என் மலர்
நீங்கள் தேடியது "Erode city"
- விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை.
- திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது.
தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஐயோ பாவம் தவிர விஜய்க்கு வேறு என்ன சொல்ல முடியும்.
விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இப்போது எங்கள் அண்ணன் (செங்கோட்டையன்) ஒருத்தர் தவெகவில் இணைந்திருக்கிறார்.
அவர் சேர்ந்ததனால், ஏதோ அம்மா உடன் இருப்பதுபோல் நினைத்து ஏதோ செய்துக்கொண்டிருக்கிறார்.
செங்கோட்டையன் அண்ணன் பாவம். அவருக்கு வேறு வழியில்லை.
திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது. 1967-க்குப் பிறகு எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை அவர் தான் முதலமைச்சராக இருந்தார்.அதன்பிறகு, கட்சி உடைந்ததனால் திமுக ஆட்சிக்கு வந்தது.
கடந்த முறைகூட ஏதோ கணக்கு தவறினால் திமுக ஆட்சிக்கு வந்தது. அதனால் இன்று 50 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரிசு, பருப்புல கூட ஊழல் நடக்கிறது.
- எங்கள் அண்ணன் விஜய் வந்தால் எங்களுக்கு அனைத்தும் செய்வார்.
ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட தவெக பெண் தொண்டர் ஒருவரிடம் பிரச்சார கூட்டம் குறித்து செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர்.
அப்போது, தீவிர தவெக தொண்டரான அந்த பெண்," விஜய்க்கு ஓட்டு போடலனா சாப்பாட்டுல விஷம் வெச்சிடுவேன்" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பேசிய அவர்,"ஈரோடு பிரச்சார கூட்டத்திற்கு விஜய்க்காக வந்தேன். நான் இதுவரை இரண்டு முறை ஓட்டு போட்டுருக்கேன். முதல் முறை அதிமுகவிற்கும், 2வது முறை சீமானுக்கும் போட்டேன். இந்த முறை கண்டிப்பாக என் ஓட்டு விஜயக்கு தான்.
ஆட்சிக்கு வருபவர்களால் மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அரிசு, பருப்புல கூட ஊழல் நடக்கிறது. இலவசம் இலவசம்-னு சொல்றாங்க ஆனா பஸ்-ல கூட ஏத்துறது இல்ல. தண்ணீர் வசதி, சாலை வசதி இல்ல.
விஜய் வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கண்டிப்பாக இருக்கும். மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும். எங்கள் அண்ணன் விஜய் வந்தால் எங்களுக்கு அனைத்தும் செய்வார்.
என் வீட்டில் 9 பேர் இருக்காங்க. 9 பேரும் விஜய் அண்ணனுக்கு தான் ஓட்டு போடுவாங்க. அப்படி போடலனா சோத்துல விஷம் தான்.
விஜய் அண்ணா வெற்றி பெற்றால் முருகருக்கு மாலைபோட்டு வரர்தா வேண்டியிருக்கேன" என்றார்.
- தி.மு.க. எனும் தீய சக்திக்கும், த.வெ.க. எனும் தூய சக்திக்கும் தான் போட்டியே என்றார் விஜய்.
- எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன்.
திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.
இதுகுறித்து அவர் மேலும் உரையாற்றியதாவது:-
எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள். நான் கூட யோசிப்பேன். ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார்கள், திமுகவை திட்டுகிறார்கள்? என் யோசித்தது உண்டு.
இப்போ தானே புரிகிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன்.
திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி..
என் நெஞ்சில் குடியிருக்கும் ஈரோடு மக்களே.. தவெக ஒரு தூய சக்தி.
தூய சக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே.
என்னை முடக்கலாம் என்று நினைக்கிறீர்கள். ஒருபோதும் என் மக்களின் இந்த சத்தத்தை முடக்க முடியாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- இளைஞர் மாநாட்டில் இளைஞர்கள் இல்லை என்கிறார் ஆதவ் ஆர்ஜூனா.
- நம் குறிக்கோள் என்ன? நம் லட்சியம் என்ன? வெறும் அதிகாரத்தை மட்டும் அடைவதா?
ஈரோடு பரப்புரையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.
அப்போது அவர் மேலும் பேசியதாவது:-
அண்ணன் செங்கோட்டையன் வந்தபிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது.
கொள்கை தலைவர் சமூக சீர்த்திருத்தவாதி எங்களுடைய வழிகாட்டி தந்தை பெரியாரின் வழியில் அவர் பாதத்தை தொட்டு நமக்கான மிகப்பெரிய பயணத்தை ஈரோட்டில் இருந்து தலைவர் தொடங்குகிறார்.
நம் குறிக்கோள் என்ன? நம் லட்சியம் என்ன? வெறும் அதிகாரத்தை மட்டும் அடைவதா?
இங்கு இருக்கக்கூடிய ஈரோடு மக்கள் எந்த அளவிற்கு, ஒவ்வொரு விவசாயிகள், ஒவ்வொரு நெசவாளர்கள், ஒவ்வொரு தொழிலாளர்கள் நம்முடைய வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய துயரத்தில் கடக்கின்றனர்.
இந்த ஆட்சியின் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் டாஸ்மாக் மட்டுமே நடத்திக்கொண்டிருக்கக்கூடிய நிர்வாகத்தை கொடுத்துள்ளார்கள்.
இதை மாற்ற வேண்டும் என்றால் யாரால் மாற்ற முடியும்? தமிழக வெற்றிக் கழகத்தால், தலைவர் விஜயால் மட்டுமே மாற்ற முடியும்.
இன்று இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை த.வெ.க. தான்.
திமுக நடத்திய இளைஞர்கள் மாநாட்டில் இளைஞர்களே இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை த.வெ.க. நிர்வாகிகள் ஏற்றதை தொடர்ந்து போலீஸ் அனுமதி.
- விஜய் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தின் மீது நின்று பேச உள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துடன் இணைந்து செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுக்கூட்டத்திற்கு இந்து சமய அறநிலைத்துறை, போலீஸ் சார்பில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை த.வெ.க. நிர்வாகிகள் ஏற்றதை தொடர்ந்து போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து கார் மூலம் நேரடியாக பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வருகிறார். காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. விஜய் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தின் மீது நின்று பேச உள்ளார்.
இந்நிலையில், ஈரோடு விஜயமங்கலம் பகுதியில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்," விஜயின் பிரச்சாரத்திற்கு வருபவர்களுக்கு கியூ ஆர் கோட், பாஸ் தேவையில்லை.
விஜயின் பிரச்சாரத்திற்கு யார் வேண்ஐமானாலும் வரலாம் பொதுமக்கள் தாங்களாகவே பங்கேற்கலாம், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
- ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி.
- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட கண்காணிப்பார் அனுமதி வழங்கியுள்ளார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு செய்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை இடத்தை ரூ.50 ஆயிரம் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி என தகவல் வெளியானது.
இந்நிலையில், 18ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல்துறையின் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
அதன்படி, விஜய்யின் பிரச்சார வேனை சுற்றி நான்கு புறமும் வேனுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சுமார் 50 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும்.
நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஒவ்வொரு Box-லும் குடிநீர்வசதி செய்து தரப்படவேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை தாங்கள் மனுவில் குறிப்பிட்டதை விட மிகாமல் இருக்க வேண்டும்.
அவசர நிலைகளில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்திற்கு இடையே வர தனி வழி விடப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- செங்கோட்டையன் தலைமையில் பிரசாரம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு.
- அ.தி.மு.க.விலிருந்து விலகி தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாகன பிரசாரம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சுங்கசாவடி அருகே சரளை பகுதியில் வருகிற 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான முழு ஏற்பாட்டில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் விஜயின் வாகன பிரசாரம் நடைபெற உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தற்போது வரை வாகன பிரசாரத்திற்கு போலீஸ் தரப்பில் அனுமதி கொடுக்கவில்லை. அதைப்பற்றி கவலைப்படாமல் த.வெ.க.வினர் பணிகளை முடக்கி விட்டுள்ளனர்.
இன்று காலை செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகள் பெருந்துறை அடுத்த சரளையில் பிரசாரம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செங்கோட்டையன் முன்னி லையில், பெருந்துறையில் மறைந்த அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி பெரியசாமியார் அண்ணன் அருணா ச்சலம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.விலிருந்து விலகி தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
அவர்களுக்கு செங்கோட்டையன் த.வெ.க துண்டை போட்டு வரவேற்றார். பின்னர் அவர்களுடன் புகை ப்படங்கள் எடுத்துக்கொ ண்டார்.
இதை அடுத்து செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெருந்துறை தொகுதியில் அணி அணியாக த.வெ.க.வில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இணைய உள்ளனர்.மக்கள் சக்தியாக எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கு மக்கள் சக்தியோடு த.வெ.க தலைவர் விஜய் வரும் 18-ம் தேதி பெருந்துறையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அன்று காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் அவரது உரை இருக்கும்.
பெருந்துறையில் த.வெ.க தலைவர் விஜய் பிரசாரத்திற்கான பணி இன்று தொடங்கப்பட்டு விட்டது.த.வெ.க.வில் விருப்ப மனு பெரும் தேதி குறித்து தலைவர் விஜய் அறிவிப்பார். விருப்ப மனு பெறப்பட்ட பிறகு வேட்பாளர் பட்டியலை தலைவர் விஜய் அறிவிப்பார்.த.வெ.க தலைவர் விஜய் பிரசாரம் நடத்த காவல்துறையினர் தரப்பில் கேட்கப்பட்ட 84 கேள்விகள் தற்போது மாறிவிட்டது. அனைவரும் பாராட்டும் வகையில் எங்களது பணி இருக்கும்.
சீனாபுரத்தை சேர்ந்த தி.மு.க.வினர் தற்போது த.வெ.க.வில் இணைய உள்ளனர்.தேசிய ஜனநாயக கூட்டணியில் சசிகலா இணைப்பதற்கான நடை பெறும் பேச்சுவார்த்தை குறித்து அவர்களிடம் தான் கேட்கவேண்டும்.தேர்தல் களம் எவ்வாறு செல்லும் என்பதை எவராலும் கணிக்க முடியாது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
த.வெ.க-அதிமுக கூட்டணி அமையுமா ? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். த.வெ.க.விற்கு போட்டி என்று யாரையும் சொல்லவில்லை.தனிப்பட்ட முறையில் யார் போட்டி என கருத்து சொல்ல முடியாது. த.வெ.க.விற்கு மக்கள் சக்தி உள்ளது.மக்கள் சக்தியால் த.வெ.க தலைவர் விஜய் முதல்-அமைச்சர் ஆவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு செய்த நிலையில் அனுமதி வழங்கினார்.
- விஜய் மக்கள் சந்திப்புக்கான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட கண்காணிப்பார் அனுமதி வழங்கியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு செய்த நிலையில் அனுமதி வழங்கினார்.
விஜய் மக்கள் சந்திப்புக்கான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை இடத்தை ரூ.50 ஆயிரம் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி எனு தகவல் வெளியாகியுள்ளது.
- விடுதிகள், லாட்ஜ்களில் அதிரடி சோதனை.
- பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.
கோவை:
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு முதல் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
மாநகரில் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 1000 போலீசாரும், புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் 1000 போலீசார் என மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகரில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், கடைவீதிகள், மால்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படு த்தப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் போலீசார் வாகனங்களில் அடிக்கடி ரோந்து சென்றும் கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிபவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். பஸ் நிலையங்களில் நிற்கும் பஸ்களில் ஏறியும் சோதனை மேற்கொண்டனர்.
இதுதவிர கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மீனாட்சிபுரம், வாளையார் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனை சாவடிகள் வழியாக வரும் அனைத்து வாகனங்களுமே தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். வாகனங்களில் வருபவர்கள் எதற்காக கோவைக்கு வருகின்றனர். அவர்களின் முகவரி, அடையாள அட்டை உள்ளிட்டவற்றை எல்லாம் சோதித்து பார்த்து விட்டு மாவட்டத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள விடுதிகள், லாட்ஜ்கள், ஓட்டல்களிலும் போலீசார் அடிக்கடி சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது அங்கு உள்ள வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றை பார்த்து ஆய்வு செய்தனர். மேலும் யாராவது சந்தேகத்திற்கிடமாக வந்து தங்கியிருந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இதேபோல் கோவை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்த ப்பட்டுள்ளது. ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தண்டவா ளங்களில் சோதனை மேற்கொண்டனர்.
ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பயணிகளின் உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.
ஈரோடு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல்காம் மாவட்டத்தில் நேற்று தீவிரவாதிகள் ஊடு ருவி சுற்றுலா பயணிகளின் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 27-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து உளவுத் துறை உஷார் படுத்தப்பட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் பலத்த பாது காப்பு போடப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட் டத்தில் நேற்று இரவு முதல் போலீசார் உஷார் படுத்தப்பட்டு இரவு முதல் காலை வரை விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகன சோதனையை தீவிர படுத்தினர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள சோதனைச் சாவடி, லட்சுமி நகர் சோதனை சாவடி, தாளவாடி அடுத்த காரை பள்ளம் சோதனை சாவடி என மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகர பகுதியில் உள்ள கோவில்கள், மசூ திகள், கிறிஸ்தவ தேவால யங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டிருந்தது. இதேபோல் ஈரோடு பஸ் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல் வ.உ.சி காய்கறி மார்க்கெட் பகுதியிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், திண்டல் முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு ரெயில் நிலை யத்தில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு ரெயில்வே நுழைவு பகுதியில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்தனர். மோப்பநாய் பவானி வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு நடைமேடையாக சென்றது.
ரெயில் நிலையத்தில் தேவையின்றி சுற்றி திரிந்த நபர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ரெயில் நிலைய பார்சல் பகுதி, டிக்கெட் கவுண்டர் பகுதி ரெயில்வே பணிமனை பகுதி என அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர்.
இதைப்போல் விடுதிகளையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சமூக வலைதளங்களையும் போலீசார் கண்காணிக்கின்றனர்.
இதேபோல் பஸ் நிலையம், சந்தை, பொதுமக்கள் கூடும் கடைவீதிகள் ஆகிய வற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை
ஜம்முகாஷ்மீர் மாநிலம் பஹல்காலம் எனும் இடத்தில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிர வாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் கண் மூடித்தனமாக சுட்டதில் 26 பயணிகள் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தீவிரவாத தாக்குதலை யடுத்து நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் உளவுத்துறையினர் உஷார்படுத்தப்பட்டு பல்வேறு அமைப்புகள், சந்தேகப்படும் நபர்களை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் டி.ஜி.பி. உத்தரவுப்படி கோவில்கள், மசூதிகள், தேவலாயம், விமானம், ரெயில் நிலை யங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அதன்படி மதுரை மாநகரிலும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். 5 நுழைவு வாயில்களில் பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனும திக்கப்பட்டனர்.
இதேபோல் மதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். நகரின் முக்கிய இடங்களில், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள் என பெரும்பாலான பகுதிகளில் 1,200 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
- பணிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் மற்றும் மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி பகுதியில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வதற்காக ரூ.484 கோடி செலவில் ஊராட்சிக் கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதற்காக பவானி அருகே ஊராட்சிக்கோட்டை வரதநல்லூரில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரித்து ஈரோட்டுக்கு குழாய் மூலமாக கொண்டு வரப்படுகிறது.
சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும், வ.உ.சி. பூங்காவில் 118 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும் என 2 பிரமாண்ட தரைமட்ட தொட்டிகளில் தண்ணீர் விடப்படுகிறது.
அங்கிருந்து 67 மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வீடுகளுக்கு இணைக்கப்பட்ட குழாய்கள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
மேலும் ஈரோடு மாநகரில் சில பகுதிகளில் குடிநீர் இணைப்பு செய்யும் பணி முழுமையாக நிறைவடையவில்லை. எனவே அந்த பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பணிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் மற்றும் மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
முதல்நாளான இன்று அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றது. நாளை 21-ந் தேதி வாசுகி முதல் வீதி, வாசுகி வீதி, நாச்சியப்பா வீதி, தெப்பக்குளம் வீதி ஆகிய பகுதிகளிலும் நடைபெற உள்ளது.
இதேபோல 22-ந் தேதி பாவாடை வீதியில் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறுகிறது. 23-ந் தேதி பவர் ஹவுஸ்ரோடு, 24-ந் தேதி ஈரோடு மூலனூர்ரோடு சோலார் ரவுண்டானா பகுதியில் நடைபெறுகிறது.
இதனையடுத்து 26-ந் தேதி ஈரோடு-கரூர்ரோடு எச்.பி.பெட்ரோல் பங்க் பகுதி, 27-ந் தேதி குறிக்காரன்பாளையம் பஸ் நிறுத்தம், 28-ந் தேதி பூந்துறைரோடு கல்யாண சுந்தரம் வீதி, கல்யாண சுந்தரம் முதல் வீதி, 2-வது வீதி, 29-ந் தேதி கல்யாண சுந்தரம் 3-வது வீதி ஆகிய பகுதிகளில் பணிகள் நடக்கிறது.
இதேபோல் 30-ந் தேதி பூந்துறைரோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகல், டாலர்ஸ் காலனி வீட்டுவசதி வாரியம், பிரப்ரோடு கலைமகள் பள்ளி சாலை, வாமலை வீதி, எஸ்.கே.சி.ரோடு பிரிவு, முத்து வேலப்பா வீதி ஆகிய பகுதி களிலும் நடைபெறுகிறது.
மேலும் 31-ந் தேதி மற்றும் 2-ந் தேதி ரங்கம் பாளையம் ரெயில்வே பாலம் அருகில், 3-ந் தேதி ஈரோடு அரசு மருத்துவமனை பின்புற சாலை, சென்னிமலைரோடு முத்தம்பாளையம், சுவஸ்திக் ரவுண்டானா அருகில் வ.உ.சி.பூங்கா சாலை ஆகிய பகுதிகளிலும், 8-ந் தேதி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சம்பத்நகர் சாலையிலும் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறினர்.
- இன்று காலையில் இருந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
- எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாநகரமே ஸ்தம்பித்தது.
ஈரோடு:
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோட்டி ல் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
குறிப்பாக பன்னீர்செ ல்வம் பார்க் பகுதியில் சாலையின் இருபுறம் 100-க்கும் மேற்பட்ட ஜவுளி க்கடைகள் உள்ளன. இன்று காலையில் இருந்து கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
இதே போல் பேன்சி கடைகள், நகை கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமே காணப்ப ட்டது. இதனால் இந்த பகுதியில் இன்று காலையிலிருந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் வழியாக மணிக்கூ ண்டு மூலம் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் சென்று வருகிறது. இந்த பகுதியில் சாலையின் இருப்புறம் ஜவுளி கடைகள் உள்ளதால் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதனால் இந்த பகுதியில் வாகனங்கள் கடந்து செல்ல நீண்ட நேரம் ஆனது. இதேபோல் ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, கே.வி.என்.ரோடு, பெருந்துறை சாலையிலும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் இருந்து கலெக்டர் அலுவலகத்தை கடக்க ஏறக்குறைய 30 நிமிடங்கள் ஆனது. எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாநகரமே ஸ்தம்பித்தது.
ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- இதன்படி மாநகரில் மக்கள் கூடும் 6 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஈரோடு:
தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் தற்போதே புத்தாடைகள்-நகைகள் வாங்க கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஈரோடு மாநகரில் பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை சாலையின் இருப்புறமும் ஏராளமான ஜவுளி கடை கள் உள்ளன. இதேபோல் ஆர்.கே.வி. ரோடு பகுதி களில் ஏராளமான நகை கடைகள் உள்ளன. ஈஸ்வ ரன் கோவில் வீதிகளிலும் ஜவுளி கடைகள் உள்ளன.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கூட்டத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து நகை, பணத்தை திருடும் கும்பல் கைவரிசை காட்ட கூடும் என்பதால் மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி மாநகரில் மக்கள் கூடும் 6 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி மணிக்கூண்டு பகுதி, கிருஷ்ணா தியேட்டர் பகுதி, பன்னீர்செல்வம் பார்க், காளை மாடு சிலை, முனிசிபால் காலனி பகுதி, பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த கண்காணிப்பு கோபுரங்களில் சி.சி.டி.வி. கேமிராவும் பொருத்த ப்பட்டு கண்காணி க்கப்படுகிறது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பணியாற்று வார்கள். கூட்டங்களை கண்காணி த்தல், பொதுமக்கள் நடவடிக்கையை துல்லி யமாக இந்த கண்காணிப்பு கேமிராக்கள் பதிவு செய்யும்.
இதேப்போல் கிருஷ்ணா தியேட்டர் பகுதி, பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் பெரிய அளவில் எல்.இ.டி. டிஜிட்டல் திரை அமைத்து விழிப்புணர்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.






