search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "checkpoint"

    • தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவு.
    • தீவிர காய்ச்சல் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரஸ் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து கேரளாவையொட்டி தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவக்குழுவினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அரசு உத்தரவிட்டு உள்ளது.


    இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காரமடை அருகே கேரள எல்லையையொட்டி அமைந்து உள்ள கோபனாரி, முள்ளி ஆகிய சோதனைச்சாவடிகளில் வட்டார மருத்துவ அதிகாரி சுதாகர் மேற்பார்வையில் டாக்டர் பிரவீன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஹேமலதா மற்றும் 2 நர்சுகள், ஒரு மருந்தாளுர் உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர் குழுவினர் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் தீவிர காய்ச்சல் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காரமடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வரும் நபர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பும் உறுதியாகி உள்ளது. இதனால் சோதனையை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நிபா வைரஸ் காய்ச்சல் வவ்வால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்கு பரவும் தன்மை உடையது. அவற்றின் சிறுநீர், உமிழ்நீர், கழிவுகள் மற்றும் அவை விட்டு செல்லும் பழங்களை தின்பதாலும் பாதிப்பு உருவாகும்.

    மேலும் வவ்வால்கள் மூலம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் நோய் பரவி மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு அதிகம். இந்த வகை காய்ச்சல் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தால் அவருக்கும் நோய் பரவ வாய்ப்பு உண்டு.

    தமிழகத்தில் தற்போது வரை நிபா வைரசால் பாதிப்பு ஏதுமில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவையொட்டி அமைந்து உள்ள காரமடை முள்ளி, கோபனாரி சோதனைச்சாவடிகளில் மருத்துவ குழுவினர் கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

    மேலும் காய்ச்சல் பாதித்தவரின் பெயர், தொடர்பு எண் பெறப்பட்டு அவர்களை தினமும் தொடர்பு கொண்டு காய்ச்சல் உள்ளதா, அல்லது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனரா என்ற விவரங்கள் பெறப்படுகிறது. இதுவும் தவிர அவர்கள் சென்ற பகுதிகளிலும் சுகாதார மேற்பார்வையாளர் மூலம் ஆய்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    • மாவட்ட சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்தியூர்:

    கர்நாடகா மாநுலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரவு வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி கர்நாட கத்தையொட்டி உள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் அனைத்து நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என தமிழக சுகாதார துறை மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை சோதனை ச்சாவடி மற்றும் பர்கூர் சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய சாலை உள்ளது. இந்த வழியாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமான வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் வருபவர்களும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். குறிப்பாக சரக்கு வாகனங்கள் இந்த வழியாக அதிகளவில் சென்று வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தமிழக சுகாதார த்துறை கர்நாடகா எல்லை பகுதிகளில் சோதனைக்கு பிறகு அனுமதிக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் கர்கே கண்டி செக் போஸ்ட் அருகே அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவி னர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் போலீசார் மற்றும் சுகதார துறையினர் அந்த வழியாக வந்த வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.

    அந்த பகுதியில் சுகாதார துறையினர் வாகனங்களில் வருபவர்களிடம் காய்சல், இருமல் மற்றும் நோய் தென்படும் அறிகுறிகள் இருந்தால் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர். மேலும் மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் வரட்டுபள்ளம் சோதனச்சாவடியிலும் அந்த வழியாக வரும் வாகனங்களை சுகாதாரத் துறையினர் சோதனை செய்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    இதே போல் சத்திய மங்கலம் அருகே உள்ள பண்ணாரி, தாளவாடி, காரப்பள்ளம், மற்றும் புளிஞ்சூர் சோதனைச் சாவடிகளிலும் போலீசார் மற்றும் சுகதார துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அவர்கள் அந்த வழியாக வரும் சரக்கு வாகனம், பஸ், லாரி மற்றும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி டிரைவர் மற்றும் கிளீனர்களிடம் விசாரணை நடத்திய பின்பே அனுப்பி வைக்கின்றனர்.

    காய்ச்சல் உள்ளிட்ட நோய் உபாதைகள் உள்ளதா என சோதனை செய்த பிறகே மருத்துவ குழுவினர் வாகன ஓட்டிகளை அனுமதிக்கின்றனர்.

    • மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றனர்.

    ஓசூர்:

    ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடியில் கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கு பர்மிட் போடும் உள்வழி ஆர்டிஓ சோதனை சாவடி உள்ளது.

    இந்த உள்வழி சோதனை சாவடியில் இன்று காலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சோதனை சாவடியில் இருந்த கணக்கில் வராத 2 லட்சத்து 25 ஆயிரத்து 950 ரூபாய் ரொக்க பணம் சிக்கியது. அப்போது அங்கு மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல் குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    பணம் பறிமுதல் செய்யப்பட்ட நேரத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப், கவியருவி, சின்னகல்லார் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

    அப்போது அந்த வாகனங்கள் ஆழியார் சோதனைச்சாவடி மற்றும் டாப்சிலிப் வழித்தடத்தில் உள்ள சேத்துமடை சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

    இதற்கிடையே சுற்றுலாப் பயணிகள் போல ஒருசிலர் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களில் கொண்டு செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின்பேரில் வனச்சரகர் ஞானமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று ஆழியார் சோதனைச் சாவடியை கடந்து கவியருவி, வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வனத்துறையின் பைரவா மோப்பநாய் மூலம் சுற்றுலா வாகனங்களில் ஏதேனும் போதைப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆழியார் சோதனைச்சாவடி வழியாக கவியருவி, வால்பாறை மட்டுமின்றி அட்டக்கட்டி, சின்னகல்லார், சோலையார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். எனவே இந்த வழியாக செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே போதைப்பொருட்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் ஆழியாறுக்கு வரும் சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    மேலும் வனப் பகுதிகளுக்குள் எவரேனும் அத்துமீறி செல்கின்றனரா என்பதையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.

    • அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது.
    • ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது.

    பல்லடம்:

    சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந்தேதி உடுமலை சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து திருப்பூரை சேர்ந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி., நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல லட்சம் மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது.

    அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும். இந்த நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.இது வன்மையாக கண்டி க்கத்தக்கது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது.

    இந்த தடுப்பணையை தாண்டி ஒரு சொட்டுநீர் கூட அமராவதி அணைக்கு வராது. கேரளாவின் இந்த சட்டவிரோத, தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கின்ற தடுப்பணை திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் எல்லை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    • சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
    • தேர்தல் முடியும் வரையிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை கவர மது பானங்களை பயன்படுத்துவதை தடுக்க மற்றும் அண்டை மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக மது பானங்களை கடத்துவதை தடுக்கவும், புதுவை பிராந்திய எல்லை பகுதிகளில் 10 இடங்களில் கலால்துறையால் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கனகசெட்டிகுளம், தவளக்குப்பம், முள்ளோடை, சோரியாங் குப்பம், மடுகரை, மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு, அய்யங் குட்டிபாளையம், கோரிமேடு ஆகிய சோதனை சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழுக்கள் புதுச்சேரியில் இருந்து அண்டை மாநிலத்துக்கும், அண்டை மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கும் வாக்காளர்களுக்கு வழங்க பணம், மதுபானங்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை சட்ட விரோதமாக கடத்துவதை, தவிர்க்க வாகன சோதனையில் தேர்தல் நடக்கும் நாள் வரை ஈடுபட உள்ளது.

    மேலும் இந்த சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    இதற்கிடையே புதுச்சேரி சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ் பெக்டர்கள் பங்கேற்றனர்.

    அந்த ஆலோசனை கூட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணித்து தடுக்க வேண்டும். தேர்தல் முடியும் வரையிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    • யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து துரத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.
    • கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன சாலை பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைசாவடி அருகே யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து துரத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் சோதனைசாவடியில் ஆசனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சோதனை சாவடி அருகே வந்தது. இதை கண்ட போலீசார் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடம் சாலையில் ஒற்றை யானை உலா வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    இதனால் கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மெதுவாக யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே போலீசார் நிம்மதி அடைந்து பெருமூச்சுவிட்டனர். போக்குவரத்தும் சீரானது.

    • மேட்டூர் அருகே உள்ள பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    • தமிழக காவல்துறை சோதனை சாவடி 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரைக்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே உள்ள பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை சோதனை சாவடி 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரைக்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    உத்தரவு

    பாலாற்றில் தமிழக வனத்துறை மற்றும் காவல்துறை சோதனை சாவடி அமைப்பது குறித்து ஆய்வு அறிக்கை அனுப்ப தமிழக அரசு 2 மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டது.

    இதனை அடுத்து நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு,வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் காரைக்காடு சோதனை சாவடி யிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

    முன்னதாக கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் இரு மாவட்ட வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள்.

    ஆய்வுக்கு பிறகு ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக-கர்நாடக எல்லையான பாலாற்றில் கர்நாடகா அரசின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஈரோடு மாவட்ட எல்லையில் வனத்துறை அல்லது காவல்துறை சோதனை சாவடி இல்லை ஏதாவது சம்பவங்கள் நடந்தால் யார் பொறுப்பு என்பது பற்றி பிரச்சனை எழுந்தது.

    இது குறித்து முதல்-அமைச்சரின் கள ஆய்வில் பேசப்பட்டது. இதனை அடுத்து சோதனை சாவடி அமைப்பதில் என்ன நடை முறைகளை பின்பற்றலாம்? வனத்துறை, காவல்துறை இணைந்து சோதனை சாவடி அமைக்க லாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இது குறித்து 15 நாட்களில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.மேட்டூர் அருகே தமிழக எல்லையில்

    சோதனைசாவடி அமைக்க ஆய்வு

    • மானாசாலை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சுழி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (11-ந் தேதி) இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மாவட்ட எல்லை பகுதியில் உள்ள மானாசாலை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தி லிருந்து அஞ்சலி நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் இந்த சோதனை சாவடியை கடந்து செல்ல வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து முறையான அனுமதி யுடன் குறிப்பிட்ட வழித்த டங்கள் வழியாக அஞ்சலி செலுத்த வரும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்கும் விதமாக திருச்சுழி, நரிக்குடி மற்றும் மானாச்சாலை ஆகிய பகுதிகளின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    கண்காணிப்பு காமிராக்களின் காட்சிப் பதிவுகளின் செயல்பாடு களையும் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், நரிக்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதி யில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
    • போலீசார் பந்தல் அமைத்து கண்காணிப்பு

    வாணியம்பாடி,

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

    அதைத்தொடர்ந்து நேற்று வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டியப்பனூர் கூட்ரோட்டில் வாகன சோதனை சாவடியில் போலீசார் பந்தல் அமைத்து வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.

    தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இத்தகைய சோதனைகளில் ஈடுபடுவதால் குற்றங்கள் தடுக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

    • ஏற்காடு பகுதியில் உள்ள அரங்கம் பகுதியில் சிலர் மரம் வெட்டியதாக கூறி கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து சோதனை சாவடியை மூடி மலை கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • மரம் வெட்டியவர்கள் 5 பேர் மீது ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ஏற்காடு:

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்காடு ஒன்றியம், அரங்கம் மலைகிராமத்தில் இருந்து குறுக்கு வழியாக குப்பனூர் செல்வதற்காக, கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு 250 சில்வர்ஓக் மரங்கள் வெட்டி உள்ளனர்.

    இந்த சம்பவத்தில் வனத்துறை அலுவலர்கள் தொடர்பு இருந்ததை உறுதி செய்த வனத்துறை அதிகாரிகள், அந்தப் பகுதியில் பணியில் இருந்த கார்ட் குமார் என்பவரை சஸ்பெண்டு செய்தனர். மேலும் பொதுமக்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் தலை மறைவாக இருந்த அரங்கம் கிராமத்தை சேர்ந்த புஷ்ப நாதன், மகேந்திரன் மற்றும் வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த கைது நடவ டிக்கையை கண்டித்து மலை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் குப்பனூர் சோதனை சாவடியை மூடி வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனை அடுத்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் கொண்டு சென்று, நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த வாகன சோதனையில் மொத்தம் ரூ.22¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தாசில்தார் சிவா தலைமையிலான பறக்கும் படையினர் வடலூர்-கும்பகோணம் சாலையில் உள்ள கருங்குழியில் நேற்று மதியம் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக வந்த தனியார் ஏஜென்சியின் வாகனத்தை தாசில்தார் சிவா நிறுத்தி சோதனை செய்தார். அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 19 லட்சம் ரூபாய் இருந்ததால் அதனை தாசில்தார் சிவா பறிமுதல் செய்து அதை குறிஞ்சிப்பாடி தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து அந்த பணம் குறிஞ்சிப்பாடி கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் ரெட்டிச்சாவடியில் பறக்கும் படை தாசில்தார் நாராயணன் தலைமையிலான குழுவினர் புதுச்சேரி-கடலூர் சாலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மரக்காணம் மஞ்சக்குப்பத்தைச்சேர்ந்த மீன் வியாபாரி கஜேந்திரன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.58 ஆயிரம் கொண்டு வந்தார். அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    பண்ருட்டி அருகே உள்ள கொள்ளுக்காரன்குட்டையில் கும்பகோணம்- சென்னை மெயின்ரோட்டில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை தாசில்தார் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காரில் பயணம் செய்த நடுக்குப்பத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 3 லட்சத்து 30 ஆயிரத்து 200 ரூபாய் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, பண்ருட்டி தாசில்தார் கீதாவிடம் ஒப்படைத்தனர்.

    நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் வாகன சோதனையில் மொத்தம் 22 லட்சத்து 88 ஆயிரத்து 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
    ×