் நதி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நுழைந்து காபூல் நதியில் இணைகிறது. பாகிஸ்தானில், இது சித்ரல் நதி என்று அழைக்கப்படுகிறது.
காபூல் நதி ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பாயும் மிகப்பெரிய நதியாகும். இது இறுதியாக அட்டோக்கில் சிந்து நதியுடன் இணைகிறது.
குனார் நதியில் அணை கட்டப்பட்டால், அதன் தாக்கம் காபூல் நதியிலும், பின்னர் சிந்து நதியிலும் இருக்கும். இது பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு கடுமையான நெருக்கடியை உருவாக்கும்
முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது போல ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானின் நீராதாரத்தை குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருவது கவனம் பெற்றுள்ளது.
தாலிபான்கள் இந்தியாவிடம் சேர்ந்து டங்காக்குக்கு எதிராக பயங்கரவாத சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பயங்கரவாதம் எங்கிருந்தாலும் அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டிவரும்.
- ஒரு காலத்தில் எங்கள் பாதுகாப்பில் இருந்தனர். எங்கள் நிலத்தில் ஒளிந்து இருந்தனர்.
ஆபகானிஸ்தானின் தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் கடந்த வாரம் முதல் எல்லையில் மோதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த புதன்கிழமை மாலை, 48 மணி நேர சண்டை நிறுத்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மோதல் வலுத்துள்ளது.
இதற்கிடையே நேற்று (வெள்ளிக்கிழமை), எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி முதல் முறையாக கடந்த வாரம் இந்தியா வந்திருந்த நிலையில் இந்த மோதல் வலுத்துள்ளது.
இந்நிலையில் ஆப்கனிஸ்தான் மற்றும் இந்தியா இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்வதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ஆசிப், பாகிஸ்தான் மண்ணில் இருக்கும் அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் அவர்களின் நாட்டுக்கே திரும்ப வேண்டும். ஏனென்றால் அங்கு அவர்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தைக் கொண்டுள்ளனர். எங்களின் நிலமும் வளமும், 250 மில்லியன் பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமே சொந்தம்.
ஆப்கானிஸ்தானுடன் முன்பிருந்த உறவைப்போல இனி தொடர முடியாது. இனி எதிர்ப்புக் குறிப்புகள் அல்லது அமைதிக்கான வேண்டுகோள்கள் இருக்காது.
எங்களின் பிரதிநிதிகளும் ஆப்கானிஸ்தான் செல்ல மாட்டார்கள். பயங்கரவாதம் எங்கிருந்தாலும் அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டிவரும்.
ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கம் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்படுகிறது.
இந்தியா, தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்புடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்கிறது.
தற்போது இந்தியாவின் மடியில் அமர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்யும் ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள், ஒரு காலத்தில் எங்கள் பாதுகாப்பில் இருந்தனர். எங்கள் நிலத்தில் ஒளிந்து இருந்தனர்.
பாகிஸ்தான் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது. எல்லையைத் தாண்டிய எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உறுதியான பதில் அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
சண்டை நிறுத்தத்தை தொடர கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி பாக்டிகா மாகாணத்தில் 3 இடங்களில் குண்டுவீச்சு நடத்தியது.
- பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்கள் தோகா புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தெளிவான மீறல் ஆகும்.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தாலிபான் அமைப்பு, பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியது.
இதற்கிடையே தெக்ரிக்-இ-தாலிபான் அமைப்பினரை குறிவைத்து ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் வான்வழித்தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கம், பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, ராக்கெட் குண்டுகளை வீசினார்கள். இதையடுத்து இரு நாட்டு ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் பலியானார்கள்.
இதற்கிடையே கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலையீட்டால் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் அரசாங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் கூறியதாவது:-
பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி பாக்டிகா மாகாணத்தில் 3 இடங்களில் குண்டுவீச்சு நடத்தியது. பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்கள் தோகா புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தெளிவான மீறல் ஆகும். தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தை களைத்தடம் புரளச் செய்ய வேண்டுமென்றே பாகிஸ்தான் முயற்சித்து உள்ளது என்று தெரிவித்தது.
இதற்கிடையே பாகிஸ்தானின் அத்துமீறல் காரணமாக போர் நிறுத்தம் முறிந்து விட்டதாகவும், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தலிபான்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கத்தாரின் தோகாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு இருக்கிறது.
- பாகிஸ்தான் இராணுவ தளங்களை அழித்ததாக ஆப்கானிஸ்தான் கூறியது.
- பீரங்கிகள் தங்களுக்கு சொந்தமானவை அல்ல என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆபகானிஸ்தானின் தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் கடந்த வாரம் எல்லையில் ஏற்பட்ட சண்டை நேற்று மாலை, 48 மணி நேர சண்டை நிறுத்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றிய பீரங்கிகளை ஆப்கானிஸ்தான் தெருக்களில் தாலிபான்கள் ஓட்டிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானுடனான சண்டையின் போது ஆயுதங்கள் மற்றும் டாங்கிகளை கைப்பற்றியதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபுல்லா முஜாஹித் முன்னதாக தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் இராணுவ தளங்களை அழித்ததாக ஆப்கானிஸ்தான் கூறியது.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் கூற்றை பாகிஸ்தானும் மறுத்துள்ளது. வீடியோக்களில் காணப்படும் பீரங்கிகள் தங்களுக்கு சொந்தமானவை அல்ல என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர், தாலிபான்கள் எங்கிருந்தோ மலிவாக வாங்கிய டாங்கிகளைக் காட்சிப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தார்.
- ஆக்ஸ்போர்டில் நண்பர்களுடன் சேர்ந்து பாங் குழாய் மூலம் கஞ்சா புகைத்த அந்த இரவுக்குப் பிறகு அனைத்தும் மாறிவிட்டன.
- என் மீதான தாக்குதலை இவ்வளவு நெருக்கமாக நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை.
நோபல் அமைதிப் பரிசு பெற்றவரும், பெண் கல்வி உரிமைக்காகப் போராடியவருமான மலாலா யூசஃப்சாய், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கில் பெண்கள் கல்விக்காகப் போராடியதற்காக, 2012-ஆம் ஆண்டு தனது 15-வது வயதில் பள்ளிப் பேருந்தில் பயணித்தபோது மலாலாவைத் தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், பிரிட்டனில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். தற்போது 28 வயதான மலாலா, தன் கணவர் அஸ்ஸர் மாலிக்கோடு இணைந்து பெண் கல்வி செயல்பாட்டாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது நண்பர்களுடன் கஞ்சா (Marijuana) உட்கொண்டபோது, 13 ஆண்டுகளுக்கு முன் தன்னைத் தாக்கிய தலிபான்களின் நினைவுகள் மீண்டும் துரத்தியதாக அவர் கூறியுள்ளார்.
தி கார்டியன் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ஆக்ஸ்போர்டில் நண்பர்களுடன் சேர்ந்து பாங் குழாய் மூலம் கஞ்சா புகைத்த அந்த இரவுக்குப் பிறகு அனைத்தும் மாறிவிட்டன. என் மீதான தாக்குதலை இவ்வளவு நெருக்கமாக நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. அந்தத் தாக்குதலை நான் மீண்டும் எதிர்கொள்வது போல இருந்தது.
பேருந்து, துப்பாக்கி வைத்திருந்த நபர், இரத்தம்... எல்லாம் முதல் முறையாகப் பார்ப்பது போல இருந்தது. என் உடல் பயத்தில் நடுங்கியது. என் சொந்த மனதிலிருந்தே என்னால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது" என்று தெரிவித்தார்.
கஞ்சா போதையில் தான் சுயநினைவை இழந்ததாகவும், நண்பர் ஒருவர்தான் தன்னை அறைக்குத் தூக்கிச் சென்றதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தனக்குப் பதட்டத் தாக்குதல்கள் (Panic Attacks), தூக்கமின்மை மற்றும் கடுமையான மனக் கவலைகள் தொடங்கின என்றும் கூறினார்.
இதன்பின் ஒரு மனநல மருத்துவரை அணுகியபோது, தலிபான் தாக்குதல், அவர்களின் ஆட்சியில் கழித்த குழந்தைப்பருவம், படிப்பு அழுத்தம் போன்றவையே தனது மனக்காயங்களுக்குக் காரணம் என மருத்துவர் அடையாளம் கண்டதாகவும், அவரது உதவியால் அந்தக் கொடூர நினைவுகளில் இருந்து படிப்படியாக மீண்டதாகவும் மலாலா கூறினார்.
இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் 'Finding my way' என்ற தனது அடுத்த புத்தகத்தில் விரிவாக எழுத உள்ளதாக மலாலா மேலும் தெரிவித்தார்.
- 30 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார்.
- குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்கள் உட்பட டூராண்ட் கோடு நெடுகிலும் பல இடங்களில் மோதல்கள் நடந்ததை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வான்வழித் தாக்குதல் நடந்தது. இதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என குற்றம்சாட்டிய தலிபான் பதிலடியாக பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின.
நேற்று இரவு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த இந்த தாக்குதலின்போது இரு தரப்புப் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்தது.
இந்த தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிவிப்பில், இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றுவிட்டதாகவும், 25 பாகிஸ்தான் இராணுவ முகாம்களைக் கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தச் சண்டையின்போது கூடுதலாக 30 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய அவர் எதிர்த்தரப்பு மீண்டும் ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறினால் வலுவான பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தானை எச்சரித்தார்.
குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்கள் உட்பட டூராண்ட் கோடு நெடுகிலும் பல இடங்களில் மோதல்கள் நடந்ததை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆனால், தலிபான் தங்கள் முகாம்களை கைப்பற்றியதாகக் கூறும் கூற்றுக்களை அவர்கள் நிராகரித்தனர்.
இந்த தாக்குதலில் பீரங்கிகள் மற்றும் வான்வழி ஆயுதங்களையும் பயன்படுத்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், உயிரிழப்புகள் குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். தாலிபான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி இந்தியா வருகை தந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
- செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் முத்தாகி கலந்துகொண்டார். இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.
ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தாலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹைல் சாஹின் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "டெல்லி ஆப்கான் தூதரகத்தில் பெண் நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை இல்லை. அனுமதி பாஸ்கள் குறைவாகவே இருந்ததால், சிலரால் அதைப் பெற முடியவில்லை. வெளியுறவு அமைச்சர் முத்தாகி பல பெண் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். எதிர்கால இந்திய வருகைகளின் போது பெண் நிருபர்கள் இருப்பதை நிச்சயம் உறுதி செய்வோம்" என்று தெரிவித்தார்.
- உங்கள் மௌனம், பெண் சக்தி குறித்த உங்கள் அரசியல் முழக்கங்களின் வெறுமையை அம்பலப்படுத்துகிறது.
- நம் மண்ணில் பெண்களை அவமதிக்க எப்படி அனுமதிக்க முடியும்?
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
நேற்று டெல்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் முத்தாகி கலந்துகொண்டார். இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 2021 இல் மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என்று ஜெய்சங்கர் கூறினார்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கோரியுள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தேர்தலுக்காக மட்டும் பெண்கள் உரிமைகளை அங்கீகரிப்பதாக நீங்கள் நாடகமாடவில்லை என்றால், பெண்களை முதுகெலும்பாகவும் பெருமையாகவும் கொண்ட நம் நாட்டில் மிகவும் திறமையான பெண்களில் சிலருக்கு இந்த அவமானம் எப்படி அனுமதிக்கப்பட்டது" என்று வினவினார்.
இந்த பதிவை பகிர்ந்து மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "திரு. மோடி, பெண் பத்திரிகையாளர்களை பொது மேடையில் இருந்து விலக்கி வைக்க நீங்கள் அனுமதிக்கும்போது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நீங்கள் அவர்களுக்காக நிற்க பலவீனமானவர் என்று சொல்கிறீர்கள்.
நமது நாட்டில், எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சமமாக பங்கேற்க உரிமை உண்டு. இத்தகைய பாகுபாட்டை எதிர்கொள்ளும் போது உங்கள் மௌனம், பெண் சக்தி குறித்த உங்கள் அரசியல் முழக்கங்களின் வெறுமையை அம்பலப்படுத்துகிறது." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கிலும் இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,"இந்திய மண்ணில் தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் முத்தாகியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இது ஒரு நிகழ்வு மட்டுமல்ல. மோடி அரசாங்கத்தின் கீழ் பெண்களின் கண்ணியம் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதை இது பிரதிபலிக்கிறது. சமத்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக நாடான இந்தியாவை உலகம் பார்க்கும்போது, இதுபோன்ற பாகுபாடுகள் இங்கு நடைபெற அனுமதிப்பதன் மூலம் நாம் என்ன செய்தியை அனுப்புகிறோம்?
மோடி அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் பதில்களைக் கோருகிறோம். நம் மண்ணில் பெண்களை அவமதிக்க எப்படி அனுமதிக்க முடியும்? அல்லது மௌனமும், புறக்கணிப்பும், பாகுபாடும் தான் உங்கள் அரசின் பெண்களுக்கான தொலைநோக்கு பார்வையாக இருக்கிறதா?
திரு. மோடி, திரு. ஜெய்சங்கர் அவர்களே உங்கள் சொந்த நாட்டில் இந்தியப் பெண்களின் அடிப்படை கண்ணியத்தைக் கூட நீங்கள் பாதுகாக்க முடியாத அளவுக்கு நீங்கள் எத்தனை பலவீனமாக இருக்கிறீர்கள்?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு பத்திரிகையாளர்களை தேர்ந்தெடுத்து அழைத்தவர்கள் ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகள் என்றும் ஆப்கானிஸ்தான் தூதரகம் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
- பெண்கள் குறித்த பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கோரியுள்ளார்.
- ஆண் பத்திரிகையாளர்கள் தங்கள் பெண் சகாக்கள் அனுமதிக்கப்படாததை கண்டறிந்தபோது வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
நேற்று டெல்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் முத்தாகி கலந்துகொண்டார். இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 2021 இல் மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என்று ஜெய்சங்கர் கூறினார்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தாலிபான் தாங்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான விதித்து வருவது தெரிந்ததே.
அந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து ஐக்கிய நாடுகள் சபையும் கவலை தெரிவித்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது வாழ்வில் இருந்து பெண்களை விலக்கி வைக்கும் கொள்கைகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு தாலிபான்களை ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்திய மண்ணில் தாலிபான்களை திருப்திப்படுத்த பெண் செய்தியாளர்களை அனுமதிக்க மறுத்து பெண் ஒடுக்குமுறைக்கு மத்திய அரசு துணை போகிறதா என்ற கேள்வியை பலர் முன்வைக்கின்றனர்.
அதேநேரம் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ஆண் பத்திரிகையாளர்கள் பெண்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும் என்றும் ஆனால அதற்கான சான்றாண்மை இல்லாமல் அவர்கள் அங்கு அமர்ந்திருந்தனர் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கோரியுள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தேர்தலுக்காக மட்டும் பெண்கள் உரிமைகளை அங்கீகரிப்பதாக நீங்கள் நாடகமாடவில்லை என்றால், பெண்களை முதுகெலும்பாகவும் பெருமையாகவும் கொண்ட நம் நாட்டில் மிகவும் திறமையான பெண்களில் சிலருக்கு இந்த அவமானம் எப்படி அனுமதிக்கப்பட்டது" என்று வினவியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பி. சிதம்பரம் வெளியிட்ட பதிவில், "ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அமீர் கான் முத்தாகி உரையாற்றிய பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து பெண் பத்திரிகையாளர்கள் விலக்கப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனது தனிப்பட்ட பார்வையில், ஆண் பத்திரிகையாளர்கள் தங்கள் பெண் சகாக்கள் அனுமதிக்கப்படாததை அல்லது அழைக்கப்படாததை கண்டறிந்தபோது வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, பெண் பத்திரிகையாளர்களை விலக்க தாலிபான் அமைச்சரை அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் ஒவ்வொரு இந்தியப் பெண்ணையும் அவமதித்துள்ளது." என்று விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு பத்திரிகையாளர்களை தேர்ந்தெடுத்து அழைத்தவர்கள் ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகள் என்றும் ஆப்கானிஸ்தான் தூதரகம் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
- காபூல் நகர் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல்.
- தாக்குதலில் காயம், சேதம் ஏற்பட்டதாக என்பது தெரியவில்லை.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.
தலைநகர் காபூலின் கிழக்கு பகுதியில் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதலில் இருந்து நூர் வாலி தப்பி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது மகன் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே காபூலில் 2 சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டது என்றும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். நகரின் வான்வெளியில் ஒரு போர் விமானத்தின் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள மார்க்கெட் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தானின் இந்த தாக்குதல் முன்னெப்போதும் இல்லாதவை, கொடூரனமாவை, தங்களுடைய வான்வெளியை மீறியதாக பாகிஸ்தான் மீது தலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
அரசின் தலைமை செய்திதொடர்பாளர் ஜபிகுல்லா முஜாஹித் கூறுகையில் "அந்த நேரத்தில் அங்கு காயம் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. அது ஒரு விபத்து. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
ஆனால், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இன்று "இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் பொறுப்பு. கிழக்கு மாகாணமான பாக்தியாவிலும் தாக்குதல் நடத்தப்பட்டது" எனத் தெரிவித்துள்ளது. காபூலிலில் விமானங்கள் சுட்டுவீழ்த்த முடியாத வகையில் எப்படி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது என்பது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்த தாக்குதல் முன்எப்போதும் இல்லாதது, வன்முறையானது. கொடூரமானது. இந்த சூழ்நிலை இன்னும் மோசமானால் பாகிஸ்தான் ராணுவம் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
2022ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா காபூர் நகர் மீது தாக்குதல் நடத்திய பிறகு, நடத்தப்படும் முதல் தாக்குதல் இதுவாகும்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்தபின், முதன்முறையாக இந்தியாவில் ராஜாங்கரீதியிலான பேச்சுவார்த்தையில் தலிபான் அரசு ஈடுபட்ட நிலையில், பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக குற்றம்சாட்டிய 48 மணி நேரத்திற்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
- காபூலுக்கும் புது டெல்லிக்கும் இடையே கூடுதல் விமானங்கள் தொடங்கப்பட்டதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
ஆகஸ்ட் 2021 இல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தாலிபான் பிரதிநிதி ஒருவர் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறை.
டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தையை அவர் தொடங்கி உள்ளார்.
இன்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆப்கன் அமைச்சர் முத்தாகி கூட்டத்தில் பங்கேற்றார்.
இதில் பேசிய ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
எங்களுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு உங்கள் தேசிய வளர்ச்சிக்கும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கிறது.
அதை மேம்படுத்துவதற்காக, காபூலில் உள்ள இந்தியாவின் தொழில்நுட்ப பணியகத்தை இந்திய தூதரக அந்தஸ்துக்கு மேம்படுத்துவதை இன்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான நீடித்த நட்பை உறுதிப்படுத்துவதிலும், நமது உறவுகளை முன்னேற்றுவதிலும் உங்கள் வருகை ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது.
கடந்த மாதம் ஆப்கனில் பூகம்பம் ஏற்பட்ட க சில மணி நேரங்களுக்குள் போது இந்தியா நிவாரணப் பொருட்கள் பூகம்பம் ஏற்பட்ட இடங்களுக்கு வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம்.
இரு நாடுகளும் எதிர்கொள்ளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலால் நமது வளர்ச்சி ஆபத்தில் உள்ளது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்.
இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் குறித்த உங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எங்களுடன் நீங்கள் காட்டிய ஒற்றுமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் சுரங்க வாய்ப்புகளை ஆராய இந்திய நிறுவனங்களுக்கு நீங்கள் விடுத்த அழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது. இரு நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்தும் நாம் விவாதிப்போம். மேலும் காபூலுக்கும் புது டெல்லிக்கும் இடையே கூடுதல் விமானங்கள் தொடங்கப்பட்டதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, கடந்த 2021 இல் தாலிபான் ஆட்சிக்கு வந்த பின் மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட உள்ளது கவனம் பெற்றுள்ளது






