search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drone camera"

    • கடந்த 2 மாதங்களுக்கு முன் எக்கியார் குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.
    • விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ சசாங்சாய் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார் .

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் கடற்கரையோரம் விற்ற விஷ சாராயத்தை குடித்துவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன் எக்கியார் குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். இதேபோல் 50-க்கும் மேற்பட்டோர் விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபர்களில் ஒருவர் கடந்த வாரம் இறந்து விட்டார். இந்நிலையில் எக்கியார் குப்பம் பகுதி கடற்கரை ஓரம் இருப்பதால் ஒரு சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தொடர்ந்து ரகசிய தகவல்கள் கிடைத்து வருகின்றது.

    இதனால் அப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட எந்தவித போதைப் பொருட்களை விற்பனை செய்வதையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ சசாங்சாய் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார் . இதனை தொடர்ந்து கோட்டகுப்பம் டிஎஸ்பி சுனில் மேற்பார்வையில் மரக்காணம் காவல்து றை ஆய்வாளர் பாபு தலைமையில் மரக்கா ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, திவாகர் மற்றும் போலீசார் எக்கியார் குப்பம் மீனவர் பகுதிக்கு அந்த பகுதி பொதும க்களிடம் இந்தப் பகுதியில் யாராவது போதை பொருட்கள் விற்பனை செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்ய முடியும் என கோரி விழிப்புணர்வு அளித்தனர். மேலும் இப்பகுதியில் ஆள் நடமா ட்டம் இல்லாத இடத்தில் கள்ளச்சாரா யம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை ரகசியமாக கண்காணித்து கைது செய்யும் வகையில் டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பிரத்தியேக ட்ரோன் கேமரா மூலம் தினமும் இந்த பகுதிகளை கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    • ரவுடிகள் நடமாட்டம், ரவுடிகள் தஞ்சம் அடைவது, சூதாட்டம் நடக்கும் இடம், கஞ்சா பயன்படுத்தும் நபர்களை கண்டறிய முடியும்.

    புதுச்சேரி:

    புதுவை-தமிழக எல்லை பகுதி அடர்ந்த பசுமையான காடுகளையும் முந்திரி தோப்புகளையும் கொண்ட பகுதியாகும்.

    புதுவையில் குற்ற சம்பவங்களை செய்துவிட்டு இங்குள்ள பகுதிகளில் குற்றவாளிகள் தஞ்சம் அடைந்து வருவது வழக்கமாகியுள்ளது. கோட்டகுப்பம் ஆரோவில் பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற அடர்ந்த காட்டுப்பகுதிகளில் கஞ்சா புழக்கம் இருந்து வருகிறது.

    கோட்டகுப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருட்டு வழிபறி சம்பவங்களில் ஈடுபட்டு இது போன்ற பகுதிகளில் குற்றவாளிகள் தலைமறைவாகி விடுகின்றனர்.

    மேலும் போலீசார் கண்ணில் படாமல் இருக்க காட்டுப்பகுதிகளில் மது அருந்தும் ரவுடி கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல் காரணமாக கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

    அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் இவர்களை பிடிப்பது போலீசாருக்கு சவாலாக இருந்து வரும் நிலையில் பிரத்தியேக ட்ரோன் கேமரா மூலம் தினமும் இந்த பகுதிகளை கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி சின்ன கோட்டகுப்பம் பிரின்ஸ்பர்க் ரோட்டில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் போலீசார் ட்ரோன்களை இயக்கி பார்த்தபோது அங்கு ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தது.

    ட்ரோன் கேமராவில் இருந்து செல்போனுக்கு நேரடியாக வந்த காட்சிகளை வைத்து அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மது அருந்தியவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    ட்ரோன் கேமரா மூலம் தேவைப்படும் பொழுது அடர்ந்த காட்டு பகுதியில் எப்போது வேண்டுமானாலும் போலீசார் கண்காணிக்கலாம். இதன் மூலம் ரவுடிகள் நடமாட்டம், ரவுடிகள் தஞ்சம் அடைவது, சூதாட்டம் நடக்கும் இடம், கஞ்சா பயன்படுத்தும் நபர்களை கண்டறிய முடியும். மேலும் முன்கூட்டியே குற்றவாளிகளை கைது செய்யவும் இது உதவியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    • சிங்கவரம் கிராமத்தில் மலை மீது பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது.
    • கோவிலில் கொள்ளை அடிக்க சதி திட்டம் திட்டுகிறார்களா என்ற கோணத்தில் அறநிலைத்துறையினர் இது குறித்து செஞ்சி போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    செஞ்சியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் சிங்கவரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் மலை மீது பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. இதுமிகவும் பழமை வாய்ந்ததாகும். கோவிலில் கற்பாறையால் ஆன மூலவர் மட்டுமல்லாமல் பஞ்சலோக சிலைகள் வைத்து வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 7.25 மணியளவில் கோவில் உள்ள மலை மீது டிரோன் கேமரா ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த டிரோன் சுமார்10 நிமிடங்கள் பறந்து அப்பகுதியை படம் எடுத்துக் கொண்டிருந்தது. பின்னர் மலையின் பின்பகுதியில் டிரோன் கேமரா மறைந்து விட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சமூக விரோதிகள் யாராவது கோவிலில் கொள்ளை அடிக்க சதி திட்டம் திட்டுகிறார்களா என்ற கோணத்தில் அறநிலைத்துறையினர் இது குறித்து செஞ்சி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். செஞ்சி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இதேபோல் சிங்கவரத்தை அடுத்த மேளச்சேரி காப்புக்காட்டில் உள்ள பச்சையம்மன் கோவிலை சுற்றியும் டிரோன் பறந்ததாக கூறப்படுகிறது.

    • 30 லிட்டர் சாராயம், பைக் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    ஆரணி உட்கோட்ட துணை போலீஸ் சுப்பிரண்டு வி.ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து டிரோன் கேமரா உதவியுடன் பள்ளகொல்லை கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் சோதனையில் ஈடுப்படனர்.

    மூட்டையுடன் பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் சாராயம் கடத்தி வந்த காரமலை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 25) என்பது தெரிந்தது. பின்னர் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 30 லிட்டர் சாராயம், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இதுசம்பந்தமாக கண்ணமங்கலம் போலீசார், சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • காட்டுப்பகுதியை ட்ரோன் கேமரா மூலம் முதலில் சுற்றி வளைத்தனர்.
    • காவல் துறையினர் சுமார் 8 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வகையிலும் பிரத்யேகமாக அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய ட்ரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் மாநகரின் முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளை தேர்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த கேமரா மூலம் கண்காணிக்கப்படும் பொழுது சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் இந்த கேமராவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் கண்டு அந்த குற்றவாளி எங்கு இருக்கிறார் என்பதை துல்லியமாக பதிவு செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கும் அதி நவீன தொழில்நுட்பம் உள்ளது.

    திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட மாஸ்கோ நகர், பவானி நகர், பாளையக்காடு, எம். எஸ். நகர், உள்ளிட்ட பகுதியில் கஞ்சா , போதை ஊசி மற்றும் போதை மாத்திரை புழக்கத்தில் இருப்பதால் மாநகர போலீசார் கடந்த சில மாதங்களாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இருப்பினும் திருப்பூர் மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் இன்னும் இந்த தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருவதை ரகசிய தகவல் மூலம் அறிந்த காவல் துறையினர் திருப்பூர் வடக்கு உதவி ஆணையர் அனில்குமார், வடக்கு காவல் நிலையம் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார் மற்றும் ராஜசேகர் மற்றும் போலீசார் குழுவாக சென்று ஊத்துக்குளி சாலை பவானி நகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியை ட்ரோன் கேமரா மூலம் முதலில் சுற்றி வளைத்தனர்.

    குறிப்பாக இந்த டிரோன் மற்ற டிரோன்களை போல் இல்லாமல் டார்ச் லைட் இருந்ததும் அதை கண்ட இளைஞர்கள் தலைதெறிக்க ஓடினர். ஒருசிலர் வந்த இருசக்கர வாகனத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் காட்டுக்குள் தப்பி சென்றனர். ஆனாலும் காவல் துறையினர் விரட்டி சென்று சுமார் 8 பேரையும் இரண்டு இருசக்கர வாகனங்களை பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரோன் கேமிரா ஒன்று தோட்டத்து பகுதிகளுக்கு மேல் வானத்தில் பறந்து கொண்டிருந்தது.
    • இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    தாளவாடி அருகே உள்ள சூசைபுரம், பீம்ராஜ்நகர் கிராமங்களில் மதியம் 12 மணி அளவில் பயங்கர சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது டிரோன் கேமிரா ஒன்று தோட்டத்து பகுதிகளுக்கு மேல் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே விவசாயிகள் அந்த டிரோன் கேமிரா வந்த திசையை நோக்கி சென்று பார்த்தனர்.

    அப்போது அந்த கேமிரா கர்நாடக மாநிலம் பிசில்வாடி பகுதியில் இருந்து வந்தது தெரியவந்தது. மாலை 4 மணி வரை டிரோன் கேமிரா அங்குள்ள தோட்டத்து பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்தது.

    அதன் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது. ஆனால் யார் அந்த டிரோன் கேமிராவை பறக்க விட்டது என்று தெரியவில்லை.

    இது குறித்து உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோவை மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 16 ஊர்க்காவல் படையினரை கொண்டு வாத்திய இசைக்குழு புதியதாக தொடங்கப்பட்டது.
    • மைதானத்தில் ஊர்க்காவல் படை பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது.

    கோவை:

    கோவை மாநகர போலீசார் மற்றும் தனியார் கல்லூரி ரோபோடிக் துறையுடன் இணைந்து கலவர நேரங்களில் டிரோன் காமிரா மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

    அதன்படி டிரோன் கேமிரா மூலம் கண்ணீர் புகை குண்டு வீசும் ஒத்திகை கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் டிரோனை எவ்வாறு கையாள்வது, குறிப்பிட்ட இடத்தில் கண்ணீர் புகை குண்டுகளை எவ்வாறு வீசுவது போன்று செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் கலவரம் ஏற்படுவது போன்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். அப்போது கலவர இடத்தில் டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்துவது போன்றும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர ஆயுதப்படை துணை கமிஷனர் முரளிதரன், உதவி கமிஷனர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அதே மைதானத்தில் ஊர்க்காவல் படை பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இதனை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

    இந்த பயிற்சி விழா கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில், ஊர்க்காவல் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 26 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 33 பேர் கலந்துகொண்டனர்.

    இதனைதொடர்ந்து போலீஸ் கமிஷனரின் அறிவுரையின்படி, கோவை மாநகர ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 16 ஊர்க்காவல் படையினரை கொண்டு வாத்திய இசைக்குழு புதியதாக தொடங்கப்பட்டது.

    இந்த இசைக்குழுவினை பொதுமக்கள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளுக்கு கட்டண அடிப்படையில் பயன்படுத்தலாம். 2 மணி நேரத்திற்கு ரூ. 10 ஆயிரமும், 3 மணி நேரத்திற்கு ரூ,12,500-ம், 4 மணி நேரத்திற்கு ரூ. 15 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பறிமுதல்
    • வனத்துறையினர் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறி செல்ல வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மகா தீபத்தின் போது மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் மலை உச்சியில் டிரோன் கேமரா மூலம் படம் பிடிப்பதாக திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது தலைமையிலான வனத்துறையினர் மலை உச்சிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மலையில் கந்தாசிரமம் அருகில் வெளிநாட்டினர் 3 பேர் டிரோன் கேமரா மூலம் படம் பிடிப்பதைக் கண்டு அவர்களை மடக்கி பிடித்தனர்.

    இதில் ஒருவர் மட்டும் படம் பிடித்ததாகவும் மற்ற 2 பேர் வேடிக்கை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கேமரா வைத்திருந்த நபரை மட்டும் திருவண்ணாமலை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    அவரிடம் இருந்து டிரோன் கேமரா, செல்போன், 360 டிகிரி படம் பிடிக்கக்கூடிய பிரத்யோக கேமரா மற்றும் படம் பிடிக்க வைத்திருந்த பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த சரேஜ் (வயது 34) என்பதும், அவர் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் அருகே உள்ள அண்ணாமலை நகரில் தங்கியிருப்பது. தெரியவந்தது.

    தனக்கு மலை ஏற தடை விதித்து இருப்பது தெரியாது என்றும், தனது யூடியூப் ேசனலில் பதிவிடுவதற்காக படங்களை எடுத்ததாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர்.

    மலையின் உச்சியில் டிரோன் கேமரா மூலம் வெளிநாட்டவர் படம் பிடித்த சம்பவத்தினால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • சின்னசேலம் பள்ளியில் வன்முறை சேதத்தை புலனாய்வு குழு டிரோன் காமிரா மூலம் பதிவு செய்தனர்.
    • இந்த சேதங்களை கணக்கிடும் பணி யில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் ஈடுபட்டுள்ளனர்

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கடந்த17-ந் தேதி வன்முறை ஏற்பட்டது. அப்போது கலவரக்காரர்கள், பஸ்கள், கார், டிராக்டர், பொக்லைன், முதல்வர் அறையில் இருந்த கணினி மற்றும் ஆவணங்களை எரித்தனர்.

    இந்த கலவரத்தில் ரூ. 20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த சேதங்களை கணக்கிடும் பணியில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த குழுவினர் முதல் கட்டமாக வன்முறை நடந்த பள்ளிக்கு சென்றனர். அப்போது பள்ளி வகுப்பறைகள், கலவரத்தில் எரிக்கப்பட்ட பஸ்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். 'டிரோன்' மூலம் பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட சேதங்களை வீடியோ பதிவு செய்தனர். தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
    • 4 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதி களில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அருகே உள்ள உள்ள கிராம பகுதிகளில் புகுந்து அட்ட காசம் செய்து வருகிறது.

    அதே போல் தாளவாடி வனச்சர கத்துக்கு உட்பட்ட வன ப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்ட த்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இநத நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி சேசன் நகர் கிராமத்தில் புகுந்து அங்குள்ள ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடியது. கடந்த 2 மாதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி கால்நடைகளை தொடர்ந்து அடித்து கொன்று வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்தனர். எனவே அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனத்துறையினர் 2 டிரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இன்று 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர்.

    மேலும் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலி யின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அடர்ந்த வனப்பகுதியில் புலியை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை யினர் தெரிவி த்தனர்.

    ×