search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "has started in"

    • குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
    • பணிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் மற்றும் மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வதற்காக ரூ.484 கோடி செலவில் ஊராட்சிக் கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

    இதற்காக பவானி அருகே ஊராட்சிக்கோட்டை வரதநல்லூரில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரித்து ஈரோட்டுக்கு குழாய் மூலமாக கொண்டு வரப்படுகிறது.

    சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும், வ.உ.சி. பூங்காவில் 118 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும் என 2 பிரமாண்ட தரைமட்ட தொட்டிகளில் தண்ணீர் விடப்படுகிறது.

    அங்கிருந்து 67 மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வீடுகளுக்கு இணைக்கப்பட்ட குழாய்கள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

    மேலும் ஈரோடு மாநகரில் சில பகுதிகளில் குடிநீர் இணைப்பு செய்யும் பணி முழுமையாக நிறைவடையவில்லை. எனவே அந்த பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பணிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் மற்றும் மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    முதல்நாளான இன்று அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றது. நாளை 21-ந் தேதி வாசுகி முதல் வீதி, வாசுகி வீதி, நாச்சியப்பா வீதி, தெப்பக்குளம் வீதி ஆகிய பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

    இதேபோல 22-ந் தேதி பாவாடை வீதியில் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறுகிறது. 23-ந் தேதி பவர் ஹவுஸ்ரோடு, 24-ந் தேதி ஈரோடு மூலனூர்ரோடு சோலார் ரவுண்டானா பகுதியில் நடைபெறுகிறது.

    இதனையடுத்து 26-ந் தேதி ஈரோடு-கரூர்ரோடு எச்.பி.பெட்ரோல் பங்க் பகுதி, 27-ந் தேதி குறிக்காரன்பாளையம் பஸ் நிறுத்தம், 28-ந் தேதி பூந்துறைரோடு கல்யாண சுந்தரம் வீதி, கல்யாண சுந்தரம் முதல் வீதி, 2-வது வீதி, 29-ந் தேதி கல்யாண சுந்தரம் 3-வது வீதி ஆகிய பகுதிகளில் பணிகள் நடக்கிறது.

    இதேபோல் 30-ந் தேதி பூந்துறைரோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகல், டாலர்ஸ் காலனி வீட்டுவசதி வாரியம், பிரப்ரோடு கலைமகள் பள்ளி சாலை, வாமலை வீதி, எஸ்.கே.சி.ரோடு பிரிவு, முத்து வேலப்பா வீதி ஆகிய பகுதி களிலும் நடைபெறுகிறது.

    மேலும் 31-ந் தேதி மற்றும் 2-ந் தேதி ரங்கம் பாளையம் ரெயில்வே பாலம் அருகில், 3-ந் தேதி ஈரோடு அரசு மருத்துவமனை பின்புற சாலை, சென்னிமலைரோடு முத்தம்பாளையம், சுவஸ்திக் ரவுண்டானா அருகில் வ.உ.சி.பூங்கா சாலை ஆகிய பகுதிகளிலும், 8-ந் தேதி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சம்பத்நகர் சாலையிலும் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறினர்.

    • நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று தொடங்கியது.
    • இந்த தேர்வு முதல் முறையாக கணினி வழியில் நடத்தப்பட்டது.

    ஈரோடு, அக். 14-

    தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு சேர்வதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இதன்படி நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வானது ஈரோடு அடுத்த கருந்தேவன்பாளையம் அல்-அமீன் பொறியியல் கல்லூரி, துடுப்பதி செங்குந்தர் பொறியியல் கல்லூரி, டி.என்.பாளையம் ஜே.கே.கே.பொறியியல் கல்லூரி, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி, கோபி பி.கே.ஆர்., கலை கல்லூரி, தாசம்பாளையம் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, திண்டல் வி.இ.டி. கலை கல்லூரி என 8 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடங்கியது.

    இந்த தேர்வினை மாவட்டம் முழுவதும் 12,660 பேர் எழுத உள்ளனர். ஒவ்வொரு மையங்களிலும் கண்காணிப்பாளர்கள், கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் உதவியாளர் (ஸ்கிரைப்) மூலம் தேர்வு எழுதினர். காலை முதலே தேர்வர்கள் அந்தந்த தேர்வு மையத்திற்கு ஆர்வத்துடன் வந்தனர்.

    இந்த தேர்வு முதல் முறையாக கணினி வழியில் நடத்தப்பட்டது. இதற்காக என்ஜினீயர் கல்லூரியில் உள்ள கணினி வகுப்புகள் தேர்வு மையங்களாக மாற்றப்பட்டிருந்தன. காலை, பிற்பகல் என 2 பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்படுகிறது.

    இன்று தொடங்கி வரும் 20-ந் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. முறைகேடுயின்றி தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. 

    ×