search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surveillance"

    • புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.
    • அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ளது.

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலுக்காக மொத்தம் 967 வாக்குச்சாவடிகளை தேர்தல் துறை இறுதி செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி இருந்தது.

    இந்த 967 வாக்குச்சாவடிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்று இறுதி செய்துள்ளது. இதன்படி புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் புதுவை 739, மாகி 31,ஏனாம் 22, காரைக்காலில் 163 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.

    சில வாக்குச்சாவடிகளை இணைத்து ஒரே இடத்தில் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி 967 வாக்குச் சாவடிகளும் 618 இடங்களில் அமைந்துள்ளன.

    நகர பகுதியை பொருத்தவரை 534 வாக்குச்சாவடிகள் 344 இடங்களில் அமைந்துள்ளன. கிராமப்புறங்களை பொறுத்தவரை 427 வாக்குச்சாவடிகள் 274 இடங் களில் அமைந்துள்ளன. புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகளில் 232 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை.

    அதில் புதுவையில் 180ம், காரைக்காலில் 35-ம் உள்ளன. மாகியில்7, ஏனாமில் 10 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.

    கடந்த தேர்தல்களில் 90 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பதிவு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக தேர்தல் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இதன்படி புதுச்சேரி 3, ஏனாமில் 7 வாக்குச்சாவடிகள் ஆபத்தான வாக்குச்சாவடிகளாக கண்காணிக்கப்பட்ட உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    • 14 சோதனைச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
    • பதட்டமான பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டம் கேரள மாநிலத்தின் எல்லையில் உள்ளது. இந்த 2 எல்லைகளிலும் மொத்தம் 14 சோதனைச்சாவடிகள் உள்ளன. நடுப்புணி, வடக்கு காடு, ஜமீன் காளியாபுரம், கோபாலபுரம், வேலந்தாவளம், வீரப்ப கவுண்டனூர், வாளையார், செம்மனாம்பதி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த 14 சோதனைச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கடத்த வாய்ப்பு உள்ளதால் அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    இதுதொடர்பாக தமிழக மற்றும் கேரள மாநில அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, திருச்சூர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் தேஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    தமிழகம் - கேரள மாநில எல்லையாக உள்ள கோவை மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகள் வழியாக வரும் வாகனங்களை தணிக்கை மேற்கொண்டு பணம், மதுபானங்கள், போதைப்பொருட்கள், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

    கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்வது.

    சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். பதட்டமான சோதனைச்சாவடிகளை கண்டறிய வேண்டும். பதட்டமான சோதனைச்சாவடிகளை கண்டறிய வேண்டும். பதட்டமான பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும்.

    மதுபானங்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும், வெளிநாட்டு மதுவகைகள் இரு மாநிலங்களுக்கு இடையே நடமாட்டத்தை கண்காணிக்க வாகன சோதனை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும்.

    மேற்கண்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • மாவட்ட எல்லைகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-7088, 044-27427412, 044-27427414 ஆகிய தொலை பேசி எண்களில் புகார்கள் பற்றி தெரிவிக்கலாம்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து உள்ளன.

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 123 தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1417 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 178 வாக்குச் சாடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 12 பறக்கும் படை குழுக்களும், 12 கண்காணிப்பு குழுக்களும், 4 காணொலி கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட எல்லைகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் விதிமுறைகளால் காஞ்சிபுரத்திற்கு பட்டு புடவைகள் வாங்குவதற்கு அதிக அளவில் பணம் எடுத்து வருபவர்கள் சிரமம் அடைந்து உள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 21 பறக்கும் படைகள், 21 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 14 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத் தப்பட்டு உள்ளன. 24 மணிநேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-7088, 044-27427412, 044-27427414 ஆகிய தொலை பேசி எண்களில் புகார்கள் பற்றி தெரிவிக்கலாம்.

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 90 பறக்கும் படையினர் மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழுக்கள், 20 காணொலி கண்காணிப்பு குழுக்கள், 10 காணொலி பார்வையாளர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க 10 உதவி செலவின குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.

    • பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே கணியக்குளம் பஞ்சாயத்துக் குட்பட்ட உழவன் கோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வருகிறது.

    அந்த பகுதியில் சிறுத்தை உலா வந்த காட்சிகள் அங்குள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இந்தநிலையில் அந்த பகுதியில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமிரா அமைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், குழந்தைகளை தனியாக வெளியே விடக்கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் 2 கன்றுகுட்டிகள் இறந்து கிடந்தது. மேலும் ஆடுகளும் உயிரிழந்திருந்தது.

    எனவே சிறுத்தை தான் அடித்து கொன்று இருக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கருதுகிறார்கள். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்ஜுகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
    • விமான நிலையம் மற்றும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் ஆகியவை மத்திய போலீஸ் படையின் முழு கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் சென்னை வருகிறார். இதையொட்டி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது.

    சந்தேகத்துக்கு இடமாக யாராவது சுற்றித்திரிகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்ஜுகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது லாட்ஜ்களில் தங்கி உள்ள வர்கள் எதற்காக தங்கி இருக்கிறார்கள்? அவர்கள் கொடுத்துள்ள முகவரி உண்மையானது தானா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    பிரதமர் மோடி இன்று பிற்பகலில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்திற்கு செல்கிறார். இதைத் தொடர்ந்து அவர் காரில் பயணிக்கும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழி நெடுக போலீசார் நேற்று இரவில் இருந்தே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்களில் இன்றும் கண்காணித்து வருகிறார்கள். சென்னை விமான நிலையம் மற்றும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் ஆகியவை மத்திய போலீஸ் படையின் முழு கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இதே போன்று கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடலோரங்களிலும் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் வருகையொட்டி நேற்று பிற்பகலில் விமான நிலையத்தில் இருந்து நந்தனம் வரையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று சென்னையில் இருந்து கல்பாக்கம் வரையில் 3 ராணுவ ஹெலிகாப்டர்களும் ஒத்திகையில் ஈடுபட்டு கண்காணித்தன.

    இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி இன்று சென்னை பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு தெலுங்கானாவுக்கு புறப்பட்டு செல்லும் வரையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பெயரில் அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளும் சென்னை மாநகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
    • பஸ்-ரெயில் மற்றும் விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்தை முன்னிட்டு தமிழகத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த வகையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் வாளையாறு, ஆனைக்கட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகளில் தற்போது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அந்த வழியாக செல்லும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவற்றின் டிரைவர்களிடம் உரிய போக்குவரத்து ஆவணங்களை கேட்டு வாங்கி சோதனை செய்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

    கோவையில் பஸ்-ரெயில் மற்றும் விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் பயணிகள் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் அவர்களது உடைமைகளையும் போலீசார் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர்.

    இதுதவிர இரவுநேரங்களில் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக ரோந்துப்பணிகளில் ஈடுபடுகின்றனர். இதுதவிர கோவையில் உள்ள விடுதிகளில் சந்தேகப்படும்படி யாராவது தங்கி உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திரிபவர்களை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்களிடம் வீட்டு முகவரி மற்றும் செல்போன் எண்ணை சேகரித்து அனுப்பி வருகின்றனர். கோவை ஓட்டல்களில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு செல்வதற்காக பிரத்யேக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தற்போது கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் விடிய-விடிய வாகன தணிக்கை சோதனைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி தமிழகம்-கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள கக்கநல்லா சோதனைச்சாவடியில் கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அங்கு கூடலூர் போலீஸ் டி.எஸ்.பி வசந்தகுமார் தலைமையில் போலீசார் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

    • காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி, ஜீரண மண்டல பாதிப்புகள், ரத்தப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
    • நீலகிரி மாவட்டம் சுமாா் 60 சதவீதம் வனப் பகுதிகளை கொண்ட மாவட்டம் ஆகும்.

    ஊட்டி:

    கர்நாடக மாநிலத்தில் கியாசனூர் வனநோய் என்ற குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 53 பேர் பாதிக்கப்பட்டு 2 பேர் பலியானார்கள். குறிப்பாக அங்குள்ள உத்தரகர்நாடகம் ஷிவமொகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது.

    தொற்றுக்குள்ளான குரங்குகள், கால்நடைகள் வாயிலாக இந்த வகை வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி, ஜீரண மண்டல பாதிப்புகள், ரத்தப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

    இந்த வகை காய்ச்சலை பி.சி.ஆர். மற்றும் ரத்த பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யலாம். இந்த நோய் ஓரிரு வாரங்களில் குணமாகி விடும். சிலருக்கு தீவிர எதிர்விளைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள தை அடுத்து தமிழக எல்லை யோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்ப டுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஊட்டி அரசு ஆஸ்பத்திரி டீன் கீதா லட்சுமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் சுமாா் 60 சதவீதம் வனப் பகுதிகளை கொண்ட மாவட்டம் ஆகும். கா்நாடகம், கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால், அந்த மாநிலங்களில் ஏற்படும் டெங்கு, குரங்கு காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நீலகிரி மாவட்டத்துக்குள் பரவாமல் தடுக்க மாவட்ட நிா்வாகமும், சுகாதார துறையும் நடவடி க்கை எடுத்து வருகிறது.

    இதில் நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை யாருக்கும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் மாநகரில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மத்திய போலீஸ் படையின் ஒரு பிரிவான விரைவு அதிரடிப்படை போலீசார் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். திருப்பூர் மாநகரில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.

    இந்நிலையில் மத்திய போலீஸ் படையின் ஒரு பிரிவான விரைவு அதிரடிப்படை போலீசார் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர். இந்த படைக்கு 1 துணை கமிஷனர், 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 33 பேர் வருகை தந்துள்ளனர்.

    இந்த விரைவு அதிரடி படையினர் திருப்பூரில் பதட்டமான பகுதிகளான காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு மற்றும் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், குமரன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கிகளுடன் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.
    • கூட்ட நெரிசலில் பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அதனை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மறுநாள் 16-ந் தேதி மாட்டுப் பொங்கலும் அதற்கு மறுநாள் (17-ந் தேதி) காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    காணும் பொங்கல் அன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பொழுதை போக்குவார்கள். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதும்.

    இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாட மக்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். மெரினாவில்

    சென்னையில் மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

    இதன் படி வருகிற 17-ந் தேதி அன்று மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவை யான பாதுகாப்பு ஏற்பாடு களை போலீசார் செய்து வருகிறார்கள். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.

    காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக கடற்கரை யோரங்களில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு உள்ளன. இதையும் தாண்டி மக்கள் கடலில் இறங்கி விடக்கூடாது என்பதற்காக போலீஸ் குதிரைப்படை வீரர்களை கொண்டும் கண்காணிக்கப்பட உள்ளது.

    மெரினாவில் கூட்ட நெரிசலின் போது குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக மெரினாவுக்கு பெற்றோருடன் வருகை தரும் குழந்தைகளின் கைகளில் பாதுகாப்பு வளையம் ஒன்றை கட்டிவிட போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த வளையத்தில் போலீஸ் உதவி மைய செல்போன் எண்களும், பெற்றோர்களின் செல்போன் எண்களும் இடம் பெற்றிருக்கும். இதன் மூலமாக மாயமாகும் குழந்தைகளை உடனுக்குடன் கண்டு பிடிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கூட்ட நெரிசலில் பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    டிரோன்கள் மூலமாகவும் வானில் வட்டமடித்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மெரினாவில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்தும் போலீசார் பைனாகுலர் மூலமாக கூட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • போலீசார் அங்கு ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • 3 கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டும் சுற்றுலா பயணிகள் தங்களின் கொண்டாட்டத்திற்காக குலு மணாலியில் குவிந்தனர்.

    இதனால், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, சுமார் 3 கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றது.

    இதேபோல், தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்திற்கு வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனால், லஹாவுல் மற்றும் ஸ்பிட்டி போலீசார் அங்கு ட்ரோன் மூலம் தொடர்ந்த கண்காணித்து வருகின்றனர். 

    • சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்.
    • 2024-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும், மகிழ்சியாகவும் கொண்டாட வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.

    சோழிங்கநல்லூர்:

    மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு உள்ள சென்னை மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள்.

    குறிப்பாக மெரினா கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்கள், ரிசாட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும்.

    இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கிழக்கு கடற்ககரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரெஸ்டாரண்டுகள் பண்ணை வீடுகள் புத்தாண்டு கொண்டா ட்டத்துக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

    இதையொட்டி போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர். புத்தாண்டையொட்டி வருகிற 31-ந்தேதி இரவு சென்னை நகரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், நீலாங்கரை, அக்கரை, உத்தண்டி கோவளம், மாமல்லபுரம், உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன் னேற்பா டுகளை மேற்கொள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்.

    அதன்படி கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியை தீவிர படுத்தவும் கடற்கரை பகுதிகளில் தடுப்பு வேலிகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை முழுவதும் 500 இடங்களில் வாகன சோதனைகளிலும் ஈடுபடுகிறார்கள். மெரினா காமராசர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் இளைஞர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதற்காக 25 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் மணலிலும் கடலிலும் செல்லும் வகையிலான வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. மெரினா, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட கடல் பகுதிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன. டிரோன் மூலம் கண்காணித்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். 2024-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும், மகிழ்சியாகவும் கொண்டாட வேண்டும் என்றும் போலீ சார் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.

    மாமல்லபுரம் பகுதிகளில் இருக்கும் கடற்கரை ரிசார்ட், ஓட்டல்கள், விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடு ளுக்கான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரணீத் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது டி.ஜே. என்ற பெயரில் ஆபாச நடனம் நடத்தக்கூடாது, விருந்தினர்களை கடலில் குளிக்க அனுமதிக்க கூடாது, தனியார் பாதுகாப்பு பவுன்சர்கள் என்ற பெயரில் அடாவடி நபர்களை நியமிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அப்போது மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உடன் இருந்தார்.

    • மலைரெயில் பாதைகளில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
    • காட்டு யானை நடமாட்டம் குறித்து ரயில்வே ஊழியர்களும் கண்காணித்து பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக பிறந்த குட்டியுடன் 10 யானைகள் முகாமிட்டு உள்ளன. அவை மலைப்பாதையில் உள்ள கிராமங்களான பர்லியாறு, கே.என்.ஆர், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன. அவற்றை வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த யானைகள் கூட்டம் காட்டேரி பூங்கா அருகே உள்ள ரண்ணிமேடு ரயில் நிலையம் அருகில் திடீரென முகாமிட்டன. பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றன. பின்னர் குடியிருப்பு பகுதிக்கு இரவு நேரத்தில் சென்ற காட்டு யானைகள் அங்கு உள்ள விளைநிலங்களில் பயிரிட்டு உள்ள வாழை மரங்களை மிதித்து சேதப்படுத்தின.

    இந்நிலையில் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானை கூட்டம் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுத்து நிறுத்தி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் இரவில் தனியாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறியதாவது:-

    தொடர்மழை காரணமாக குன்னூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது. எனவே சமவெளி பகுதிகளில் இருந்து வரும் காட்டு யானைகள், மலைப்பாதைகளில் முகாமிட்டு வருகிறது இதனை விரட்டி அடிக்கும் பணியில் வனஊழியர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் மலைரெயில் பாதைகளில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    குன்னூரில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட மேட்டுப்பாளையம் மலை ரெயில், ரன்னிமேடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில் பாதையில் யானைகள் நின்றதால் அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் யானைகளை காட்டுக்குள் விரட்டினோம். இதுதொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. காட்டு யானைகளை சமவெளி பகுதிக்கு விரட்டும் பணி நடந்து வருகிறது.

    மேலும் காட்டு யானை நடமாட்டம் குறித்து ரயில்வே ஊழியர்களும் கண்காணித்து பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும். வாகன ஓட்டிகளும் மலைப்பாதையில் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் யானைகள் நடமாடும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×