search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "checkpoint"

    • சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
    • தேர்தல் முடியும் வரையிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை கவர மது பானங்களை பயன்படுத்துவதை தடுக்க மற்றும் அண்டை மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக மது பானங்களை கடத்துவதை தடுக்கவும், புதுவை பிராந்திய எல்லை பகுதிகளில் 10 இடங்களில் கலால்துறையால் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கனகசெட்டிகுளம், தவளக்குப்பம், முள்ளோடை, சோரியாங் குப்பம், மடுகரை, மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு, அய்யங் குட்டிபாளையம், கோரிமேடு ஆகிய சோதனை சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழுக்கள் புதுச்சேரியில் இருந்து அண்டை மாநிலத்துக்கும், அண்டை மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கும் வாக்காளர்களுக்கு வழங்க பணம், மதுபானங்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை சட்ட விரோதமாக கடத்துவதை, தவிர்க்க வாகன சோதனையில் தேர்தல் நடக்கும் நாள் வரை ஈடுபட உள்ளது.

    மேலும் இந்த சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    இதற்கிடையே புதுச்சேரி சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ் பெக்டர்கள் பங்கேற்றனர்.

    அந்த ஆலோசனை கூட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணித்து தடுக்க வேண்டும். தேர்தல் முடியும் வரையிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    • யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து துரத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.
    • கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன சாலை பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைசாவடி அருகே யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து துரத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் சோதனைசாவடியில் ஆசனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சோதனை சாவடி அருகே வந்தது. இதை கண்ட போலீசார் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடம் சாலையில் ஒற்றை யானை உலா வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    இதனால் கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மெதுவாக யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே போலீசார் நிம்மதி அடைந்து பெருமூச்சுவிட்டனர். போக்குவரத்தும் சீரானது.

    • மேட்டூர் அருகே உள்ள பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    • தமிழக காவல்துறை சோதனை சாவடி 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரைக்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே உள்ள பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை சோதனை சாவடி 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரைக்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    உத்தரவு

    பாலாற்றில் தமிழக வனத்துறை மற்றும் காவல்துறை சோதனை சாவடி அமைப்பது குறித்து ஆய்வு அறிக்கை அனுப்ப தமிழக அரசு 2 மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டது.

    இதனை அடுத்து நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு,வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் காரைக்காடு சோதனை சாவடி யிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

    முன்னதாக கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் இரு மாவட்ட வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள்.

    ஆய்வுக்கு பிறகு ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக-கர்நாடக எல்லையான பாலாற்றில் கர்நாடகா அரசின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஈரோடு மாவட்ட எல்லையில் வனத்துறை அல்லது காவல்துறை சோதனை சாவடி இல்லை ஏதாவது சம்பவங்கள் நடந்தால் யார் பொறுப்பு என்பது பற்றி பிரச்சனை எழுந்தது.

    இது குறித்து முதல்-அமைச்சரின் கள ஆய்வில் பேசப்பட்டது. இதனை அடுத்து சோதனை சாவடி அமைப்பதில் என்ன நடை முறைகளை பின்பற்றலாம்? வனத்துறை, காவல்துறை இணைந்து சோதனை சாவடி அமைக்க லாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இது குறித்து 15 நாட்களில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.மேட்டூர் அருகே தமிழக எல்லையில்

    சோதனைசாவடி அமைக்க ஆய்வு

    • மானாசாலை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சுழி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (11-ந் தேதி) இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மாவட்ட எல்லை பகுதியில் உள்ள மானாசாலை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தி லிருந்து அஞ்சலி நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் இந்த சோதனை சாவடியை கடந்து செல்ல வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து முறையான அனுமதி யுடன் குறிப்பிட்ட வழித்த டங்கள் வழியாக அஞ்சலி செலுத்த வரும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்கும் விதமாக திருச்சுழி, நரிக்குடி மற்றும் மானாச்சாலை ஆகிய பகுதிகளின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    கண்காணிப்பு காமிராக்களின் காட்சிப் பதிவுகளின் செயல்பாடு களையும் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், நரிக்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதி யில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
    • போலீசார் பந்தல் அமைத்து கண்காணிப்பு

    வாணியம்பாடி,

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

    அதைத்தொடர்ந்து நேற்று வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டியப்பனூர் கூட்ரோட்டில் வாகன சோதனை சாவடியில் போலீசார் பந்தல் அமைத்து வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.

    தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இத்தகைய சோதனைகளில் ஈடுபடுவதால் குற்றங்கள் தடுக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

    • ஏற்காடு பகுதியில் உள்ள அரங்கம் பகுதியில் சிலர் மரம் வெட்டியதாக கூறி கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து சோதனை சாவடியை மூடி மலை கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • மரம் வெட்டியவர்கள் 5 பேர் மீது ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ஏற்காடு:

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்காடு ஒன்றியம், அரங்கம் மலைகிராமத்தில் இருந்து குறுக்கு வழியாக குப்பனூர் செல்வதற்காக, கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு 250 சில்வர்ஓக் மரங்கள் வெட்டி உள்ளனர்.

    இந்த சம்பவத்தில் வனத்துறை அலுவலர்கள் தொடர்பு இருந்ததை உறுதி செய்த வனத்துறை அதிகாரிகள், அந்தப் பகுதியில் பணியில் இருந்த கார்ட் குமார் என்பவரை சஸ்பெண்டு செய்தனர். மேலும் பொதுமக்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் தலை மறைவாக இருந்த அரங்கம் கிராமத்தை சேர்ந்த புஷ்ப நாதன், மகேந்திரன் மற்றும் வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த கைது நடவ டிக்கையை கண்டித்து மலை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் குப்பனூர் சோதனை சாவடியை மூடி வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனை அடுத்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் கொண்டு சென்று, நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த வாகன சோதனையில் மொத்தம் ரூ.22¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தாசில்தார் சிவா தலைமையிலான பறக்கும் படையினர் வடலூர்-கும்பகோணம் சாலையில் உள்ள கருங்குழியில் நேற்று மதியம் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக வந்த தனியார் ஏஜென்சியின் வாகனத்தை தாசில்தார் சிவா நிறுத்தி சோதனை செய்தார். அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 19 லட்சம் ரூபாய் இருந்ததால் அதனை தாசில்தார் சிவா பறிமுதல் செய்து அதை குறிஞ்சிப்பாடி தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து அந்த பணம் குறிஞ்சிப்பாடி கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் ரெட்டிச்சாவடியில் பறக்கும் படை தாசில்தார் நாராயணன் தலைமையிலான குழுவினர் புதுச்சேரி-கடலூர் சாலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மரக்காணம் மஞ்சக்குப்பத்தைச்சேர்ந்த மீன் வியாபாரி கஜேந்திரன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.58 ஆயிரம் கொண்டு வந்தார். அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    பண்ருட்டி அருகே உள்ள கொள்ளுக்காரன்குட்டையில் கும்பகோணம்- சென்னை மெயின்ரோட்டில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை தாசில்தார் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காரில் பயணம் செய்த நடுக்குப்பத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 3 லட்சத்து 30 ஆயிரத்து 200 ரூபாய் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, பண்ருட்டி தாசில்தார் கீதாவிடம் ஒப்படைத்தனர்.

    நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் வாகன சோதனையில் மொத்தம் 22 லட்சத்து 88 ஆயிரத்து 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 640 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் நேற்று இரவு விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்வாமிங் ஆப்ரே‌ஷன் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சியில் போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலும், விழுப்புரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலும் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் நேற்று இரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வாகன சோதனை மற்றும் பழைய குற்றவாளிகளை கண்காணித்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். இந்த திடீர் வாகன சோதனையில் 1430 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 36 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யக்கோரி ஆர்.டி.ஓ. வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

    மேலும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டிய 571 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மொத்தம் 640 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 89 தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜூகளில் போலீசார் சோதனை செய்தனர்.

    துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டாணா அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நகை கொள்ளையர்கள் 2 பேரை பிடித்தனர்.
    துறையூர்:

    துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டாணா அருகில் துறையூர் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத கார்ஒன்று வந்தது. அதை மடக்கி விசாரனை செய்த போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரனாக பேசினர். இதனால் சந்தேகமடைந்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் அவர்கள் தூத்துகுடி மாவட்டம் குலையன் கரைசலை சேர்ந்த தனசேகரபாண்டியன்(34) மற்றும் பட்டறை சுரேஷ் என்பவரின் மனைவி தனம் பூங்கொடி(28) என்பது தெரிந்தது.

    அவர்களை விசாரித்ததில் கடந்த மாதம் துறையூர் சாமிநாதன் நகரில் மெடிக்கல் உரிமையாளர் பாபு என்பவர் வீட்டில் 40 பவுன் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் விசாரனை செய்ததில் முதல் கட்டமாக 8 பவுன் மற்றும் காரை போலீசார் கைபற்றி குற்றவாளிகள் இருவரையும் துறையூர் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். 

    முக்கிய குற்றவாளியான பட்டறை சுரேஷ் தலைமறைவாக இருப்பதால் அவரை பிடித்தால்தான் மற்ற நகைகளை கைப்பற்றமுடியும் என போலீசார் தெரிவித்தனர்.
    ×