search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking water pipes"

    • பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன் தலைமையில் பணியாளர்கள் கீழநவ்வலடிவிளை, கீழசண்முகபுரம் ஆகிய பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • தெரு பைப்புகளில் இருந்து அதிகப்படியான குடிநீரை அபகரிக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் டியூப்புகளை பறிமுதல் செய்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தவிர ஒவ்வொரு தெருக்களிலும் அந்தந்த பகுதி மக்களின் வசதிக்காக பொது குடிநீர் குழாயும் வைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் தனியாக குடிநீர் இணைப்பு பெறாத மக்கள் இந்த தெரு பைப்புகள் மூலம் குடிநீர் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இப்படியான தெரு பைப்புகளில் நேரடியாக நீளமான டியூப்புகளை பொருத்தி சிலர் தங்களின் வீடுகளுக்கும், வீட்டின் தோட்டங்களுக்கும் அதிகப்படியான குடிநீரை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் வந்தன. இப்படி முறைகேடாக குடிநீர் எடுப்பது தவறான செயல் என்றும், இதனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆறுமுகநேரி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனபோதிலும் தெரு பைப்புகளில் இருந்து டியூப்புகளின் மூலம் அதிகப்படியான குடிநீரை அபகரிக்கும் செயல் தொடர்ந்து வந்தது.

    இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் நேற்று அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன்படி பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் கார்த்திக் மற்றும் பணி யாளர்கள் பெரியான்விளை, செல்வராஜபுரம், கீழநவ்வலடிவிளை, கீழசண்முகபுரம் ஆகிய பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அப்போது தெரு பைப்புகளில் இருந்து அதிகப்படியான குடிநீரை அபகரிக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் டியூப்புகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதே போல் சோதனை நடவடிக்கை செய்யப்படும் என்றும், விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • குருவிநத்தம் கிராமத்தில் ரூ.33 லட்சத்து 94 ஆயிரம் செலவிலும், சோரியங்குப்பம் கிராமத்தில் தேரடி வீதி லட்சுமி நகரில் ரூ.11 லட்சத்து 44 ஆயிரம் செலவில் குடிநீர் குழாய் புதைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.45 லட்சம் ஆகும்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், ஜல ஜீவன் திட்டத்தின் கீழ் பாகூர் தொகுதிக்குட்பட்ட குருவிநத்தம் கிராமத்தில் ரூ.33 லட்சத்து 94 ஆயிரம் செலவிலும், சோரியங்குப்பம் கிராமத்தில் தேரடி வீதி லட்சுமி நகரில் ரூ.11 லட்சத்து 44 ஆயிரம் செலவில் குடிநீர் குழாய் புதைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான பூமி பூஜை விழா நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.45 லட்சம் ஆகும்.

    இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலை பொறியாளர் பிரதீப், தி.மு.க., பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
    • பணிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் மற்றும் மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வதற்காக ரூ.484 கோடி செலவில் ஊராட்சிக் கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

    இதற்காக பவானி அருகே ஊராட்சிக்கோட்டை வரதநல்லூரில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரித்து ஈரோட்டுக்கு குழாய் மூலமாக கொண்டு வரப்படுகிறது.

    சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும், வ.உ.சி. பூங்காவில் 118 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும் என 2 பிரமாண்ட தரைமட்ட தொட்டிகளில் தண்ணீர் விடப்படுகிறது.

    அங்கிருந்து 67 மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வீடுகளுக்கு இணைக்கப்பட்ட குழாய்கள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

    மேலும் ஈரோடு மாநகரில் சில பகுதிகளில் குடிநீர் இணைப்பு செய்யும் பணி முழுமையாக நிறைவடையவில்லை. எனவே அந்த பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பணிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றம் மற்றும் மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    முதல்நாளான இன்று அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றது. நாளை 21-ந் தேதி வாசுகி முதல் வீதி, வாசுகி வீதி, நாச்சியப்பா வீதி, தெப்பக்குளம் வீதி ஆகிய பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

    இதேபோல 22-ந் தேதி பாவாடை வீதியில் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறுகிறது. 23-ந் தேதி பவர் ஹவுஸ்ரோடு, 24-ந் தேதி ஈரோடு மூலனூர்ரோடு சோலார் ரவுண்டானா பகுதியில் நடைபெறுகிறது.

    இதனையடுத்து 26-ந் தேதி ஈரோடு-கரூர்ரோடு எச்.பி.பெட்ரோல் பங்க் பகுதி, 27-ந் தேதி குறிக்காரன்பாளையம் பஸ் நிறுத்தம், 28-ந் தேதி பூந்துறைரோடு கல்யாண சுந்தரம் வீதி, கல்யாண சுந்தரம் முதல் வீதி, 2-வது வீதி, 29-ந் தேதி கல்யாண சுந்தரம் 3-வது வீதி ஆகிய பகுதிகளில் பணிகள் நடக்கிறது.

    இதேபோல் 30-ந் தேதி பூந்துறைரோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகல், டாலர்ஸ் காலனி வீட்டுவசதி வாரியம், பிரப்ரோடு கலைமகள் பள்ளி சாலை, வாமலை வீதி, எஸ்.கே.சி.ரோடு பிரிவு, முத்து வேலப்பா வீதி ஆகிய பகுதி களிலும் நடைபெறுகிறது.

    மேலும் 31-ந் தேதி மற்றும் 2-ந் தேதி ரங்கம் பாளையம் ரெயில்வே பாலம் அருகில், 3-ந் தேதி ஈரோடு அரசு மருத்துவமனை பின்புற சாலை, சென்னிமலைரோடு முத்தம்பாளையம், சுவஸ்திக் ரவுண்டானா அருகில் வ.உ.சி.பூங்கா சாலை ஆகிய பகுதிகளிலும், 8-ந் தேதி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சம்பத்நகர் சாலையிலும் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறினர்.

    ×